Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 103

சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

0

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள‌ இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக‌ சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், “இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.

சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்ட‌ம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் ‘மைலாஞ்சி’ திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.

கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.‌ எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர்.‌ நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது.‌ அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.

இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவ‌ர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.‌

அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார்.‌ அந்த கதை தான் ‘மைலாஞ்சி’. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.

இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.

காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், “அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றிய போது நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், ‘நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘ இதுதான் உனக்கான அட்வான்ஸ்’ என்றார்.‌ அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன‌. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்’ என்றேன்.

ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும்போது யாரேனும் இருவர் எனக்கு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி இருக்கிறார். தமிழில் முக்கியமான நடிகராக அவர் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி, அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.‌

ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.

நடிகர் சிங்கம் புலி பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர்.‌ நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார்.

இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்… இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய குலதெய்வத்தை வணங்குவதற்காக செல்லும்போது இவரை சந்திக்கிறேன். அப்போது என்னிடம் ஒரு படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுவிட்டு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என அவருடைய விருப்பத்தை சொன்னார். அவர் சில கதைகளையும் சொன்னார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஜயன் பாலா அவரை சந்தித்து கதை சொன்ன போது, அந்த கதை பிடித்து, இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அஜயன் பாலா, செழியன், லால்குடி இளையராஜா, ஸ்ரீகர் பிரசாத், இசைஞானி ஆகியோர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்பது புரியும். சினிமாவைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவார்,” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர்.‌ நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.‌

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷ‌யம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.‌

தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது.

தான் கண்டறிந்த விஷ‌யத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.

இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷ‌யத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் – கதாசிரியர் ‍& இயக்குநர் – தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.

எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன‌.‌ ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன‌. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள்.‌ இது என்னுடைய கணிப்பு,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் திரைப்படங்களை பார்வையிட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அதனால் அவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் ஊடகங்களால் நல்ல படைப்புகள் என பாராட்டப்படுவதை நீங்கள் அவசியம் பார்த்து உங்களுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால் தொடர்ந்து சிறிய படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், “எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

1976ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நான் தான் முதல் மாணவன். எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண்மை கல்லூரியிலும் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் 4500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு என் தந்தையிடம் பணம் இல்லாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை. இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசும் போது ‘நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய்’ என்றார். என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவரை கம்யூனிஸ்ட்டாக மாற்றியவர் பாவலர் வரதராஜன். அதன் பிறகு அவரிடம் உங்களால் எவ்வளவு கட்டணத்தை கட்ட முடியும் என கேட்டேன். அவர் 150 ரூபாய் என்று சொன்னதால், உடனே அரசு கல்லூரியில் 140 ரூபாய் செலுத்தி தாவரவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

அஜயன் பாலாவிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா.‌ படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார். அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் இங்கு வருகை தந்திருக்கிறார், அவருக்கும் நன்றி.

இயக்குநர் அஜயன் பாலா எப்போதோ வெற்றி பெற வேண்டியவர். லேட் பட் நெவர். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி,” என்றார்.

ஏடிஜிபி தினகரன் பேசுகையில், “எனக்கு இந்த மேடைப் புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும்.‌ அவரிடம் சைக்கிள் கிடையாது. நான்தான் அவரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்வேன். இன்று நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டேன். அவர் மருத்துவராகி விட்டார்.

சேத்தூர் என்ற சின்ன கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், இன்றும் அவரது வீட்டில் ஒரு ஏசி கிடையாது, ஒரு பிரிட்ஜ் கிடையாது. இப்படி ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் மகன், மகள்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

‘மைலாஞ்சி’ படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும்.‌ பள்ளியில் படிக்கும் போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.

இசைஞானி இளையராஜாவை பற்றி நான் பல தருணங்களில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை இல்லை. ஃபோனை ஆஃப் கூட செய்ய முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியாது. குடும்பத்துடன் செலவிட முடியாது. இது போன்ற சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய வடிகால் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான்.‌

மிஷ்கின் எப்படி போலீஸ் போல் சிந்திக்கிறார் என ஆச்சரியப்படுவேன். எனக்கு அதிகாரம் இருந்தால் மிஷ்கினை சிபிசிஐடி ஆபிஸராக நியமித்து விடுவேன்.

சீமானை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பேச்சில் வேறு மொழி கலப்பில்லாமல் தமிழில் பேசக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். தமிழை உணர்வோடு நேசிக்கக் கூடிய ஒருவராகவே சீமானை நான் பார்க்கிறேன்.‌

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நன்றாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.‌

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.

மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.

என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.

இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.

இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை.‌ இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.

‘வாழ்வே மாயம்’ என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.‌

தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவது திருமதி அகிலா பாலு மகேந்திரா கலந்து கொண்டிருப்பதால் தான். அவர்களை இங்கு சந்திக்க வைத்ததற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.

நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது கதாநாயகனுக்கு கிடைக்காத கைத்தட்டல் இசைஞானி இளையராஜா என்று பெயர் போட்டதும் எழுந்தது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என பெயரை போட்டதும் கைத்தட்டல் எழுந்தது என்றால் அது இளையராஜாவிற்கு மட்டும்தான்.

என் நண்பர் மு. களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ திரைப்படத்தை நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்டியில் கதாநாயகியை உட்கார வைத்து கதாநாயகன் வண்டியை ஓட்டுகிறான். அந்த சூழலில் ‘என் பாட்டு என் பாட்டு’ எனத் தொடங்கும் பாடலை இடம்பெறச் செய்து ரசிகர்களை உற்சாகமடைய‌ செய்தவர் இளையராஜா. அதில் ‘நெஞ்சைத் துவைக்கிற ராகம் இது’ என்னும் வரிகள் கடந்ததும் திரையரங்கில் அனைவரும் எழுந்து ‘ஒன்ஸ்மோர்’ சொன்னபோது தான் இசையின் ஆக்கிரமிப்பை, இசையின் ஈர்ப்பை‌ நான் உணர்ந்தேன்.

‘இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை’ என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

”இன்றைய இயக்குநர்கள் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்” ; இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேதனை

0

அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.

ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர்,. மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்..

டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, வினோத் சிவகுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

வரும் அக்-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காளை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்,ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில்.

தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் பேசும்போது,

எனக்கு சினிமாவில் இதுதான் முதல் தயாரிப்பு. வேறு தொழில்கள் எனக்கு இருந்தாலும் இந்த தொழிலில் தான் சினிமாவை நம்பி இத்தனை பேர் வாழ்கிறார்களா என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது. நடிகர்கள் என்றாலே ஏசியில் சொகுசாக இருப்பவர்கள் என நினைத்திருந்தபோது, நேரில் பார்க்கும் போது தான் மழையிலும் வெயிலிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. நடிகர் சௌந்தர்ராஜா இந்த படத்திற்காக ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை கடும் உழைப்பை கொடுத்து எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டு வருகிறார். குடும்பத்தோடு பார்க்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த பணத்தை மீண்டும் பட தயாரிப்பிலேயே தான் செலவு செய்வேன். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்று கூறினார்.

இயக்குநர் அகத்தியன் பேசும்போது,

ஒரு ஜெனரேஷன் கேப் இருப்பதாலேயே பல திரைப்பட விழாக்களுக்கு நான் அழைக்கப்படுவது இல்லை. ஆனால் இங்கே வந்து புதியவர்களை சந்திக்கும் போது ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. சிறுவயதில் அமர் அக்பர் ஆண்டனி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பிறகு இப்போது தான் இப்படி மூன்று மதத்தையும் ஒன்றிணைத்து ஒரு தலைப்பு வைத்திருப்பதை பார்க்கிறேன். நிறைய படங்கள் சமூக படங்களாக புதிய கதைகளைக் கொண்டு வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படமும் சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் சொன்னது போல இந்த படம் வெற்றி பெறும். இன்னும் புதியவர்களை அவர் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என பேசினார்.

இயக்குநர் பொன்ராம் பேசும்போது,

இந்த படத்தில் மூன்று சிறுவர்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் பூவையார் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நன்றாக பண்ணியிருந்தார்.. இந்த படத்தில் கலக்கி இருக்கிறார். அவருடைய ஸ்டைல் சூப்பராக இருக்கிறது. மூன்று மதங்களை ஒன்றிணைக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது” என்று பேசினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது,

நான் வாழ்த்துவது பெரிய விஷயம் இல்லை. இந்த படம் வெளியான பிறகு தமிழ்நாடு உங்களை வாழ்த்தும். இந்த படத்தின் டிரைலரை பார்த்ததுமே யாருப்பா இந்த படத்தின் டைரக்டர் என்று கேட்கத் தோன்றுகிறது. டிரைலர் இன்ட்ரஸ்டிங்காக, புதுசாக இருக்கிறது. படம் பார்க்க தூண்டுவதற்காக தானே டிரைலரை உருவாக்குகிறோம்.. டிரைலர் இந்த அளவிற்கு வந்திருக்கு என்றால் அதற்குள் இருக்கும் கரு அந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. சில நேரங்களில் டிரைலரில் கதையை சொல்வது தப்பாகி விடும். ஆனால் இதில் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. என்ன நடந்திருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது.

இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்க விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து யாராவது படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் அதற்கு பைனான்ஸ் பண்ணுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு இங்கே யாரும் பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.

ஒரு புதிய இயக்குநரை நம்பி இரண்டரை கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்கிறார் என்றால் அந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அந்த நம்பிக்கை ஜெயிக்கணும். ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். என் வாழ்க்கை அதுதான். இப்போது வரை நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான். இந்த படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைய தலைமுறை வன்முறையை தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர்கள் எல்லாம் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர கதை இதெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு எழுத்தாளர் தான் நாட்டிலேயே ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் கிருஷ்ண சேட்டன் பேசும்போது,

“தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் கதை சொன்ன விதமே எனக்கு பிடித்திருந்தது. பாடல்கள் அனைத்தையும் அவரே எழுதிக் கொண்டு வந்து விட்டார். படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்”. என்று பேசினார்.

நடிகர் பூவையார் பேசும்போது,

இயக்குநர் ஜெயவேல் அண்ணன் நான்கு வருடங்களுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என ஸ்ட்ராங்காக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார். இந்த கதையின் மீது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு முதலில்.. கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான விஜய் டிவி உள்ளிட்ட பலருக்கும் நன்றி” என்று பேசினார்.

நடிகர் சாய் தீனா பேசும்போது,

“இந்த படத்தில் பூவையார் நடிக்கிறார் என்று சொன்னதுமே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதனாலேயே இயக்குநரிடம் கதை எல்லாம் கேட்காமல் ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது ஒரு நல்ல டைரக்டரிடம் ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறேன் என்று. இந்த மாதிரி இயக்குநர்கள் வரும்போதுதான் என்னைப் போன்ற நடிகர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்” என்று பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இந்த படத்தின் தயாரிப்பாளர் விரும்புவதும் பேசுவதும் எல்லாமே பாசிட்டிவ் தான். இவரைப்போன்றவர்கள் வெற்றி பெற்றால் தான் புது புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பசங்க தானே என்று குறைவாக எடை போட்டு விடக்கூடாது. காக்கா முட்டை படம் தங்க முட்டையாக மாறியது. பசங்க படம் சூப்பர் ஹிட் ஆனது. கோலி சோடா அதுவும் மிகப்பெரிய ஹிட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. மூன்று பசங்களை மையப்படுத்தி படம் எடுப்பது பெரிய விஷயம். அதுதான் திறமை. சிறிய பட்ஜெட்டில் நல்ல கதை அம்சத்துடன் வரும் படங்கள்தான் என்றும் நிலைத்து நிற்கும்.

சமூகத்தில் எல்லா மதமும் ஒன்றுதான். எம்மதமும் சம்மதம் என்று சொல்வதே அதிசயமாக போய்விட்டது. இன்று திரையரங்குகளுக்கு மக்கள் வருவதே அபூர்வமாகிவிட்டது. அதனால் இரண்டரை மணி நேரம் திரைப்படத்தில் என்ன சொல்கிறோம் என்பதை இரண்டு நிமிட டிரைலரில் காட்டவேண்டிய சூழ்நிலை இன்று இருக்கிறது. டிரைலரை பார்த்ததுமே படம் பார்க்க தோண வேண்டும். சிறிய படங்களுக்கு டிரைலர் ரொம்பவே முக்கியம். அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் படம் பார்க்க தூண்டுகோலாக இருக்கிறது.

சினிமாவில் ஒரு நடிகர் ஜெயித்தால் அவர் எந்த மதம் என்று பார்ப்பதில்லை. அவர் நடிப்பு பிடித்திருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். இன்று பாலிவட்டில் கோலோச்சும் அமீர்கான், ஷாருக் கான், சல்மான்கான் போன்றவர்களுக்கு எல்லா மதத்திலும் ரசிகர்கள் இருப்பதால்தான் அவர்களால் சூப்பர் ஸ்டார்களாக கோலாச்ச முடிகிறது. இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகம் பேசினாலும் நடிகர் கமல்ஹாசன் நாத்திகம் பேசினாலும் இங்கே எல்லா மதத்திலும் அவர்களது நடிப்புக்காகவே ரசிகர்கள் இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதே சினிமாவில் தான் இருக்கிறது. அரசியலில் இல்லை. பிளவை உண்டாக்கி பிழைப்பு நடத்துவது அரசியல்வாதிகள் தான். சினிமாக்காரர்கள் எவ்வளவோ மேல்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,

“படங்களில் சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை. நல்லா இருக்கும் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் தான். செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோருக்கு பிறகு இயக்குனர் ஜெயவேல் இந்த இளைஞர்களை பயன்படுத்தி ஒரு படத்தை செய்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுக்க ஆள் இல்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும். டிஜிட்டல், ஓடிடி இவற்றின் கைப்பிடிக்குள் நாம் இருக்கிறோம். இன்னும் ஒரு வருடத்திற்குள் இவை எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். அதே சமயம் தியேட்டர்கள் பழைய நிலைமைக்கு மாறி லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி போன்ற நல்ல படங்கள் இப்போது ஓடுகின்றன. ஒரு வெள்ளிக்கிழமையில் தயாரிப்பாளரின் நிலை மாறும். அந்த வகையில் இந்த அக்டோபர் 31 இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல விதமாக அமையும்” என்று பேசினார்.

நடிகர் உதயா பேசும்போது,

“இந்த படத்தின் டிரைலர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. அதற்காக இயக்குனர் ஜெயவேலுக்கு பாராட்டுகள். ஒருவரின் நல்லது கெட்டது என அனைத்திலும் முன்னின்று தோன் கொடுக்கும் நடிகர் சௌந்தரராஜா இந்த படத்தில் நடித்திருப்பது பெரும் பலம்.. அக்யூஸ்ட் படத்தில் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் அவர்கள்தான். இயக்குநர் ஜெயவேல் எப்போதுமே தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இயக்குநரையே தூக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கூட அவருக்காக பரிந்து பேசி துணை நின்றவர் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் சார்” என்று பேசினார்..

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசும்போது,

திரையுலகில் நிறைய எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் இருக்கின்ற.ன ஒரு படத்தை துவங்கப் போகிறோம் என்றால் அதற்கு நம்பிக்கை கொடுத்து பேசும் ஆட்கள் இங்கே குறைவு. இந்தப் படம் வெற்றி பெற்றால் மீண்டும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று தயாரிப்பாளர் சொன்னார் அவருடைய அந்த நல்ல எண்ணத்திற்காகவே இந்த படம் வெற்றிகரமாக ஓடும். நடிகர் சௌந்தர்ராஜாவை சுந்தரபாண்டியன் படத்தில் இருந்தே தெரியும். அந்த படத்திற்கு அவர் எனக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் தன்னால் அந்த படத்திற்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உதவியாக இருப்பார். இந்த விழாவிற்கு கூட நான் வர முடியாத சூழலில் இருந்தாலும் அறிமுக இயக்குனர் என்பதாலும் சௌந்தர்ராஜாவின் அழைப்பு என்பதால் தட்ட முடியாமல் வந்திருக்கிறேன். அவர் தற்போது தவெகவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தவெகவில் உங்களுக்கு எதுவும் பொறுப்பு, பதவி கொடுத்திருக்கிறார்களா என்று கேட்டேன்.. இல்லை என்றார்.. பிறகு எதற்கு இவ்வளவு வேலைகளை இழுத்து போட்டு செய்கிறீர்கள் என்றால், அண்ணனுக்காக செய்கிறேன் என்றார். அந்த அளவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தொண்டன் சௌந்தர்.

யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத இயக்குநர் ஜெயவேல் ஒரு வெல்டராக வேலை பார்த்தவர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு போனேன். சினிமா ஆர்வம் உடையவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதும். மற்றதெல்லாம் தானாக நடந்து விடும். அதற்கு ஜெயவேல் நல்ல உதாரணம்” என்று பேசினார்.

நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசும்போது,

“இந்த டிரைலரை பார்த்துவிட்டு இந்த படம் நன்றாக இருக்கிறதே என்று பாராட்டுவது இருக்கட்டும். ஆனால் இந்த கதையை கேட்டு விட்டு படம் இப்படி நன்றாக வரும் என மனதுக்குள்ளயே கணக்குப் போட்டு இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் அவர்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒரு தொழில் முறை தயாரிப்பாளராக ஒரு படத்திற்கு எவ்வளவு பிசினஸ், யாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைக்காமல் நல்ல கதை, நல்ல பசங்கள், இவர்களுக்காக படம் எடுப்போம் என நினைத்து அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பின் போது சிக்கன நடவடிக்கைகள் என நிறைய கடைபிடித்தார்கள். ஆனால் திரையில் தெரியும் காட்சிகள் எதிலும் அவர்கள் குறை வைக்கவே இல்லை. சமரசம் பண்ணிக் கொள்ளவே இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள மூன்று சிறுவர்களுமே மிகவும் திறமைசாலிகள். இந்த படத்தில் எனது மகனாக ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பையனை ஒரு கட்டத்தில் நானே சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இந்த படம் இயக்குனர் ஜெவேலு சாருக்கு ஷ்யூர் ஷாட் ஹிட்” என்று கூறினார்

நடிகர் சௌந்தர்ராஜா பேசும்போது,

அதிகாரம் அன்பாக இருந்தாலே ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதையே அடக்கு முறையாகத்தான் நான் நினைப்போம். அதிகாரத்தால் நல்லது நடந்தால் அது நல்ல வார்த்தை. கெட்டது நடந்தால் அது கெட்ட வார்த்தை. இன்று இருக்கும் சூழலில் அதிகாரமும் அடக்கு முறையும் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. நல்லவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகின்ற அரசியல்வாதியை, ஒரு காவல் துறையை அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தான் இந்த ராம் அப்துல்லா ஆண்டனி, நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்” என்று பேசினார்.

நடிகர் பிக்பாஸ் ஆர்ணவ் பேசும்போது,

“இந்தப் படத்தின் ஒரு காதல் காட்சியை திரையிட்ட போது அதில் ஆடியவர்களின் இடுப்பில் ஒரு கியூ ஆர் கோடு இடம் பெற்றிருந்தது. அதை ஸ்கேன் செய்தால் என்ன வரும் என இயக்குனரிடம் கேட்க வேண்டும் என ஒரு சந்தேகம் ரொம்ப நேரமாக ஓடிக் கொண்டிருந்தது. அனால் அது ஒரு புது முயற்சி.. இந்த படத்தில் நான் நடித்துள்ள கெட்டப்பை பார்த்து தான் எனக்கு தெலுங்கில் இருந்து இரண்டு பட வாய்ப்புகள் உடனடியாக வந்தது. அதனால் இயக்குனர் ஜெயவேலை பொறுத்தவரை என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்” என்று பேசினார்.

இயக்குநர் ஜெயவேல் பேசும்போது,

“இந்த இடத்தில் தான் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் தான். அவருடைய பெயரை என் செல்போனில் காட் (கடவுள்) என பதிந்து வைத்திருக்கிறேன். பல தடங்கல்களுக்கு இடையே இந்த படம் வளர்ந்தது. ஆனால் அது பற்றி சொல்ல வேண்டிய இடம் இது இல்லை. அதற்கெல்லாம் படத்தின் வெற்றி மூலம் தான் பதில் சொல்ல முடியும். பல பேர் இந்த படத்தை எடுத்தவரை பார்த்துவிட்டு இது குப்பை இனிமேல் பணம் போடுவது வேஸ்ட் என்று சொன்ன நிலையில் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த குப்பையை கோபுரம் ஆக்கி காட்டு என என்னை நம்பி மீண்டும் படப்பிடிப்பை நடத்தத் தூண்டியவர் தயாரிப்பாளர் சுரேஷ். ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன் என்று திருப்தி இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு விவரம்.

நடிகர்கள் :

பூவையார்
அஜய் அர்னால்ட்
அர்ஜுன்
சௌந்தர்ராஜா
வேலராமமூர்த்தி
தலைவாசல் விஜய்
சாய் தீனா
கிச்சா ரவி
சாம்ஸ்
வினோதினி வைத்தியநாதன்
பிக் பாஸ் அர்ணவ்
ராஜ் மோகன்
சிறப்பு தோற்றம் வனிதா விஜயகுமார்

தொழில் நுட்ப குழு விபரம்:

எழுத்து, இயக்கம் – த.ஜெயவேல்
ஒளிப்பதிவு – L.K.விஜய்
இசை – T.R.கிருஷ்ண சேத்தன்
எடிட்டர் – வினோத் சிவகுமார்
கலை – சீனு / எஸ்.இரளி மும்பை
பாடல் வரிகள் – சினேகன், T.ஜெயவேல்
ஸ்டண்ட் – சுரேஷ்
நடன இயக்குனர் – தீனா, I.ராதிகா
தயாரிப்பு மேலாளர் – ஏகாம்பரம்
ஸ்டில்ஸ் – சந்துரு
மக்கள் தொடர்பு – ஜான்சன்
டிசைனர் – கிப்சன் UGA
கேஷியர் – திருவேணி
நிர்வாக தயாரிப்பாளர் – R. பவானி
தயாரிப்பு – T S. கிளமென்ட் சுரேஷ்.
தயாரிப்பு நிறுவனம் – அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ்

IrudhiMuyarchi Movie Review

0

Irudhimuyarchi is a powerful and inspiring Tamil film that beautifully blends emotion, determination, and motivation. From the very beginning, the movie captures the audience with its strong storyline and realistic presentation. The director deserves full credit for delivering a film that highlights how dedication and hard work can change a person’s life.

The hero delivers a brilliant performance, portraying a character who rises from struggles with pure confidence and never-give-up attitude. His expressions, dialogue delivery, and emotional scenes truly connect with the audience. The heroine, too, adds charm and depth, supporting the story with grace and maturity.

The background score and songs perfectly suit the mood, giving extra energy to every scene. The cinematography is impressive, capturing emotions and motivation in every frame. The screenplay keeps you engaged till the end, showing how true effort always brings success.

Overall, Irudhimuyarchi is not just a movie — it’s an inspiration. It teaches us that life may test us, but determination can lead to victory. A must-watch for those who love meaningful cinema with a positive message!

வரம் சினிமாஸ் வழங்கும் இறுதிமுயற்சி

நடிகர்கள் மற்றும் குழு விபரம்

முக்கிய நடிகர்கள்

ரஞ்சித் – ரவிச்சந்திரன் – கதாநாயகன்

மெகாலி மீனாக்க்ஷி – வாணி – கதாநாயகி

மௌனிகா – கௌரி – கதாநாயகனின் மகள்

நீலேஷ் – குமரன் – கதாநாயகனின் மகன்

விட்டல் ராவ் – ராஜப்பா – வில்லன்

கதிரவன் – கதிரவன் – குற்ற ஆய்வாளர்

புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் – வில்லனின் தம்பி

முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் – வெங்கட் ஜனா

தயாரிப்பு நிறுவனம் – வரம் சினிமாஸ்

தயாரிப்பு – வெங்கடேசன் பழனிச்சாமி

படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ்

ஒளிப்பதிவு – சூர்யகாந்தி

இசை – சுனில் லாசர்

தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு

கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன்

பாடல்கள் – மஷூக் ரஹ்மான்

ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன்

பின்னணி – பாலு ஸ்டூடியோ

DI – இன்பினிட்டி மீடியா

வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி

எஸ் எப் எக்ஸ் – மதன்

வண்ணங்கள் – சேது செல்வம்

புகைப்படம் – மணிவண்ணன்

விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன்

இணை இயக்கம் – குருமூர்த்தி

விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி

PRO – வேலு

Will Movie Review

0

“Will” is a beautifully crafted Tamil film that perfectly blends emotions, family bonding, and a touch of suspense. The story revolves around how small misunderstandings in life can create big distances — and how love, trust, and honesty can rebuild them.

The director has handled the subject with a lot of maturity and depth. Each scene feels realistic, and the screenplay keeps us engaged from start to finish. The movie’s title “Will” itself holds a strong meaning — a symbol of depth, truth, and connection, which is beautifully reflected throughout the film.

The hero gives a strong and natural performance, especially in emotional scenes. His expressions and dialogue delivery make us connect with his pain and determination. The heroine adds charm and grace, perfectly balancing the emotional tone of the movie.

The background score is soulful, and the songs blend beautifully with the story. Cinematography is another highlight — the visuals are calm, clean, and aesthetically pleasing, giving a fresh feel to the film.

Overall, “Will” is a simple yet powerful movie that speaks about relationships, hope, and human emotions in a realistic way. It’s definitely worth watching for its message and heartfelt storytelling

Will crew Details

Written & Director sivaraman

Music – saurabh aggarwal

vikranth
Starring
sonia aggarwal
alekhya

Cast & Crew

Production: Foot Steps Production

Co Production: Kothari Madras International Limited

DOP – TSprasanna
Editor – Dinesh G
Lyricist – Kalai Kumar
Stunts: Fire Karthik
Music programmed -vykunth
Sound Designer: rk aswath
Foley Designer : R.Raj Mohan
Dubbing and Mixing: dawrecords
Dubbing Engineer: Vasanth
DI & VFX: firefoxstudioss
Poster – zenkiv_studio
Title Design – Sasi & Sasi
Makeup – Paari, Kayal
PRO – Velu
DigitalPromotion: starnestmedia
Dinesh kumar& Dinesh kumaresan

Marutham Movie Review

0

Marutham is a refreshing and emotional Tamil drama that beautifully blends village life, human emotions, and nature’s essence. The film takes us on a heartfelt journey through the eyes of its strong and simple characters, reminding us of the purity and strength of rural values.

The direction is soulful — every frame feels real and rooted in Tamil soil. The cinematography captures the green fields, traditional houses, and the calm countryside in a way that makes you feel part of that world. The music is another highlight — soothing, emotional, and perfectly matched with the story’s tone.

The performances are top-notch. The lead actor delivers a natural and powerful performance, making the audience connect deeply with his struggles and dreams. The heroine brings charm and depth, while the supporting cast adds life and authenticity to every scene.

The story, though simple, carries a strong message about family bonding, hard work, and respect for nature. It shows that true success is not about money or fame but about values, love, and inner peace.

Overall, Marutham is a beautiful movie filled with emotions, values, and heart-touching moments. A perfect watch for those who love meaningful Tamil cinema that stays with you long after it ends.

Starring: Vidharth, Rakshana, Maran, Arul doss & others supported
Written & Directed by: V Gajendran
Music Director : N R Raghunandhan
Produced by : C Venkatesan

மருதம் திரைப்படம்

தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சி. வெங்கடேசன்

நடிப்பு :
விதார்த் – கண்ணியப்பன்
ரக்ஷனா – சிந்தாமல்லி
அருள்தாஸ் – கதிர்வேல்
மாறன் – பழனி
தினந்தோறும் நாகராஜ் – கந்தன்
சரவண சுப்பையா – ராஜசேகர்

எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
ஒலி :T உதயகுமார்
DI : வசந்த்
கலை : தாமு MFA
பி ஆர் ஓ: A. ராஜா

Veduvan Web Series Review

0

Veduvan web series is a powerful and engaging drama that keeps the audience hooked from start to finish. The storyline is crafted beautifully, blending emotions, suspense, and strong character development. Each episode unfolds with a new twist that makes us eager to know what happens next.

The lead actors Sanjeev Venkat, Kanna Ravi, Vinusha Devi, Lavanya, Rekha Nair, Sravnitha Srikanth have done a fantastic job — their performances feel natural and convincing. The direction and screenplay are neatly executed, giving a smooth flow to the story without any lag. The background score and cinematography add extra strength to the intense moments and emotional scenes.

What makes Veduvan special is its realistic storytelling — it connects deeply with viewers through its powerful dialogues and life-like situations. Every character has purpose and meaning, making the entire series memorable.

Overall, Veduvan is a must-watch web series that delivers entertainment, emotion, and message together. It’s a great example of how good writing and performance can turn a simple story into a gripping experience.


A Zee 5 Original Veduvan Web Series Cast & Crew Details

Kanna Ravi – Arunmozhi
Sanjeev Venkat – Aadhinadhan
Sravnitha Srikanth – Pallavi
Vinusha Devi – Shanthi
Rekha Nair – Yashoda
Lavanya – Vennila
Producer Name – SAGAR PENTELA
Production House – RISE EAST PRODUCTIONS
Director – PAVAN KUMAR
Screenplay – PAVAN KUMAR
Writer – PAVAN KUMAR
Background score – VIBIN BASKAR
Editor – SURAJ KAVEE
Cinematography – Srinivasan Devaraj

CaratLane Celebrates 17th Anniversary with Grand Store Launch in Chennai Featuring Kayadu Lohar

0

Chennai, India – 8th October: CaratLane, India’s leading omnichannel jewellery brand, celebrated its 17th anniversary with the grand opening of its newest store on Usman Road in Chennai, Tamil Nadu today. The launch, attended by popular Tamil actress and brand associate, Kayadu Lohar, marks a significant milestone in the brand’s journey and its deep-rooted connection with customers in the region.

For its 17th anniversary, CaratLane launched the new 1,400 sq. ft. store on Usman Road in Chennai. The opening was attended by actress and brand associate, Kayadu Lohar, whose long-standing partnership with the brand underscores its commitment to authentic connections. The store strengthens CaratLane’s presence in Chennai, its key market in South India.

The brand’s Tamil Nadu revenue for FY26 (year-to-date till August) grew by nearly 30% compared to the same period in FY25. Within this, Chennai contributed a significant 33% increase, reaffirming its role as the anchor market for the brand’s growth.

Reflecting on this special occasion, Mr. Saumen Bhaumik, Managing Director, CaratLane, commented: “We celebrate our 17th anniversary with the launch of this new format store in Usman Road, the heart of Jewellery in Chennai. We are delighted to announce our association with Kayadu Lohar, one of the rising stars of TN filmdom, as our Brand Ambassador on this momentous occasion. In many ways than one, this day marks a new beginning for Caratlane in TN, which is where everything began!”

The new store offers CaratLane’s signature retail experience, showcasing collections that cater to everyday wear, festive occasions, and life’s special milestones. By combining design-led innovation with local sensibilities, CaratLane ensures that its offerings resonate deeply with customers in Tamil Nadu and across South India.

With a strong and expanding presence across the country, CaratLane remains committed to its vision of making high-quality, contemporary jewellery accessible to a wider audience. The company plans to continue its expansion into more tier-2 and tier-3 towns, introduce locally inspired designs, and invest in technology to enrich the customer journey both online and offline.

About CaratLane:
CaratLane was one of the earliest online jewellery start-ups of 2008. After Titan invested in CaratLane in 2016, the brand evolved into a seamless omni-channel jewellery retailer, backed by the Tata Group’s legacy of excellence and trust. Driven by its mission to help people express their emotions, CaratLane offers unique, contemporary jewellery and an engaging shopping experience suited to modern lifestyles. Along with India’s largest online jewellery platform, CaratLane operates over 330 stores nationwide and internationally in New Jersey. It has pioneered distinctive services like CaratLane LIVE (an online live shopping experience), Try at Home (no-obligation home trials), and Solitaire Lounges for personalised diamond shopping. For more information, visit https://www.caratlane.com/.

We celebrate our 17th anniversary with the launch of this new format store in Usman Road, the heart of Jewellery in Chennai. We are delighted to announce our association with Kayadu Lohar, one of the rising stars of TN filmdom, as our Brand Ambassador on this momentous occasion. In many ways than one, this day marks a new beginning for Caratlane in TN, which is where everything began!

In a First for South India, SIMS Hospital Treats the Region’s Youngest Patient with Porcelain (Calcified) Aorta and Aortic Valve Block

0

· This combination of porcelain (calcified) aorta and aortic valve block is extremely rare in patients under 30 years of age.

· The brittle, heavily calcified valve, almost egg-like in fragility, made grafting and suturing very difficult with associated high-risk.

Chennai, 7th October, 2025: In a remarkable medical feat, doctors at SIMS Hospital successfully saved the life of a 28-year-old engineering student from Kerala, who was suffering from a rare and life-threatening heart condition.

The young man had been experiencing severe breathing difficulties for two months. After visting several hospital in Kerala, he was diagnosed with a rare combination of two serious heart issues – a “porcelain aorta” (a severely hardened and fragile main artery) and “aortic valve stenosis” (a narrowing of the valve that controls blood flow from the heart). Due to the complexity and high risk of surgery, local hospitals advised against surgery.

Not giving up hope, the patient travelled to Aortic aneurysm Centre at SIMS Hospital in Chennai, where a team of expert heart surgeons took on the challenge. The surgical team performed a mechanical aortic valve replacement, navigating the extraordinary challenge of suturing the heavily calcified aorta, the very structure on which the aortic valve sits. The complexity of the case posed a high risk, given that a porcelain aorta is brittle and difficult to operate on, making the surgery extremely challenging.

The complex surgery, lasting over five hours, was performed by Dr. V V Bashi, Director & Senior Consultant, Institute of Cardiac & Advanced Aortic Diseases, and Dr. Mohammed Idhrees, Consultant Cardiothoracic Surgeon, with the support from anesthetists: Dr. Aju Jacob, Senior Consultant, Cardiac Anaesthesia, and Dr. Arun Kumar A, Consultant, Anaesthesia and team of nurses and perfusionists

In his comments, Dr. Bashi said, “The aorta, the body’s largest artery, carries oxygen-rich blood from the heart, while the aortic valve ensures smooth blood flow and prevents backflow. In this patient, the valve was severely narrowed and the aorta heavily calcified. This was a highly complex case because of the dual risk posed by a stenotic aortic valve and a porcelain aorta, both of which are extremely rare in young people. Aortic valve stenosis is common in older adults, usually developing gradually due to calcium buildup over many years. However, it is extremely rare in someone under 30. Likewise, a porcelain aorta is very uncommon in young patients. Our team meticulously planned and executed the procedure carefully managing the risks to ensure the patient’s safety while restoring normal heart function. If we also had refused surgery for him, he would not survived for long due to his serious condition.”

Dr. Mohammed Idhrees, Consultant Cardiothoracic Surgeon, said, “In this case, we needed to perform a mechanical valve replacement, which involves suturing both the valve and the aorta. However, the porcelain aorta is so heavily calcified that its walls are as fragile as an eggshell. Cutting or suturing such calcified tissue carries significant risks: small fragments of calcium can break off and enter the bloodstream, potentially causing a stroke or other serious complications, and even if suturing is technically successful, there is a high risk of blood leakage. Because of these challenges, two major hospitals in Kerala had deferred the surgery, considering it too risky. Our team, after careful planning and preparation, executed the procedure with precision, taking every precaution to minimise risks. The patient is now recovering well and is expected to lead a normal life with appropriate post-operative care.”

Commenting on this achievement Dr. Ravi Pachamuthu, Chairman, SIMS Hospital, said, “The achievement of our surgical team is nothing short of a medical milestone. Because of the tremendous skill required, successfully treating a 28-year-old patient with an extraordinary combination of almost ‘eggshell’ calcified aortic valve and a porcelain aorta is a medical triumph. The surgical staff’s expertise, tenacity, and creativity in highly complex cardiac situations not only saved a life but also created a new standard in the field. This accomplishment brings new meaning to the commitment in patient care at SIMS Hospital”

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

0

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

DR. ISHARI K. GANESH LAUNCHES VELS MUSIC INTERNATIONAL

0

As VELS Expands into a 360° Entertainment Ecosystem with Films, Studios, Music & Post-Production facility

Chennai, India – 07/09/25 –
Dr. Ishari K. Ganesh, Chairman and Managing Director of Vels Film International Limited, today announced the official launch of Vels Music International on the occasion of his birthday, marking another major milestone in Vels’ journey toward building a 360-degree entertainment ecosystem encompassing film production, music, theatres, post-production, and studio infrastructure.

As one of Tamil Nadu’s most progressive publicly listed entertainment companies, Vels Film International continues to consolidate its creative and commercial assets under one unified brand — ensuring complete IP ownership, vertical integration, and long-term value creation for both the company and its shareholders.

“Music and cinema are the lifeblood of our culture,” said Dr. Ishari K. Ganesh. “As the global music business evolves, it’s vital that we hold our own IP rights and create a platform that celebrates Tamil talent. Vels Music International is not just a label — it’s a movement built to shape the sound of tomorrow. Our goal is to position Vels as the creative and cultural hub of South India — where technology, talent, and storytelling meet.”
Expanding the VELS Vision
Under Dr. Ganesh’s leadership, Vels Film International is actively expanding into every vertical of the entertainment value chain, including:
Film Production – A robust slate of high-profile Tamil films with top stars and directors.
Vels Music International – A dedicated music label for original soundtracks, singles, and independent releases.
Vels Film City – Following the acquisition of EVP Studios and the construction of India’s largest indoor floor in Pallavaram, Vels Film City is now Chennai’s most spacious media and entertainment hub, featuring 20 film studios, a 6-screen multiplex, hotel rooms, and Chennai’s largest trade, exhibition, and convention center across 130 acres.
Vels Post – Coming soon, a state-of-the-art post-production facility designed to offer end-to-end solutions for editing, DI, color grading, VFX, sound design, and mastering — completing the studio’s vision of a fully integrated ecosystem under one roof.

Upcoming Line-Up under Vels Music International

D54 – Dhanush × Vignesh Raja
Mookuthi Amman 2 – Sundar C x Nayanthara
D56 – Dhanush × Mari Selvaraj

Vada Chennai 2 – Dhanush × Vetri Maaran
Gatta Kusthi 2 – Vishnu Vishal × Chellaiya
FAFA – Fahadh Faasil × Prem Kumar
Dyangaram – VJ Siddhu

The label is collaborating with some of Tamil cinema’s most celebrated composers, including A. R. Rahman, G. V. Prakash Kumar, Hip Hop Thamizha, Sidhu Kumar, Govind Vasantha, and Sean Roldan, promising a diverse and emotionally charged lineup of soundtracks.
Independent Artists, Acquisitions & Global Reach
Vels Music International will also partner with independent artists for singles, cross-genre collaborations, and original music, while actively acquiring albums from other production houses to expand its catalog.
All releases will be distributed across major digital and global streaming platforms, taking the sound of Tamil cinema to audiences worldwide.

Vels Music International – The Sound of New Cinema.

About Vels Film International Limited:
Founded by Dr. Ishari K. Ganesh, Vels Film International Limited is one of Tamil cinema’s most successful publicly listed production studios. With verticals across film production, distribution, theatres, music, post-production, education, and studio infrastructure, Vels continues to redefine the future of entertainment through creativity, innovation, and scale.

For Media Enquiries:
Vels Film International Limited
[email protected] | www.velsfilminternational.in
Chennai, Tamil Nadu

டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்கள் தனது பிறந்தநாளில் “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி  K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது.

“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K. கணேஷ் கூறியுள்ளார்.., மேலும்
“உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை  உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். மேலும் எனது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

வேல்ஸ் விஷன் – விரிவடைந்த புதிய பாதை

டாக்டர் ஐசரி  K. கணேஷ் தலைமையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கீழ்கண்ட துறைகளில் விரிவடைந்து வருகிறது:

திரைப்பட தயாரிப்பு – முன்னணி நட்சத்திரங்களுடன்,  பல பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் –
பாடல்கள், சிங்கிள்ஸ் மற்றும் இண்டிபெண்டண்ட் ரிலீஸ்களுக்கான தனித்த இசை பிரிவு.

வேல்ஸ் ஃபிலிம் சிட்டி – EVP ஸ்டூடியோசை தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், பல்லாவரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இன்டோர் ஷூட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 130 ஏக்கர் பரப்பளவில் 20 ஸ்டூடியோஸ், 6 திரையரங்குகள், ஹோட்டல் வசதிகள் மற்றும் சென்னை நகரின் மிகப்பெரிய கண்காட்சி மையம் ஆகியவை உள்ளன.

வேல்ஸ் போஸ்ட் (Vels Post) – விரைவில் துவங்கவிருக்கும் புதிய போஸ்ட் புரொடக்சன் மையம். இதில் எடிட்டிங், DI, கலர் கிரேடிங், VFX, சவுண்ட் டிசைன், மற்றும் மாஸ்டரிங் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் வெளியிடவிருக்கும் முக்கிய திரைப்படங்கள்

D54 – தனுஷ் & விக்னேஷ் ராஜா
மூக்குத்தி அம்மன் 2 – சுந்தர் சி & நயன்தாரா
D56 – தனுஷ் & மாரி செல்வராஜ்
வடசென்னை 2 – தனுஷ் & வெற்றிமாறன்
கட்டா குஸ்தி 2 – விஷ்ணு விஷால் & செல்லையா
FAFA – ஃபஹத் ஃபாசில் & பிரேம் குமார்
டயங்கரம்  – விஜே சித்து

தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைப்பு

ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை உருவாக்கவிருக்கிறது.

இண்டிபெண்டண்ட் ஆர்டிஸ்ட்கள் மற்றும் சர்வதேச வரம்பு

வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல், இண்டிபெண்டண்ட் பாடகர்கள், க்ராஸ்-ஜானர் கலைஞர்கள் மற்றும் புதிய இசை திறமைகளுடன்  இணைந்து பணியாற்றும். மேலும், பிற தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஆல்பங்கள் வாங்கி தன் பட்டியலில் சேர்த்து, உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் தமிழ் இசையை பரப்பவிருக்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
பற்றி

டாக்டர் ஐசரி K. கணேஷ் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணி பப்ளிக் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள், இசை, போஸ்ட் புரொடக்சன், கல்வி மற்றும் ஸ்டூடியோ உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பரந்து விரிந்துள்ளது. படைப்பாற்றல், புதுமை மற்றும் வணிக அளவில் வளர்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லவுள்ளது.

தொடர்புக்கு :
Vels Film International Limited
📧 [email protected]
🌐 www.velsfilminternational.in
📍 சென்னை, தமிழ்நாடு

- Advertisement -

Recent Posts