மூத்த குடிமக்களின் சேவைகள், சாதனைகள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அளித்த அர்ப்பணிப்புக்காக அவர்களை கொண்டாடவும், பாராட்டவும் ஒரு வாய்ப்பாக ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் நாட்டில் ஜெயம் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனம் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் நினைவு என்கிற பெயரில் கொண்டாடியது. மந்தைவெளியில் உள்ள தாகூர் பிலிம் சென்டரில் இன்று (21.08.2025) காலை நடந்த அந்த விழாவில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

எழுத்தாளர் இந்துமதி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மருத்துவர் எச்.வி.ஹென்டே, முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், விவசாய ஆளுமை புதுச்சேரி இரா.கமலக்கண்ணன், தொல்பொருள் ஆராச்சியாளர் டாக்டர் எஸ்.வேதாச்சலம், கல்வியாளர் எஸ்.வேங்கடராஜுலு, ஆசிரியர் அலமேலு மங்கையர்கரசி, வழக்கறிஞர் எஸ்.பஞ்சாபகேசன், திரைப்பட இயக்குநர் அரவிந்தராஜ், திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, மொழி கோர்வையாளர் ரேக்ஸ், ஊடகவியலார் முனீர் அகமது, பெற்றோர் ஆர்.ரங்கநாதன் – பத்மஜா ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

வே.பழனிவேலன் எழுதிய ‘முதியோர் மருத்துவம்’ என்கிற நூலை தமிழை சௌந்தராஜன் வெளியிட, முன்னாள் பார்கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவுக்கு வந்த அனைவரையும் குழ்நதைகள் நல ஆர்வலர் முனைவர் நிர்மலா ஆனந்த் வரவேற்றார். முடிவில் வேல்ஸ் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முனைவர் வளர்மதி சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழா நிழ்ச்சிகளை குலாம் முஸ்தபா பாட்ஷா, சிவசங்கரி ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயம் சாரிடபுள் டிரஸ்ட் சேர்மன் அஸ்ரின் சித்திரை செல்வன் ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு மனநிறைவு. ஜெயம் சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் சார்பில் உலக முதியோர் தினம் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் மிகவும் நன்றியோடு கலந்து கொள்வது இந்த விருதுகளை எனது அப்பா இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களின் நினைவாக இந்த விருதை அளித்திருப்பது அவரின் மகளாக அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். எல்லோருமே அப்பாவோடு பழகியவர்கள். அவர்களுக்கு பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்க வேண்டும் என்பதைப் போல பொன்னான அவர் இருக்க வேண்டிய இடத்தில் பூவாக, அதுவும் தாமரை பூவாக நான் இங்கே இருந்து அவர்களுக்கு விருதுகளை அளித்திருக்கிறேன். அதற்கு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையிலேயே மிக மிக மனசுக்கு சந்தோசமாக இருக்கிறது. சற்று காலதாமதாக வந்தேன். மன்னித்துக் கொள்ள வேண்டும். திருநெல்வேலியில் ஒரு நிகழ்வு இருக்கிறது. கட்சி ரீதியாக சில தகவல்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால் இரண்டு மணி நேரம் என்னால் தாமதமானது. எப்படியாவது இங்கு வந்து விட வேண்டும் என்று என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். பணி அதிகமாக இருந்தது. அதனால் சற்று மன்னித்தருள வேண்டுகிறேன். இவ்வளவு பெரியவர்களை அமர வைத்து விட்டு தாமதமாக வருவது தவறு. ஆனால், அதற்கு நான் காரணம் அல்ல என்பதையும் சொல்லி, தவிர்க்க முடியாத பணிகள் இருந்த காரணத்தினால்…

உண்மையிலேயே நல்ல நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் அத்தனை பேருக்கும் விருது நான் வழங்கினேன் என்று சொல்வதை விட, அவர்கள் பெற்றார்கள் என்று சொல்ல வேண்டும், ஏனென்றால், அவர்கள் எல்லாம் மிக மிக தகுதி வாய்ந்தவர்கள்.

மரியாதைக்குரிய எழுத்தாளர் இந்துமதி அவர்களை சிறுவயதிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்ற நல்ல எழுத்தாளர், ஆனந்த விகடன் ஆக இருக்கட்டும், குமுதம் ஆக இருக்கட்டும் எதை திறந்தாலும் மதிபோல் அவர்கள் ஒளி வீசிக் கொண்டிருப்பார்கள். அவரது பக்கத்தில் அமர்ந்திருப்பதை ரொம்ப மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆனால், எனக்கு கதை படிக்கிற பழக்கம் கிடையாது. தப்பா எடுத்துக்க கூடாது. சிறுவயதில் இருந்தே அப்படி. கதைகளின் தலைப்புகள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

சமுதாயத்தை முன்னிறுத்தி நீங்கள் எழுதினீர்கள். திரைப்படத்தில் கூட உங்களுடைய கதைகள் வந்திருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். என் தந்தைக்கு நிகராக உங்களைப் பார்க்கிறேன். மனதார வாழ்த்துகிறேன்.

அண்ணன் கங்கை அமரன் அவர்களும் அப்படித்தான். எங்களோடு இணைந்து பணியாற்றிய மிக மிக சுறுசுறுப்பான ஒரு இசையமைப்பாளர், மற்றும் கட்சித் தொண்டர். எங்களோடு ஒரு இடைத்தேர்தலில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால். இந்த தமிழிசை அந்த திரை இசைக்கு பரிசு வழங்கியதில் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அதே போல் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள். எப்படி இந்துமதி அம்மா அவர்கள் எழுத்துக்கு காரணமோ, இசைக்கு கங்கை அமரன் முன் உதாரணமாக இருக்கிறாரோ, அதே மாதிரி ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் நாடகத் துறைக்கு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வணக்கம்.

இங்கே பக்கத்தில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய எச்.வி.ஹென்டே அவர்கள் பற்றி நிகழ்ச்சி முழுக்க சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு மூத்த அரசியல்வாதி. நான் அவருக்கு கீழே வேலை செய்து கொண்டிருக்கின்ற ஒரு அரசியல்வாதி. அவர் மூத்த டாக்டர். நான் கீழே வேலை செய்து கொண்டிருக்கின்ற டாக்டர் ஆகவும் இருந்திருக்கிறேன். அவர் நோயாளிகளின் மருத்துவத்திற்கு அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார். சமூகத்திற்கும் அதிகம் செலவிட்டிருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகளுக்கு எல்லாம் மிகப்பெரிய பாடமாக இருக்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் தமிழக அரசியல் வரலாற்றை மிக மிக நன்றாக பேசுவார். அவருக்கு எனது வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா வால்டர் தேவாரம் அவர்களைப் பற்றி… ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று சினிமாவில் கூட அவரைதான் உதாரணமாக சொல்வார்கள். அந்த அளவிற்கு தேவாரம் என்றால் நடுநடுங்கி கொண்டிருக்கின்ற ஒரு காலம் இருந்தது. தேவ்ராத்தினால் சிவனே மயக்கிய காலம் உண்டு. இந்த தேவாரத்தினால் திருடர்களை திருத்திய காலமும் உண்டு என்ற என்றால் மரியாதைக்குரிய ஐயா தேவாரம் அவர்களின் அந்த காலகட்டம் தான் அது.

முன்னாள் அமைச்சர் இரா.கமலக்கண்ணன் அவர்கள் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் ஆக நான் தமிழில் பதவி ஏற்ற பொது என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி முனைவர் வேதாச்சலம் அவர்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர். அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எழுதுவது என்பது சவாலானது. மிக சிரமமான காரியமாகவும் இருக்கும்.

அடுத்து நான் தனியாக சொல்ல வேண்டியது முனைவர் வெங்கட்ராஜுலு அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமம். அவர்களை எனது அப்பாவுக்கு நிகராக பார்க்கிறேன். அவர் எனது இயக்கத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் தந்தையோடு மிக மிக நெருக்கமான ஒரு கல்வியாளர். என் அப்பாவுக்கு ரொம்ப பிடித்த கல்வியாளர்.

நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த போது ஒரே ஒரு கேள்வி கேட்டார். இன்னும் ஞாபகம் இருக்கிறது. நாங்கல்லாம் கல்வியாளர் தான். ஆனால், எங்களாலேயே அரசியல் கட்சி தொண்டராக வேலை செய்ய முடியவில்லை. நீங்க எம்பிபிஎஸ் படித்துவிட்டு எப்படி அரசியல் கட்சி வேலை செய்றீங்க? எனக்கு ஆச்சரியமாய் இருக்கு என்று சொன்னார்.

நான் அப்போது அவரிடம் சொன்னேன், நான் கமலாலயத்திற்குள் நுழையும் போது டாக்டராகவே நுழைவதில்லை. கமலாலயத்திற்கு செல்வதற்கு முன்பு நான்கைந்து மருத்துவமனைகளில் கன்சல்ட்டண்டாக இருந்தேன். அங்கு என்ன செய்வேன் என்றால், மிகப்பெரிய மருத்துவர்களுக்கு எல்லாம் ஸ்கேன் பார்த்து அவங்களுக்கு சிகிச்சையில் உதவ வேண்டும்.

என்னுடைய அரசியல் அறிமுகம் அளவுக்கு என்னுடைய மருத்துவ அறிமுகம் பலருக்கு தெரியாது. 25 ஆண்டு காலமாக மிக மிகச் சிறந்த ஸ்கேன் நிபுணராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தியாவிலேயே ஸ்கேனிங் தெரியாதபோது நான் கனடாவில் போய் ஸ்கேன் படித்துக் கொண்டு வந்தேன். என்னுடைய ஸ்கேன் சென்டரை என்ன சொல்வார்கள் என்றால், நூறு ரூபாய் ஸ்கேன் சென்டர் என்று சொல்வார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஒன்று இரண்டு இடங்களில் தான் ஸ்கேன் சென்டர் இருந்தது. அப்போது எல்லோரும் ஒரு ஸ்கேனுக்கு ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நான் ஏழை எளிய மக்களுக்காக 100 ரூபாய்க்கு தான் ஸ்கேன் பீஸ் வாங்கினேன். அதுவும் வெறும் கரண்ட்டுக்கும், பிரிண்ட் அவுட்டுக்கும் தான் அந்த காசு.

அதனால் , என்னுடைய ஸ்கேன் சென்டருக்கு பஸ்ஸில் இறங்கி தமிழிசை என்று கேட்க மாட்டார்கள். 100 ரூபாய் ஸ்கேன் சென்டர் எங்கே இருக்கு என்று கேட்பார்கள். 20 வருஷத்துக்கு முன்பு அதுதான் பத்திரிகைகளில் எழுதப்பட்டது. அதனால், அவரிடம் சொன்னேன். நான் ரொம்ப எக்ஸ்பெக்ட். பார்த்தவுடன் உடனே எல்லோரும் கைகுலுக்க வருவாங்க. இவ்வளவு கரெக்டா நீங்க ரிப்போட் பண்ணிட்டீங்க சொல்லிட்டு… இன்னொன்றும் நான் சொல்கிறேன், ஒரு 25 ஆண்டு காலமாக ஸ்கேன் செய்து ஒரு வழக்கு கூட வாங்காத டாக்டர் நான். அரசியலில் மட்டுமல்ல ஸ்கேனிலும் நான் சொன்னா அதுதான் சரியாக இருக்கும்.

அப்போது நாங்கள் ஸ்கேன் செய்யும் போது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று பார்க்க முடியும். அதற்கு பிறகு சட்டம் கொண்டு வந்தார்கள். அது மாதிரி என்ன சொல்றோமோ? என்ன எடை என்று சொல்கிறோமோ? அதுமாதிரியே இருக்கும். மனிதர்களை எடை போடுவதில் மட்டுமல்ல, அரசியல்வாதிகளை எடை போடுவது மட்டுமல்ல, குழந்தைகளை எடை போடுவதில் மிகச்சிறந்த பிரபலமான விற்பன்னர் நான்

எங்களுடைய ஸ்கேன் இந்த குழந்தை இன்ன வெயிட் இருக்கும் என்று நான் சொல்வதை வைத்து தான் நார்மல் டெலிவரி செய்யலாமா? சிசேரியன் செய்யலாமா? என்று முடிவெடுப்பார்கள். ஏனென்றால், ரெண்டு புள்ளி ஐந்து, மூன்று புள்ளி ஐந்து இருந்தது என்றால், அந்த குழந்தை நார்மல் டெலிவரி. அதற்கு மேல இருந்தது என்றால் சிசேரியன் செய்வார்கள்.

ஒரு குழந்தையின் எடை 3.1 வெயிட் இருந்தது என்று சொன்னால், நான் சொன்னது சரியாக இருக்கும். மற்றவர்கள் சொன்னால் அது அவ்வளவு உறுதியா சொல்ல மாட்டார்கள். நான் ஏன் இங்கு இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் நமது ட்விட்டர் தம்பிகள், யூடியூப் தம்பிகள், என்ன சொல்லுவாங்க? நீ என்ன டாக்டர் படிச்ச? உனக்கு புத்தி இல்லையா? அது இல்லையா? இது இல்லையா? என்று சொல்வார்கள். என்னுடைய அதர்சைடு அவர்களுக்கு தெரியாது. பாவம். அவர்களுக்கு மூணாங்கிளாஸ் தான் படிச்சி இருப்பாங்க. நான் எம்பிபிஎஸ் படித்துவிட்டு . டி.ஜி.ஓ. படித்துவிட்டு கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி படித்தவள்.

எனக்கு ஒன்னும் தெரியல. நீ முட்டை. உனக்கு பிச்சை மார்க்கெட் போட்டு இருப்பாங்க. தமிழ்நாட்டில் உள்ள சிலர் அப்படி சொல்வார்கள். அதை பத்தி நான் கவலைப்படல. நான் ரிசல்ட் கொடுத்தால் டாக்டர் கிளவுஸ் கூட கழட்டாமல் என்னிடம் வந்து சொல்லுவாங்க, நீங்க சொன்ன மாதிரியே சர்ஜரியில் இருந்தது என்பார்கள் .

அங்கு தாத்தா பாட்டி வயது பெரியவர்கள் என்றாலும் காப்பாத்திட்டீங்க ரொம்ப நல்லா இருக்கணும் என்று என்னிடம் காலில் விழ வருவார்கள்.

நான் கமலாலயத்துக்குள் நுழைந்தால் நான் டாக்டர் என்கிற கிரீடத்தை கீழே இறக்கி வச்சிட்டு, அதெல்லாம் மறந்துட்டு பிஜேபி தொண்டரா தான் கமலாலயத்துக்குள் நுழைவேன். நான் உங்கள் முன்னால் டாக்டராக இங்கு உட்கார வில்லை. தொண்டராக தான் உங்களிடம் உட்கார்ந்து இருக்கிறேன் என்று சொன்னேன்.

அப்படி இருந்ததனால் தான் இங்கே நிற்க முடியுது. நான் டாக்டர் என்று அப்படி நினைத்து இருந்தால், அப்பவே வெளியே போக சொல்வார்கள். அந்த அளவுக்கு அரசியல், சவால் நிறைந்த உலகம். அதனால். மரியாதைக்குரிய வெங்கட்ராஜுலு அவர்களை பார்த்ததும் அந்த நினைவுகள் வந்தது. அது மட்டுமல்ல, எங்க அப்பா அடிக்கடி பெருமையாக சொல்லக்கூடிய ஒரு கல்வியாளர், அவர்.

அலமேலு மங்கையர்க்கரசி. எந்த குறைபாடும் இல்லாத நம்மளாலேயே சில நேரங்களில் சிலவற்றை செய்ய முடியாமல் போகிறது. இவர்களைப் போன்றவர்கள் மிக மிக சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அலமேலு மங்கையர்க்கரசி ஒரு உதாரணம். அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே மாதிரி திரு பஞ்சாபகேசன் அவர்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சில நேரங்களில் இவர்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சபகேசன் போன்றவர்கள் எல்லாம் ஒரு வழக்கறிஞராக சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது எல்லாம் சாதாரண காரியம் அல்ல. மரியாதைக்குரிய அரவிந்தராஜ் அவர்கள், ஒளிப்பதிவாளர் கே வி மணி அவர்கள், மொழி கோர்வையாளர் ரேக்ஸ் அவர்கள், ஊடகவியலார் முனீர் அகமது அவர்கள், திரு ரங்கநாதன் திருமதி பத்மஜா எல்லோரும் அவரவர் துறையில் மிக சிறப்பாக தங்களுடைய அர்பணிப்புகளை கொடுத்தவர்கள். அவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதியோர் மருத்துவம் என்கிற புத்தகத்தை எழுதிய தம்பி பழனிவேல் அவர்களுக்கு வணக்கம். இந்த புத்தகத்தை பெற்ற மருந்து உற்பத்தியாளர் வரதராஜனும் அவர்களுக்கும் எனது வணக்கம்.

பெரியவர்களை கொண்டாட வேண்டும். அவர்களது சாதனையை போற்ற வேண்டும். கௌரவிக்க வேண்டும் என்று இந்த விழாவை ஏற்பாடு செய்த ஜெயம் அறக்கட்டளை அஸ்ரின் சித்திரைச்செல்வன் அவர்களுக்கு எனது வணக்கத்தையும்ம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here