Tuesday, June 30, 2026
- Advertisement -
Home Blog Page 123

Game of Loans is an upcoming Indian Tamil-language psychological drama film written and directed by Abhishek Leslie.

0

Produced by N. Jeevanantham under the banner of JRG productions, the film stars Nivas Adithan, Abhinay Kinger and Athvik Jalandhar with Ester Noronha in a pivotal role. Set predominantly in a single location, the story unfolds over the course of one day, exploring themes of addiction, debt, and psychological breakdown.
Premise
The film follows Daniel, a jobless compulsive gambler whose life revolves around the instant gratification of online betting. One seemingly ordinary day, while his wife and child are away, Daniel’s monotonous gambling routine is interrupted by a sharp, unexplained noise at his doorstep. What begins as mild curiosity spirals into a tense and unpredictable encounter, as he is confronted by unexpected visitors who draw him into a dangerous game far beyond the digital realm.
Cast
Nivas Adithan as Daniel
Ester Noronha as Janet
Abhinay as the antagonist, Vishwa
Athvik Jalandhar as Ashok
Production
Development


Game of Loans originated as a contained psychological drama concept developed by Abhishek Leslie. inspired by the growing impact of online gambling addiction in India. The script was written with a single-location setup to intensify the claustrophobic atmosphere and emphasize the mental unraveling of the protagonist.
The film also marks the comeback of actor Abhinay, who plays the principal antagonist. Known for his debut alongside Dhanush in Thulluvadho Ilamai, Abhinay faced significant personal challenges, before returning to the screen for this project.
Filming
Principal photography began in May 2023 in Bangalore, Karnataka. Most of the film was shot inside a single apartment set, with cinematography focusing on tight frames and muted tones to reflect the protagonist’s mental state. Filming was completed in 14 days.
Music
The original score is composed by Joe Costa, with the soundtrack designed to blend electronic beats with unsettling ambient textures, mirroring the protagonist’s adrenaline rush from gambling.
Themes
The film explores the intersection of addiction, financial desperation, and psychological manipulation. It addresses how technology enables compulsive gambling, the predatory nature of loan sharks, and the emotional toll on families.
Release
The title and first-look poster were unveiled on 13th August by actress Aishwarya Rajesh via social media. The film is scheduled for theatrical release in August

Skyesports Wraps Up Gaming Thiruvizha – Chennai Edition With 17,000+ Fans in Attendance

0

Skyesports, the premier global IP and community builder, has successfully wrapped up the first-ever edition of Gaming Thiruvizha at the Chennai Trade Centre on August 30–31, bringing together more than 17,000 fans across two unforgettable days of gaming, anime, stand-up comedy, cosplay, music, and culture.

Gaming Thiruvizha turned out to be more than an event as it became a two-day carnival. From esports showdowns at LAN zones to cosplay walks, live stand-up, and Tamil cultural showcases, the Chennai crowd transformed the Trade Centre into a festival that truly belonged to them. Fans didn’t just attend; they stayed, celebrated, and created memories together.

The audience mix was as vibrant as the festival itself: college students, families, and kids all came together, proving that gaming and anime are no longer niche hobbies, but shared cultural movements.

Powered by AMD, with ticketing exclusively on KYN, Gaming Thiruvizha was hosted in association with the Sports Development Authority of Tamil Nadu (SDAT) and supported by AGS Cinemas as the Chennai Edition Theatre Partner.

Commenting on the conclusion of the Gaming Thiruvizha, Shiva Nandy, Founder and CEO, Skyesports, said, “We couldn’t have asked for a better first edition of the Gaming Mahotsav. The energy of the crowd and the diversity of the audience reminded us why we built this IP — to bridge the gap between casual gamers and esports, and to create a space where gaming, anime, and culture thrive together. Next up, we will be bringing the concept to Bangalore in late September,” said Shiva Nandy, Founder and CEO of Skyesports.

The festival also welcomed dignitaries including Meghantha Reddy (Sports Development Authority of Tamil Nadu), Darez A. (MD, Guidance Tamil Nadu), and Gayathri Thyagarajan (Founder & CEO, Kynhood Technologies), underlining the growing recognition of gaming and esports as part of Tamil Nadu’s cultural and creative economy.

Highlights of the event include:

LAN tournaments across BGMI, Valorant, and other titles, with fans cheering players on in true stadium style.

A pan-India Cosplay competition bringing cosplayers from across the country with stunning costumes judged by top creators and anime experts.

Red Bull Armageddon, India’s first all-Armageddon format chess tournament, brought together over 350 players in Chennai with International Master Tania Sachdev and Grandmaster M. Shyam Sundar leading the action.

Merch alleys buzzing with anime and gaming collectibles alongside local Tamil art.

Stand-out experiential booths and meet-and-greets with Team Tamilas, Autobotz Esports, and Welt Esports.

PVR Cinemas set up local food experience stalls for attendees

With India on track to reach 700 million gamers by 2027, and anime/cosplay engagement skyrocketing across social media, Gaming Thiruvizha demonstrated that hyperlocal, immersive festivals are the way forward.

Gaming Thiruvizha is the first chapter of Skyesports’ Gaming Mahotsav, a six-city touring pop culture festival with regional editions in Bengaluru, Hyderabad, Mumbai, Kochi, and Pune. Each stop blends gaming, anime, music, comics, and local culture into one cohesive community celebration.

*

About Skyesports: Skyesports, headquartered in Chennai, India, is a leading global IP builder in the esports and gaming industry. Driven by a team of dedicated gamers and ex-professional players, the company excels in community building, IP creation, and providing tech solutions for gamers, esports players, and brands. By hosting world-class tournaments and nurturing a vibrant gaming community, Skyesports is revolutionizing the global esports scene. Skyesports is a part of the digital entertainment and technology company, JetSynthesys. For more information, visit https://skyesports.in/

சென்னை எடிஷன் கேமிங் திருவிழாவை கிட்டத்தட்ட 17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ளது!

உலகளாவிய அறிவுசார் சொத்து மற்றும் சமூக கட்டமைப்பாளரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30–31 அன்று சென்னை வர்த்தக மையத்தில் கேமிங் திருவிழாவின் முதல் பதிப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் கேமிங், அனிமே, ஸ்டாண்ட்-அப் காமெடி, காஸ்ப்ளே, கலாச்சாரம் மற்றும் இசை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விளையாட்டு முதல் காஸ்ப்ளே, நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என சென்னை வர்த்தக மையமே திருவிழாக்கூடமாக மாற்றியது. அங்கு ரசிகர்கள் வெறுமனே பங்கேற்கவில்லை. நிகழ்வை அவர்கள் கொண்டாடி, ஒன்றாக நினைவுகளை உருவாக்கினர்.

கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு ஒன்று கூடினர். இந்த நிகழ்வு மூலம் கேமிங் மற்றும் அனிமே வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது கலாச்சார பகிர்ந்தளிப்பாகவும் மாறியது நிரூபணமாகியுள்ளது.

AMD வழங்கிய இந்த நிகழ்வின் டிக்கெட்கள் KYN இல் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த கேமிங் திருவிழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (SDAT) இணைந்து நடத்தப்பட்டது. சென்னை AGS சினிமாஸ் தியேட்டர் பார்ட்னராக ஆதரவு கொடுத்தது.

கேமிங் திருவிழா நிறைவடைந்தது குறித்து ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷிவா நந்தி பேசியதாவது, “கேமிங் மஹோத்சவின் முதல் பதிப்பு சிறந்த முறையில் நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சி. சாதாரண விளையாட்டாளர்கள் மற்றும் மின் விளையாட்டுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், கேமிங், அனிமே மற்றும் கலாச்சாரம் ஒன்றாகவும் இந்த நிகழ்வை உருவாக்கினோம். நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எனர்ஜியும், பல கலாச்சாரங்களின் ஒன்றிணைவும் நிகழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியது. அடுத்து, செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவிலும் இந்த நிகழ்வை நடத்த இருக்கிறோம்” என்றார்.

இந்த விழாவில் மேகந்தா ரெட்டி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்), டேரெஸ் ஏ. (தலைமை நிர்வாக இயக்குனர், கைடன்ஸ் தமிழ்நாடு) மற்றும் காயத்ரி தியாகராஜன் (நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, கின்ஹுட் டெக்னாலஜிஸ்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு வரவேற்றனர். இது தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக கேமிங் மற்றும் மின் விளையாட்டுகள் வளர்ந்து வருவதையும் இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • ரசிகர்கள் அரங்கத்தில் வீரர்களை உற்சாகப்படுத்துவது போலவே, BGMI, Valorant மற்றும் பிற டைட்டில் கொண்ட LAN போட்டிகளில் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
  • சிறந்த படைப்பாளிகள் மற்றும் அனிமே நிபுணர்களால் மதிப்பிடப்பட்ட அற்புதமான ஆடைகளுடன் நாடு முழுவதிலுமிருந்து காஸ்ப்ளேயர்களைக் கொண்டுவரும் பான்-இந்தியா காஸ்ப்ளே போட்டியாகவும் இது நடைபெற்றது.
  • இந்தியாவின் முதல் முழு அர்மகெதோன் வடிவ சதுரங்கப் போட்டியான ரெட் புல் அர்மகெதோன், சென்னையில் 350க்கும் மேற்பட்ட வீரர்களை ஒன்றிணைத்தது. மேலும், சர்வதேச மாஸ்டர் டானியா சச்தேவ் மற்றும் கிராண்ட் மாஸ்டர் எம். ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இந்த நிகழ்வை வழிநடத்தினர்.
  • உள்ளூர் தமிழ் கலைகளுடன் அனிமே மற்றும் கேமிங் ஒன்றிணைந்தது.
  • டீம் தமிழாஸ், ஆட்டோபாட்ஸ் இஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்ட் எஸ்போர்ட்ஸ் ஆகியவற்றிற்காக தனியான மீட் & கிரீட் பூத்!
  • PVR சினிமாஸ் பங்கேற்பாளர்களுக்காக உள்ளூர் உணவுகள் கொண்ட ஸ்டால்களை அமைத்தது.
  • 2027 ஆம் ஆண்டுக்குள் 700 மில்லியன் விளையாட்டு வீரர்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அனிமே/காஸ்ப்ளே ஈடுபாடு உயர்ந்து வருவதால், கேமிங் திருவிழா அதற்கான பாதையை முன்னெடுத்துள்ளது.
  • ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் மஹோத்சவின் முதல் அத்தியாயம்தான் இந்த கேமிங் திருவிழா. இது பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொச்சி மற்றும் புனே என ஆறு நகர சுற்றுப்பயண கலாச்சார விழாவாகும். இங்கு விளையாட்டு, அனிமே, இசை, காமிக்ஸ் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் சமூக கொண்டாட்டமாகவும் இது அமைகிறது.

ஸ்கைஸ்போர்ட்ஸ் பற்றி:

இ- ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் ஐபி பில்டர். அர்ப்பணிப்புள்ள கேமர்கள் மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர்களால் இயங்கும் இந்த நிறுவனம் கம்யூனிட்டி பில்டிங், ஐபி கிரியேஷன் மற்றும் டெக் தீர்வு போன்ற சேவைகளை கேமர்ஸ், இ-ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் மற்றும் பிராண்டுகளுக்குக் கொடுத்து வருகிறது. ஸ்கைஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலமும், துடிப்பான கேமிங் சமூகத்தை வளர்க்கிறது மற்றும் உலகளாவிய இ-ஸ்போர்ஸில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்கைஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜெட்சின்தசிஸின் ஒரு பகுதியாகும். மேலும் தகவலுக்கு: https://skyesports.in/

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

0

மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக தனஞ்செயன் சார் படத்தை விநியோகம் செய்கிறார். இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். இயக்குநர் மாறன், கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் ‘ஒத்துக்கறியா…’ பாடலை இசையமைத்துக் கொடுத்த இமான் மற்றும் சாம்.சி.எஸ். இருவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், “இந்த படத்தின் வாய்ப்பு ஜிவி பிரகாஷ் சார் மூலம்தான் வந்தது. தயாரிப்பாளர் ரொம்பவே வெள்ளந்தியானவர். அவருக்கு இந்தப் படம் மூலம் நல்லது நடக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் ஆதரவு தேவை. படத்தின் நடிகர்கள் எல்லாரும் நண்பர்களாக பழகினார்கள். இயக்குநர் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

கலை இயக்குநர் ராம், “மாறன் சார் சொன்ன கதை லைவ்வாக இருந்தது. யதார்த்தம் மீறாமல் செட் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அதுபோலவே செய்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் அமல்ராஜ் அவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ரமேஷ் திலக், “தயாரிப்பாளரின் நல்ல மனதுக்கு படம் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மாறன் பழகுவதற்கு ரொம்பவே தன்மையானவர். தேஜூவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜிவி பிரகாஷூடன் முதல் முறை பணிபுரிகிறேன். நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்தப் படம் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”.

நடிகர் முத்துக்குமார், “பல சோதனைகள் கடந்து வந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அவருக்கு இந்தப் படம் பெரிய லாபமாக அமைய வேண்டும். நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மாறனுக்கு நன்றி. தேஜூவுக்கு வாழ்த்துக்கள்! மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் லிங்கா, “இந்தப் படத்தில் வேலை செய்த அனைவருக்காகவும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர் மிகவும் தன்மையானவர். இயக்குநர் மாறன் ரொம்பவே சின்சியர். புது திறமையானவர்களை ஊக்குவிப்பதில் ஜிவி பிரகாஷ் அதிக ஆர்வம் காட்டுவார். தனஞ்செயன் சாருக்கு நன்றி”.

நடிகை கிரிஜா ஹரி, “நல்ல டீமுடனும் நல்ல கதையிலும் நடித்தது மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

நடிகை தேஜூ அஸ்வினி, “தனஞ்செயன் சாருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு பெரிய ஓப்பனிங்காக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. தியேட்டருக்கு வந்து கண்டிப்பாக படம் பாருங்கள்”.

இயக்குநர் சசி, “’பிளாக்மெயில்’ படத்தின் கதையை ஜிவி சொன்னபோது ரொம்பவே ஆர்வமாக இருந்தது. இந்தப் படம் மாறனுக்கு மட்டுமல்ல, படக்குழுவினர் அனைவருக்குமே வெற்றியாக அமையும். அவருக்கு நடிப்பு இயல்பாகவே வருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனஞ்செயன் சாரின் முயற்சிக்கும் நன்றி”.

இயக்குநர் சதீஷ் செல்லகுமார், “தயாரிப்பு செய்துவிட்டு, அதை வழங்குவது பெரிய விஷயம். அதை செய்த தனஞ்செயன் சாருக்கு நன்றி. மாறன் சாரின் படங்களுக்கு நான் ரசிகன். இந்தப் படமும் சிறப்பாக வந்துள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. ஜிவி பிரகாஷ் சார், தேஜூ அஸ்வினி அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ரிதேஷ், “’பிளாக்மெயில்’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் எல்லாமே நம்பிக்கையாக உள்ளது. இந்த நல்ல படம் அதற்கான நல்ல வெளியீட்டு தேதியை தேர்ந்தெடுத்துள்ளது. ஜிவி சாருடன் இணைந்து ஒரு படம் பணிபுரிய வேண்டும். தனஞ்செயன் சாருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பிவி சங்கர், “மாறனுடைய எல்லா படங்களுமே த்ரில்லிங்காக இருக்கும். இந்தப் படமும் நிச்சயம் அந்த நம்பிக்கையை காப்பாற்றும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் விஜய், “தயாரிப்பாளர் அமல்ராஜூக்கு வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் இந்தப் படத்தை தன்னுடைய படமாக எடுத்து செல்வார். அவருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நான் ‘சைவம்’ படம் எடுத்தபோது எனக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்தார் ஜிவி. எனக்கும் அவருக்கும் 20 வருட நட்பு உள்ளது. எனது கரியரில் ஜிவி மிகப்பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கிறார். நடிகர், இசையமைப்பாளராக அவரது வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

அம்மா கிரியேஷன்ஸ், டி. சிவா, “படக்குழுவினர் அனைவருமே ஆத்மார்த்தமாக தயாரிப்பாளருக்காக பேசினார்கள். இவ்வளவு பேரின் வாழ்த்து நிச்சயம் அவருக்கு லாபகரமானதாக மாறும். தனஞ்செயன் சாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். புது இயக்குநர்களுக்கு அதிக படம் செய்து கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். பேரம் பேசாமல் போதும் என்ற மனதோடு இசையும் அமைத்து கொடுப்பார் படங்களும் நடிப்பார். அவர் இன்னும் பெரிதாக சாதிக்க ஆசை. ரமேஷ் திலக்கின் பெரிய ரசிகன் நான். எம்.எஸ். பாஸ்கர் போலவே ரமேஷ் திலக்கும் தேசிய விருது பெற வேண்டும். தேஜூவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர், விநியோகஸ்தகர் தனஞ்செயன், “சில காரணங்களால் இந்தப் படம் தள்ளிப்போனது. பின்பு நான் படம் பார்த்தபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். படம் பார்த்து முடித்ததும் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எப்படி பிளாக்மெயில் செய்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் என பல லேயர்களில் கதை செல்லும். லிங்கா, பிந்து மாதவி, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யதார்த்தமாக நமது வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து நல்ல த்ரில்லர் படம் கொடுத்துள்ளார் மாறன். அமல்ராஜ் சாருக்கு 12ஆம் தேதி நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். மாறன் பொறுப்புணர்ச்சியோடு ஒரு படம் கொடுத்திருக்கிறார். சினிமா சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால், சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக மாற வேண்டும்” என்றார்.

ஜின்மா எண்டர்டெயின்மென்ட் சத்யபிரகாஷ், “இந்த சந்தோஷமான குடும்பத்தில் எங்களையும் இணைத்த தனஞ்செயன் சாருக்கு நன்றி. மாறன் அருமையாக படத்தை கொண்டு வந்துள்ளார். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் மு. மாறன், “தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். இந்தப் படம் வெற்றியடைந்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தனஞ்செயன் சார் மாதிரியான ஒருத்தர் கைக்கொடுத்தது பெரிய விஷயம். சரியான படங்களையும் திறமையாளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார். அவர் எங்கள் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜிவி பிரகாஷ் சாருடன் அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

நடிகர் ஜிவி பிரகாஷ், “படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி. ரமேஷ் சார், முத்துக்குமார் சார், தேஜூ, லிங்கா மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”

எக்ஸிகியூடிவ் புரொடியூசர் தயாளன் பழனி, “தனஞ்செயன் சாரை நம்பி நாங்கள் படத்தை ஒப்படைத்து விட்டோம். அனைவருக்கும் நன்றி”.

” தடை அதை உடை ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைஇசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் தனது X தளத்தில் வெளியிட்டார்.

0

50 வருடங்களாக நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் ” தடை அதை உடை “

1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “

காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள திரைப்படம் ” தடை அதை உடை “

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் நடிகரான பிரபலமான அங்காடித் தெரு மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த நடிகர் குணா பாபு, K.M.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

மற்றும் இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கௌதமி, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல் வரிகள் எழுத சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு – டாய்சி

கலை இயக்கம் – சிவகுமார்,மணி

சண்டை பயிற்சி – அசோக் குமார்

தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்

நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.

படம் பற்றி இயக்குனர் அறிவழகன் முருகேசன் பகிர்ந்தவை…

1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையிலும், நெற்களஞ்சிய மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலும் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.

இத்திரைப்படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்திரைப்படம் இரண்டு நேர்-எதிர் காலங்களில் நடப்பதாலும், நிறைய நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாலும் இரண்டரை வருடங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இத்திரைப்படம் 2025 அக்டோபர் மாதம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை
இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் தனது X தளத்தில் வெளியிட்டார். அது தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

“லிங்குசாமி என் நண்பன்.. அன்பன்” ; நூல் வெளியீட்டு விழா’வில் நெகிழ்ந்த கௌதம் வாசுதேவ் மேனன்

0

“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி

தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை அபிராமி, வசனகர்த்தா பிருந்தா சாரதி, பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, படைப்புக்குழுமம் ஜின்னா, விஷ்ணு அசோசியேட்ஸ் சிவகுமார், கவிஞர் ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நூலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட நடிகை அபிராமி பெற்றுக் கொண்டார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும்போது,

“இயக்குநர் லிங்குசாமி விடியற்காலை 4 மணிக்கு என்னை எழுப்பி தனக்கு தோன்றிய கவிதையை சொல்லுவார். அவர் எழுப்பும்போது ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும் கூட, அவர் கவிதையை கேட்டதும் அந்த கோபம் பறந்து ஒரு மணி நேரம் பேசுவோம். இன்று ஆறுகளே காணாமல் போய்விட்ட நிலையில் கண்ணாடி ஜன்னலில் வழிந்தோடும் மழை நீருக்கு என்ன பெயர் வைப்பது என்கிற ஒரு அழகியலான விஷயத்தை தான் இந்த புத்தகத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார். ஹைக்கூ ஜப்பானிய வடிவம் என்று சொன்னாலும் கூட நம் இலக்கியங்களில் குறைந்தபட்சம் மூன்று வரிகளில் இருந்து அதிகபட்சமாக கவிஞரின் கற்பனை எல்லை வரை பாடக்கூடிய குறும்பா என்கிற வடிவம் இருந்துள்ளது. இந்த காலத்திற்கு ஏற்ற சூழலில் அனைவரையும் கவரும் விதமான படைப்பாக இயக்குநர் லிங்குசாமி இதை கொடுத்துள்ளார். லிங்குசாமியின் இந்த ஹைக்கூ கவிதைகளுக்கு தனது அற்புதமான ஓவியத்தால் இன்னும் உயிரூட்டி உள்ளார் ஓவியர் தமிழ் பித்தன்” என்று பேசினார்.

கவிஞர் ஜின்னா பேசும்போது,

“யார் யாரை ஆட்டி வைப்பது.. நடராஜர் முன் எரியும் சுடர்.. என்கிற ஒரு கவிதையை எழுதிவிட்டு என்னை அழைத்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்த நூலுக்கான முதல் கவிதை இப்படித்தான் ஆரம்பித்தது. ஏற்கனவே அவரது இரண்டு ஹைக்கூ புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த மூன்றாவது புத்தகத்தை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டு வர தீர்மானித்தோம். அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து இயக்குநர் லிங்குசாமியின் நண்பர் அவருக்கு ஓசோ எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியிருந்தார். 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது. அதேபோன்ற ஒரு அமைப்பில் இந்த புத்தகத்தை உருவாக்க தீர்மானித்தோம். தமிழ்நாட்டில் இந்த வடிவமைப்பில் உருவாகும் முதல் புத்தகம் இதுதான். எங்களது இந்த படைப்பு குழுமம் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 485 நூல்களை பிரசுரம் செய்துள்ளோம். லிங்குசாமியின் இந்த ஹைக்கூ கவிதை புத்தக வெளியீடு எங்களது பத்தாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக இப்போது நடைபெறுகிறது. இப்படி நூல்கள் மூலம் கிடைக்கும் தொகை கவிஞர் காப்பீட்டு திட்டம் மூலமாக வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள கவிஞர்களை அரவணைத்து செல்வதற்காகவே செலவிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள 178 சிறைச்சாலைகளில் தமிழக அரசு அமைந்துள்ள நூலகங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்களை இலவசமாக வழங்க இருக்கிறோம்” என்று பேசினார்.

வசனகர்த்தா பிருந்தா சாரதி பேசும்போது,

“இயக்குநர் லிங்குசாமியை பொறுத்தவரை சினிமாவில் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் கூட கவிதைகளால் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். நாங்கள் இருவரும் அறிமுகமானது இந்த ஹைக்கூ கவிதை மூலமாக தான் எங்களுடைய கல்லூரி பேராசிரியரை நான் பார்க்க சென்றிருந்தபோது, அப்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த லிங்குசாமி அந்த ஆண்டு கல்லூரி மலரில் இடம் பெறுவதற்காக தனது ஹைக்கூ கவிதையை பேராசிரியரிடம் கொடுத்தார். கணவனுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிற அந்த தலைப்பை பார்த்ததுமே எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. அப்போது முதல் லிங்குசாமிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது.

அதன் பிறகு சென்னையில் நடக்கும் ஒரு கவிதை போட்டிக்கு கவிதை அனுப்புவதற்கான நடைமுறைகளை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு கவிதையை அனுப்பினார். அதற்கு முந்தைய வருடம் நான் அப்படி அனுப்பி பரிசு வாங்கியிருந்தேன். அடுத்த வருடமே லிங்குசாமி அந்த பரிசை வாங்கினார். லிங்குசாமியின் ஒவ்வொரு ஹைக்கூவிலும் ஒரு காட்சி இருக்கணும், ஒரு வாழ்வியல் இருக்கணும், அது இந்த உலகத்தில் அழியாத ஒரு பேருண்மை இருக்க வேண்டும் என நினைப்பவர். இந்த அடிப்படை அம்சங்களை தனது முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து வருகிறார் லிங்குசாமி.. உதவி என்று யாராவது கேட்டு வந்து விட்டால் அதற்காக உயிரை பணயம் வைக்கக் கூடியவர் லிங்குசாமி. கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயத்தில் யாருமே அருகில் செல்ல கூட அஞ்சிய அந்த நேரத்தில் துணிச்சலாக அருகில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லியவர் லிங்குசாமி. வசதியாக இருந்த நேரத்தில் சிலருக்கு தொடர்ந்து கல்லூரி படிப்பு கட்டணம் கட்டியவர், சற்று சரிவை சந்தித்த நிலையில் கூட கடன் வாங்கி அவர்களுக்கு அந்த படிப்பு கட்டணத்தை தொடர்ந்து செலுத்தினார். ரத்தத்தை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளுக்கு கூட ரத்த தானம் செய்கிறவர் தான் லிங்குசாமி. இதுதான் அவரை ஒரு அற்புத மனிதராக நல்ல கவிஞராக ஒரு இயக்குனராக ஆக்கி இருக்கிறது” என்று பேசினார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது,

“இயக்குநர் லிங்குசாமியின் வட்டத்திலேயே எவ்வளவோ பேர் இருக்க எதற்கு இந்த நிகழ்விற்கு என்னை அழைத்து இந்த நூலை வெளியிட சொல்கிறார் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் என்னுடைய நண்பன், அன்பன் லிங்குசாமி. இந்த பெயரிடப்படாத ஆறுகள் நூலை நான் தான் வெளியிட வேண்டும். இதற்கான காரணம் எனக்கும் லிங்குசாமிக்கும் மட்டும்தான் தெரியும். நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்று என் நண்பனுக்கு நன்றாக தெரியும். உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கலைஞன் என் நண்பன் என்பது எனக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் இந்த விழாவில் நான் இருக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் நான்கு மணி பிரண்டு என்று ஒருவர் இருப்பார்கள். லிங்குசாமியின் நாலு மணி நண்பன் நான் தான். என்னுடைய ஏழு மணி நண்பன் லிங்குசாமி தான். லிங்குசாமி நிறைய பேச நான் கேட்டுக் கொண்டிருப்பேன். சீரியஸான சமயங்களில் கூட என்னை சிரிக்க வைத்து விடுவார், அவரது பேச்சில் பஞ்ச் லைவ் புளோவாக வந்து கொண்டே இருக்கும். என்னுடைய நலனில் மிகவும் அக்கறை உள்ளவர். என்னுடைய திரைக்கு வராத ஒரு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பல பேரிடம் பேசி அதை திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நூலைப் படித்ததும் என்ன ஒரு சிந்தனை, இப்படி ஒரு கற்பனை என எனக்கு தோன்றியது. என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமான கவிதைகள் இதில் இருந்தது. சிறிய வட்டம் நிலா.. பெரிய வட்டம் வானம்.. கிணற்றுத் தவளைக்கு என்கிற ஹைக்கூவை என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயமாக நான் பார்த்தேன். அந்த கிணற்றுத் தவளை என்பது நான் தான். சிறிய வட்டம் நிலா என்பது என்னுடைய ரிலீஸ் ஆகாத அந்த படம். பெரிய வட்டம் என்பது சினிமா, என்னுடைய வாழ்க்கை எல்லாமே. அதற்குள் போவதற்கு இந்த சிறிய வட்டத்தை தாண்டித்தான் நான் செல்ல வேண்டும். பயமாக இருக்கிறது. அந்த சிறிய வட்டத்திற்குள் செல்வதற்கே எனக்கு ஒரு ஆர்ம்ஸ்ட்ராங் தேவைப்படுகிறது. தீக்குச்சி உரசிய அதே கணத்தில் வானில் மின்னல் என்கிற ஹைக்கூவை படித்ததும் ரன் படம் பார்த்த எபெக்ட் கிடைத்தது. இந்த புத்தகத்தைப் படித்தபோது இன்னும் 20 ஹைக்கூக்கள் இதில் இருந்திருக்கலாமோ என தோன்றியது” என்று பேசினார்.

நடிகை அபிராமி பேசும்போது,

எனக்கு மொழியின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கிறது. நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலுமே, தமிழ் அழகாக பேச வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சி எடுத்தேன். இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள லிங்குசாமி சார் எனக்கு அழைப்பு விடுத்ததுபோது என்னை ஏன் அழைக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது ஆசை ஆசையாய் வாங்கினேன் புத்தர் சிலை என்கிற ஒரு ஹைக்கூவை சொன்னார். அவர் சொன்னதுமே நான் சிரித்து விட்டேன். உடனே இந்த கவிதையை நீ புரிந்து கொண்டாய் இல்லையா அதனால் தான் உன்னை அழைத்தேன் என்றார். இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள தகுதியானவள் என என்னை நினைத்து அழைத்ததற்கு நன்றி. நான் எப்போதோ பாடிய ஒரு பாரதியார் பாடல் மூலமாக என்னுடைய திரையுலக பயணத்தில் மிகச்சிறந்த படமான விருமாண்டியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்கிற புதிய தகவலை இன்று பேராசிரியர் ஞானசம்பந்தன் மூலமாக அறிந்து கொண்டது இன்னொரு மகிழ்ச்சி. எனது இசை குரு சாரதா கல்யாணசுந்தரத்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இந்த குறுங்கவிதை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே நானும் ஒரு குறுங்கவிதை ஒன்றை பாராட்டாக எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். “உன் ‘பென்’னிலிருந்து பிறந்த படைப்பை பெற்றுக்கொள்ள வந்தேன் இந்தப்பெண்.. என் நண்பனின் முனைப்பு என் பெண் முனையை திருத்த வைத்தது.. சிலந்தி வலைகளில் உள்ளுக்குள் சிக்கிக்கிடந்த என் கற்பனையை பிரித்தெழுப்பிய உங்களுடைய இந்த நூலுக்கு நன்றி” என்று பேசினார்

விஷ்ணு அசோசியேட்ஸ் சிவகுமார் பேசும்போது,

“ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரை விமானத்தில் செல்லும்போது லிங்குசாமியை சந்தித்தேன். அதற்கு முன்பு தான் லிங்குசாமி எழுதிய ஒரு புத்தகத்தை படித்து, ஒரு இயக்குநர் கவிதை புத்தகம் எழுதுகிறாரா, சினிமாவில் இருப்பவர்கள் இப்படி கவிதை, புத்தகம் என எழுத மாட்டார்களே என்று ஆச்சரியப்பட்டு இருந்தேன். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது. கவிதை என்கிற உலகத்தில் ஒரு ஓரமாக நான் அமர்ந்திருந்தேன். என்னை இழுத்து வந்து நடுவில் அமர வைத்தவர் லிங்குசாமி. ஹைக்கூவாக இருந்தாலும் கவிதையாக இருந்தாலும் இன்னும் நிறைய வெளியிட செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஐபிஎல் போட்டி போல தமிழ்நாடு முழுவதும் ஹைக்கூ போட்டி வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை.

இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அந்த பகுதியைச் சேர்ந்த கவிதை எழுதுபவர்களை பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த முடியும். அதேபோல பெண்கள் நிறைய எழுத வேண்டும். படிக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு ரசனை அதிகம். நடிகை அபிராமி சிறு வயதிலேயே சங்கீதம் கற்று பாட தெரிந்தவர். அதனால் அபிராமி பாடுகிறாரே என யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அவர் இன்னும் நிறைய பாட வேண்டும். லிங்குசாமியுடன் இணைந்ததால் இயக்குநர் சரண் தற்போது கவிஞர் சரணாக மாறிவிட்டார். கௌதம் மேனனும் ஹைக்கூ எழுதத் தொடங்கினால் அது எங்கேயோ போகும். ரசனை தான் வாழ்க்கை. ரசனை இல்லாத வாழ்க்கை வாழ்க்கை அல்ல. பிருந்தா பாரதியின் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் புத்தகத்தை பலமுறை படித்திருக்கிறேன். அவரும் இன்னும் எழுத வேண்டும். வாசிப்பை அதிகப்படுத்தினால் வாழ்க்கை முறை மாறும். பேச்சு சிந்தனை செயல் எல்லாமே மாறும்” என்று பேசினார்.

கவிஞர் ஜெயபாஸ்கரன் பேசும்போது,

“லிங்குசாமியை ஒரு இயக்குநராக எல்லோருக்குமே தெரியும் ஆனால் இங்கே அவர் கோடம்பாக்கத்தில் இயக்குனராக ஆவதற்கு முன்பே அவர் கும்பகோணத்தில் கவிஞராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக தான் இங்கே இயக்குனராக மாறினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டது அவருடைய இந்த இலக்கிய பயணம். அவருக்குள் ஹைக்கூ கவிதை ஆற்றல் மலைமலையாக குவிந்து இருக்கிறது. பேசுவதே கூட அவர் அப்படித்தான் பேசுவார்.
அவர் கவிதைகளை படித்தவர்களையும் அது அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். மலையாளத்தில் ரகுராமன் என்பவர் லிங்குசாமியின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். லிங்குசாமி எழுதிய இந்த மூன்று நூல்களிலும் ஒரு கவிஞனின் பரிணாம வளர்ச்சி எப்படி மாறுகிறது என்பதை நான் கவனித்து பார்க்கிறேன். முதல் தொகுப்பு கவிதைகள் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் ஊட்டக் கூடிய அழகியல் கவிதைகளாக இருந்தது. அடுத்து சமூகம் சார்ந்த கவிதைகள். தற்போது வெளியாகி உள்ள கவிதை தொகுப்பு ஞானம் சார்ந்தது” என்று பேசினார்.

பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா பேசும்போது,

“இயக்குனர் லிங்குசாமி கவிதையை கடத்த தெரிந்த ஒரு கலைஞன். என்னுடைய அப்பாவும் ஒரு கவிஞர். அவருக்கு நல்ல கவிதைகள் கேட்கும் போது கண்கள் சிவந்து நீர் கோர்க்கும். அப்படியான கண்களை நான் மறுபடியும் லிங்குசாமியின் கண்களில் பார்க்கிறேன். இப்போது கவிதை நூல் போடுகிறார்கள் என்றாலும் பெரும்பாலானோர் யார் அதை படிக்கிறார்கள் ? அவர்களை படிக்க வைக்க வேண்டும் இல்லையா ? ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20,000 பேரை கவிதை எழுத, வாசிக்க வைத்தவர் இயக்குனர் லிங்குசாமி. வருடந்தோறும் கவிதை போட்டி நடத்துகிறார் 8000 கவிதைகள் வந்துள்ளது. அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்கப்படுத்தியுள்ளார்” என்று லிங்குசாமி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் அழகாக மேற்கோள் காட்டி அதன் சுவையான பொருளையும் எடுத்துக்காட்டி பேசினார்.

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸ்டைலாக ஒரு இயக்குநர், ஏசி திருலோக சந்தர், ஸ்ரீதர், மணிரத்னம் போல வந்து இளைஞர்கள் மத்தியில் இருப்பார்கள், எனக்கும் கௌதம் மேதனுக்கும் இயக்குநர் மணிரத்தினம் தான் ஆதர்சம் என்றாலும் என்னிடம் 40 சதவீதம் பாக்யராஜ் இருப்பார் வெளியாகாமல் இருக்கும் என்னுடைய படத்தைப் பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் சார். அதற்கான ஆட்கள் இதோ நம்மிடையே எதிரே அமர்ந்திருக்கிறார்கள். இங்கே வந்து புத்தகத்தை பெற்றுக்கொண்ட அபிராமி, ஏதாவது எழுதி கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று கூறினார். நான் அபிராமி அபிராமி அபிராமி என மூன்று முறை எழுதி கையெழுத்து போட்டேன். அதற்கு மேல் அபிராமி பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் இந்த விழாவை அற்புதமாக நடத்திச் சென்றார். உத்தம வில்லன் படத்தில் பணியாற்றிய போது நாங்கள் நெருங்கி பழகினோம். சார் கமல் சாருடன் ஒரு மீட்டிங் இருக்கு ஏற்பாடு செய்யுங்கள். அது உங்களால் தான் முடியும். லிங்குசாமி எந்நேரமும் உங்களைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் தான் அவரிடம் சொல்ல வேண்டும் என்று பேசினார்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஓவியர் தமிழ்ப்பித்தன் வரைந்த ஓவியங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.

பனையின் மகத்துவத்தை கூறும் பனை

0

செப்டெம்பர் -26 இல் (இம்மாதம்) வெளிவருகிறது)

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனைமரம் பாரத தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற மையக் கருத்தையும், கோயில் அர்ச்சகரின் மகள் பனைத் தொழில் புரியும் இளைஞர் மீது ஏற்படும் ஒரு தலை காதலால் நிகழும் விபரீதங்களையும் கொண்டு உருவாகியுள்ள படமே பனை என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன்.

இப்படத்தின் கதையின் நாயகனாக ஹரிஷ் பிரபாகரன் நடிக்க நாயகியாக மேக்னா நடித்திருக்கிறார்

இவர்களுடன் வடிவுக்கரசி,அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி,
டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா,ஜேக்கப்,
எம்.ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பாடல்கள் -வைரமுத்து
இசை -மீரா லால்

ஒளிப்பதிவு –
சிவக்குமார் ரங்கசாமி

நடனம் -தினா
மக்கள் தொடர்பு – வெங்கட்

இணைத் தயாரிப்பு –
ஜெ.பிரபாகரன்

கதை திரைக்கதை
வசனம் தயாரிப்பு –
எம்.ராஜேந்திரன்

இயக்கம் –
ஆதி பி.ஆறுமுகம்

இப்படத்தில் பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனைமரம் பசி தீர்க்கும் மரமய்யா பனைமரம்… உள்ளிட்ட மூன்று பாடல்களும் முத்தாக அமைந்துள்ளது.

ராஜா அண்ணாச்சி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போன்று வில்லன் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இப்படம் இம்மாதத்தில் (செப்டெம்பர் 26 ) திரையரங்குகளில் ஆக்சன் ரீயாக்சன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது!!

0

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”.

இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், Bigg Boss சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

நாயகனாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு: Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்: ஃபாத்திமா விஜய் ஆண்டனி
இயக்கம், ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா
எழுத்து: புதிய பரிதி
இசை: விஜய் ஆண்டனி
எடிட்டர்: கண்ணன் பாலு
கலை இயக்கம்: பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வம்
ஸ்டண்ட் இயக்கம்: பிரபு ஜாக்கி
ஆடை வடிவமைப்பாளர்: மாளவிகா செல்வம்
பாடலாசிரியர்: லாவர்தன்
நடனம்: ஹரிகிரண்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Celebrities Galore For Ashok Selvan-Mirnaa Starrer 18 Miles Prologue Premiere Show!

0

The much-anticipated prologue of 18 Miles (Tharana), starring Ashok Selvan and Mirnaa Menon, created by Think Music and directed by Sathish Selvakumar (Bachelor Movie fame), recently had its first-of-its-kind premiere, witnessed by the crème de la crème of Kollywood.

Over the past few weeks, the film’s poetic and heartwarming promos have been creating waves online, stirring emotions and capturing the imagination of cinephiles. The 14-minute prologue took the excitement to another level, offering a first glimpse into a story brimming with love, hope, and resilience.

The premiere saw the gracious presence of iconic names from the industry, including Actor & Producer Vishnu Vishal, Cinematographer Ravi K. Chandran, Directors Poo Sasi and Ashwath Marimuthu, Cinematographer Thirunavukarasu, Actors Kishen Das and Keerthi Pandian, along with the full team of 18 Miles (Tharana), Ashok Selvan, Mirnaa Menon, Director Sathish Selvakumar, Music Director Siddhu Kumar, Producer Santosh, and many more rising and established talents.

18 Miles (Tharana) explores the emotions, struggles, and resilience of a couple separated by distance, one from India and the other from Sri Lanka, capturing the hurdles and hopes that define cross-border love. The prologue has already won accolades from both audiences and celebrities for its fresh concept, heartfelt storytelling, and stellar performances.

With an innovative narrative and strong emotional core, 18 Miles (Tharana) sets the stage for a cinematic journey that promises to stay etched in the hearts of viewers.

நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது!

‘பேச்சுலர்’ படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய ’18 மைல்ஸ்’ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட புரோலோக் காட்சிகள் ’18 மைல்ஸ்’ கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இயக்குநர்கள் ‘பூ’ சசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் கீர்த்தி பாண்டியன் என திரைத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பல பிரபலங்கள் ’18 மைல்ஸ்’ புரோலாக் செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டனர். இவர்களுடன் ’18 மைல்ஸ்’ (தாரணா) படக்குழுவினரான அசோக் செல்வன், மிர்ணா மேனன், இயக்குநர் சதீஷ் செல்வகுமார், இசையமைப்பாளர் சித்து குமார், தயாரிப்பாளர் சந்தோஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தூரத்தால் பிரிக்கப்பட்ட ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், போராட்டங்கள், காதலுக்கான தடைகள் மற்றும் நம்பிக்கைகளை ’18 மைல்ஸ்’ பேசுகிறது. புதிய கருத்து, இதயப்பூர்வமான கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள் என இரு தரப்பிடமிருந்தும் ’18 மைல்ஸ்’ பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

புதுமையான கதை சொல்லல் மற்றும் வலுவான கதை சொல்லல் மூலம் ’18 மைல்ஸ்’ நிச்சயம் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறும்.

சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா

0

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில்,

தேஜா சஜ்ஜா பேசியபோது,

“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.

ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.

மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.

மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.

இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.

இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.

இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.

அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”

Eva – A New Song on Dusky Beauty

0

Eva, composed by Pranaay, has been released as a single that reflects on the theme of dusky beauty. The song adds to the independent music space with its gentle portrayal of love and admiration.

Written by Madhan Karky and sung by Kapil Kapilan, the lyrics celebrate women with dark skin tones while drawing parallels to nature’s darkness to describe their allure. Presented as a lyrical video, the visuals echo this theme by depicting men whose affection centres on dusky beauty. Mixed and mastered by Bashab Bhattacharjee, the single has been released under Thriver Entertainment in association with Paa Music.

🔗 https://youtu.be/ofUImWhoen0?si=0d6WiLpvAmKl9qR8

‘ஈவா’ – கறுமை அழகை மையமாகக் கொண்ட புதிய இசை வெளியீடு

இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய ‘ஈவா’ பாடல், கறுமை அழகை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை எவ்வாறு கறுமையில் எதிரொளிக்கின்றன என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.

கவிஞர் மதன் கார்க்கி எழுதிய வரிகள், கறுமை நிறப் பெண்களின் அழகை முன்னிறுத்தி, இயற்கையின் இருளை உவமையாகக் கொண்டு அழகைச் சிறப்பிக்கின்றன. பாடகர் கபில் கபிலன் குரல் கொடுத்துள்ள இந்தப் பாடல், லிரிக்கல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டு, கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை பஷாப் பட்டாசார்யா செய்துள்ளார். ‘ஈவா’ த்ரைவர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா மியூசிக் ஆகியவற்றின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

🔗 https://youtu.be/ofUImWhoen0?si=0d6WiLpvAmKl9qR8

- Advertisement -

Recent Posts