Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 100

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார்

0

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்:

“ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப்:

“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் அபின் அவர்களின் முதல் படம் போலவே இல்லை — மிக நன்றாக இயக்கியுள்ளார். ஹீரோவுக்கும் இது முதல் படம் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்.”

இயக்குநர் அரவிந்த்:

“நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சியூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார் — முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்.”

இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்:

“ஒரு நல்ல படம் மக்களிடம் செல்வதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம். நன்றி.”

நடிகை கௌரி கிஷன்:

“மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் — அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.”

நடிகர் ஆதித்யா மாதவன்:

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி — நீங்களும் பார்த்து சொல்லுங்கள்.”

இயக்குநர் அபின் ஹரிஹரன்:

“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் — அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசை: ஜிப்ரான்

பாடல் வரிகள்: மோகன் ராஜன்

எடிட்டிங்: ராமர்

கலை இயக்கம்: உமா சங்கர்

நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்.

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்

இணைத் தயாரிப்பு: அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன்

“அதர்ஸ்” — உலகமெங்கும் திரையரங்குகளில் நவம்பர் 7 முதல்!

பயம் உன்னை விடாது..! திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

0

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது…!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரைப்பட இயக்குனர் சரவணன் சுப்பையா, நடிகர்கள் சௌந்தரராஜா, தங்கதுரை, மௌரி ஆகியோர் இணைந்து ‘பயம் உன்னை விடாது…!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

எஸ். கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே. எஸ். ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ. மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்ரா, இளஞ்செழியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப் படத்திற்கான இசையை தயா. ரத்தினம் அமைத்துள்ளார், ஒளிப்பதிவு முரளி தங்க வேலு , படத்தொகுப்பு ஈஸ்வரமூர்த்தி குமார், கலை அன்புசித்ரன் ஆகியோர் மேற்கொள்ள விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

வரவேற்பை பெறும் கலைஞர் டிவியின் “தமிழோடு விளையாடு சீசன் 3”..!

0

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “தமிழோடு விளையாடு” நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன் மூன்றாவது சீசன் தற்போது, ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவியில் அக்டோபர் 5 முதல் ஆரம்பமாகிறது”தமிழோடு விளையாடு சீசன் 3″..!

0

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த”தமிழோடு விளையாடு” நிகழ்ச்சியின் முதல் இரண்டுசீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன்மூன்றாவது சீசன் வருகிற அக்டோபர் 5 முதல்ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகஇருக்கிறது.

பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தமாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் உருவாகிறது.

சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சீசனில்பங்கேற்று அசத்துகின்றனர்.

அக்டோபர் 5 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்குகலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைகண்டுகளியுங்கள்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

0

திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் திரு மாரி செல்வராஜ், நடிகர் திரு விஷ்ணு விஷால், Shakthi Film Factory திரு B.சக்திவேலன், மேலும் பல விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

🌟 Honoured Moment as Chief Guest of Eminence – Indian Achievers Award 2025 🌟

0

Feeling truly blessed to be invited as the Honourable Chief Guest of Eminence at the prestigious “Indian Achievers Award 2025”, organized by
Integrated Law Welfare Foundation India (ILWF),
All India Integrated Law Welfare Human Rights Wings, &
Mother Maheshwari Educational Charitable Trust.

It was an inspiring evening celebrating achievers from various walks of life — where talent, dedication, and passion were honoured with pride✨

A heartfelt thanks to the organizers for this wonderful recognition and warm hospitality. 🙏
Moments like these remind me that success is not just about reaching heights — it’s about inspiring others to climb too. ❤️

— Actor Kathiravan 🎬

📰✨ இந்திய அச்சீவர்ஸ் அவார்டு 2025 – சிறப்பு விருந்தினராக நடிகர் கதிரவன்! 🎬

தமிழ்த் திரைப்பட நடிகர் கதிரவன், “Indian Achievers Award 2025” விழாவில் Honourable Chief Guest of Eminence ஆக சிறப்பாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இந்த விருது வழங்கும் விழா, Integrated Law Welfare Foundation India (ILWF),
All India Integrated Law Welfare Human Rights Wings, மற்றும்
Mother Maheshwari Educational Charitable Trust ஆகியவற்றின் இணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டு முழுவதிலும் இருந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களின் அர்ப்பணிப்பு, முயற்சி, மற்றும் திறமையை பாராட்டி மேடைப்புரிந்தது பெருமையாக இருந்தது என நடிகர் கதிரவன் தெரிவித்தார்.

🎖️ “வெற்றி என்பது உச்சியை அடைவதற்கானது மட்டுமல்ல — மற்றவர்களையும் உச்சிக்குக் கொண்டு செல்லும் ஊக்கம் ஆகும்” என்று அவர் கூறினார்.

— நடிகர் கதிரவன்

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !

0

“Aaryan” Pre-Release Event : Vishnu Vishal, Selvaraghavan, and Team Promise a Gripping Theatrical Experience!

The pre-release event of the film “Aaryan”, produced by Vishnu Vishal Studioz, was held in a grand manner. Produced by Vishnu Vishal Studioz, presented by Shubhra and Aaryan Ramesh, and directed by Praveen K, “Aaryan” is an investigative crime thriller starring leading actor Vishnu Vishal along with director Selvaraghavan in a prominent role. The film is scheduled for a worldwide theatrical release on October 31, and ahead of its release, the makers organized a lavish pre-release meet in the presence of the entire team and members of the press and media.

During the event, the film’s teaser, trailer, and single track were screened exclusively for journalists, followed by an interaction session in which the team shared several interesting insights about the making of the movie.

Writer-director Manu Anand said, “Just as FIR was an important film for me, Aaryan is equally important. Praveen is my friend and the director, Vishnu is my first hero, and he is also the producer of my first film. Praveen and I joined Gautham Menon’s team on the same day and we used to discuss cinema together. When Vishnu heard this story, I was the one who recommended Praveen to him. When Praveen approached me to develop the script, I was very happy. It’s a brilliant screenplay. When you watch Aaryan on October 31, you will witness Praveen’s true talent. When many hesitated to back FIR, it was Vishnu who courageously produced and acted in it. He has shown the same faith again with this film. He has performed excellently as a cop. Selva sir has been outstanding, Shraddha has done a wonderful job, and Ghibran music is fantastic. Please watch it in theatres — it will be a great experience.”

Art director Jayachandran said, “For one of the key sequences in this film, we built a massive set. Please watch it on screen and share your thoughts.”

Editor San Lokesh said, “Aaryan is a very significant film. It completely breaks the usual pattern of crime and psycho-killer films and brings something fresh. The villain’s entire arc is redefined here. Once during the shoot of Ratsasan, Vishnu sir noticed a minor eye blink in a shot and asked me to edit accordingly — his observation and dedication is remarkable. He is very strict when it comes to perfection and never worries about spending to get the right output — he truly loves cinema. Ghibran sir is a blessing for us. I was amazed by Selva sir after watching Kadhal Konden; in this film, his eyes alone speak volumes — you’ll understand when you watch it. He has performed brilliantly, and I’m sure audiences will love the film.”

Music composer Ghibran said, “Everyone keepnasking if Aaryan will be like Ratsasan. Ratsasan was a very important film for me. In Ratsasan, the question of who the villain was created suspense, and musically that was a challenge. In Aaryan, you’ll know who the villain is — but the story truly begins after that. Composing for Selva sir’s performance was a joyful experience. The reason the music stands out is editor San, who always gives the right space for sounds in editing. Praveen has handled a very complex screenplay so beautifully. I thank Vishnu Vishal sir for giving me this opportunity. The soundscape we’ve created here is entirely different from Ratsasan. This is designed to be a complete theatrical experience.”

Actor Karunakaran said, “Hello everyone, and thank you for all the love for Oho Enthan Baby. The comparison between Aaryan and Ratsasan is inevitable. Aaryan is a film I really like. Praveen has presented a very complicated story in a brilliant way. Vishnu Vishal has delivered an extraordinary performance as a police officer. He’s a hardworking person, and I’ve seen firsthand how tough producing a film can be. I play a newsreader in this film — one of the most challenging roles I’ve done. I’m a huge fan of Selva sir, and he has played a major role here. Everyone has done an excellent job.”

Actress Maanasa Choudhary said, “Aaryan is a very important film for me. I’m a big fan of Ghibran sir and always listen to his songs. Harish DOP has given stunning visuals. Selva sir has acted brilliantly, and I really admire Shraddha’s acting — it was a joy to share screen space with her. I thank Praveen sir for giving me a strong role and Vishnu Vishal sir for everything I’ve learned from him. Please do watch the film.”

Actress Shraddha Srinath said, “Wishing everyone a Happy Deepavali! Our film releases on October 31. My first thanks go to our producer Vishnu Vishal sir. I first met him as a producer, and the effort he’s put into this film is immense. I’m grateful to him for trusting me and encouraging me. Acting alongside him was a pleasure. Working with Selva sir was both intimidating and inspiring — I have huge respect for him. Praveen is a wonderful storyteller who has made the film brilliantly. Ghibran sir is immensely talented, and I always listen to his music. Harish has captured amazing visuals. This is a gripping crime story, beautifully edited by San. Manasa, you are both beautiful and talented — I wish you all success. I’m eagerly waiting for audiences to experience this film.”

Director Praveen K said, “I thank my parents and everyone who made me who I am today. Thanks to writer Manu Anand — this story was born during the making of FIR. Vishnu Vishal is a blessing — it’s rare for a director to find an actor who completely understands him, and I’m lucky to have him as both my actor and producer. From the moment he heard the story, he carried the character and the film forward with passion. We even pitched this story to Ravi Teja sir and Aamir sir for the Hindi version, and though it faced many hurdles, Vishnu stood firm and made it happen. We approached this story in a totally different way. Shraddha was our first choice for her role and she’s done a fantastic job. Manasa is very talented, and it was a pleasure working with her. The biggest strength of this film is its technical team — Ghibran, San Lokesh, Harish, Jayachandran — all of them have given their best. This film will give audiences a unique experience.”

Director Selvaraghavan said, “I had heard about Vishnu Vishal but had never met him until he approached me for Aaryan. When I started working with him, I was amazed by his dedication. He hardly goes home — cinema is his life. He loves, respects, and lives for cinema. Director Praveen is the same — passionate and sincere. Good things always happen to those who love their art. Thank you.”

Actor-producer Vishnu Vishal said, “I owe my place here to the support of the press and media. The comparison between Aaryan and Ratsasan cannot be avoided. Whenever a crime thriller is made, people will compare it with Ratsasan. I myself thought I could never surpass Ratsasan, but we’ve tried to create a completely different experience. This film began during the COVID period, and Praveen has worked hard for five years on it. We initially considered a Hindi version with Aamir sir, who appreciated the story, but then decided to make it purely in Tamil for our audience. The term ‘Pan-India’ has become misused — truly rooted films become Pan-Indian on their own. That’s why we’ve made this film for Tamil audiences. Every technician has given 200 percent effort. Special thanks to my wife Jwala for her constant support. We’ve attempted something new — the love and appreciation from audiences always push me to try fresh ideas. Selva sir is the highlight of this film. Thank you, sir, for being part of it. Even Dhanush’s growth as a great actor owes much to your guidance. Shraddha was the first person who came to mind for this role; she carries the film’s first 30 minutes beautifully. Manasa joined later and performed superbly. In most of my films, I’ve done romantic scenes, but she didn’t want that here, so we made it a song instead — it has come out wonderfully. Karunakaran has now become a partner in my production. ‘Aaryan’ is my son’s name, and it gives me immense happiness to have made a good film in his name. I’m eagerly waiting for your feedback.”

Actor Vishnu Vishal’s son Aaryan said,
“My father has made a film titled with my name. I feel very proud that a movie is coming out in my name. The film is releasing on October 31. Everyone please watch it in theatres. I hope you all will enjoy the film. Thank you.”

After the massive success of Ratsasan, Vishnu Vishal once again takes on the role of a police officer in Aaryan, with director Selvaraghavan playing a crucial character. The film also stars Shraddha Srinath and Manasa Chowdhary in important roles, alongside Sai Ronak, Tarak Ponnappa, Mala Parvathi, Avinash, and Abhishek Joseph George. Crafted as a thrilling investigative action drama with a gripping screenplay, the film is written and directed by Praveen K, with FIR director Manu Anand serving as co-writer.

A film designed to engage audiences across all sections, “Aaryan” releases worldwide on October 31.

Technical Crew:
Producer – Vishnu Vishal (Vishnu Vishal Studioz)
Written & Directed by – Praveen K
Public Relations – Sathish (AIM)

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்,

எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது:

எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் அவர் தான் இயக்குநர், விஷ்ணு என் முதல் ஹீரோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோ அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்.

கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,

இந்தப்படத்தில் மிக முக்கியமான சீக்குவன்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம். அனைவரும் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். நன்றி.

எடிட்டர் ஷான் லோகேஷ் பேசியதாவது..,

ஆர்யன் மிக முக்கியமான படம், இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது. வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றியுள்ள படம். விஷ்ணு சார் ஒரு நாள் ராட்சசன் ஷீட்டில் பார்த்த போது ஒரு ஷாட்டில் கண் சிமிட்டியிருக்கிறேன் அதைப் பார்த்து எடிட் செய்யுங்கள் என்றார். அவரது அப்சர்வேசன் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. அவர் பணத்தை பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார். படம் சரியாக வர வேண்டும் தான் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர். ஜிப்ரான் சார் எங்களுக்கு கிடைத்த வரம். செல்வா சாரின் காதல் கொண்டேன் படம் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் அவர் கண்ணே பல விசயங்கள் பேசும். படம் பார்த்தால் புரியும் அருமையாக நடித்துள்ளார், படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,

எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது. மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் கருணாகரன் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். ஓஹோ எந்தன் பேபி படத்தின் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆர்யன், ராட்சசன் கம்பேரிங்கை தடுக்க முடியாது. ஆர்யன் எனக்கு பிடித்த படம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி. தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன். இந்தப்படத்தில் நியூஸ் ரீடர் ரோல் செய்துள்ளேன், இருப்பதிலேயே கஷ்டமான ரோல். செல்வா சாரின் மிகப்பெரிய ஃபேன். அவர் மிகப்பெரிய ரோல் செய்துள்ளார். எல்லோரும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.

நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,
ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம். ஜிப்ரான் சார் ரசிகை நான். அவர் பாடல்களை தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஹரீஷ் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். செல்வா சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பிரவீன் சார் எனக்கு நல்ல ரோல் தந்ததற்கு நன்றி. விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. படம் அனைவரும் பாருங்கள் நன்றி.

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். அக்டோபர் 31 எங்கள் படம் வருகிறது. என் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி. அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன். அவர் இவ்வளவு உழைப்பைப் போட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார். அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததிற்கும் நன்றி. அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. செல்வா சாருடன் ஷீட்டில் எதிரில் உட்கார்ந்திருந்ததே பயமாக இருந்தது. அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. பிரவீன் அற்புதமான கதை சொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். ஜிப்ரான் சாரிடம் பெரிய திறமை உள்ளது. அவர் பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ஹரிஷ் நல்ல விஷுவல்ஸ் தந்துள்ளார். இது ஒரு க்ரைம் ஸ்டோரி, ஷான் சிறப்பாக எடிட் செய்துள்ளார். மானசா உங்களுக்கு அழகுடன் திறமையும் இருக்கிறது வாழ்த்துகள். உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

இயக்குநர் பிரவீன் K. பேசியதாவது..,

இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி. எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. இந்தக்கதையை ரவிதேஜா சார், அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது. பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம். ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்த ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார். மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும்.

இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,

விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான், அவரை பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும். நன்றி.

விஷ்ணு விஷால் பேசியதாவது..,

எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான் நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன் பேசியதாவது..,
என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)
எழுத்து இயக்கம் – பிரவீன் K
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

திரையுலக வி.ஐ.பிகள் , மூத்த பத்திரிகையாளர்கள் புடை சூழ., தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்ற 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா !!!

0

71 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் இயங்கி வரும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா கோலாகலமான தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்றது.

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தீபாவளி மலர் வெளியீட்டு விழா … ஆகிய முப்பெரும் விழா, நேற்று முன்தினம் அக்டோபர் 18 ஆம் தேதி ., சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, ‘பிரசாத் லேப்’ திரையரங்கில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் ‘மக்கள் குரல்’ ராம்ஜி, ‘டி.சி’ அனுபமா சுப்ரமணியம் , மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் ‘தேர்ட் ஐ’ பிரகாஷ்… மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜா , நடிகர் தங்கதுரை , நடிகர் ‘டீசல்’ மோரி …ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் ., இந்த சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் @ கார்த்திகேயன் , பொருளாளர் ஏ.மரிய சேவியர் ஆகியோரது தலைமையின் கீழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசியதோடு, தமிழ் சினிமாவின் மூத்த நிருபர்களால் தொடங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு புதிய இரத்தத்தை பாய்ச்சி, புத்துயிர் வழங்கி திறம்பட செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகிகளையும் , செயற்குழு உறுப்பினர்களையும் பாராட்டினார்கள்.

மேலும், அக்காலத்தில் சுமார் 15- க்கும் மேற்பட்ட நிருபர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஊடகத்துறையின் அதீத வளர்ச்சியால் இன்று நிருபர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களின் முழுமையான பின்னணியை ஒருவருக்கொருவர் அறியாத சூழல் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றி, ஒவ்வொரு நிருபரின் பின்னணியையும் அவரது சிறப்புகளையும் சேகரித்து, அதை ஆவணப்படுத்த வேண்டும் …. என்ற கோரிக்கையை மூத்த பத்திரிகையாளர் ‘மக்கள் குரல்’ ராம்ஜி முன் வைத்தார்.

அதே மாதிரி பிரபல நடிகரும் இயக்குநருமான ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா பேசும்போது ., “தற்போது ,சினிமா விமர்சகர்களாக பலரும் களம் இறங்கியுள்ளனர் அவர்கள் இங்கிருக்கும் இந்த சங்கத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் போல் நாசுக்காக ., அந்த படம் சம்பந்தப்பட்டவரோ , செய்தி சம்பந்தப்பட்டவரோ …. படித்தாலும் , கேட்டாலும் அவரது மனசு வலிக்காதபடி விமர்சனம் செய்ய பழக வேண்டும். அந்த மாதிரி விமர்சனம் எழுதும் அல்லது பேசும் பண்பை இங்கிருக்கும் பத்திரிகையாளர்களும் ., சப்ஸ்கிரைப்பர்ஸுக்காக , லைக்குகளுக்காக .. புதிதாக விமர்சனம் செய்பவர்களைப் பார்த்து கைவிட்டு விடக்கூடாது… தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் !” என்று வலியுறுத்தினார்.

அவரைத்தொடர்ந்து , இவ்விழாவிற்கு சற்று தாமதமாக வந்து தீபாவளி டிராஃபிக்கில் தான் மாட்டிக் கொண்ட கதையை டெரிபிக்காக கூறி பேச ஆரம்பித்த நடிகர் ‘பழைய ஜோக்’ தங்கதுரை , சில காமெடி (கடி) களையும் இறுதியாக ஒரு பாடலையும் மேடையில் பாடி , அந்த அவையை கலகலப்பாக்கினார்.

மேடையில் விழாவிற்கு வந்திருந்த திரை மற்றும் பத்திரிகை பிரபலங்களுடன் ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’ முக்கிய நிர்வாகிகளான தலைவர் , செயலாளர் , பொருளாளர் … மூவருடன் கெளரவதலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் , துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன்மாணிக்கம் உள்ளிட்டவர்களும் வீற்றிருந்து விழாவினை சிறப்பித்ததோடு .,
‘கயல்’ ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்க குபேந்திரன் காமாட்சி எழுத்து இயக்கத்தில் , ‘JSM’ மூவி புரடக் ஷன்ஸ் ஜாபர் சாதிக் தயாரிப்பில் ., உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘மங்கை’ பட டிசைனை முன் அட்டையாகவும் ; ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘V’ கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘TRAIN’ பட விளம்பர டிசைனை பின் அட்டையாகவும் கொண்டு பளபள வண்ணத்தில் , வழுவழு தாளில் ஏராளமான ஹாஸ்ய சுவாரஸ்ய பக்கங்களுடன் உருவாகி இருக்கும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளிமலர் – 2025’ புத்தக பொக்கிஷத்தை சிறப்பு விருந்தினர் நடிகர் / இயக்குநர் சரவண சுப்பையா வெளியிட ., மேலும் , சிறப்பு விருந்தினர்களான நடிகர் சௌந்தர்ராஜா மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மூவரும் பெற்றுக் கொண்டது இவ்விழாவில் பெரிய ஹைலைட் ஆக அமைந்தது போன்றே இளஞ்செழியன் இயகத்தில் உருவாகிவரும் ‘பயம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இரண்டும் படக்குழுவினர் விருப்பத்திற்கிணங்க இவ்விழாவில் வெளியிடப்பட்டது கூடுதல் சிறப்பு !

சிவகாசி சிறப்பு பட்டாசு கிஃப்ட் , ஆரணி இனிப்புகள் , மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகள் ,
ஒரு குடும்ப தலைவன் / தலைவி இருவருக்குமான வண்ண வண்ண புத்தாடைகள் …உள்ளிட்ட தீபாவளி பரிசுப் பொருட்களை வந்திருந்த திரையுலக வி.ஐ.பிகள் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜா , நடிகர் தங்கதுரை , நடிகர் ‘டீசல்’ மோரி … மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் ‘மக்கள் குரல்’ ராம்ஜி, ‘டி.சி’ அனுபமா சுப்ரமணியம் , மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் ‘தேர்ட் ஐ’ பிரகாஷ்… ஆகியோர் ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’ நிர்வாகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி ., தங்கள் கரங்களால் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கியதோடு சங்கத்தின் அடையாள அட்டையை உரியவர்களுக்கு அணிவித்தும் கௌரவித்தனர்.

இது மாதிரி எண்ணற்ற தீபாவளி பரிசு பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி , சினிமா பத்திரிகையாளர்கள் இல்லத்தில் ஒவ்வொரு தீபாவளியன்றும் மகிழ்ச்சி என்ற தீபத்தை ஏற்றும் ‘சினிமா பத்திகையாளர் சங்கத்’தின் இத்தகைய சிறந்த பணி மேலும் சிறக்க வேண்டும், என்று வந்திருந்த திரை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

இவ்விழாவின் ஆரம்பத்தில், வரவேற்புரையை .,
71 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் @ கார்த்திகேயனும், இறுதியாக நன்றியுரையை பொருளாளர் ஏ.மரிய சேவியரும் சிறப்பாக பேசி வழங்கினர். மேலும், மொத்த விழாவையும் ஒத்த ஆளாக ., சங்க உறுப்பினர் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் திறம்பட தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Director Keerthiswaran has conveyed a very sensible and timely message with great clarity.

0

“Dude” Thanksgiving Meet

Mythri Movie Makers’ ‘Dude’, written and directed by Keerthiswaran, featuring Pradeep Ranganathan, Mamitha Baiju, Sarath Kumar, Rohini among others in the star-cast had its theatrical release for festive occasion of Diwali. With the film soaring high with commercial blockbuster success, the entire team gathered to thank press and media fraternity for their unconditional support.

Here are some of the excerpts from the event …

Producers Ravi and Naveen, Mythri Movie Makers said, “Dude has received an excellent response from audiences in both Tamil and Telugu. Director Keerthiswaran has conveyed a very sensible and timely message with great clarity. Pradeep, Mamitha, and the entire cast have delivered wonderful performances. We’re truly delighted with the overwhelming reception the film has been getting from audiences across the globe.”

Editor Bharat Vikraman said, “I’m truly delighted with the overwhelming response Dude has received across the globe. My heartfelt thanks to the producers and director Keerthiswaran for ensuring the film reached audiences the right way. I’m grateful to Pradeep, Mamitha, Sarath sir, and Rohini ma’am for their constant support throughout the journey. My sincere thanks also to my entire team for standing by me.”

Actress Aishwarya Varma said, “I’m truly overwhelmed by the love and response the film has been receiving. My heartfelt thanks to Keerthiswaran sir for choosing me to play Samyuktha. The most beautiful thing that happened to me this year is Dude.

I’ve been an admirer of Pradeep ever since Love Today, and he continues to inspire me, especially as I, too, dream of becoming a director someday. Working with Mamitha was a long-time wish since I watched Premalu, and I’m happy it came true through this film.

My father is a huge fan of Sarath Kumar sir, and I feel proud to have fulfilled his dream by sharing the screen with him. A big thank you to all the fans for showering so much love on our film. I truly miss the positive vibes of the Dude set. Never give up on your dreams.”

Actress Hridhu Haroon said, “I sincerely thank the producer and director Keerthiswaran for giving me such a significant opportunity in this film. Pradeep anna’s patience, Sarath sir’s experience, and Rohini ma’am’s acting brilliance have all been great strengths to this project. Every member of the technical team has contributed exceptionally well.”

Cinematographer Niketh Bommireddy said, “My heartfelt thanks to the audience for making the film a success. Congratulations to director Keerthiswaran for perfectly blending humour, emotion, and storytelling, and turning it into a talking point among viewers. Sarath sir has delivered a powerful performance, while Pradeep and Mamitha have also acted brilliantly. My best wishes to the entire team.”

Actress Rohini said, “It’s a pleasure to be part of a success meet in the Tamil film industry after quite some time. My heartfelt thanks to Keerthiswaran for delivering yet another hit for Mythri Movie Makers, bringing them even closer to Tamil audiences. I truly appreciate Pradeep Ranganathan for choosing and performing in such a bold and thought-provoking theme. Mamitha Baiju has given an impeccable performance in a challenging role, and I must admit, I envy the role portrayed by Sarath Kumar sir. Dude carries a powerful social message: one that feels deeply relevant to today’s times. It’s heartening to see Tamil cinema thriving under the vision of such a promising league of young filmmakers. As Niketh mentioned, Keerthiswaran has many compelling stories in store, and I eagerly look forward to seeing them come to life.”

Director Keerthiswaran said, “This is my first success meet, and it’s an incredibly special moment for me. My heartfelt thanks to the audience for embracing Dude with so much love. I’m deeply grateful to Ravi sir and Naveen sir of Mythri Movie Makers for their constant support, they truly complement each other. My thanks also to Anil sir for his encouragement. Pradeep has now scored a hat-trick of successes, everything he touches turns into victory. He truly carried the film on his shoulders. There were moments where I wanted to express certain bold ideas through dialogues, and Pradeep stood by me with full confidence. The line in the climax about honour killing was inspired by the impact caused by Kavin’s honour killing case, which deeply moved me. Mamitha is an actress who instantly grasps a scene even before I finish explaining it. I’ve admired Sarath Kumar sir since my childhood, especially his comic performances, and it was a joy to direct him. My heartfelt thanks to Rohini ma’am for gracefully accepting and portraying the mother’s role. My gratitude also goes out to every actor and technician who contributed to this film. Dude stands for one clear message, a woman alone has the right to choose her life partner; no one else does. It’s a film that speaks out against all forms of violence.”

Actress Mamitha Baiju said, “This is my first success meet in Tamil cinema, and I’m truly overjoyed! My heartfelt thanks to the producers and to Keerthiswaran Anna for believing in me and giving me this opportunity. Working with Pradeep, Sarath sir, Rohini ma’am, Aishwarya, Hridhu, and Sai was an incredible experience, their energy kept me inspired throughout the journey. My deepest thanks to the audience for their immense love and support.”

Actor Sarath Kumar said, “My heartfelt thanks to the media and the audience for their support toward the film. I’m grateful to Mythri Movie Makers for giving me this opportunity. I’ve always believed that father and grandfather roles shouldn’t just be about presence, they should be central to the story. That’s how I’ve approached films like Kanchana and Por Thozhil. I thank Keerthiswaran for giving me such a meaningful role in Dude. He has conveyed a beautiful social message with great clarity. I’ve watched the film three times, and each viewing revealed something new to me. What you see on screen is the Sarath Kumar shaped by Keerthiswaran’s vision. Mamitha was outstanding in the breakup scene, her performance was truly moving. Every single member of the Dude team has done an excellent job. My thanks and appreciation to all of them.”

Actor Pradeep Ranganathan said, “My heartfelt thanks to Naveen sir and Ravi sir for their constant support. I’m truly happy that the film has found success across the globe. My gratitude to my producers for taking Dude to audiences everywhere. A big thanks to cinematographer Niketh, editor Bharat, and costume designer Poornima, as well as to my co-stars Aishwarya, Hridhu, Rohini ma’am, and Sarath sir for their wonderful collaboration. There were many scenes where I was amazed by Mamitha’s performance, she truly brought her character to life. My sincere thanks to Keerthiswaran for giving us such a beautiful and thought-provoking film. The movie has sparked meaningful discussions, and I’m grateful for the love it has received from audiences in Kerala, Andhra, Dubai, North America, and our beloved Tamil viewers everywhere.”

‘டியூட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், “‘டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

எடிட்டர் பரத் விக்ரமன், “உலகம் முழுவதும் ‘டியூட்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப், மமிதா, சரத் சார், ரோகிணி மேம் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி. என்னுடைய டீமுக்கும் நன்றி!”.

நடிகை ஐஸ்வர்யா வர்மா, “படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுடைய சம்யுக்தாவாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கீர்த்தி சார். இந்த வருடம் எனக்கு நடந்த அழகான விஷயம் ‘டியூட்’. ‘லவ் டுடே’ படத்தில் இருந்து பிரதீப்பை ரொம்பவே பிடிக்கும். எனக்கும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு பிரதீப் தான் இன்ஸ்பிரேஷன்! ‘பிரேமலு’ பார்த்ததில் இருந்து மமிதாவுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறியது. என் அப்பா சரத் சாரின் மிகப்பெரிய ரசிகர். அவரது கனவை இந்தப் படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். படத்திற்கு இவ்வளவு அன்பு கொடுத்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. ரொம்ப பாசிட்டிவ் வைப்போடு இருந்த ‘டியூட்’ செட்டை இப்போது மிஸ் செய்கிறேன். உங்களுடைய கனவை எப்போதும் கைவிடாதீர்கள்”.

நடிகர் ரிது ஹரூன், “இந்தப் படத்தில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப் அண்ணாவின் பொறுமை, சரத் சாரின் சீனியாரிட்டி, ரோகிணி மேமின் நடிப்பு திறமை எல்லோமே இந்தப் படத்திற்கு பலம். தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியற்றியுள்ளனர்” .

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, “படத்திற்கு வெற்றி கொடுத்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. நகைச்சுவை, எமோஷன், கதை என அனைதையும் சரியான விதத்தில் கலந்து பேசுபொருளாக்கிய இயக்குநர் கீர்த்திக்கு வாழ்துக்கள். சரத் சார் நடிப்பில் பிளாஸ்ட் செய்திருக்கிறார். பிரதீப் சார், மமிதா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை ரோகிணி, “ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் வெற்றி மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸை தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக மாற்றிய இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. இதுபோன்ற தைரியமான கதையை தேர்ந்தெடுத்து நடித்த பிரதீப்புக்கும் நன்றி. மமிதாவுடையது மிக கடினமான கதாபாத்திரம். அதை சவாலாக எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். சரத்குமார் சாருடைய கதாபாத்திரம் பார்க்கும்போது ரொம்ப பொறாமையாக இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை ‘டியூட்’ சொல்லியிருக்கிறது. நல்ல இளைஞர்கள் கையில் சினிமா இருக்கிறது என்ற திருப்தி உள்ளது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிகேத் இன்னும் பயங்கரமான கதைகள் உங்களிடம் இருப்பதாக சொன்னார். அதையும் நன்றாக கொண்டு வாங்கள்” என்றார்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சார், நவீன் சாரின் ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்கு இணை அவர்கள்தான். அனில் சாரின் ஆதரவுக்கும் நன்றி. மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்கள் தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால்தான் வைத்தோம். மமிதாவிடம் ஒரு சீன் பாதி சொல்லும்போதே உடனடியாக பிடித்துக் கொள்வார். சின்ன வயதில் இருந்தே சரத் சாரைப் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை காட்சிகளையும் விரும்பி பார்த்திருக்கிறேன். ரோகிணி மேம் இந்த அம்மா கதாபாத்திரத்தில் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்ததெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்’ பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி”.

நடிகை மமிதா பைஜூ, “இது என்னுடைய முதல் தமிழ் வெற்றி மேடை! சந்தோஷமாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், கீர்த்தி அண்ணாவுக்கு நன்றி. பிரதீப், சரத் சார், ரோகிணி மேம், ஐஸ்வர்யா, ரிது, சாய் எல்லோரும் எனக்கு பயங்கர எனர்ஜி கொடுத்தார்கள். பார்வையாளர்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி”.

நடிகர் சரத்குமார், ” படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் ‘காஞ்சனா’, ‘போர் தொழில்’ போன்ற படங்களில் நடித்தேன். ‘டியூட்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக ‘டியூட்’ படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி”.

நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நவீன் சார், ரவி சாருக்கு நன்றி. உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.

- Advertisement -

Recent Posts