- Advertisement -
Home Blog Page 137

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் “வடம்” பூஜையுடன் துவங்கியது !!

0

தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் மஞ்சு விரட்டு விளையாட்டு பின்னணியில் உருவாகும் “வடம்”

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது.

பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது.  

தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு விளையாட்டை மையமாக வைத்து வடம் படம் உருவாகிறது. மேலும் காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வைக் கூறும் கதையம்சத்துடன், கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகிறது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நடிகர் விமலின் அடுத்த திரைப்படமாக வடம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பாலசரவணன், நரேன், ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை பிரசன்னா எஸ் குமார் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு வி.சசிகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சியை முருகன் வழங்க, தயாரிப்பு மேற்பார்வையை K.R.பாலமுருகன் கவனிக்கிறார். இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனமும் சன் மாறோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின்  படப்பிடிப்பை மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

pan-Indian film ‘Samari – The Legend of Vaarahi’ was launched today.

0

The title of the pan-Indian film ‘Samari – The Legend of Vaarahi’ was launched today. This grand cinematic venture aims to bring the glorious history and significance of Goddess Vaarahi to the audiences across the world.

Produced by Azhagarraj Jayapalan under the banner of Global Pictures, the film will be directed by Naveen Ganesh, who is known for his notable works ‘Echo’ and ‘Pulse’.

The project will feature a stellar cast and top-notch technical crew, whose names will be officially announced soon.

With an impressive budget, the shooting of this epic pan-Indian film is set to commence on September.

இன்று தலைப்பு வெளியீடு நடைபெற்றுள்ள பான் இந்திய திரைப்படம் ‘சமரி – தி லெஜெண்ட் ஆஃப் வாராஹி’, வாராஹி அம்மனின் வரலாறு மற்றும் பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யும் நோக்கில் உருவாகிறது.

இந்த பிரம்மாண்ட படைப்பை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். ‘எக்கோ’ மற்றும் ‘பல்ஸ்’ படங்களின் இயக்குநர் நவின் கணேஷ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

பெரும் நட்சத்திர பட்டாளமும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இவர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்த பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி

0

டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் நல்லாட்சி

கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர்
என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்…

ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி என்ற திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்…

மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர்

உறுதிமொழியுடன் ஆரம்பித்த நல்லாட்சிதிரைப்படம்

இன்று திங்கள் கிழமை 4.8.2025 பூந்தமல்லியிலுள்ள LOYOLA COLLEGE-ல் நல்லாட்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – Dr.யாவரும் கேளிர்
இசை – தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு – நித்யானந்தம்
படதொகுப்பு – அருண்
நடனம் – கலா
சண்டைப்பயிற்சி – தவசி ராஜா
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி

தயாரிப்பு & இயக்கம் மேற்பார்வை – தளபதி BSc,
DFT
தயாரிப்பு – Dr. யாவரும் கேளிர் BE, MBA, Ph.D

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

0

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது.

பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும், யோசிக்க வைக்கும், புதுமையான இந்த ஃபர்ஸ்ட் லுக், திரை விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மேலும் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

உண்மை தான் என்றும் நிலையானது, வாய்மையே எப்போதும் வெல்லும், இந்த கருத்தினை மையமாக வைத்து, வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து எண்டர்டெயினருடன், முழுக்க எமோஷனல் டிராமாவாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

“ஓ காட் பியூட்டிஃபுல்” பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கே இத்தனை உழைத்திருக்கும் படக்குழு படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வைத்துதிருக்கிறன்றனர் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் டீசரையும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் குரலில் ஃபர்ஸ்ட் சிங்கிளையும், விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்
ஒளிப்பதிவு : சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக்
இசை : JC ஜோ
பின்னணி இசை & கூடுதல் பாடல்கள் – அருண் கௌதம்
எடிட்டிங் : சாம் Rdx
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

0

சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், சட்டத்தின் குறைபாடுகள், தார்மீக தெளிவின்மை மற்றும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நீதியை வடிவமைக்கும் அரசியல் அடித்தளங்களை ஆராய்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா, விவாதத்தைத் தூண்டும் மற்றும் இதயங்களைத் தொடும் ஒரு துணிச்சலான, கதையைச் சொல்கிறது.

கேரள நீதித்துறை அமைப்பின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரான ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது சொந்த ஊருக்குப் பண்டிகைக் கால பயணம் செல்வது ஒரு இருள் மிகு கனவாக மாறுவதைப் பின்தொடர்கிறது. நீதியைத் தேடத் தீர்மானித்த அவள், கூர்மையான மற்றும் சாந்தமான வழக்கறிஞரான டேவிட் ஆபெல் டோனோவன் (சுரேஷ் கோபி) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட முன்வரும்போது, ஒரு சிக்கலான சட்டப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள். சட்ட வாதங்களுக்கும் பாதிக்கப்பட்ட உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜானகியின் போராட்டம், இந்திய நீதித்துறை அமைப்பின் ஆழமான தார்மீக மற்றும் நெறிமுறை சங்கடங்களை அம்பலப்படுத்துகிறது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உலகில், சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகள் மங்கலாகி, ஒரு கேள்வியை விட்டுச்செல்கின்றன. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, நீதி என்றால் உண்மையில் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் மையம்.

ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவர் மற்றும் தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறுகையில்…,
“இந்த சுதந்திர தினத்தன்று எங்கள் பார்வையாளர்களுக்கு ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த படம் அதன் சக்திவாய்ந்த கருப்பொருளுக்காக மட்டுமல்லாமல், அது உருவாக்கப்பட்ட நேர்மையுடனும் தனித்து நிற்கிறது. பிரவின் நாராயணன் போன்ற ஒரு தீவிர திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தலைமையிலான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. இது பரபரப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற டிராமா திரைப்படமாகும், இது பொழுதுபோக்கு மட்டுமல்ல – இது சிந்தனையைத் தூண்டுகிறது, விதிமுறைகளைச் சவால் செய்கிறது மற்றும் பலர் எதிர்கொள்ளத் தயங்கும் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. கேரளாவில் வேரூன்றிய இந்தக் கதை, இப்போது முழு தேசத்துடனும் பேசும் என்பது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்படுவதன் மூலம், கொச்சி, கொல்கத்தா அல்லது கான்பூரில் உள்ள ஒவ்வொரு பார்வையாளரும் ஜானகியின் நீதிக்கான போராட்டத்தை அணுகவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஒரு சக்திவாய்ந்த கதை எல்லைகள் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை ZEE5 நம்புகிறது, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படமும் அந்த மாதிரியான படம்தான்.”

தயாரிப்பாளர் ஜே. பணீந்திர குமார் கூறுகையில்…,
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைத் தயாரித்தது எனது திரைத்துறை வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்தக் கதை வெறும் சட்டப் போராட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல – இது உண்மை, தைரியம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் அமைதியான வலிமையைப் பற்றியது. ZEE5 உடனான எங்கள் கூட்டணி, இந்த சக்திவாய்ந்த கதையை, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை அவர்களின் சொந்த மொழிகளில் சென்றடையச் செய்துள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உங்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு படம், மேலும் இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.”

இணைத் தயாரிப்பாளர் சேதுராமன் நாயர் கன்கோல் மேலும் கூறுகையில்… ,
“ஆரம்பத்திலிருந்தே, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா நேர்மை, பச்சாதாபம் நிறைந்த மற்றும் கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு நம்பமுடியாத படைப்பாற்றல் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும், இப்போது ZEE5 உடன் கூட்டணி சேர்வதும், நம்பமுடியாத அளவிற்குப் பலனளிப்பதாக உள்ளது. இந்த வெளியீட்டைச் சிறப்புறச் செய்வது என்னவென்றால், வடக்கு முதல் தெற்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்கள் இப்போது ஜானகியின் பயணத்தை, தங்கள் சொந்த மொழியில் பார்க்க முடியும். இந்தப் படம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தியைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில்,
“முதல் வரைவிலிருந்து இறுதிப் படப்பிடிப்பு வரை, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா ஒரு அன்பின் உழைப்பாகும், இது ஒரு உயிர் பிழைத்தவரின் குரலைப் பெருக்கி, நமது அமைப்பில் உள்ள விரிசல்களில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்பட்டுள்ளது. ஒரு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர், நான் எதிர்பார்த்த விதத்தில் கதையை உயிர்ப்பித்தனர். ZEE5 உடனான எங்கள் ஒத்துழைப்பு, தைரியம், நேர்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பான இந்தக் கதையை, இப்போது பார்வையாளர்களை அவர்களின் விரல் நுனியில் சென்றடையச் செய்கிறது. இது ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாய்ப்பாகும். இந்த சுதந்திர தினத்தன்று எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இதைப் பார்த்து, படத்தின் துடிப்பை அதன் தயாரிப்பின் போது நாங்கள் செய்ததைப் போலவே, வலுவாக உணர வேண்டும் என்று நான் ஆவலாக உள்ளேன்.”

நடிகர் சுரேஷ் கோபி கூறுகையில்..,
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானது, பார்வையாளர்கள் இந்தக் கதையை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எங்கள் கதைசொல்லலில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இப்போது ZEE5 இல் உலகம் முழுக்க அதை அனுபவிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். டிஜிட்டல் வெளியீடு மூலம் ஜானகியின் குரல், அவரது போராட்டம், அவரது வலி மற்றும் அவரது தைரியம் ஆகியவை இறுதியாக இந்தியா முழுவதும் வீடுகளை எட்டும் . “டேவிட் ஏபெல் டோனோவனின் கதாபாத்திரம் இன்றைய உலகில் நேர்மை மற்றும் தார்மீக சிக்கலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. ஒரு உயிர் பிழைத்தவரின் சார்பாக நீதிக்காக நீதிமன்றத்தில் போராடுவது எனக்குச் சவால் விடுத்த ஒரு பாத்திரம், ஆனால் அது என்னை நிலைநிறுத்தியது. படம் ஒளிபரப்பப்படும்போது பார்வையாளர்கள் அதன் ஆன்மாவுடன் இணைந்திருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன், மேலும் அவர்கள் ஜானகியின் குரலையும் கேட்பார்கள் என நம்புகிறேன்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிகையில்..,
“ஜானகி பாத்திரத்தைச் சித்தரித்தது எனது திரை வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பயணங்களில் ஒன்றாகும். அவர் எண்ணற்ற கேட்கப்படாத குரல்களின் சின்னம், மேலும் அவரது கதையை நேர்மையுடனும் பச்சாதாபத்துடனும் உயிர்ப்பிப்பதில் எனக்கு ஒரு மகத்தான பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். திரையரங்க வெளியீட்டின் போது எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் மிகப்பெரியதாக இருந்தது, இப்போது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ZEE5 இல் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைக் காண்பார்கள் என்பதில் நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது ஆன்மாவுடன் பேசும் ஒரு கதை – வலிமை, மீள்தன்மை மற்றும் உலகம் உங்களை மௌனமாக்க முயற்சிக்கும் போது கூட எழுந்து நிற்பது பற்றிய அவசியத்தைச் சொல்லும் கதை. ஜானகியின் தைரியம் பார்க்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.”

இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்.

Velammal Nexus Honours Everest Conqueror Ashish with ₹40 Lakhs Cash Award – Grand Felicitation in the Presence of Chess Maestro Gukesh

0

Chennai, August 3:

Velammal Nexus proudly felicitated Master Ashish, the young achiever who scaled Mount Everest, in a grand function held at Velammal Hall. The event was graced by Grandmaster Gukesh, Velammal’s very own chess prodigy and a pride of the nation.

The highlight of the event was the generous ₹40 lakhs cash award presented to Ashish by the Deputy Correspondent of Velammal Nexus, Mr. Sriram Velmohan, and Gukesh, recognizing Ashish’s extraordinary feat.

The function witnessed a warm and vibrant welcome as both Ashish and Gukesh made a grand entry amidst applause and admiration. Adding a creative twist, Velammal Nexus hosted fun and engaging games between Ashish and Gukesh, showcasing their skills, wit, and sportsmanship, leaving the audience entertained and inspired.

A deeply emotional moment unfolded when an AI-generated video of Ashish’s late father was broadcasted, virtually blessing and congratulating his son. The heartfelt tribute moved many in the audience, making the event even more special.

Velammal Nexus continues to recognize and celebrate talent, nurturing young achievers to reach new heights.

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது

சென்னை, ஆகஸ்ட் 3:

வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், ஏவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கௌரவித்தது.

இந்த விழாவில், இந்தியாவின் இளைய சதுரங்க திலகமாக வலம் வருகிற கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலம்மாள் நெக்ஸஸ் துணை நிர்வாகி திரு. ஸ்ரீராம் வேல்மோகன் , குகேஷ் முன்னிலையில் ஆஷிஷ்க்கு ₹40 லட்சம் மதிப்புள்ள ரொக்க பரிசை வழங்கினார்.

ஆஷிஷ் மற்றும் குகேஷ் இருவரும் வெலம்மாள் ஹாலுக்கு பிரமாண்டமான வரவேற்புடன் நுழைந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு இடையில் சில புதுமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன்கள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் தருணங்கள் நிகழ்ந்தன.

மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாக, ஆஷிஷின் தந்தையின் குரலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ வெளியிடப்பட்டது. அந்த உருக்கமான காணொளி, மக்களின் மனங்களைத் தொட்டது.

வேலம்மாள் நெக்ஸஸ், இளைஞர்களின் திறமைகளை எப்போதும் முன்னிறுத்தும் ஒரு அமைப்பாக, இன்னும் பல உயரங்களை நோக்கி வழிகாட்டுகிறது.

Meesha Movie Review

0

Meesha” is a gripping and emotionally layered film that stays with you long after it ends. The story beautifully explores complex themes like identity, freedom, and the clash between tradition and modern thinking. What makes the movie special is its deep storytelling and raw, realistic characters who feel very close to real life.

The visuals are rich and poetic, capturing both the beauty of nature and the intense emotions of the characters. The director has done a great job of blending literature and cinema, making the film feel like a moving piece of art. The performances are powerful and heartfelt, especially from the lead, who brings depth and pain to the role without overacting.

Though it moves at its own pace, “Meesha” is not a film for quick entertainment — it’s one that asks you to think, reflect, and feel. If you love meaningful cinema with strong emotions and artistic vision, this one is definitely worth watching.

Usurae Movie Review

0

Usurae is a gripping emotional thriller that keeps you engaged from start to finish. The story revolves around love, betrayal, and the painful choices life throws at us. The director has done a great job in bringing out raw human emotions with a realistic touch.

The performances by the lead actors are impressive — especially the protagonist, who perfectly expresses inner conflict and emotional turmoil. The screenplay is tight and the twists are placed at the right moments, keeping the suspense alive.

Technically, the cinematography and background score add depth to the storytelling. The music beautifully blends with the emotional moments, making it more impactful.

Overall, Usurae is a heart-touching film that portrays how emotions can sometimes lead to unexpected consequences. A must-watch for those who love intense drama with strong characters.

Verdict: A well-made emotional thriller with a strong message and good performances.



உசுரே

  • நடிகர்கள்

டீஜய் அருணாசலம் ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்

  • தொழில் நுட்ப குழு

எழுத்து இயக்கம் – நவீன் டி கோபால்

ஒளிப்பதிவு :- மார்க்கி சாய்

இசை – கிரண் ஜோஸ்

எடிட்டர் :- மணி மாறன்

கலை :- சவுந்தர் நல்லுசாமி

நடன இயக்குநர்: பாரதி

பாடல் வரிகள்: மோகன் லால்

ஒப்பனை: சசிகுமார்

ஸ்டில்ஸ் : மஞ்சு ஆதித்யா

விளம்பர வடிவமைப்பாளர்: shynu mash

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: வெங்கடேஷ்

திட்ட மேலாளர் – ஜெயபிரகாஷ்

தயாரிப்பாளர்: ஸ்ரீ கிருஷ்ணா ப்ரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா

Surrender Movie Review

0

Surrender” is an emotional and gripping film that truly touches the heart with its strong storytelling and performances. The movie beautifully captures the journey of a person who chooses to surrender not out of weakness, but out of courage and transformation.

The lead actor delivers a deeply emotional performance, showing the internal struggle and growth of the character. The emotional scenes are powerful, and the background music perfectly supports the mood, making the audience feel every moment.

The story moves at a steady pace, with a good balance of drama, emotion, and suspense. The supporting characters also play their roles well, adding depth to the narrative. The direction is neat, and the visuals give the film a realistic and intense tone.

What stands out most is the message of redemption, self-realization, and finding peace through surrender. It’s not just a movie, but a reflection on life’s choices and the strength it takes to let go.

Final Words: Surrender is a heartfelt film that leaves a lasting impression. It’s worth watching for its message, performances, and emotional depth. A simple yet powerful story that stays with you even after the movie ends.



Surrender Movie Cast And Crew Details

Tharshan as Pugazh,
Lal as Periyasamy,
Sujith as Kanagu,
Munish Kanth as Chithappa,
Padine Kumar as Umaiyal
Aroul D Shankar,
Ramya Ramakrishnan,
Sundareswaran,
Kaushik

Crew Details

Production House: Upbeat Pictures
Producer: VRV Kumar
Written & Directed by: Gowthaman Ganapathy
Director of Photography: Meyyendiran
Music & Original Score: Vikas Badisa
Editor: Renu Gopal
Art Director: R.K. Manoj Kumar
Stunt: Action Sandhosh
Executive Producer: R. Senthil Kumar
PRO: Sathish (S2 Media)

Bhoghee Movie Review

0

Bhoghee is a movie that brings together emotion, suspense, and a strong social message in a neat package. The story keeps us engaged from the beginning, gradually revealing hidden truths that touch the heart.

The performance by the lead actors is impressive – natural and convincing. The female lead especially stands out with a bold and emotional role that many women can relate to. The director has handled the screenplay well, with good twists and emotional moments that stay with us.

The background music adds depth to the scenes and supports the overall mood of the film. Technically, the cinematography and editing are decent and serve the story well.

What makes Bhoghee special is the message it conveys – about strength, justice, and the pain hidden behind silence. It may be a small film in budget, but it’s big in content.



Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி

இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

இயக்கம்: விஜயசேகரன். S
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜா C சேகர்
இசையமைப்பாளர்: மரியா மனோகர்
எடிட்டர்: சுரேஷ் அர்ஸ்
பாடல்கள்: கவிஞர் சினேகன்
வசனம் : S.T.சுரேஷ்குமார்
கலை: A.பழனிவேல்
சண்டை பயிற்சி: அன்பறிவ்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் & சதீஷ் (AIM)
டிரெய்லர் எடிட்டர்: ஜென் முத்துராஜ்

- Advertisement -

Recent Posts