மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் இறையன்பு , இயக்குனர் லிங்குசாமி, நடிகை பிரியா பவானி சங்கர், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், கவிஞர்கள் பிருந்தா சாரதி, ரவி சுப்பிரமணியன், மணி சண்முகம், பதிப்பாளர் மு.வேடியப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுபெற்ற ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து டிஸ்கவரி பதிப்பகம் கொக்கோடு பறக்கும் மீன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!
தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.
தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்
The South Indian Film Chamber of Commerce expresses its heartfelt gratitude to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin, for accepting the request of The South Indian Film Chamber of Commerce and reducing the Local Body Entertainment Tax on films from eight percent to four percent.
Reduction of the Local Body Entertainment Tax has long been a consistent plea from the Tamil film industry. The South Indian Film Chamber of Commerce took the initiative to bring this matter to the attention of the Tamil Nadu Government.
Kindly considering this, the Hon’ble Chief Minister has now reduced the tax from 8% to 4%. For this, the The South Indian Film Chamber of Commerce sincerely thanks the Hon’ble Chief Minister Thiru M.K. Stalin, Hon’ble Deputy Chief Minister Thiru Udhayanidhi Stalin, and the Hon’ble Minister for Information and Publicity Thiru M.P. Saminathan.
This decision by the Tamil Nadu Government stands as a great boon to the Tamil film industry. There is no doubt that this move will further the growth and strengthen the position of Tamil cinema. Therefore, once again, on behalf of the entire Tamil film industry, we extend our sincere thanks to the Hon’ble Chief Minister of Tamil Nadu.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கையை ஏற்று பொழுதுபோக்கு வரியை குறைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வேண்டுகோளை ஏற்று திரைப்படங்கள் மீதான உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை (Local Body Entertainment Tax) எட்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக குறைத்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை குறைக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
இதை கனிவுடன் பரிசீலித்து உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை எட்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக குறைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு மு. பெ. சாமிநாதன் அவர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தமிழ் திரையுலகுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதனால் தமிழ் சினிமா இன்னும் வளர்ச்சி அடையும் மற்றும் வலுவடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே, மீண்டும் ஒருமுறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரையுலகின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெறுநர், மாண்புமிகு தமிழக முதல்வர், திரு. M.K. ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகம், சென்னை.
பொருள்: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் – 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது குறித்து
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.
தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து, தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறும் இந்த தருணத்தில், தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசின் மானியம் வழங்குவதற்கு 2016 வருடம் முதல் 2022 வரைக்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்குள் மூலம் பார்க்கப்பட்டன. ஆனால், இந்த ஏழு வருடத்திற்கான விருதுகளும், மானியங்களும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ் திரைப்பட துறையை சார்ந்த பல கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், தமிழக அரசின் விருதுகளுக்காகவும், அரசு வழங்கும் மானியத்திற்காகவும் பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டை பல துறைகளில் ஒரு முன்னோடியான மாநிலமாக மாற்றி, “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி வரும் தங்களின் தலைமையிலான தமிழக அரசு, தமிழ் திரைப்பட துறைக்கு, நிலுவையில் உள்ள ஏழு வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகளையும், திரைப்படங்களுக்கான மானியத்தையும் விரைவில் வழங்கி, திரைப்படத் துறையும் வளர்ச்சி அடைய உதவுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
2025-ம் வருடத்தின் ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், 2023 மற்றும் 2024 வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் மற்றும் மானியத்திற்கான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவைகளும், துரிதமாக அறிவிக்கப்பட்டு, விருதுகளும், மானியமும் இந்த இரண்டு வருடங்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.
T.G. தியாகராஜன் செயல் தலைவர்
T. சிவா பொதுச் செயலாளர்
G. தனஞ்ஜெயன் பொருளாளர்
S.R. பிரபு – S. வினோத் குமார் துணைத் தலைவர்கள்
S.S. லலித் குமார் – சுரேஷ் காமாட்சி: இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம்
c.c.: மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்
c.c.: மாண்புமிகு திரு. M.P. சாமிநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.
Prabhas’ The Raja Saab Locks Its Release Date: Hitting Theatres on 5th December 2025
Teaser Drops on 16th June – Get Ready for a Horror Entertainer Like No Other
The wait is finally over! After months of mounting buzz and speculation, the makers of The Raja Saab have locked in the film’s grand theatrical release: 5th December 2025. Adding fuel to the excitement, the teaser is set to drop on 16th June, giving fans their first thrilling taste of this genre-defying entertainer.
Stepping into uncharted territory, Prabhas headlines The Raja Saab, marking his first full-fledged horror entertainer — a bold move that showcases his ever-evolving journey and fearless approach to storytelling. The first motion poster hinted at a deliciously twisted blend of supernatural elements and old-school charm, instantly grabbing attention across the board.
Directed by Maruthi, known for his unique blend of humour and emotion, The Raja Saab promises a horror film laced with surprising entertainment. Every asset so far — from vibrant posters to intriguing glimpses has left audiences in awe.
Backed by People Media Factory, the film is a visual spectacle, mounted on a grand scale with uncompromising production values. T.G. Vishwa Prasad produces the film, while Karthik Palani handles cinematography, and Thaman S delivers what is expected to be a thunderous, high-impact score.
The cast includes the stunning trio of Malavika Mohanan, Nidhhi Agerwal, and Ridhi Kumar, who add charm, elegance, and freshness to the eerie yet colourful world of The Raja Saab.
As December cements its place as a blockbuster season for Indian cinema, The Raja Saab positions itself as a potential game-changer — a perfect year-end spectacle. Every update so far has only amplified excitement, and with the teaser just days away, the buzz is set to explode once again.
Set for a massive Pan-India release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam, The Raja Saab isn’t just a film — it’s a full-blown theatrical event that dares to push the envelope.
Prabhas. Supernatural thrills. Romantic chaos. Theatrical spectacle. 5th December 2025 — Enter The Raja Saab’s kingdom, if you dare.
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது
கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது.
‘இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்’ – என ‘தி ராஜா சாப்’ படத்தினை தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறார் பிரபாஸ். இது அவரது நடிப்பில் வெளியாகும் முதல் மற்றும் முழுமையான திகில் பொழுதுபோக்கு படமாகும். மேலும் இது அவரது வளர்ந்து வரும் பயணத்தையும் , கதை சொல்லலுக்கான அச்சமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். இப்படத்தின் முதல் மோசன் போஸ்டர் – இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளையும், பழைய பாணியிலான வசீகரத்தின் கலவையையும் சுட்டிக்காட்டியது. அத்துடன் அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்தது.
நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வமான படைப்புகளுக்காக தனித்துவமான பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி ராஜா சாப் ‘ ஆச்சரியமான பொழுதுபோக்குடன் கூடிய ஒரு திகில் படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் முதல் காட்சிகள் வரை சுவராசியத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. இதுவரை ஒவ்வொரு அம்சமும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சமரசமற்ற தயாரிப்பு மதிப்பீடுகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.
பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய மூவரும் ‘தி ராஜா சாப்’பின் அமானுஷ்யமான அதே தருணத்தில் வண்ணமயமான உலகிற்கு வசீகரத்தையும், நேர்த்தியையும், புத்துணர்ச்சியையும் இணைத்திருக்கிறார்கள்.
டிசம்பர் மாதம் இந்திய சினிமாவிற்கு ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் சீசனாகும். அதனை உறுதிப்படுத்தும் வகையில்’ தி ராஜா சாப்’ தன்னை ஒரு கேம் சேஞ்சராக நிலை நிறுத்துகிறது. இதுவரை வெளியான ஒவ்வொரு தகவலும் இந்தப் படத்தைப் பற்றிய பரப்பரப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் டீசர் வெளியாக இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக ‘தி ராஜா சாப்’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இது படம் மட்டுமல்ல.. முழுமையான திகிலான அனுபவத்தை திரையரங்குகளில் வழங்கும் என உறுதி அளிக்கிறது.
சூப்பர் நேச்சுரல் திரில்லிங் – ரொமான்டிக் காட்சிகள் – அற்புதமான திரையரங்க அனுபவம் – ஆகியவற்றுடன் டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்திற்கு.. ரசிகர்கள் துணிச்சலுடன் பிரபாஸின் ராஜ்ஜியத்திற்குள் வருகை தாருங்கள்.
A Sathya Movies Documentary Releasing soon Worldwide! From the golden age of Tamil cinema to the heart of Tamil Nadu politics, RMV: The Kingmaker traces the extraordinary journey of Arulalar Ayya RM Veerappan — the man behind legends, the strategist behind revolutions, and the visionary who shaped Tamil Nadu’s cultural and political landscape. Featuring never-before-heard insights from Honorable chief minister Thiru.M K Stalin Thiru.Rajinikanth and other iconic film personalities Political contemporaries Literary minds And spiritual leaders Crafted with rare archival footage,and powerful testimonials, this documentary is more than a tribute — it is a chronicle of influence, intellect, and integrity.
சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் ஐயா இராம வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
“ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்கிறது.
சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது .
தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், சத்யராஜ், சரத்குமார், இயக்குனர்கள் S.P. முத்துராமன், P.வாசு, சுரேஷ் கிருஷ்ணா போன்ற திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா திரு மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.
மேலும் ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தை சார்ந்த காஞ்சி பெரியவர் ஆகியோறும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஐயா அவர்களை போற்றியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், மற்றும் பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி ஆகியோறும், தமிழிலக்கிய துறையை சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களும், முன்னாள் அரசவை கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்களும் மேலும் கலை இலக்கிய கல்விதுறையை சார்ந்த ஆன்றோர் சான்றோர் என அனைவரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர்.
தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப் ( youtube.com/sathyamoviesonline ) என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது. சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன.
இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, பிரபல நடிகர் ரவி மோகன், SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான L.T. ஆனந்த், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, லீக்-கை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆரவாரமாக 5 அடி உயர வெற்றிக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.
SSPL இன் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் விளையாட்டு கீதம் ஆகியவை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றன.
இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அங்கமாக கிரிக்கெட் மாறிவிட்டது. பெரும்பாலோர் தங்களது கிரிக்கெட் விளையாட்டை டென்னிஸ் பந்துகளில் இருந்து தொடங்குகின்றனர். கிரிக்கெட் விளையாட்டு என்பதை விட, பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக உள்ளது.
கிரிக்கெட் அரங்கங்கள் வரலாறுகளை வெளிப்படுத்தும் என்றாலும், நாட்டின் குறுகிய பாதைகள், மற்றும் பரபரப்பான தெருக்களில் பார்த்தால் எதிர்கால நட்சத்திரங்கள் உண்மையிலேயே பிறக்கும் இடம் அது என்று நம்ப முடியும்.
இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்கு பஞ்சமில்லை, ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல சரியான தளம் இல்லை.
தெரு கிரிக்கெட்டுகள் மிகச் சாதாரணமாகவும் மற்றும் டென்னிஸ் பந்துகளுடனும் விளையாடப்பட்டாலும் வடிகட்டப்படாத திறமைகளுக்கு நீண்ட காலமாக வழி வகுத்துள்ளது.
இங்குதான் தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்ட இந்தியாவின் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதலில் தங்கள் திறமைகள், ஆற்றல் மற்றும் மன உறுதியை வளர்த்தனர். இந்த சிறிய தொடக்கத்திலிருந்து, எண்ணற்ற கிரிக்கெட் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச புகழைப் பெற்றுள்ளனர்.
SSPL தெரு கிரிக்கெட்டின் சிறந்தவர்கள் மைய அரங்கை எடுக்கக்கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்குகிறது. மேலும் தெரு கிரிக்கெட்டின் ஒப்பிடமுடியாத ஆர்வத்தை உலகத் தரம் வாய்ந்த அரங்கங்களுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு லட்சிய டி 10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி இது. இந்த டி 10 கிரிக்கெட் லீக் 8 ஓவர் டென்னிஸ் பந்து மற்றும் 2 ஓவர் டேப் பந்து 12 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கானது. இதன் நுழைவுக் கட்டணம் வெறும் ரூபாய் 699 மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே.
தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும், மெட்ரோ நகரங்கள் மற்றும் மெட்ரோ அல்லாத இடங்களில் நடைபெறும். 3 நிலை தேர்வு செயல்முறை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும். வீரர் தேர்வு மற்றும் விளையாட்டு கண்காணிப்பில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பு, டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மற்றும் உற்சாகத்தை தொழில்முறை தரங்களுக்கு அங்கீகரிப்பது SSPL – ஐ மற்ற போட்டிகளில் இருந்து வேறுபடுத்துகிறது.
உள்ளூர் திறமைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை கிடைக்கப்பட்ட வரவேற்பு, ஸ்டேடியம் கிடைக்கும் பட்சத்தில் ஷார்ஜாவில் இறுதிப் போட்டிகளை நடத்துவதை கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விளையாட்டு SSPL இன் முக்கிய அம்சங்களில் ஒன்று. தேர்வின் அனைத்து மட்டங்களிலும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பங்கேற்பாளர்களின் அறிக்கை அட்டைகளைப் பகிர்வதன் மூலமும் இது நடைமுறைப்படுத்தப்படும். தகுதி தேர்வில் நடைபெறும் சோதனைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் விளையாட்டைப் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
சமீபத்திய தொழில்நுட்பம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, விளையாட்டைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இது பயன்படுத்தப்படும். இதை உண்மையிலேயே தனித்துவமாக்குவது என்னவென்றால், இந்த அளவிலான உயர்நிலை மற்றும் விலையுயர்ந்த தொழில்நுட்பம் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இதுவரை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.
போட்டி நிலைமைகளைப் பிரதிபலிக்கும் உருவகப்படுத்தப்பட்ட சூழல்கள் மூலம் பேட்டிங் மதிப்பீடுகள் நடத்தப்படும். பந்து வீச்சு மதிப்பீடுகள் நிகழ்நேர பகுப்பாய்விற்கு தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் வேக கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தென்னிந்தியாவிலிருந்து 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் இந்த லீக்-கில் விளையாடப் போவது அதன் முக்கியமான சிறப்பு அம்சமாகும். மேலும்
ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் வரை தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இறுதி 500 வீரர்கள் கடுமையான பல நகர தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 300 வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி சர்வதேச தரத்தில் இந்த டென்னிஸ் பந்து T 10 லீக் நடத்தப்பட உள்ளது. SSPL இன் தலைவர், நவாப்சாதா முகமது ஆசிப் அலி மிகச் சிறந்த கிரிக்கெட் ஆர்வலர். இது இந்த லீக் ஆட்டத்திற்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவர் நீண்ட காலமாக இதுபோன்ற விளையாட்டுகளில் சிறந்த வீரராக இருந்து வருகிறார். மேலும் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் உள்ளார். உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார். அவர் SSPL -ஐ ஒரு முன்முயற்சியாகக் கருதுகிறார். இது ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு உருமாறும் தளமாக செயல்படும் என்றும் இந்தியாவின் தெரு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரர்கள் மீது மீது கவனத்தை பிரகாசிக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரும் SSPL இன் பிராண்ட் அம்பாசிடருமான ரவி மோகன் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர். அவர் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார், மேலும் SSPL க்கு நட்சத்திர அந்தஸ்தையும், பிரபலத்தையும் உருவாக்குகிறார். லீக்-கின் பிராண்ட் அம்பாசிடராக, இளம் திறமைகளை ஊக்குவிப்பதிலும், நாடு தழுவிய ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும் அவர் பங்கு முக்கியமானது. அவரது பங்கேற்பு நிறைய ஆற்றலையும், இளம் வீரர்கள் தங்கள் கிரிக்கெட் கனவுகளைத் தொடரும்போது ஊக்கத்தையும் அளிக்கிறது.
SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான L.T. ஆனந்த் முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார். மேலும் SSPL இன் செயல்பாடு, நிதி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறார். லீக்-கின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்துடன், அவர் ஒரு வலுவான நிறுவன அடித்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார், அது இன்று வெற்றிகரமாக இருக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் நீடித்த விளையாட்டு இயக்கமாக மாறும். SSPL இந்தியாவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. தெரு கிரிக்கெட்டை தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும், அதிக பங்குகள் கொண்ட லீக்-காக மாற்றுவதற்கான லட்சிய குறிக்கோளுடன், SSPL உண்மையிலேயே விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கு அப்பால் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உயரவும், பிரகாசிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த தளமாக நிற்கிறது. உண்மையான திறமை எங்கும் இருக்க முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, சரியான வாய்ப்பு மட்டுமே தேவை. ஸ்ட்ரீட் ஹீரோக்களை உண்மையில் ஸ்டேடியம் சூப்பர் ஸ்டார்களாக மாற்றுவது மட்டுமே SSPL இன் குறிக்கோள்.
Romeo Pictures and Vishnu Vishal Studioz proudly present the upcoming Tamil romantic entertainer Oho Enthan Baby, in association with Good Show. Directed by renowned ad filmmaker Krishnakumar Ramakumar, the film marks the acting debut of Rudra—actor-producer Vishnu Vishal’s younger brother.
Oho Enthan Baby is a charming coming-of-age tale that blends romance, humor, and emotional growth. Rudra plays an assistant director who pitches a story to actor Vishnu Vishal (playing himself). What unfolds is a heartwarming narrative that mirrors the story being told—crafted with relatable modern-day quirks and nostalgic moments.
Rudra, who has previously worked with director A.R. Murugadoss and managed production on films like FIR and Gatta Kusthi, brings a unique blend of experience and fresh energy to the screen. Speaking on his debut, Rudra said, “Having worked behind the camera, stepping in front of it was both exciting and challenging—but my understanding of the process gave me confidence.”
“This script had all the right ingredients,” said Vishnu Vishal. “Though I knew I wasn’t the right fit for the lead, I immediately thought of Rudra. Producing his debut is a special moment for me—just like how Suriya sir supports Karthi, I hope to support Rudra’s journey through many films ahead.”
Joining the cast as the female lead is the expressive and talented Mithila Palkar, whose vibrant screen presence adds charm to the film’s romantic arc.
Director Krishnakumar Ramakumar—who has directed over 250 commercials and assisted veteran filmmaker Rajiv Menon—makes a seamless transition to feature films. “In advertising, we learn to hold attention in 30 seconds. But with cinema, the challenge is to engage the audience for over 2.5 hours—and I embraced that fully,” he said.
The film also benefits from a seasoned technical crew. Cinematographer Harish, known for his work in Demonte Colony, brings a visual tone that complements the film. The editing is handled by R.C. Pranav, a long-term collaborator with director Krishna, and the music is composed by Jen Martin—the talent behind films like Dada and Bloody Beggar—who infuses the soundtrack with both melody and modern flair.
The film’s title, inspired by the iconic Tamil song “Oho Enthan Baby,” pays homage to that classic track, with a reimagined version of it subtly featured in the glimpse.
‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது.
படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள்.
நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்தார். மேலும், FIR, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் ருத்ரா மேற்கொண்டார்.
கதாநாயகனாக தன்னுடைய அறிமுகம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, “கேமராவுக்கு பின்னாலும் முன்னாலும் பணிபுரிவது சவாலானது. ஆனால், எனக்கு நல்லபடியாக பணி செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது”.
நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டதாவது, ” இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்து உடனே ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்து” என்றார்.
இதில் கதாநாயகியாக நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார்.
250-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வீடியோ மற்றும் ஃபிலிம்மேக்கர் ராஜீவ் மேனனிடம் பல ஃபீச்சர் படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். “விளம்பரங்களில் 30 செகண்ட்டில் பார்வையாளர்களைக் என்கேஜ் செய்ய வேண்டும். ஆனால், சினிமாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களைக் கட்டிப் போட வேண்டும் என்பது சவால். அதை சிறப்பாக செய்திருக்கிறோம்” என்றார்.
இந்தப் படத்தின் டைட்டில் ஐகானிக் பாடலான ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அதன் கிளிம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், “அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், “உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். ‘அக்யூஸ்ட்’ காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.
‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு ‘அக்யூஸ்ட்’ மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், “திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.
படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி,” என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், “என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.
வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், “இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள், கடவுளுக்கு நன்றி,” என்றார்.
பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே ‘அக்யூஸ்ட்’ பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்,” என்றார்.
அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை,” என்றார்.
நடிகை ஜான்விகா பேசுகையில், “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்,” என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்,” என்றார்.
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், “கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான ‘அக்யூஸ்ட்’ வெற்றி விழா கொண்டாடும், நன்றி,” என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், “இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், “எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி,” என்றார்.
நடிகர் உதயா பேசுகையில், “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.
Chennai witnessed a glittering evening as the audio launch of the much-awaited Tamil-Telugu bilingual film Kuberaa took place, with a packed gathering of fans, media, and film industry stalwarts.
Present at the event were lead actors Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, director Sekhar Kammula, music composer Devi Sri Prasad, producers Suniel Narang and Jhanvi Narang, Bharat Narang, Simran Narang, cinematographer Niketh Bommi, production designer Thotta Tharani, and lyricists Viveka, Chandrabose, and Nanda Kishore — all sharing their experiences and excitement about the film.
Rashmika Mandanna – Actor Rashmika Mandanna, responding to the loud cheers from the fans, playfully said, “I love you too!” She expressed her heartfelt thanks to Sekhar Kammula for inviting her into his cinematic world and revealed her desire to collaborate with Dhanush again, this time in a full-fledged romantic film.
Devi Sri Prasad – Music Director Devi Sri Prasad thanked the fans and audience for their unwavering love and the overwhelming response to Kuberaa’s songs — Poyivaa Nanba and Trance of Kuberaa. Recalling his musical journey with Dhanush, from Kutty to Venghai and now Kuberaa, he said he eagerly looks forward to this successful combo delighting audiences again.
Sekhar Kammula- Filmmaker Director Sekhar Kammula heaped praise on Dhanush, calling him a “phenomenal persona” — an actor, director, producer, singer, lyricist, all rolled into one. Confident about the film’s success, he declared, “Kuberaa is a brilliant film. Kuberaa is a very brilliant film. Kuberaa is a very, very, very brilliant film.” He extended his heartfelt thanks to his technical and creative team for their tireless effort and especially lauded costume designer Kavya Sriram, saying she truly deserves an award for her exceptional work.
Nagarjuna – Actor Veteran actor Nagarjuna shared nostalgic memories of Chennai, reminiscing about being born in Adyar, studying at Guindy Engineering College, marrying someone from Chennai, and beginning his career here. He expressed his gratitude for the continuous love Chennai audiences have shown him and teased, “Right after Kuberaa, Superstar Rajinikanth’s Coolie is waiting to surprise audiences!”
Dhanush – Actor As the event neared its emotional peak, Dhanush took the stage, opening with “Oh Namah Shivaay.” Reflecting on the state of the world, he said, “This is Kalikaalam — a time where hatred, negativity, and jealousy thrive; evil seems to prevail over good. I’m grateful to have worked with Sekhar Kammula, a pure soul, like a divine angel from heaven. My heartfelt gratitude and respect to producers Suniel Narang Sir and Jhanvi Narang for their unwavering belief in the story of Kuberaa and for supporting such incredible films time and again!”
Sharing a powerful personal moment, Dhanush recalled shooting his first scene in Kuberaa under the blazing sun, barefoot, in tattered clothes on the lands of Tirupathi, playing a beggar — a role that reminded him of life’s deeper truths. He compared it to his past experience in Banaras during Raanjhaana, where he found himself amidst funeral pyres, realizing that “greed, money, worldly pleasures — they are nothing; what matters is a pure soul.” Dhanush declared with conviction, “This film will make you all realize that. I’m 2000 times confident about the kind of result Kuberaa will bring.”
With a cast and crew deeply passionate about their craft, Kuberaa promises to deliver not just entertainment, but a profound cinematic experience.
‘குபேரா’ இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
நடிகை ரஷ்மிகா மந்தனா
ரசிகர்களின் அதீத ஆரவாரங்களுக்கு குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, “நானும் உங்களை காதலிக்கிறேன்!” தன்னை அவரது சினிமா உலகிற்கு அழைத்ததற்காக சேகர் கம்முலாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்த முறை ஒரு முழு நீள காதல் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அசைக்க முடியாத அன்பிற்கும், ‘குபேரா’வின் பாடல்களான ‘போய்வா நண்பா’ மற்றும் ‘டிரான்ஸ் ஆஃப் குபேரா’வுக்கு கொடுத்த மகத்தான வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். குட்டி திரைப்படம் முதல் வேங்கை வரையிலும், தற்போது ‘குபேரா’விலும் தனுஷுடன் தனது இசைப் பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.
இயக்குனர் சேகர் கம்முலா
இயக்குனர் சேகர் கம்முலா பேசும்பொழுது, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷை “அற்புதமான ஆளுமை” என்று பாராட்டினார். படத்தின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், “குபேரா ஒரு அற்புதமான படம். குபேரா மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம்” என்றார். தனது தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் குழுவின் அயராத முயற்சிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், குறிப்பாக ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராமைப் பாராட்டினார், அவர் தனது தலைசிறந்த பணிக்காக உண்மையிலேயே விருது பெறுவதற்கு தகுதியானவர் என்று கூறினார்.
நடிகர் நாகார்ஜுனா
மூத்த நடிகர் நாகார்ஜுனா சென்னை பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அடையாறில் பிறந்தது, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தது, சென்னையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கு தனது வாழ்க்கையைத் தொடங்கியது பற்றி நினைவு கூர்ந்தார். சென்னை ரசிகர்கள் தனக்குக் காட்டிய தொடர்ச்சியான அன்புக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், ” ‘குபேரா’வுக்குப் பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘கூலி’ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது!”
நடிகர் தனுஷ்
இந்த நிகழ்ச்சி அதன் உணர்ச்சிகரமான உச்சக் கட்டத்தை நெருங்கியதும், தனுஷ் மேடையில் ஏறி, “ஓம் நம சிவாய” என்று தனது பேச்சை தொடங்கினார். உலகின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் அவர் பேசும்பொழுது, “இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் ‘குபேரா’ திரைப்படத்தின் கதை மீதான நிரந்தமான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும் “.
ஒரு முக்கியமான தனிப்பட்ட தருணத்தைப் பகிர்ந்து கொண்ட தனுஷ், தனது முதல் காட்சியின் படப்பிடிப்பை பற்றி நினைவு கூர்ந்தபோது, ‘குபேரா’வில் கொளுத்தும் வெயிலில், வெறுங்காலுடன், கிழிந்த ஆடைகளில் திருப்பதி மண்ணில், ஒரு பிச்சைக்காரனாக நடித்தது, தனது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டிய ஒரு பாத்திரம். ராஞ்சானாவின் போது பனாரஸில் தனது கடந்தகால அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “பேராசை, பணம், உலக இன்பங்கள்-அவை ஒன்றுமில்லை, தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம்” என்பதை உணர்ந்ததாக கூறினார். “இந்த படம் உங்கள் அனைவருக்கும் அதை கண்டிப்பாக உணர்த்தும். ‘குபேரா’வின் வெற்றி எப்படி இருக்கும் என்பதில் எனக்கு 2000 மடங்கு நம்பிக்கை உள்ளது” என தனுஷ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நடிகர்கள் மற்றும் குழுவினர் தங்கள் உழைப்பை பற்றி மிகுந்த ஆர்வத்துடன், ‘குபேரா’ ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு ஆழமான சினிமா அனுபவத்தையும் வழங்கும் என்று உறுதியாக கூறினர்.