Thursday, July 2, 2026
- Advertisement -
Home Blog Page 130

Million Studio Presents “Madras – The Connecting Thread”

0

Million Studio proudly announces the release of its latest documentary titled “Madras – The Connecting Thread”, directed by filmmaker Ramesh Yanthra, to mark the celebration of Madras Day, observed every year on August 22nd.

The 2-minute 26-second film recreates the charm of old Madras using AI-generated visuals and concludes with a powerful revelation — that several globally renowned personalities were born in Madras.

Director Ramesh Yanthra says “Madras is not just a city; it is a sacred thread that ties together our identities and
dreams. This film is my tribute to the timeless spirit of Madras.”

About Million Studio

Million Studio has produced the Tamil feature film “Weapon” and continues to nurture
innovative storytelling in cinema and documentaries.

About Ramesh Yanthra

Filmmaker Ramesh Yanthra has directed acclaimed documentaries such as “Gudiyam Caves” and “The Father of Indian Prehistory.” His debut feature film “Tractor” was recently completed, establishing him as one of the promising creative voices in Tamil Cinema.

மில்லியன் ஸ்டுடியோ வழங்கும் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 அன்று ‘மெட்ராஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ரமேஷ் யாந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரியை மில்லியன் ஸ்டுடியோ பெருமையுடன் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

2 நிமிடங்கள் 26 நொடிகள் நீளம் கொண்ட இந்த டாக்குமெண்ட்ரியில் பழைய மெட்ராஸின் அழகியலை செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாகவும், உலகம் முழுவதும் போற்றப்படும் பல ஆளுமைகள் மெட்ராஸில் பிறந்தவர்கள் என்ற வலுவான கூற்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

இயக்குநர் ரமேஷ் யாந்த்ரா கூறியதாவது, “மெட்ராஸ் வெறும் நகரம் மட்டுமல்ல! நம் அடையாளத்தையும் கனவுகளையும் இணைக்கும் இடம். காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெட்ராஸை இந்தப் படம் கொண்டாடும்” என்றார்.

மில்லியன் ஸ்டுடியோ குறித்து:

தமிழில் ‘வெப்பன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ள மில்லியன் ஸ்டுடியோ, சினிமாவில் அடுத்தடுத்து புதுமையான கதைகள் மற்றும் டாக்குமெண்ட்ரி தயாரிக்கவுள்ளது.

ரமேஷ் யாந்த்ரா பற்றி:

‘குடியம் கேவ்ஸ்’, ‘தி ஃபாதர் ஆஃப் இந்தியன் ப்ரீஹிஸ்டரி’ போன்ற பாராட்டப்பட்ட பல டாக்குமெண்ட்ரிகளை இயக்கியவர் ரமேஷ் யாந்த்ரா. அவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ‘டிராக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை முகமாக ரமேஷ் யாந்த்ரா வலம் வருவார் என்பது உறுதி.

Velammal Matriculation Higher Secondary School & Velammal Chess AcademyVelammal Crowned World School Team Chess Champions

0

Velammal Matriculation Higher Secondary School & Velammal Chess Academy
Velammal Crowned World School Team Chess Champions
FIDE World School Team Championship 2025
Venue: Episcopal High School, Washington D.C., USA
Velammal Matriculation Higher Secondary School has emerged as the World Champion in the prestigious FIDE World School Team Championship 2025, held from August 2nd to 7th at Episcopal High School in Washington D.C., USA.

For the first time ever, a school team from Tamil Nadu, India—Velammal Matriculation Higher Secondary School—represented the nation in this global championship.

The teams and the players are as followed

Keerthi Sri Reddy (WFM)
Aswath S. (IM)
Dakshina Arun (FM)
Ilamparithi E.R. (IM)
Pranav K.P. (FM)
The championship consisted of 8 rounds, where the Velammal team played against top school teams from Mongolia, Hungary, Austria, USA, Kazakhstan, Sri Lanka, and Uzbekistan, remaining unbeaten throughout the tournament.
This international event hosted over 250 participants from the top school teams of 55 countries across the globe.

The incredible performance by the five players has brought great pride to the nation, the state of Tamil Nadu, and their school.

மறு வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!

0

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம்.

பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.

எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகள். “சொட்ட சொட்ட நனையுது” படத்தை திரையரங்கில் பார்த்து, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நீங்கள் பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

புதிய வெளியீட்டு தேதி : ஆகஸ்ட் 29

உங்களின் புரிதலுக்கும், தொடர்ந்து தரும் உற்சாக ஆதரவுக்கும் நன்றி. மேலும் பல அப்டேட்களுடன் விரைவில் சந்திப்போம்!

– சொட்ட சொட்ட நனையுது
படக்குழு

அதிநவீன தொழில்நுட்பத்துடன்மீண்டும் திரைக்கு வருகிறது

0

அதிநவீன தொழில்நுட்பத்துடன்
மீண்டும் திரைக்கு வருகிறது
“உயிருள்ளவரை உஷா”!

டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”!

டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!

மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’, சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த ‘எங்க வீட்டு வேலன்’ போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!

இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!

@GovindarajPro

“எனக்கு நூறு ரூபா ஸ்கேன் டாக்டர் என்று பெயர்” – தமிழிசை சௌந்தராஜன் பேச்சு.

0

மூத்த குடிமக்களின் சேவைகள், சாதனைகள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அளித்த அர்ப்பணிப்புக்காக அவர்களை கொண்டாடவும், பாராட்டவும் ஒரு வாய்ப்பாக ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் நாட்டில் ஜெயம் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனம் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் நினைவு என்கிற பெயரில் கொண்டாடியது. மந்தைவெளியில் உள்ள தாகூர் பிலிம் சென்டரில் இன்று (21.08.2025) காலை நடந்த அந்த விழாவில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

எழுத்தாளர் இந்துமதி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மருத்துவர் எச்.வி.ஹென்டே, முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், விவசாய ஆளுமை புதுச்சேரி இரா.கமலக்கண்ணன், தொல்பொருள் ஆராச்சியாளர் டாக்டர் எஸ்.வேதாச்சலம், கல்வியாளர் எஸ்.வேங்கடராஜுலு, ஆசிரியர் அலமேலு மங்கையர்கரசி, வழக்கறிஞர் எஸ்.பஞ்சாபகேசன், திரைப்பட இயக்குநர் அரவிந்தராஜ், திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, மொழி கோர்வையாளர் ரேக்ஸ், ஊடகவியலார் முனீர் அகமது, பெற்றோர் ஆர்.ரங்கநாதன் – பத்மஜா ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

வே.பழனிவேலன் எழுதிய ‘முதியோர் மருத்துவம்’ என்கிற நூலை தமிழை சௌந்தராஜன் வெளியிட, முன்னாள் பார்கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவுக்கு வந்த அனைவரையும் குழ்நதைகள் நல ஆர்வலர் முனைவர் நிர்மலா ஆனந்த் வரவேற்றார். முடிவில் வேல்ஸ் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முனைவர் வளர்மதி சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழா நிழ்ச்சிகளை குலாம் முஸ்தபா பாட்ஷா, சிவசங்கரி ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயம் சாரிடபுள் டிரஸ்ட் சேர்மன் அஸ்ரின் சித்திரை செல்வன் ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு மனநிறைவு. ஜெயம் சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் சார்பில் உலக முதியோர் தினம் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் மிகவும் நன்றியோடு கலந்து கொள்வது இந்த விருதுகளை எனது அப்பா இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களின் நினைவாக இந்த விருதை அளித்திருப்பது அவரின் மகளாக அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். எல்லோருமே அப்பாவோடு பழகியவர்கள். அவர்களுக்கு பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்க வேண்டும் என்பதைப் போல பொன்னான அவர் இருக்க வேண்டிய இடத்தில் பூவாக, அதுவும் தாமரை பூவாக நான் இங்கே இருந்து அவர்களுக்கு விருதுகளை அளித்திருக்கிறேன். அதற்கு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையிலேயே மிக மிக மனசுக்கு சந்தோசமாக இருக்கிறது. சற்று காலதாமதாக வந்தேன். மன்னித்துக் கொள்ள வேண்டும். திருநெல்வேலியில் ஒரு நிகழ்வு இருக்கிறது. கட்சி ரீதியாக சில தகவல்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால் இரண்டு மணி நேரம் என்னால் தாமதமானது. எப்படியாவது இங்கு வந்து விட வேண்டும் என்று என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். பணி அதிகமாக இருந்தது. அதனால் சற்று மன்னித்தருள வேண்டுகிறேன். இவ்வளவு பெரியவர்களை அமர வைத்து விட்டு தாமதமாக வருவது தவறு. ஆனால், அதற்கு நான் காரணம் அல்ல என்பதையும் சொல்லி, தவிர்க்க முடியாத பணிகள் இருந்த காரணத்தினால்…

உண்மையிலேயே நல்ல நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் அத்தனை பேருக்கும் விருது நான் வழங்கினேன் என்று சொல்வதை விட, அவர்கள் பெற்றார்கள் என்று சொல்ல வேண்டும், ஏனென்றால், அவர்கள் எல்லாம் மிக மிக தகுதி வாய்ந்தவர்கள்.

மரியாதைக்குரிய எழுத்தாளர் இந்துமதி அவர்களை சிறுவயதிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்ற நல்ல எழுத்தாளர், ஆனந்த விகடன் ஆக இருக்கட்டும், குமுதம் ஆக இருக்கட்டும் எதை திறந்தாலும் மதிபோல் அவர்கள் ஒளி வீசிக் கொண்டிருப்பார்கள். அவரது பக்கத்தில் அமர்ந்திருப்பதை ரொம்ப மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆனால், எனக்கு கதை படிக்கிற பழக்கம் கிடையாது. தப்பா எடுத்துக்க கூடாது. சிறுவயதில் இருந்தே அப்படி. கதைகளின் தலைப்புகள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

சமுதாயத்தை முன்னிறுத்தி நீங்கள் எழுதினீர்கள். திரைப்படத்தில் கூட உங்களுடைய கதைகள் வந்திருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். என் தந்தைக்கு நிகராக உங்களைப் பார்க்கிறேன். மனதார வாழ்த்துகிறேன்.

அண்ணன் கங்கை அமரன் அவர்களும் அப்படித்தான். எங்களோடு இணைந்து பணியாற்றிய மிக மிக சுறுசுறுப்பான ஒரு இசையமைப்பாளர், மற்றும் கட்சித் தொண்டர். எங்களோடு ஒரு இடைத்தேர்தலில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால். இந்த தமிழிசை அந்த திரை இசைக்கு பரிசு வழங்கியதில் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அதே போல் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள். எப்படி இந்துமதி அம்மா அவர்கள் எழுத்துக்கு காரணமோ, இசைக்கு கங்கை அமரன் முன் உதாரணமாக இருக்கிறாரோ, அதே மாதிரி ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் நாடகத் துறைக்கு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வணக்கம்.

இங்கே பக்கத்தில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய எச்.வி.ஹென்டே அவர்கள் பற்றி நிகழ்ச்சி முழுக்க சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு மூத்த அரசியல்வாதி. நான் அவருக்கு கீழே வேலை செய்து கொண்டிருக்கின்ற ஒரு அரசியல்வாதி. அவர் மூத்த டாக்டர். நான் கீழே வேலை செய்து கொண்டிருக்கின்ற டாக்டர் ஆகவும் இருந்திருக்கிறேன். அவர் நோயாளிகளின் மருத்துவத்திற்கு அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார். சமூகத்திற்கும் அதிகம் செலவிட்டிருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகளுக்கு எல்லாம் மிகப்பெரிய பாடமாக இருக்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் தமிழக அரசியல் வரலாற்றை மிக மிக நன்றாக பேசுவார். அவருக்கு எனது வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா வால்டர் தேவாரம் அவர்களைப் பற்றி… ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று சினிமாவில் கூட அவரைதான் உதாரணமாக சொல்வார்கள். அந்த அளவிற்கு தேவாரம் என்றால் நடுநடுங்கி கொண்டிருக்கின்ற ஒரு காலம் இருந்தது. தேவ்ராத்தினால் சிவனே மயக்கிய காலம் உண்டு. இந்த தேவாரத்தினால் திருடர்களை திருத்திய காலமும் உண்டு என்ற என்றால் மரியாதைக்குரிய ஐயா தேவாரம் அவர்களின் அந்த காலகட்டம் தான் அது.

முன்னாள் அமைச்சர் இரா.கமலக்கண்ணன் அவர்கள் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் ஆக நான் தமிழில் பதவி ஏற்ற பொது என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி முனைவர் வேதாச்சலம் அவர்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர். அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எழுதுவது என்பது சவாலானது. மிக சிரமமான காரியமாகவும் இருக்கும்.

அடுத்து நான் தனியாக சொல்ல வேண்டியது முனைவர் வெங்கட்ராஜுலு அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமம். அவர்களை எனது அப்பாவுக்கு நிகராக பார்க்கிறேன். அவர் எனது இயக்கத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் தந்தையோடு மிக மிக நெருக்கமான ஒரு கல்வியாளர். என் அப்பாவுக்கு ரொம்ப பிடித்த கல்வியாளர்.

நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த போது ஒரே ஒரு கேள்வி கேட்டார். இன்னும் ஞாபகம் இருக்கிறது. நாங்கல்லாம் கல்வியாளர் தான். ஆனால், எங்களாலேயே அரசியல் கட்சி தொண்டராக வேலை செய்ய முடியவில்லை. நீங்க எம்பிபிஎஸ் படித்துவிட்டு எப்படி அரசியல் கட்சி வேலை செய்றீங்க? எனக்கு ஆச்சரியமாய் இருக்கு என்று சொன்னார்.

நான் அப்போது அவரிடம் சொன்னேன், நான் கமலாலயத்திற்குள் நுழையும் போது டாக்டராகவே நுழைவதில்லை. கமலாலயத்திற்கு செல்வதற்கு முன்பு நான்கைந்து மருத்துவமனைகளில் கன்சல்ட்டண்டாக இருந்தேன். அங்கு என்ன செய்வேன் என்றால், மிகப்பெரிய மருத்துவர்களுக்கு எல்லாம் ஸ்கேன் பார்த்து அவங்களுக்கு சிகிச்சையில் உதவ வேண்டும்.

என்னுடைய அரசியல் அறிமுகம் அளவுக்கு என்னுடைய மருத்துவ அறிமுகம் பலருக்கு தெரியாது. 25 ஆண்டு காலமாக மிக மிகச் சிறந்த ஸ்கேன் நிபுணராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தியாவிலேயே ஸ்கேனிங் தெரியாதபோது நான் கனடாவில் போய் ஸ்கேன் படித்துக் கொண்டு வந்தேன். என்னுடைய ஸ்கேன் சென்டரை என்ன சொல்வார்கள் என்றால், நூறு ரூபாய் ஸ்கேன் சென்டர் என்று சொல்வார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஒன்று இரண்டு இடங்களில் தான் ஸ்கேன் சென்டர் இருந்தது. அப்போது எல்லோரும் ஒரு ஸ்கேனுக்கு ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நான் ஏழை எளிய மக்களுக்காக 100 ரூபாய்க்கு தான் ஸ்கேன் பீஸ் வாங்கினேன். அதுவும் வெறும் கரண்ட்டுக்கும், பிரிண்ட் அவுட்டுக்கும் தான் அந்த காசு.

அதனால் , என்னுடைய ஸ்கேன் சென்டருக்கு பஸ்ஸில் இறங்கி தமிழிசை என்று கேட்க மாட்டார்கள். 100 ரூபாய் ஸ்கேன் சென்டர் எங்கே இருக்கு என்று கேட்பார்கள். 20 வருஷத்துக்கு முன்பு அதுதான் பத்திரிகைகளில் எழுதப்பட்டது. அதனால், அவரிடம் சொன்னேன். நான் ரொம்ப எக்ஸ்பெக்ட். பார்த்தவுடன் உடனே எல்லோரும் கைகுலுக்க வருவாங்க. இவ்வளவு கரெக்டா நீங்க ரிப்போட் பண்ணிட்டீங்க சொல்லிட்டு… இன்னொன்றும் நான் சொல்கிறேன், ஒரு 25 ஆண்டு காலமாக ஸ்கேன் செய்து ஒரு வழக்கு கூட வாங்காத டாக்டர் நான். அரசியலில் மட்டுமல்ல ஸ்கேனிலும் நான் சொன்னா அதுதான் சரியாக இருக்கும்.

அப்போது நாங்கள் ஸ்கேன் செய்யும் போது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று பார்க்க முடியும். அதற்கு பிறகு சட்டம் கொண்டு வந்தார்கள். அது மாதிரி என்ன சொல்றோமோ? என்ன எடை என்று சொல்கிறோமோ? அதுமாதிரியே இருக்கும். மனிதர்களை எடை போடுவதில் மட்டுமல்ல, அரசியல்வாதிகளை எடை போடுவது மட்டுமல்ல, குழந்தைகளை எடை போடுவதில் மிகச்சிறந்த பிரபலமான விற்பன்னர் நான்

எங்களுடைய ஸ்கேன் இந்த குழந்தை இன்ன வெயிட் இருக்கும் என்று நான் சொல்வதை வைத்து தான் நார்மல் டெலிவரி செய்யலாமா? சிசேரியன் செய்யலாமா? என்று முடிவெடுப்பார்கள். ஏனென்றால், ரெண்டு புள்ளி ஐந்து, மூன்று புள்ளி ஐந்து இருந்தது என்றால், அந்த குழந்தை நார்மல் டெலிவரி. அதற்கு மேல இருந்தது என்றால் சிசேரியன் செய்வார்கள்.

ஒரு குழந்தையின் எடை 3.1 வெயிட் இருந்தது என்று சொன்னால், நான் சொன்னது சரியாக இருக்கும். மற்றவர்கள் சொன்னால் அது அவ்வளவு உறுதியா சொல்ல மாட்டார்கள். நான் ஏன் இங்கு இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் நமது ட்விட்டர் தம்பிகள், யூடியூப் தம்பிகள், என்ன சொல்லுவாங்க? நீ என்ன டாக்டர் படிச்ச? உனக்கு புத்தி இல்லையா? அது இல்லையா? இது இல்லையா? என்று சொல்வார்கள். என்னுடைய அதர்சைடு அவர்களுக்கு தெரியாது. பாவம். அவர்களுக்கு மூணாங்கிளாஸ் தான் படிச்சி இருப்பாங்க. நான் எம்பிபிஎஸ் படித்துவிட்டு . டி.ஜி.ஓ. படித்துவிட்டு கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி படித்தவள்.

எனக்கு ஒன்னும் தெரியல. நீ முட்டை. உனக்கு பிச்சை மார்க்கெட் போட்டு இருப்பாங்க. தமிழ்நாட்டில் உள்ள சிலர் அப்படி சொல்வார்கள். அதை பத்தி நான் கவலைப்படல. நான் ரிசல்ட் கொடுத்தால் டாக்டர் கிளவுஸ் கூட கழட்டாமல் என்னிடம் வந்து சொல்லுவாங்க, நீங்க சொன்ன மாதிரியே சர்ஜரியில் இருந்தது என்பார்கள் .

அங்கு தாத்தா பாட்டி வயது பெரியவர்கள் என்றாலும் காப்பாத்திட்டீங்க ரொம்ப நல்லா இருக்கணும் என்று என்னிடம் காலில் விழ வருவார்கள்.

நான் கமலாலயத்துக்குள் நுழைந்தால் நான் டாக்டர் என்கிற கிரீடத்தை கீழே இறக்கி வச்சிட்டு, அதெல்லாம் மறந்துட்டு பிஜேபி தொண்டரா தான் கமலாலயத்துக்குள் நுழைவேன். நான் உங்கள் முன்னால் டாக்டராக இங்கு உட்கார வில்லை. தொண்டராக தான் உங்களிடம் உட்கார்ந்து இருக்கிறேன் என்று சொன்னேன்.

அப்படி இருந்ததனால் தான் இங்கே நிற்க முடியுது. நான் டாக்டர் என்று அப்படி நினைத்து இருந்தால், அப்பவே வெளியே போக சொல்வார்கள். அந்த அளவுக்கு அரசியல், சவால் நிறைந்த உலகம். அதனால். மரியாதைக்குரிய வெங்கட்ராஜுலு அவர்களை பார்த்ததும் அந்த நினைவுகள் வந்தது. அது மட்டுமல்ல, எங்க அப்பா அடிக்கடி பெருமையாக சொல்லக்கூடிய ஒரு கல்வியாளர், அவர்.

அலமேலு மங்கையர்க்கரசி. எந்த குறைபாடும் இல்லாத நம்மளாலேயே சில நேரங்களில் சிலவற்றை செய்ய முடியாமல் போகிறது. இவர்களைப் போன்றவர்கள் மிக மிக சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அலமேலு மங்கையர்க்கரசி ஒரு உதாரணம். அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே மாதிரி திரு பஞ்சாபகேசன் அவர்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சில நேரங்களில் இவர்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சபகேசன் போன்றவர்கள் எல்லாம் ஒரு வழக்கறிஞராக சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது எல்லாம் சாதாரண காரியம் அல்ல. மரியாதைக்குரிய அரவிந்தராஜ் அவர்கள், ஒளிப்பதிவாளர் கே வி மணி அவர்கள், மொழி கோர்வையாளர் ரேக்ஸ் அவர்கள், ஊடகவியலார் முனீர் அகமது அவர்கள், திரு ரங்கநாதன் திருமதி பத்மஜா எல்லோரும் அவரவர் துறையில் மிக சிறப்பாக தங்களுடைய அர்பணிப்புகளை கொடுத்தவர்கள். அவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதியோர் மருத்துவம் என்கிற புத்தகத்தை எழுதிய தம்பி பழனிவேல் அவர்களுக்கு வணக்கம். இந்த புத்தகத்தை பெற்ற மருந்து உற்பத்தியாளர் வரதராஜனும் அவர்களுக்கும் எனது வணக்கம்.

பெரியவர்களை கொண்டாட வேண்டும். அவர்களது சாதனையை போற்ற வேண்டும். கௌரவிக்க வேண்டும் என்று இந்த விழாவை ஏற்பாடு செய்த ஜெயம் அறக்கட்டளை அஸ்ரின் சித்திரைச்செல்வன் அவர்களுக்கு எனது வணக்கத்தையும்ம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Producer Bazaar Forms Strategic Alliance with Bangalore International Short Film Festival (BISFF), India’s Only Oscars®️ Academy-Accredited Festival

0

Bangalore, India — ProducerBazaar proudly announces the signing of a historic Memorandum of Understanding (MoU) with the Bangalore International Short Film Festival (BISFF) — India’s only Oscars®️ Academy-accredited film festival. This groundbreaking partnership, formalized on August 17, 2025, represents a defining moment for the Indian film industry, opening the doors to global recognition, transformative collaborations, and a reimagined future for short filmmakers.

With BISFF’s prestigious Academy accreditation and ProducerBazaar’s pioneering platform for film rights and distribution, the alliance creates a powerful new pathway for Indian storytellers to reach the Oscars®️ stage while unlocking sustainable monetization models for their creative work.

“For over a decade, BISFF has been at the forefront of championing short films and creating a global stage for Indian talent. This collaboration with ProducerBazaar strengthens our mission by not only providing filmmakers with an Oscar®️ pathway but also ensuring their stories find sustainable business opportunities. Together, we will amplify India’s voice in world cinema,” said Anand Varadaraj, Founder, Festival Director of BISFF.

“This partnership empowers Indian storytellers with unprecedented international exposure and a direct gateway to the Academy Awards. At ProducerBazaar, we are committed to redefining the way films are discovered, distributed, and monetized. Together with BISFF, we aim to build a thriving ecosystem where creativity meets opportunity, and where short films from India can make a global impact,” said GK Tirunavukarasu, Founder and CEO of ProducerBazaar.

Key Highlights of the Partnership:
• Oscar®️ Entry Gateway: ProducerBazaar shall act as the entry point for short films eyeing Oscar®️ nominations through BISFF’s accreditation.
• Innovative Monetization Models: A first-of-its-kind approach to content rights, enabling filmmakers to transparently monetize their work and access global buyers.
• Global Exposure & Networking: Curated opportunities for creators to connect with international distributors, platforms, and investors.

As ProducerBazaar and BISFF join forces, they remain united in their mission to elevate Indian cinema to global heights, amplify voices that deserve to be heard, and inspire the next generation of filmmakers to dream without limits.

For more details: https://www.producerbazaar.com/

ProducerBazaar #BangaloreInternationalShortFIlm Festival #BISFF #PB #Paneldiscussion #PB #MediaandEntertainment

ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே திரைப்பட திருவிழாவான பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்

இந்திய திரையுலகின் உள்ளடக்க வர்த்தகத்தில் மாற்றத்தையும் நேர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com), ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே திரைப்பட திருவிழாவான பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் (Bangalore International Short Film Festival – BISFF) முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2025 அன்று இறுதி செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், சர்வதேச அங்கீகாரத்திற்கான கதவுகளை இந்திய திரையுலகிற்கு திறந்து விட்டிருப்பதோடு பெரும் மாற்றத்தை உண்டாக்கும் கூட்டணிகள் மற்றும் குறும்பட படைப்பாளிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும்.

பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவின் ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் மற்றும் புரொடியூசர் பஜாரின் தனித்தன்மை வாய்ந்த திரைப்பட உரிமைகள் மற்றும் விநியோக தளம் ஆகியவை இணைந்து இந்திய படைப்பாளிகள் ஆஸ்கார் மேடையை அடைவதற்கான வழியை உருவாக்குவதோடு அவர்களது படைப்புகள் நல்ல வருவாயை ஈட்டுவதற்கான முறைகளையும் உருவாக்கும்.

இந்த கூட்டணி குறித்து பேசிய பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவின் நிறுவனர் மற்றும் விழா இயக்குநர் ஆனந்த் வரதராஜ், “குறும்படங்களை ஆதரிப்பதிலும், இந்திய திறமையாளர்களுக்கு உலகளாவிய மேடையை உருவாக்குவதிலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா முன்னணியில் உள்ளது. புரொடியூசர் பஜார் உடனான இந்த கூட்டணி, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு ஆஸ்கர் கதவுகளை திறந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படைப்புகள் நிலையான வணிக வாய்ப்புகளைக் கண்டறிவதையும் உறுதி செய்கிறது. இந்திய சினிமாவின் குரலை சர்வதேச அளவில் உரத்து ஒலிக்க செய்வதே எங்கள் நோக்கமாகும்,” என்று தெரிவித்தார்.

புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு பேசுகையில், “இந்திய படைப்பாளிகளுக்கு இதுவரை இல்லாத வகையிலான சர்வதேச வெளிப்பாட்டையும், அகாடமி விருதுகளுக்கான நேரடி நுழைவாயிலையும் இந்த கூட்டாண்மை வழங்குகிறது. நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு அவற்றின் விநியோகம் மற்றும் வருவாய் முறைகளை மறுவரையறை செய்து மேம்படுத்துவதில் புரொடியூசர் பஜார் உறுதியாக உள்ளது. பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா உடன் தற்போது இணைந்திருப்பதன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்படும் குறும்படங்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செழுமையான சூழலிலை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா மற்றும் புரொடியூசர் பஜார் கூட்டணியின் முக்கிய சிறப்பம்சங்கள்:

ஆஸ்கர் நுழைவுவாயில்: பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா அங்கீகாரம் மூலம் ஆஸ்கரில் இடம்பெற விரும்பும் குறும்படங்களுக்கான நுழைவுப் புள்ளியாக புரொடியூசர் பஜார் செயல்படும்.

புதுமையான வருவாய் முறைகள்: உள்ளடக்க உரிமைகளுக்கான இதுவரை இல்லாத வகையிலான அணுகுமுறை, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படையாகப் பணமாக்குவதற்கும் உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கும் இது உதவுகிறது.

சர்வதேச வெளிப்பாடு மற்றும் நெட்வொர்க்கிங்: சர்வதேச விநியோகஸ்தர்கள், தளங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் படைப்பாளிகள் இணைவதற்கான சிறந்த வாய்ப்புகள்.

புரொடியூசர் பஜார் மற்றும் பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா இணைந்து, இந்திய சினிமாவை உலகளாவிய அளவில் உயர்த்துவதையும், திறமை வாய்ந்த படைப்பாளிகளுக்கு உரிய மேடையை வழங்குவதையும், அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்கள் பெரும் லட்சியங்களை எட்ட ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: https://www.producerbazaar.com/

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்

0

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) சார்பில் தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்” படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

0

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். ‘குற்றம் புதிது’ படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.

நடிகை சேஷ்விதா கனிமொழி, “நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை” என்றார்.

நடிகை பிரியதர்ஷினி, ” இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

‘கெவி’ பட இயக்குநர் தமிழ் தயாளன், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்”.

தயாரிப்பாளர் கணேஷ், ” எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்”.

நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், ” படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்”.

தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், ” சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் பேரரசு, ” வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது ‘குற்றம் புதிது’ படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்”.

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், ” கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி”.

இயக்குநர் ஹரி உத்ரா, ” இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்”.

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா ” கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் ‘குற்றம் புதிது’ ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா

0

ஸ்டண்ட் சில்வாவுக்கு விருது வழங்கி கவுரவித்த கேரளா அரசு

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.

ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.

இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது மனோரமா கேரளா மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்றுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.

“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !!

0

RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார்.

குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக, இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். மேலும் அடுத்தடுத்து மேலும் பல சிறப்பான படங்களை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சரீஷ் நாயகனாக நடிக்க,அர்திகா நாயகியாக நடித்துள்ளார். நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார்.

இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்

இயக்கம்: சரிஷ்
தயாரிப்பு: ரேஷ்மா கே
கதை, வசனம்: ரூபன்
திரைக்கதை : வின்சென்ட் செல்வா
ஒளிப்பதிவு: வெங்கடேஷ்
இசை: ஆர் தேவராஜன்
எடிட்டர்: சாம் லோகேஷ்
ஸ்டண்ட்: விஜய் ஜாக்கார்
பாடல் வரிகள்: K.U.கார்த்திக்
ஸ்டில்ஸ்: பவிஷ்
மக்கள் தொடர்பு : மணி மதன்
விளம்பர வடிவமைப்பு : குமரன் K

PRO R.MANI MADHAN

- Advertisement -

Recent Posts