குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
‘பார்க்கிங் ‘ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் – இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், மயக்கும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம். மக்களால் ரசித்து சிரித்து கொண்டாடப்பட்ட படங்கள் வரிசையில் இன்று நம் கவலைகளை மறந்து சிரித்து மகிழ ஒரு படம் உருவாகி உள்ளது. தயாரிப்பாளர் ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக உருவாக்கி உள்ள “வசூல் மன்னன் ” படம் தான் அது.
கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் தனது இரண்டாவது படமாக வசூல் மன்னன் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்பொழுது, “ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக வைத்து, அதை நகைச்சுவையுடன் உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். “
ஸ்ரீதேவா கதையின் நாயகனாக பவனி வர, அழகுப் பதுமை நிவேதா அவருக்கு ஜோடியாக வருகிறார். வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி , சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி என நிறைய பேர் நடித்துள்ளனர்.
பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதி உள்ளார். இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதி உள்ளார். சிவகுமார் ஒளிப்பதிவையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், சரவணன் கலையையும், கவனித்துள்ளனர். ஈஸ்வர் தயாரிப்பு நிர்வாகத்தையும், ஜவஹர் மாரிமுத்து தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.
எம்.எல்.புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் .. ” வசூல் மன்னன் படத்தை தயாரிக்க, எழுதி இயக்கி உள்ளார் வேல் குமரேசன்.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது.
‘ உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்கு உயிரூட்டும் நடிகை ரேவதி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் – மனைவி, ஒரு காதல் இவற்றை சுற்றி நடக்கின்ற உண்மைக்கு நெருக்கமான கதை இது.. அனைவராலும் உணர்ப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய படங்கள் எல்லாமே உண்மைக்கு மிக நெருக்கமாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Backed by glowing responses from press and preview shows, the film has ignited strong traction among exhibitors and theatrical circles. Distributed by Romeo Pictures, this supernatural thriller is set for a wide release this Friday (July 18), with industry insiders predicting a promising opening.
Valuable content, precise execution, and staying loyal to the genre: the secret recipe for a successful film is tough to master. But it looks like the promising team behind Jenma Natchathiram has claimed that throne with impeccable flair. The film, all set for its worldwide theatrical release this Friday (July 18), has had eyeballs locked since the moment of its announcement, thanks to the lingering horror magic of the 1981 film of the same title. What adds even more intrigue is the crew’s sincere effort to preserve the weight of the title, delivering a solid storyline with an exciting, genre-faithful narrative.
The Good News is the film has found a streak of positive response from early preview shows and media screenings, creating strong buzz among distributors and exhibitors. The entire team is elated with the encouraging response, especially for the film’s gripping and spellbinding storyline that seamlessly blends supernatural elements with layers of mystery, a textbook theatrical experience that is both immersive and intense.
The film features Taman Akshaan in the lead, delivering a deeply committed performance that anchors the emotional weight of the narrative. Malvi Malhotra, Maithreya, and Raksha Cherin lend grace and conviction to their roles, while Sivam and Arun Karthi deliver effective supporting performances. Adding tremendous value to the film’s narrative depth are veterans like Kaali Venkat, Munishkanth, Vela Ramamoorthy, Thalaivasal Vijay, Santhana Bharathi, and Yasar, who bring both authenticity and emotional resonance to the screen.
The technical crew of Jenma Natchathiram deserves special applause for elevating the film’s mood and genre. The film’s visuals have been praised for their haunting and cinematic quality, while the sound design and background score have created an atmospheric intensity that enhances the supernatural tone. The team’s ability to craft a world that is both mysterious and theatrically engaging has been a major highlight, turning the film into a spooky yet stylish cinematic treat.
Produced by K. Subhashini under the banner of Amoham Studios and Whitelamp Pictures, the film is being released worldwide by Romeo Pictures. As the buzz intensifies, Jenma Natchathiram promises a theatrical experience that is rich in mood, layered in story, and bold in execution, ready to enthrall audiences from July 18.
‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!
ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த அதிரடித் திகில் திரைப்படம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. சினிமா வட்டாரத்தில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்ப்பு வளர்ந்துவருகிறது.
துல்லியமான அணுகுமுறை, தரமான உள்ளடக்கம், மற்றும் பாணியை மதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட கதை , இவை அனைத்தும் வெற்றிகரமான திரைப்படத்தின் ரகசிய சூத்திரம். ‘ஜென்ம நட்சத்திரம்’ குழு, அந்த சூத்திரத்தை கைவசப்படுத்தி விட்டது போலவே தெரிகிறது.
1981-ஆம் ஆண்டு வெளியான அதே பெயரைக் கொண்ட புரட்சிகரமான ஹாரர் படத்தின் நிழலை மீண்டும் கிளப்பும் வகையில், இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த பெயரின் பாரம்பரியத்தையும் மரியாதையுடன் வைத்திருக்க, இந்த படக்குழுவின் முயற்சி பாராட்டுக்குரியது. திகில் மற்றும் மர்மத்தின் கலவையில், படம் உற்சாகமூட்டும் கதையுடன், வகையைவிடாது இருக்க முயற்சிக்கிறது.
முன்னோட்டக் காட்சிகளும், ஊடக ப்ரீவியூ திரையிடல்களும் தற்போது படத்திற்கு மிக உயர்ந்த எதிர்வினைகளை பெற்றுத்தந்துள்ளன. இதனால் விநியோகஸ்தர்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகி உள்ளது. படம் மக்களை ஈர்க்கும் வகையிலும் , அவர்கள் நிச்சயமாக அனுபவிக்கக்கூடிய ஹாரர் தருணங்களை சினிமா திரையில் கொண்டுவரும் வகையில் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
தமன் அக்ஷான் கதாநாயகனாக தீவிரமான பங்களிப்புடன் சிறப்பாக நடித்துள்ளார். மால்வி மாலோத்ரா, மைத்ரேயா, மற்றும் ரக்ஷா செரின் ஆகியோர் தங்களுடைய கதாப்பாத்திரங்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்துள்ளனர். சிவம் மற்றும் அருண் கார்த்தி ஆகியோர் தங்கள் துணை வேடங்களில் ஆழமுள்ள நடிப்பை வழங்குகிறார்கள்.மேலும், காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர் போன்ற மூத்த நடிகர்களின் இருப்பு, கதைக்கு உணர்ச்சி மற்றும் நம்பகத் தன்மையை சேர்க்கிறது.
டெக்னிக்கல் குழுவும் படம் வெற்றியடைய முக்கிய காரணியாக செயல்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, அதிரடித் திகில் தருணங்களை சிறப்பாக காட்டுகிறது. பின்னணி இசையும் சவுண்ட் டிசைனும் படம் முழுக்க ஒரு ‘மூட்’ உருவாக்கி, ஹாரர் சூழலை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. ரசிகர்களை ஒரு மர்ம உலகுக்குள் அழைத்துசெல்லும் இந்த படத்தின் கலை மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை பெரிதும் பாராட்டப்படுகிறது.
அமோகம் ஸ்டூடியோஸ் மற்றும் வெயிட்லாம்ப் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே. சுபாஷினி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம், உணர்வுகளைத் தூண்டும் பரிணாமத்துடன், கதையின் அடுக்குகள் மற்றும் சினிமாவுக்கான தைரியமான அணுகுமுறையுடன், ரசிகர்களை ஈர்க்கத் தயாராக இருக்கிறது.
சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாதென சொல்ல யாருக்கும் உரிமையில்லை – சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி .உதயகுமார் !!
ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ”
ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில்….
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… சென்ட்ரல் பட டிரெய்லரும் பாடல்களும் பார்க்க எமோஷனலாக இருந்தது. இந்த யூனிட்டில் எனக்கு யாரையும் தெரியாது. பேரரசு இந்தப்படத்தில் லீட் ரோல் செய்துள்ளதாக சொன்னார். அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் வந்தேன். சென்ட்ரல் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். பேரரசுவை எனக்குப் பிடிக்கும் அவர் மனிதநேயமிக்க மனிதர். கொரோனா காலத்தில் அவர் செய்த உதவிகள் மிகப்பெரிது. அவர் படங்களிலேயே சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்திருப்பார். இந்தப்படத்தில் மெயின் ரோல் செய்துள்ளார். பேரரசு சினிமாவில் ஆட்சி செய்யுங்கள். காக்கா முட்ட்டை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விக்னேஷ், இதில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.
டிரம்ஸ் சிவமணி பேசியதாவது… “ சென்ட்ரல் ” படத்தில் நடித்துள்ள, பணியாற்றியுள்ள கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் என் வாழக்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அங்கு இருந்து தான் பல கச்சேரிகளுக்குப் போய் வந்துள்ளேன் அந்த தலைப்பை இங்கு பார்த்ததும் ரொம்ப டச்சிங்காக இருந்தது. படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தது. இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தமிழ் சிவலிங்கம் பேசியதாவது… எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நம்முடைய இயக்குநர் பாரதி இந்த ஒன் லைன் சொன்னார், அதைக் கேட்டவுடன் அது என் வாழ்க்கையில் நடந்திருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் லீவு நாட்களில் வேலைக்கு போய் விடுவேன், அந்த கஷ்டத்தை சொன்னபோதே, இந்தப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து விட்டேன். இப்படத்தில் நாயகனாக காக்கா முட்டை விக்னேஷ் நடிக்கிறார் என்றவுடன் மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேரரசு என்றவுடன் எனக்கு இன்னும் மிகப்பெரிய மகிழ்ச்சி. மிகப்பெரிய இயக்குநர் எங்களுடன் இணைந்திருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. சிறப்பான இசையை தந்த இலா சார் அவர்களுக்கு நன்றி. விக்னேஷ் சோனி இருவரும் அருமையாக நடித்துள்ளனர். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசியதாவது…, இலா தான் என்னை இந்த விழாவிற்கு அழைத்தார். நான் மியூசிக் இண்டஸ்ட்ரி வருவதற்கு முன்னரே, அவரது குடும்பமே இசைத்துறையில் இருந்தது. அவர் இவ்வளவு லேட்டாக இசையமைப்பது எனக்கு ஆச்சரியம் தான். அவர் மிகப்பெரிய இசையமைப்பாளராக வருவார். படத்தில் அழுத்தமான கண்டண்ட் இருக்கிறது அது எல்லோரையும் பேச வைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் இலா பேசியதாவது… என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி. எனக்கு இந்தப்பட வாய்ப்பைத் தந்த இயக்குநர் பாரதிக்கு நன்றி. என் கம்போசிங்கிற்கு உதவியாக இருந்த மதுப்பிரியாவுக்கு நன்றி. பாடல்கள் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
கதை நாயகன் விக்னேஷ் பேசியதாவது… இயக்குநர் பாரதி முதலில் என்னிடம் வந்து கதை சொல்லிவிட்டு, 4 வருடம் காணாமல் போய்விட்டார். அப்புறம் திடீரென ஒரு நாள் மீண்டும் பேசினார், அவர் ஞாபகப்படுத்தியவுடன் முழுக்கதையும் ஞாபகம் வந்தது. அந்தளவு கதை எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் நிறைய கஷ்டம் தந்தனர், ஆனால் அதைப்பற்றியெல்லாம் பேச மாட்டேன் எல்லாமே படத்திற்காகத்தான். பேரரசு சாருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு நான் ஹீரோ என்கிறார்கள் ஆனால் என்னிடமே சொல்லவில்லை, படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… 1980 பிப்ரவரியில் நான் சென்ட்ரலில் வந்து இறங்கினேன், டிக்கெட் எடுத்து நியாயமாகத் தான் வந்தேன். சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேஷன் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சென்னையில் இருப்பவர்கள் பார்த்தாலே இந்தப்படம் ஹிட்டு தான். இந்த தலைப்பே மிக ஈர்ப்பாக அமைந்துவிட்டது. ஒரு சயின்ஸ் டீச்சர், 2 தமிழ் டீச்சர் சேர்ந்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த விழாவிற்கு வந்ததற்கு காரணம் என் அன்பு தம்பி, இயக்குநர் சங்க செயலாளர் பேரரசு தான். இரண்டு வாரம் முன் ஒரு கிளிப் அனுப்புயிருந்தார், அதைப்பார்த்தவுடன் பிடித்திருந்தது. உண்மையிலேயே நடிப்பில் அசத்திவிட்டார். பேரரசு உண்மையிலேயே வில்லன் தான், மிரட்டியே எல்லோரையும் வர வைத்துவிட்டார். அவருக்கு பயந்து தான் கே எஸ் ரவிக்குமார் வந்துள்ளார். சரியான ஆளைத்தான் வில்லனாக போட்டுள்ளீர்கள். நான் சென்னை வருவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்ததெல்லாம் இப்படத்தில் வந்துள்ளது. மிக அருமையாக எடுத்துள்ளார்கள். அப்போதெல்லாம் 300 ரூபாய் சம்பாதித்தால், பொண்ணே தருவார்கள் ஆனால் சினிமாகாரனுக்கு பொண்ணு தர மாட்டார்கள். சினிமாக்காரன் என்றாலே மதிக்க மாட்டார்கள். சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதென சொல்கிறார்கள், அப்படி யாரும் சொல்ல முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாதென சொல்ல யாருக்கும் உரிமையில்லை. படத்தில் நாயகன் விக்னேஷ் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளார். அனைத்து கலைஞர்களும் மிக சிறப்பாகச் செய்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தேவராஜ் பேசியதவது… ஒரு டைட்டில் கதை சொல்லும் இந்த டைட்டில் கதை சொல்கிறது. இந்த கதை கொல்லி மலை, பச்சை மலை நடுவில் இருக்கும் என் வீட்டிற்குத் தான் முதலில் வந்ததது. அங்கு தான் விவாதிக்கப்பட்டது, நானும் குமரகுரு, சிவலிங்கம் மூவரும் இணைந்து தான் இப்படத்தை தயாரித்துள்ளோம். இப்படத்தில் நானும் ஒரு இன்ஸ்பெக்டராக ஒரு ரோல் செய்துள்ளேன். பேரரசு தீ மாதிரி ஒரு மனிதர், இந்தப்படத்தில் அவரோடு பணிபுரிந்தது நல்ல அனுபவம் அவருக்கு என் நன்றி. காக்கா முட்டை விக்னேஷ் இப்படத்தில் கதாநாயகனாக நான் தான் காரணம் அவர் சிறப்பாக நடித்துள்ளார். என்னடா உலகம் பாடலையும் நான் எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் குமரகுருவும் சிவலிங்கமும் தான் முழுமையாக பணியாற்றினார்கள். இயக்குநர் பாரதி மிக அழகாக இயக்கியுள்ளார். இது விளிம்பு நிலை மக்களுக்கான கதை. அனைவரும் ரசிப்பீர்கள் நன்றி.
இயக்குநர் பாரதி சிவலிங்கம் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நான் அட்டகத்தி தினேஷை வைத்து ஒரு கதையை ஓகே செய்து, பல தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் அது அமையவில்லை. அதன் பிறகு தான் இந்தக்கதை செய்தேன். மூன்று தயாரிப்பாளர்களும் உடனடியாக சம்மதித்து ஆபீஸ் தந்து ஆரம்பித்தார்கள். பின்னர் காக்கா முட்டை விக்னேஷ் வந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர்கள் மூவர் குமரகுரு சார், சிவலிங்கம் சார், தேவராஜ் சார் மூவரும், மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கினார்கள். எங்கள் படத்தில் வந்து இணைந்த ஆளுமை பேரரசு சார், எங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வேலை பார்த்துள்ளார். நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இங்கு வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் பேரரசு சாருக்காக வந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் இயக்குநர் பேரரசு பேசியதாவது…
தயாரிப்பாளர் அறிமுகப்படம் இது அவர்களுக்கான மேடை, இந்தப்படத்திற்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள். மூணு தயாரிபாளர்களும் வாத்தியார்கள். அவர்கள் உழைப்பில் இப்படத்தை கொண்டுவந்துள்ளனர். இயக்குநர் பாரதி கதை சொல்ல வந்த போதே நெகட்டிவ் பாத்திரம் என்றார், நான் முதலில் யோசித்தேன், ஆனால் கதை கேட்ட பிறகு மிகவும் பிடித்திருந்தது. விளிம்பு நிலை மக்களின் கதை நான் பார்த்த கதை, உடனே நடிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன். முதலில் ஜாதிப்படமோ எனத் தோன்றியது. இது விளிம்பு நிலை மக்கள் கதை தான், ஒரு ஜாதியினர் வலி சொல்லும் கதை தான், ஆனால் இன்னொரு ஜாதியினரை காயப்படுத்தும் கதை இல்லை. ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது சினிமாவுக்கு செய்யும் துரோகம் அது போல் இல்லாமல் பாரதி இப்படத்தை சிறப்பாக செய்துள்ளார். விக்னேஷ் மிகச்சிறப்பாக செய்துள்ளார். தர்ஷன், குணா இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். பெரிய படங்களுக்கு ரசிகர்கள் தான் சப்போர்ட், சின்னப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் தான் சப்போர்ட். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
முதலாளித்துவத்திற்கு எதிரான படைப்பாக, உழைப்பாளர்களுக்கு சாதி, மதம் ,மொழி, இனம் எதுவும் கிடையாது, அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
காடப்புறா கலைக்குழு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வினோத் காந்தி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – இலா எடிட்டிங் – விது ஜீவா கலை இயக்கம் – சேது ரமேஷ் சண்டை பயிற்சி- ஜான் மார்க் சவுண்ட் டிசைனர் – வசந்த் இணை இயக்குனர் – கண்ணன், ராஜா சுந்தர் மேக்கப் – கயல் ஆடை வடிவமைப்பு – செல்வராஜ் டி ஐ – கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டியோஸ் ஸ்டில்ஸ் – கதிர் விளம்பர வடிவமைப்பு – அதின் ஒல்லூர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார் தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ். தயாரிப்பாளர்கள் – வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம்.
கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் – பாரதி சிவலிங்கம்.
புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு குமார், நடிகர் திரு யோகிபாபு, இயக்குநர் திரு சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான தெய்வத்திரு பாண்டியராஜ் அவர்களின் மகன் தான் திரு. ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த திரு ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது, “PRK Productions” எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், இன்ஞ்சினியரிங் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், திரு தியாகராஜன் அவர்களின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி நட்சத்திர நடிகரின் நடிப்பில், முன்னணி இயக்குநர் இயக்கத்தில், தமிழின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சென்னை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ” சென்ட்ரல் ” என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது.
ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார்.
கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார்.
இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
காடப்புறா கலைக்குழு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வினோத் காந்தி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – இலா எடிட்டிங் – விது ஜீவா கலை இயக்கம் – சேது ரமேஷ் சண்டை பயிற்சி- ஜான் மார்க் சவுண்ட் டிசைனர் – வசந்த் இணை இயக்குனர் – கண்ணன், ராஜா சுந்தர் மேக்கப் – கயல் ஆடை வடிவமைப்பு – செல்வராஜ் டி ஐ – கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டியோஸ் ஸ்டில்ஸ் – கதிர் விளம்பர வடிவமைப்பு – அதின் ஒல்லூர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார் தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ். தயாரிப்பாளர்கள் – வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம்.
கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் – பாரதி சிவலிங்கம்.
படம் பற்றி இயக்குனர் பாரதி சிவலிங்கம் நம்மிடையே பகிர்ந்தவை…
இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம். உழைப்பாளர்களுக்கு சாதி மதம் மொழி இனம் எதுவும் கிடையாது அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
உலகம் வளர்ச்சி அடைய தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை நாம் பயன்படுத்தும் அனைத்தும் உழைப்பாளர்களால் கிடைத்தவைதான் அவர்கள் இல்லாது இந்த முன்னேற்றங்கள் சாத்தியமில்லை ஆனால் அப்பேர்பட்ட உழைப்பாளிகள் முதலாளித்துவம் என்ற பெயரில் எப்படியான இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதையும் சொல்கிறேன். அப்படி ஒரு குக்கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன் முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான் அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறோம் என்றார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.
சென்ட்ரல் ரயில் நிலையம் எப்படி சென்னைவாசிகள் மற்றும் தமிழகமெங்கும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறதோ அதேபோல் இந்த படமும் மக்கள் மனதில் இருந்து நீங்காத இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது!
பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், கார் ஜம்பிங் செய்தபோது விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்களுக்கு, நடிகர் தக்ஷன் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்!
தான் நடித்த ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் மலையாளத்தில் ‘இத்திகர கொம்பன்’, ‘சொப்பனங்கள் விற்குந்த சந்திரநகர்’ படங்களில், ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க கோரிக்கை வைக்கிறேன்.
மறைந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வர ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்!
அடுத்து நான் தயாரிக்கவுள்ள படங்களில் ஒரு தயாரிப்பாளராக, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னாலான அதிகபட்ச பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என நடிகர் தக்ஷன் விஜய் தெரிவித்தார்!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “கற்றது சமையல்” நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது ஆரம்பமாகியிருக்கிறது.
மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.