கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “தமிழோடு விளையாடு” நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன் மூன்றாவது சீசன் தற்போது, ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here