- Advertisement -
Home Blog Page 113

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஓசை பிலிம்ஸ் வழங்கும் “அந்தோனி” முழுநீளத் திரைப்படம்.

0

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” இளையராஜா அவர்கள்.

அந்தோனி திரைப்படமானது
இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 ல் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடைபெற்று 30.04.2025 ல் நிறைவுபெற்றிருந்தது. திரைப்படத்தின் Post Production பணிகள் சித்திரைமாதம் படத்தொகுப்புடன் (எடிற்றிங்) வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுப் பின்னர் குரல்ப்பதிவுகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு 10.08.2025ல் இசையமைப்புக்குத் தாயாராகியது. எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு ஒரு உலகறிந்த இசையமைப்பாளரை ஒழுங்கு செய்வதே சிறந்ததாக இருக்கும் எனும் எண்ணம் படத்தயாரிப்புக் காலங்களிலேயே கலந்துரையாடப்பட்டதால் இசைஞானி இளையராஜாவே அவர்கள் இத்திரைப்படத்திற்கு தகுந்த இசையை வழங்குதல் சிறப்பாக இருக்கும் என்பது தீர்மானிக்கப்பட்டு அவரை அணுகுவது என்றிருந்தோம். அவ்வாறே அவரை கடந்த மாதம் அணுகிய வேளை கதையைக் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார். அதேவேளை படத்தையும் பார்த்தார். இசையமைப்பு வேலைகள் இரண்டு நாட்களிலேயே ஆரம்பமாகி தற்பொழுது இறுதி நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரு காதல் கதைக்களத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைப்பதும் ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்.

இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் பல்வேறுபட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் எமது சிம்பொனி தொட்ட சிகரம் என பல கோடி மக்களால் போற்றப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் திரப்படமான அந்தோனி திரைப்படம், இளையராஜா அவர்களின் 1524வது திரைப்படமாகவும் ஈழத்தின் முதற்படமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. தனது 82 வயதிலும் 1500 படங்களை தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இவரது இசை இன்று வரை உலகமெங்கும் மக்களை வாழ வைக்கும் உயிரோட்டமாகவே திகழ்கின்றது.

ஐரோப்பிய நாடுகளில் பல கோடி தமிழ் மக்களின் பார்வைக்காக காத்திருக்கும் “அந்தோனி” திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்கியிருக்கின்றனர். இதன் இணை இயக்குநராக கலைவளரி சக இரமணா இருப்பதோடு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக ஓசை பிலிம்ஸ் நிறுவனர் கலைவளரி சக இரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருப்பதோடு, லைன் புரடியூசராக விக்கி (கனா புரடக்‌ஷன்ஸ்) இணைந்து கொண்டிருக்கின்றார்.

இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களை பொறுத்தவரை தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோனி திரைப்படம் அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவிலும் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கின்றது.

பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் அந்தோனி திரைப்படத்தின் மேலதிக இறுதிக்கட்ட (Post Production) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என்பதைத் தெரிவிப்பதோடு,
இசைஞானி இளையராஜா அவர்களின் பொன்விழாவான இன்று 13.09.2025ல் எமது அந்தோனி திரைப்படத்தின் இவ் அறிவிப்பை பெருமையுடன் உலகத்தழிழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் ஓசை பிலிம்ஸ் மற்றும் குறிஞ்சி கிறியேஷன் பெருமகிழ்வடைகிறது. நன்றி

எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன் -நடிகர் தினேஷ்

0

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,
ஷபீர்,
பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்
“தண்டகாரண்யம்”

இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக
நடைபெற்றது.

இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது,

இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம்.

புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் எழுதி, படத்தினை வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நடிகர் கலையரசன் பேசியது,

இயக்குனர் அதியன் ஒரு குழந்தை.
தினேஷ்,வின்சு மற்றும் சக நடிகர்கள் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். ரித்விக இந்த படத்தில் எனக்கு அண்ணியாக நடித்துள்ளார்.

நீலம் புரோடக்ஷன் படம் பண்ணும் பொழுது நிறைய விஷயங்கள் இருக்கும்.
தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

நடிகர் தினேஷ் பேசியதாவது,

அதியன் ஆதிரை மிகவும் உணர்சிவச கூடியுவர். இருப்பினும் அவரது படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என கவனம் செலுத்த கூடியவர். படத்தில் இசையமைப்பாளர் ஜெஸ்டின் வந்த பிறகு
மிகவும் பிரமாதம் செய்து விட்டார்.
எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன். உதாரணமாக ஒருவர் மூச்சை எப்படி இழுத்து விடுவார் என யோசித்து நடித்தேன்.

அதனை மக்கள் ரசித்தனர். ரப்பர் பந்து படத்திற்கு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி.

காற்று, மலை, அனைத்தும் பொதுவானது.
என்றார்.

படத்தின் இயக்குனர் அதியன் பேசியதாவது,

படத்தின் கதையானது மகாபாரதம் பல ஆண்டுகால இருக்கிறது. அது தெரு கூத்து, நாடகம் என பல வடிவில் வந்து இருக்கின்றது. இருப்பினும் அனைத்திலும் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார், அதேபோல கிருஷ்ணர் சீக்கிரம் வா என திரௌபதி குரல் எழுப்புவது போல தான் இருக்கும். ஆனால் மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில் உறியும் பொழுது சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது. அதை கருப்பொருளாக வைத்துக் கொண்டு என்னுடைய இந்த படம் அமைந்திருக்கிறது. படத்தில் முதலாவதாக இயக்குனர் அமீர் நடிக்க இருந்தார் இருப்பினும் திடீரென அவர் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்பு கொண்டார். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய இந்தத் திரைப்படம் குரல் எழுப்பும் என்ன நான் நம்புகிறேன். படத்தில் ஒரு பாடகர் அறிவு பாடி இருக்கிறார்.

அது படத்தின் கதைக்களத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது.
என்று தெரிவித்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது,

கடந்த 13 ஆண்டுகளாக குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்த தயாரித்த தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் திரைப்படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை.
சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்போடு வந்திருக்கிறோம்.
நான் இயக்குனராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர்.

முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள் இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரம் கூட ராப் இசை கலைஞர்களுக்கு மிகப்பெரும் பங்கானது இருக்கிறது.

தொடர்ச்சியாக நீலம் ப்ரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

0

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது.

வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் .
அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது.

இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.
இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன்.

மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இவரின் தந்தை

திரைப்படங்களில் நடிப்பதில் மிதுன் சக்கரவர்த்திக்குச் சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இப்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார் .படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என அவர் தந்தை கேசி பிரபாத் கூறியுள்ளார்.

இந்தப் பாடலை திரைப் பிரபலங்கள் 100 பேர் வெளியிட்டார்கள்.

இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர்,
திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன்,
அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,
இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்,நடிகைகள் தேவிகாவேணு, தியா.மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் இந்தப் பாடலை பார்த்து பாராட்டி வலைதளத்தில் வெளியிட்டனர்.
Finding bliss in acclaimming your sweet heart.

Here’s Mellifluous #AdiyeVellalagi song.

Direction: Mohammed Imthiyas

Hero – K.C.P Methun Shakaravarthy Heroine – Jeevitha

Link – youtu.be/pNjQFSUl0HY?si…

Actor Siddharth to headline Netflix’s global series “Unaccustomed Earth

0

Actor Siddharth’s versatility has shone brightly for over two decades, making him one of the rare Indian stars to enjoy a truly pan-Indian fan base. From winning hearts in Tamil and Telugu cinema to delivering memorable performances in Bollywood, he has consistently struck the right chord with audiences. Now, celebrated for his discerning choice of roles and a strong presence in both film and digital platforms, Siddharth is set to headline Netflix’s ambitious new original series Unaccustomed Earth, based on Jhumpa Lahiri’s award-winning short-story collection.

His recent projects like Chiththa and 3BHK not only drew critical acclaim but also earned him global recognition for their deeply emotional storytelling. With Unaccustomed Earth, Siddharth takes yet another significant step, bringing to life one of Lahiri’s most celebrated works in a series poised to connect with audiences on an international stage.Siddharth has left his mark as a star in all time classics in Tamil, Telugu and Hindi…and now is set to be seen by the global audience. He is now set to showcase his charm and talent as an American born character.

Unaccustomed Earth is an eight-episode character-driven drama romance, described as “epic, soapy, and culturally vibrant.” Set in Cambridge, Massachusetts, within an elite, close-knit Indian-American community, the series explores themes of love, desire, belonging, and identity while offering an intimate, nuanced look at relationships and cultural expectations.

At the heart of the story is Parul Chaudhury (Freida Pinto), a devoted wife whose life is shaken when her long-lost love Amit Mukherjee (Siddharth) re-enters her world. Amit, a warmhearted Bengali-American from Cambridge, is the dependable friend everyone turns to in a crisis but struggles to find balance in work and love. Their reunion sparks a star-crossed romance and a scandalous affair that threatens to upend the fragile order of their insular immigrant community.

Unaccustomed Earth is produced by John Wells Productions in association with Warner Bros. Television. The series brings together a distinguished creative team: acclaimed playwright and screenwriter Madhuri Shekar (3 Body Problem, The Nevers) serves as writer and showrunner, while Ritesh Batra (The Lunchbox) directs and executive produces the opening two episodes. Executive producers also include John Wells, Jhumpa Lahiri, Nisha Ganatra, Erica Saleh, Erin Jontow, and Celia Costas. The eight-episode drama will stream globally on Netflix.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான ‘Unaccustomed Earth’-ல் நடிக்கவுள்ளார்.

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த ‘சித்தா’ மற்றும் ‘3BHK’ ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான ‘Unaccustomed Earth’ தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார்.

எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் இந்திய-அமெரிக்க சமூகத்திற்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், எதிர்பார்ப்பு, கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளை நெருக்கமாகவும், நுணுக்கமாகவும் சொல்கிறது.

பொறுப்பான மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பருல் சவுத்ரி (ஃப்ரீடா பிண்டோ) தனது முன்னாள் காதலன் அமித் முகர்ஜியை (சித்தார்த்) நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது அவள் வாழ்க்கை தடுமாறுகிறது. கேம்பிரிட்ஜைச் சேர்ந்த அன்பான பெங்காலி-அமெரிக்கரான அமித் தன் நண்பர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், வேலை – காதல் இரண்டையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறார். இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கதை.

தொழில்நுட்பக் குழு விவரம்:

தயாரிப்பு: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷனுடன் இணைந்து தயாரிக்கிறது,
திரைக்கதை ஆசிரியர்: மாதுரி ஷேகர் (3 பாடி பிராப்ளம், தி நெவர்ஸ்),
இயக்கம், நிர்வாகத் தயாரிப்பு (முதல் இரண்டு எபிசோட்): ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்),
மற்ற நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: ஜான் வெல்ஸ், ஜும்பா லஹிரி, நிஷா கணத்ரா, எரிகா சலே, எரின் ஜோன்டோவ் மற்றும் செலியா கோஸ்டாஸ் ஆகியோர்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் ஸ்ட்ரீம் ஆகும்.

MIRAI MOVIE REVIEW

0

Mirai is a refreshing and ambitious fantasy entertainer that gives Tamil cinema a new dimension. Director Karthik Gattamneni beautifully blends mythology, action, and emotions into a grand visual experience.

Teja Sajja shines as Vedha Prajapati – he carries innocence, energy, and heroism with ease. Manoj Kumar Manchu delivers a powerful performance as the menacing antagonist, making the clash between hero and villain very impactful. Shriya Saran, Jagapathi Babu, Jayaram, and Ritika Nayak add depth and charm to the story, each bringing life to their roles.

The biggest highlight of Mirai is its visuals and world-building. The VFX work, action choreography, and fantasy sequences look stunning on the big screen. Scenes like the Sampati bird, the train fight, and the mystical backdrops stand out as truly cinematic moments. The background score by Gowra Hari adds goosebumps, perfectly elevating the emotions and grandeur.

Beyond fantasy, the film has a strong emotional core about courage, destiny, and family bonds. The screenplay balances lighthearted moments, romance, and epic battles, making it engaging for both youth and family audiences.

✅ Highlights:

Grand visuals & top-class VFX

Teja Sajja’s energetic performance

Manoj Manchu’s powerful villainy

Engaging mix of action, fantasy & emotion

Strong background music & stylish making

✨ Verdict: Mirai is a must-watch theatrical experience. It brings a fresh wave of fantasy storytelling to Tamil cinema, offering action, spectacle, and emotions in the right dose. A proud attempt that entertains all sections of audience.

மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே ; பிரித்விராஜின் நண்பனாக நடிக்கிறார்

0

சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தற்போது வெளியாகியுள்ள ‘பாம்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நடித்துள்ளார் டிஎஸ்கே. ‘லப்பர் பந்து’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ‘பாம்’ படத்தில் நடித்தது குறித்தும் அடுத்தடுத்து வரவிருக்கும் தனது படங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் டிஎஸ்கே..

“லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ‘பாம்’ படத்தில் அப்படியே முற்றிலும் மாறான பாசிட்டிவான கதாபாத்திரம். ஆனாலும் இந்த படத்திற்கான கதாபாத்திரம் எனக்கு லப்பர் பந்து படத்திற்கு முன்பாகவே தேடி வந்த ஒன்று.. ‘பாம்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை பார்த்து வியந்துபோய் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

ஆனால் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து பாம் படத்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லி இதில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்று சொன்னது மட்டுமல்ல, இந்த கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னபோது என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆச்சரியப்பட வைத்தது. அவரும் என்னைப் போல அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர் தான் என்பதால் மறக்காமல் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படம் பார்த்த பலரும் லப்பர் பந்து, பாம் இரண்டு படங்களுக்கும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நீங்கள் அதில் பொருந்தி விடுவீர்கள் என பாராட்டியபோது இயக்குநர் விஷால் வெங்கட்டின் நம்பிக்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டது.

‘பாம்’ படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும். நம் வீட்டிற்கு சென்று வருவது போன்று ஒரு உணர்வு தான் படப்பிடிப்பில் ஏற்பட்டது. அர்ஜுன் தாஸின் குரல் தான் மிரட்டலாக இருக்குமே தவிர அவருடைய குணாதிசயம் மிகவும் மென்மையானது. பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவருடைய குரலை நானும் நண்பன் அசாரும் மிமிக்ரி செய்திருக்கிறோம். அவரும் அசாரிடம் குறித்துப் பேசி பாராட்டியும் இருக்கிறார். ரசவாதி, அநீதி, இப்போது பாம் என அவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு தனித்துவமான நடிகராக வளர்ந்து வருகிறார்,

லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக தேடி வந்தது. அங்கே ‘விலாயத் புத்தா’ என்கிற படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்..

படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் மலையாள திரையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார் பிரித்விராஜ். அது மட்டுமல்ல இயக்குநரிடம் என்னைப் பற்றி பேசும்போது ‘ஈ ஆள் வலிய வேலைக்காரன்’ என்றும் பாராட்டியுள்ளார். என்னடா வேலைக்காரன் என்று சொல்கிறாரே என நான் குழம்பியபோது, படத்தின் இயக்குநர் அவர் உங்கள் நடிப்பு திறமையை பாராட்டி தான் அப்படி கூறினார் என்று சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

தமிழில் அமீர், அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில், மீண்டும் லப்பர் பந்து படத்தில் நடித்தது போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். செல்வகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஜனவரியில் வெளியாக இருக்கிறது.

இது தவிர டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். கனா, லேபிள், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக பணியாற்றிய’ பிரகாஷ் பாஸ்கர் டியர் ஜீவா படத்தை இயக்குகிறார். ஹி இஸ் பிரக்னண்ட் ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது. தற்போது பாலாஜி சக்திவேல் சாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது என்னுடைய 25வது படமாக உருவாகி வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வருகின்ற படங்களும் கதாபாத்திரங்களும் அதை வலுப்படுத்தும் விதமாகவே தேடி வருவது கூடுதல் சந்தோஷம்” என்கிறார் டிஎஸ்கே..

Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer

0

Rising star Saanya Iyer embodies a rare blend of youthful brilliance and artistic maturity. Her presence on screen is not merely an act of performance but an expression of grace, discipline, and an instinctive command over her craft, qualities that distinguish true artists from fleeting talents. With an elegance honed through years of dedication and an intuitive ability to inhabit diverse roles, she has become a beacon of promise in contemporary South Indian cinema.

Having spent over 15 years in the Kannada entertainment industry, Saanya’s journey is a testament to both perseverance and passion. From her early acclaim as a child actress in beloved daily soaps like Nam Amma Sharade, Arasi, and Puttagowri Maduve, to her memorable performances in films such as Gaja, Mukhaputa, and Vimukti, she has consistently left a mark on audiences and critics alike. Her victory as the Bigg Boss OTT Kannada Season 1 winner and her commanding screen presence as the female lead in Indrajith Lankesh’s Gowri (2024) further reinforce her standing as one of the most promising names in Indian cinema today.

Actress Saanya says, “I feel so honoured and grounded to have been awarded with SIIMA Most Promising New Comer 2025 (Kannada). I extend my heartfelt gratitude to the respected jury of SIIMA, my supporters for their unwavering love, media for embracing me, my family and friends who have held my hand through it all. I promise to reflect and give my all to the world of art & cinema.”

This milestone stands not merely as a recognition of Saanya Iyer’s talent, but as an affirmation of her relentless perseverance, refined discipline, and the profound resonance she evokes in her audiences. Grounded in a strong foundation in classical and contemporary dance, graced with a luminous on-screen presence, and enriched by a steadily expanding repertoire of acclaimed performances, she emerges not simply as a promising actress but as a cultural force in the making. With each new role, Saanya is poised to ascend further, offering fresh dimensions to the evolving language of Indian cinema.

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ‘நம் அம்மா ஷாரதே’, ‘அரசி’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கஜா’, ‘முகபுதா’ மற்றும் ‘விமுக்தி’ போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா.

இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, “கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்” என்றார்.

இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !!

0

தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர்
செ.ஹரி உத்ரா புதிய அலுவலகம் சென்னை வடபழனி பகுதியில், வேலாயுதம் காலனி யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது.

சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும், தமிழ்நாடு , கேரளா , கர்நாடகம் போன்ற பகுதிகளில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், இத்தகைய படங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் செ.ஹரி உத்ரா அவர்கள், Gentle Women , கெவி , தூக்கு துரை , குற்றம் புதிது தமிழ் திரைப்படங்களையும், Jijo George நடித்த ஆரோ , Asif Ali யின் ரஞ்சித் சினிமா , அன்போடு கண்மணி ஸ்ரீலங்கன் சுந்தரி போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியீடு செய்துள்ளது…

மேலும் இந்நிறுவனம் சார்பில் Maria , YELLOW என அடுத்தடுத்து பல படங்களை வெளியிட மும்முரமாக பணியாற்றியும் வருகிறார். இதுவரை 2023, 2024, 2025 ஆகிய 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது இந்நிறுவனம்.

இந்நிறுவனம் திரையரங்கு வெளியீடு மட்டுமல்லாது, Amazon Prime , AHA , TENTKOTTAI , SUN*NEXT முதலான ஓடிடி தளங்களில், படங்களை விற்பனை ,FMS,Hindi,Other Languages, சாட்டிலைட் உரிமைகளையும் விற்றுத் தந்து, தயாரிப்பாளர்களுக்கு லாபம் பெற்றுத் தந்து வருகிறது. புதுப்பட தயாரிப்பாளர்கள் எளிதில் அணுகும் வண்ணம்,
இந்நிறுவனத்தின் அலுவலகம் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டு பிரபலங்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன் புதிய அலுவலகம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது…

இளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு, என் கோடான கோடி நன்றிகள்…

0

நடிகர் அப்புக்குட்டி!

இளையராஜா இசையில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டி, ‘தேசிய விருது’ பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்புகுட்டி கூறுகையில்… நான் பெற்ற தேசிய விருதுக்கு இளையராஜா அவர்கள் மிக முக்கிய காரணம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கேரக்டர் செய்திருந்த என்னை, கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் மாற்றியவர் சுசீந்திரன் அவர்கள். அந்தப் படத்தில் ‘குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே… என்ற பாடலை இளையராஜா அவர்கள் எனக்காக இசையமைத்து, பாடிய அந்தப் பாடலை, படத்தில் வாய் அசைத்து நடித்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அந்தப் படத்தின் எமோஷனலான காட்சிகளில் நான் நடிக்கும் போது, அதற்கு இளையராஜா அவர்கள் அமைத்திருந்த பின்னணி இசை டெல்லி வரை கேட்டு, ‘எனக்கு தேசிய விருதை பெற்று தந்தது’.

இளையராஜா நம் தமிழகத்தின் பொக்கிஷம். அவர் வாழும் காலத்தில் அவர் இருக்கும் திரை துறையில் நாம் பயணிப்பது பெரும் பாக்கியம். ஒவ்வொரு நடிகர்களுக்கும் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறி, அதன் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. இந்த எல்லா பெருமையும் இளையராஜாவையே சாரும்.

கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தாலும், அரசு விழா எடுப்பது என்பது மிகப் பெரிய பெருமையாகும். இளையராஜாவிற்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படிக்கு
நடிகர் அப்புக்குட்டி

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young “18 Miles” Team

0

Over the past few weeks, the poignant love story of 18 Miles has captivated audiences. Its 14-minute prologue, presented by Think Music and directed by Sathish Selvakumar, featuring Ashok Selvan and Mirnaa in the lead, has garnered an exceptional response. Adding further lustre to this celebration, acclaimed filmmaker Mani Ratnam extended his warm appreciation to the entire team for their remarkable work.

Director Sathish Selvakumar says, “It was a truly remarkable experience for all of us in the 18 Miles team. We had the privilege of screening the prologue at the Madras Talkies office. Following a contemplative pause after the screening, Mani Ratnam sir expressed his appreciation, observing that it had been crafted with both elegance and detail. He graciously devoted time to acknowledge every individual, from heroine Mirnaa to my assistant Ashok, our editor Nash, and the wider team. For us, it was an immensely gratifying moment. Executive Producer Shivanand sir also shared his words of encouragement. Mani Ratnam sir further commended the effort that had gone into the prologue, remarking that the dedication of the team was evident in the final work.”

Director Sathish Selvakumar tots up adding, ‘Mani Ratnam sir’s Kannathil Muthammittal was one of my greatest inspirations to evolve as a filmmaker. The emotions crossing beyond oceans and boundaries were esthetically captured by him. Today, to get warm appreciations from the versatile creator himself makes me so elated.”

இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழுவினர்!

உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’ கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது ’18 மைல்ஸ்’ மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் ’18 மைல்ஸ்’ பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார். கதாநாயகி மிர்னாவில் இருந்து என்னுடைய உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் என அணியில் இருந்த எல்லோரையும் தனித்தனியாக பாராட்டினார். அணியில் ஒவ்வொருவருடைய உழைப்பும் சிறப்பாக உள்ளது என்றார் எங்களுக்கு, இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்த் சாரும் எங்களை ஊக்கப்படுத்தினார்” என்றார்.

மணி ரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம், இயக்குநராக இன்னும் மேம்படுத்திக் கொள்ள தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். கடல் மற்றும் எல்லைகளைக் கடந்த உணர்வுகளை அழகியலோடு காட்டவுள்ளது ’18 மைல்ஸ்’. தற்போது, இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்தும் பாராட்டு பெற்றுள்ளது.

- Advertisement -

Recent Posts