Chennai witnessed a proud moment for Tamil Nadu sports as the State team clinched the Overall Championship Trophy in the Children’s category and secured the position of Runners-Up in the Cadets category at the National Kickboxing Championship – Children & Cadets 2025, held at Nehru Indoor Stadium.
The championship, which brought together young talents from across the country, highlighted Tamil Nadu’s rising dominance in kickboxing. Under the leadership and encouragement of Hon’ble Deputy Chief Minister Thiru Udhayanidhi Stalin, the State has seen a renewed focus on promoting sports and nurturing young athletes.
The closing ceremony was marked by the presence of Thiru J. Meghanatha Reddy, IAS, Member Secretary of SDAT, adding further prestige to the event.
The success was driven by the efforts of the Tamil Nadu State Amateur Kickboxing Association (TNSKA), whose coordinated work with coaches, athletes, and district officials proved vital in delivering this remarkable achievement.
With this victory, Tamil Nadu has reaffirmed its position as one of the frontrunners in nurturing kickboxing talent at the grassroots level and providing a strong platform for children and cadets to excel at the national stage.
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025 இல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது.
நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் (TNSKA) முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதன் மூலம் இந்த சாதனையை அடைய முடிந்தது.
அடிமட்ட அளவில் கிக் பாக்ஸிங் திறமையாளர்களை கண்டறிந்து வளர்ப்பதிலும், குழந்தைகள் மற்றும் கேடட்கள் தேசிய அளவில் சிறந்து விளங்க ஒரு வலுவான தளத்தை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதுஇந்த வெற்றியின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை எதிர்த்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்!
இப்படிக்கு, நடிகர் தக்ஷன் விஜய், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவர்.
Tamil Film Active Producers Association (TFAPA) formed in August 2020 by ‘Iyakkunar Imayam’ Thiru P. Bharathirajaa with the involvement of many popular Producers has grown from strength to strength and today boasts of over 365 Active Producers under its wing. TFAPA is providing very efficient service to its members and is working closely with FEFSI and its affiliated Unions in the film industry, and also with all Distributor and Exhibitor Associations for the betterment of Tamil Cinema. TFAPA’s efforts are recognized by both Central and State Governments and hence the Association is involved in all Film Industry related matters and consultations regularly by both the Governments. TFAPA is providing Title approval, publicity clearance and other necessary support to its members in a short time and hence many new producers/members are joining every month. It is the only Film Producers Association in India to bring out a Trade Guide every month to educate, inform and update the happenings in the industry to its members and industry at large.
The Election to the Management Team of TFAPA comprising of 7 Office-Bearers and 10 Executive Committee Members is held once in three years. The election for the new management team for the period September 2025 to August 2028 was held on 29th August 2025 with eminent Director Thiru R.V. Uthayakumar functioning as Election Officer.
The Election was unanimous and unopposed and the following Active Producers were elected to the New Management Team of TFAPA.
PRESIDENT – Mr. T.G. Thyagarajan GENERAL SECRETARY – Mr. T. Siva VICE-PRESIDENTS – Mr. S.R. Prabu and Mr. S.S. Lalit Kumar TREASURER – Mr. G. Dhananjeyan JOINT SECRETARIES – Mr. Mukesh R Mehta and Mr. S. Vinod Kumar
Executive Committee Members:
Directors, who are also Producers Mr. K.S. Ravikumar, Mr. Sundar C, Mr. Vigneshwar S, Mr. R. Kannan and Producers Mr. Ramesh P Pillai, Mr. S. Lakshman Kumar, Mr. Sudhan Sundaram, Mr. Kaarthekeyan Santhanam, Mr. Kamal Bohra and Mr. Nitin Sathyaa.
Thiru R.V. Uthayakumar, Election Officer, handed over the official election announcement letter to this effect to the General Secretary Mr. T. Siva at TFAPA office today and wished the new Management Team a greater success in the years ahead.
The New Management Team of TFAPA is aspiring to take up many new initiatives under the guidance of Founder Thiru. Bharathirajaa and other Film Industry Associations, for the betterment of Tamil Cinema during their tenure.
PRO for the Association: Mr. Nikil Murukan ‘சத்ய ஜோதி’ T.G. தியாகராஜன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamil Film Active Producers Association) தலைவராக ஒரு மனதாக தேர்வு.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், ஆகஸ்ட் 2020-ல் ‘இயக்குனர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களால், பல முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தோற்றுவிக்கப்பட்டது. இன்று இந்த சங்கம் 365-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பெரிய சங்கமாக வளர்ந்து தனது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) மற்றும் அதை சார்ந்த அனைத்து சங்கங்களுடனும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதனால் தான், இன்று இந்த சங்கத்தை மத்திய அரசும், மாநில அரசும் அங்கீகரித்து, சினிமா துறை சார்ந்த அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் முடிவுகளில் இணைத்துள்ளனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தலைப்பு, விளம்பர அனுமதி மற்றும் உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் துரிதமாக வழங்கி வருகிறது. அதன் காரணமாக தான், ஒவ்வொரு மாதமும் பல புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்து வருகிறார்கள். மேலும், இந்திய சினிமாவில் முதன் முறையாக தயாரிப்பாளர் சங்கமே ஒரு திரைத்துறை வழிகாட்டி நூலை (Trade Guide) ஒவ்வொரு மாதமும் கொண்டு வருகிறது. அதன் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கும், திரைத்துறைக்கு தேவைப்படும் அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன் படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, மதிப்புக்குரிய இயக்குனர் திரு.R.V. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. தகுதி உள்ள 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக, எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் விபரம் பின் வருமாறு.
தலைவர் : திரு. T.G. தியாகராஜன் பொதுச் செயலாளர் : திரு. T. சிவா துணைத் தலைவர்கள் : திரு. S.R. பிரபு & S.S. லலித் குமார் பொருளாளர் : திரு. G. தனஞ்ஜெயன் இணைச் செயலாளர்கள் : திரு. முகேஷ் R. மெஹ்தா & திரு. S. வினோத் குமார்
செயற்குழு உறுப்பினர்கள்: இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் திரு. K.S.ரவிக்குமார், திரு. சுந்தர் C, திரு. விக்னேஷ் சிவன், திரு. R. கண்ணன், தயாரிப்பாளர்கள் திரு. ரமேஷ் P.பிள்ளை, திரு. S. லக்ஷ்மன் குமார், திரு. சுதன் சுந்தரம், திரு. கமல் போஹ்ரா , திரு.கார்த்திகேயன் சந்தானம் மற்றும் திரு. நிதின் சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டதயாரிப்பாளர்களுக்கான நியமன கடிதத்தை தேர்தல் அதிகாரி இயக்குனர் திரு.R.V. உதயகுமார், சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு T. சிவா-விடம் தந்தார். புதிய நிர்வாக குழு மேலும் சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்தார்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிறுவனர் திரு. பாரதிராஜா அவர்களின் வழிகாட்டுதலுடன், திரைத்துறையின் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன், மேலும் சிறப்பாக செயல்படவும், பல புதிய முயற்சிகளை தொடங்கவும் புதிய நிர்வாக குழு உறுதி கொண்டிருக்கிறது.
சங்கத்தின் ஊடக/பத்திரிக்கை தொடர்பாளர்: திரு. நிகில் முருகன்
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!
நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.
அந்த முயற்சியை மேலும் ஒரு படி முன்னேற்றி, ஹாலிவுட் #ConnekktMobScene நிறுவனத்தின் க்ரியேட்டிவ் கண்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரெசிடெண்ட் அலெக்ஸாண்ட்ரா E. விஸ்கோந்தியை சந்தித்து, ஹாலிவுட் ஒத்துழைப்பை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிப்படையாக அறிவிக்கபடவில்லை என்றாலும், இந்த சந்திப்பு, தி பாரடைஸ் படத்தை, சர்வதேச தரத்தில் நிலைநிறுத்தும் படக்குழுவின் உறுதியை, மேலும் வலுப்படுத்துகிறது.
படக்குழுவினர் தொடக்கம் முதல், இந்த படத்தை சாதாரண பிராந்திய வெளியீடாக அல்லாமல், உலகளாவிய நிகழ்வாகவே நடத்தி வருகின்றனர். பல மொழிகள், பல சினிமா மார்க்கெட்டுகள், பல தரப்பான ரசிகர்களிடம் தீவிர விளம்பரங்கள் மூலம் இயற்கையான ஆர்வத்தை உருவாக்கியதால், படம் வெளியாவதற்கு முன்பே அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
2026 மார்ச் மாதம் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்கள் தி பாரடைஸ் படத்தை இந்தியாவில் இருந்து வெளிவரும், மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. மேலும் சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இணைத்து, சர்வதேச மொழி பதிப்புகளை உலகம் முழுவதும் வெளியிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே மாபெரும் கனவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு இன்னொரு உலகளாவிய பரிமாணத்தை சேர்க்கும்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால் தனது டோலிவுட் அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை C.H.சாய் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எடிட்டர் நவீன் நூலி, புரடக்சன் டிசைனர் அவிநாஷ் கொல்லா ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
“தி பாரடைஸ்” படம், 2026 மார்ச் 26 அன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உட்பட உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகிறது.
A new film produced by Arun Rangarajulu under Pathway Productions is titled ‘Carmeni Selvam’. Directed by Ram Chakri, the film stars Samuthirakani and Gautham Vasudev Menon in prominent roles.
Lakshmipriya plays opposite Samuthirakani, while Abhinaya pairs with Gautham Vasudev Menon in this film. ‘CarMeni Selvam’ is shaping up to be a fun-filled family entertainer with a mix of comedy and sentiment.
Speaking about the film, director Ram Chakri said, “‘Carmeni Selvam’ is being made as a movie that audiences of all ages can enjoy. Selvam (Samuthirakani), who has been living a peaceful and calm life, suddenly develops a greed for money. As he starts running behind it, the events that happen in his life have been crafted into a screenplay filled with humour.”
Sree Saravanan is the Creative Producer of the movie. Yuvaraj Dakshan handles cinematography for ‘Carmeni Selvam’. In this movie, a new concept has been introduced – Music as a Service (MaaS). Music Cloud Technologies has scored music with this model.
Editing is taken care of by Jagan R.V. and Dinesh S. Production Designer: Shankar. Lyrics are penned by Mani Amuthavan, and choreography is by Harish Karthik Z6. Stills: Varuun V, Costume Designer: Swedhulekshmi S, Costumer: S. Nagasathya.
Under the banner of Pathway Productions, produced by Arun Rangarajulu and directed by Ram Chakri, the film ‘Carmeni Selvam’ starring Samuthirakani and Gautham Vasudev Menon has completed its shooting and the post-production work is in its final stage. The team is planning to release the film in theatres for Deepavali.
வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகிறது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்,” என்றார்.
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது.
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் “பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்” என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, புதுமையான முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உள்ளது.
இந்த நிகழ்ச்சியை, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை, புகழ்பெற்ற நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் இந்நிக்கழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் பார்த்திபன் கூறியதாவது…
நாளைய அப்துல்கலாம் ஆகவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கனவை உருவாக்க நினைத்த RAV, A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை, அதே போல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம், அது மாதிரி அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.
இப்படியான ஒரு முன்னெடுப்பை பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சிக்கு என் நன்றிகள். இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. பல கனவுகளோடு வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து, அவர்களின் கனவை ஒரு கட்டத்திற்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு, நான் உடன் நிற்பது எனக்கு மகிழ்ச்சி. கலாம் சாருக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. அதைப்பற்றி நிகழ்ச்சியில் நான் நிறைய பகிர்ந்துகொள்வேன்.
இந்த நேரத்தில் நான் நடிகர் விவேக் சாரை அதிகம் மிஸ் செய்கிறேன். பல படவாய்ப்புகள் எனக்கு வந்தபோது அதை பொருத்தமான வேறு நபர்களுக்கு நான் அனுப்பியிருக்கிறேன் அதே போல இந்த நிகழ்ச்சியையும் நடிகர் விவேக் இருந்திருந்தால் அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன். இதற்கு பொருத்தமானவர் அவர் தான். அவரில்லாததால் இந்த நிகழ்ச்சியை நானே ஏற்று நடத்துகிறேன்.
சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்த நிகச்சியை நான் தொகுத்து வழங்குவது எனக்குப் பெருமை என்றார்.
ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தளமான, சபா டோஸ் அவர்களின் “பிட்ச் இட் ஆன்” முயற்சி, தென்னிந்தியா முழுவதும் பயணித்து அசாதாரணமான கண்டுபிடிப்புகளைத் தேடும் ஒரு புரட்சிகரமான நிகழ்வை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் யோசனைகளை வணிக ரீதியாக மாற்றியமைக்க ஒரு முன்னோடியான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் சிறந்த கண்டுபிடிப்புகளை, புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 கண்டுபிடிப்புகள் சென்னையின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அங்கு, சிறந்த 10 கண்டுபிடிப்புகள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் வழிகாட்டும் 15 நாள் இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்கும். இந்தியாவின் அடுத்த பெரிய யோசனை, தொலைவான ஒரு கிராமத்தின் எளிய கேரேஜிலேயே இருக்கலாம்.
இந்த நிகழ்ச்சி, கண்டுபிடிப்புக்கும் தொழித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு பாலமாக அமையும்.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.
முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது.
முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.
முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பக் குழுவினர்: தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இயக்கம்: செல்லா அய்யாவு ஒளிப்பதிவு: கே. எம். பாஸ்கரன் இசை: ஷான் ரோல்டன் எடிட்டிங்: பரத் விக்ரமன் கலை இயக்கம்: எஸ். ஜெயச்சந்திரன் சண்டைக் காட்சிகள்: முருகன் நடன அமைப்பு: பாபா பாஸ்கர் பாடல்வரிகள்: மோகன்ராஜன் தலைமை நிர்வாகம் (வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்): நிதின் சத்யா மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)
Packed with eager readers, Amish was in conversation with Ekta Bhandari, the co-founder of Read a Kitaab, a community of over 23000 readers.
Addressing a question from the audience, Amish said ‘the story of the last 1300 years is not one of defat but one of the greatest victories. Our ancestors fought. They never surrendered. That should be our story, our history”
The Chola Tigers builds on the world introduced in the 2020 bestseller Legend of Suheldev, which garnered widespread appreciation from readers and went on to become a bestseller. Published by HarperCollins India, this thrilling historical saga of defiance, honour and redemption celebrates the indomitable spirit of India. Pacy and action-packed, The Chola Tigers, explores the profound question: How far would you go to defend dharma and your country’s honour?
Readers can pick up author signed copies of the book, and purchase Amish’s earlier books, from Odyssey, Adyar. Call store at 96006 38831 for home delivery
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி சோழா டைகர்ஸ்: அவெஞ்சர்ஸ் ஆஃப் சோம்நாத்’ புத்தகத்தை புகழ்பெற்ற எழுத்தாளர் அமிஷ், ஒடிஸி சென்னை அடையாறில் வெளியிட்டார்!
‘ரீட் கிதாப்’ (Read Kitaab) கம்யூனிட்டியில் கிட்டத்தட்ட 23,000-க்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இதன் இணை நிறுவனர் ஏக்தா பந்தாரியுடன் வாசகர்கள் முன்னிலையில் எழுத்தாளர் அமிஷ் உரையாடல் நிகழ்த்தினார்.
அதில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமிஷ் கூறிய பதிலாவது, “1300 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த கதையில் தோல்வியை பற்றி மட்டும் அல்லாது பல வெற்றிக்கதைகளையும் சொல்லி இருக்கிறோம். நம் முன்னோர்கள் ஒருபோதும் சரண் அடைந்தது இல்லை. தொடர்ந்து போரிட்டிருக்கிறார்கள். அதுவே நம் கதை, நம் வரலாறு!” என்றார்.
2020 ஆம் ஆண்டு விற்பனையில் சாதனை படைத்து, வாசகர்களிடம் அதிக பாராட்டுகள் பெற்ற புத்தகமான ‘லெஜண்ட் ஆஃப் சுஹெல்தேவ்’ புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி சோழா டைகர்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஹார்பர்காலின்ஸ் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்த சிலிர்ப்பூட்டும் வரலாற்றுக் கதை, எதிர்ப்பு, மரியாதை மற்றும் வெற்றி ஆகிய உணர்வுகளைக் கொண்டாடுகிறது. பரபரப்பும் ஆக்ஷனும் மிகுந்த ‘தி சோழா டைகர்ஸ்’, தர்மத்தையும் உங்கள் நாட்டின் கௌரவத்தையும் பாதுகாக்க நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்ற ஆழமான கேள்வியை வாசகர்கள் முன் வைக்கிறது.
எழுத்தாளர் அமிஷ் கையொப்பமிட்ட புத்தகத்தின் நகல்களை அடையாறில் உள்ள ஒடிஸியில் இருந்து வாசகர்கள் பெறலாம். மேலும், அமிஷின் முந்தைய புத்தகங்களையும் இங்கு வாங்கலாம்.
வீட்டில் நேரடி டெலிவரிக்கு 96006 38831 என்ற எண்ணில் அழைக்கவும்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு “வா தமிழா வா” என்கிற பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள்என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தஉருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில்நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்துசெல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும்பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.
Producer Prerna Arora is betting big on Shilpa Shirodkar’s performance in the upcoming film Jatadhara, predicting that she will bag all the awards for her role. Arora’s confidence in Shilpa’s abilities is evident in her statement, “Shilpa mam will definitely bag all awards from Jatadhara. I lay my bet on her. Shobha, is a powerful and complex role and Shilpa ma’am has done justice to it by performing so well her ability to bring depth she will be a full surprise for the audience.”
Shilpa Shirodkar, known for her impressive performances in films like Khuda Gawah and Mrityudand, has been making waves with her recent projects. Her role in Jatadhara, alongside Sudheer Babu and Sonakshi Sinha, is expected to be a highlight of her career. With her proven track record of delivering memorable performances, it’s no surprise that Prerna Arora is backing her to win big.
Jatadhara is a supernatural thriller that promises to take audiences on a thrilling ride. With its unique blend of suspense, action, and mystery, the film is expected to be one of the most anticipated releases of the year. Jatadhara features an ensemble cast, including Shilpa Shirodkar, Sonakshi Sinha, Sudheer Babu, Indira Krishna, Ravi Prakash, Divya Khossla, Rajeev Kanakala, Subhalekha Sudhakar, Rohit Pathak and others.
Makers have recently unveiled the first look of actress Shilpa Shirodkar as Shobha and it’s been loved by family, friends, Bigg boss fans and supporters.
With Prerna Arora’s confidence and Shilpa Shirodkar’s talent, Jatadhara is shaping up to be a cinematic masterpiece that audiences won’t want to miss.