- Advertisement -
Home Blog Page 151

Urvashi and Joju George Lead “Aasha”; Aishwarya Lekshmi Joins the Cast – Shoot Begins with Pooja Ceremony

0

The upcoming multilingual film “Aasha”, which brings together two of Malayalam cinema’s most celebrated actors, Urvashi and Joju George, commenced filming with a traditional pooja ceremony held at the Thrikkakkara Vamana Moorthy Temple. The inaugural lamp was lit by Joju George, cinematographer Madhu Neelakandan, and director Safar Sanal. Joju George gave the first clap, while Madhu Neelakandan handled the switch-on.

Joining the stellar cast are Vijayaraghavan, Aishwarya Lekshmi, and “Pani” movie fame Ramesh Girija in key roles. The film is set to be released in five Indian languages, underscoring its pan-Indian appeal.

The title-look poster of “Aasha” was also unveiled during the ceremony, sparking interest among film enthusiasts.

Presented by Ajith Vinayaka Films, the film is produced by Vinayaka Ajith. “Aasha” marks the directorial debut of Safar Sanal, who also pens the story. The screenplay and dialogues are jointly written by Joju George, Ramesh Girija, and Safar Sanal.

Cinematography: Madhu Neelakandan, Editing: Shan Mohammed, Music: Midhun Mukundan, Sound Design and Sync Sound: Ajayan Adat, Production Design: Vivek Kalathil, Make-up: Shameer Shams, Costume: Sujith C.S., Stunts: Dinesh Subbarayan, Production Controller: Shabeer Malavattam, Chief Associate Director: Ratheesh Pillai, Associates: Jijo Jose, Febin M. Sunny, Stills: Anoop Chacko, PRO: Yuvraaj, Publicity Design: YellowTooths.

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் – “ஆஷா” திரைப்படம், இன்று பூஜையுடன், படப்பிடிப்பு துவக்கம்!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.

இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி” திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பான்-இந்தியப் படமாக உருவாகும் இப்படம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு: மது நீலகண்டன்
எடிட்டிங்: ஷான் முகமது
இசை: மிதுன் முகுந்தன்
ஒலி வடிவமைப்பு & சிங் சவுண்ட்: அஜயன் அடாட்
ஆர்ட் இயக்கம்: விவேக் கலாத்தில்
மேக்கப்: ஷமீர் ஷம்ஸ்
உடை வடிவமைப்பு: சுஜித் சி.எஸ்
ஸ்டண்ட்ஸ்: தினேஷ் சுப்பராயன்
தயாரிப்பு மேலாளர்: ஷபீர் மலவட்டம்
சீனியர் அசோஷியேட் இயக்குநர்: ரதீஷ் பிள்ளை அசோசியேட்ஸ்: ஜிஜோ ஜோஸ், ஃபெபின் எம். சன்னி
ஸ்டில்ஸ்: அனூப் சக்கோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்
பப்ளிசிட்டி டிசைன் : யெல்லோ டூத்

Actress Priyamani earns critical and audience acclaim for her career-defining performance in Jio Hotstar’s ‘The Good Wife’

0

Actress Priyamani has consistently proven her mettle as a powerhouse performer, known for delivering unforgettable portrayals when given a role with depth and substance. With an illustrious career shaped by collaborations with legendary filmmakers like Bharathiraja, Balu Mahendra, Mani Ratnam, Ram Gopal Varma, and Ameer, she has built a legacy rooted in artistic excellence and versatility.

From her National Award-winning role in Paruthiveeran, to her poignant performance in Thiraikatha, and her bold, layered character in The Family Man, Priyamani has repeatedly showcased her range and emotional depth. Now, she has once again left audiences spellbound with her latest role in The Good Wife, currently streaming on Jio Hotstar. The series has earned her tremendous appreciation from viewers and critics alike for a performance that’s both commanding and nuanced.

Actress Priyamani says, “It’s an incredible feeling to receive so much love from the audience. I’m grateful to director Revathi ma’am, who steered this series with such clarity and strength. Adapting a globally celebrated show comes with its own weight of responsibility, especially with both the original English and Hindi versions already loved by millions. To avoid imitation and bring something new, I chose not to watch either version. I wanted to keep my portrayal original, and it’s so fulfilling to see the Tamil audience connect with it deeply. I’m thankful to the entire crew, Jio Hotstar, and my co-stars, Sampath, Aari Arujunan, and everyone on set, for their constant support. The Good Wife will always hold a special place in my heart.”

The Good Wife recently premiered on Jio Hotstar and opened to glowing reviews, with praise for its emotional intensity, engaging narrative, and powerful performances. The series has seen a strong spike in streaming minutes, driven by glowing word-of-mouth across social media and press.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்!

நடிகை ப்ரியாமணி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகள் பெற்று வருகிறார். பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ராம் கோபால் வர்மா மற்றும் அமீர் என தமிழ் சினிமாவின் திறமைமிக்க இயக்குநர்களுடன் பணிபுரிந்தது மட்டுமல்லாது வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

தேசிய விருது பெற்ற ‘பருத்திவீரன்’ படத்தில் இருந்து, ‘தி ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸில் அவரது துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என பல கதைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ’தி குட் வைஃப்’ இணையத்தொடரில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதுபற்றி நடிகை ப்ரியாமணி பகிர்ந்து கொண்டதாவது, “பார்வையாளர்களிடம் இருந்து அளவில்லாத அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இணையத்தொடரை இயக்குநர் ரேவதி மேம் தெளிவுடனும் உறுதியுடனும் எடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்தத் தொடரை தமிழில் எடுக்கும்போது பொறுப்புடன் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். குறிப்பாக இந்தத் தொடரின் இந்தி மற்றும் ஆங்கில வெர்ஷன் மில்லியன் கணக்கான வியூஸ் பெற்றிருக்கிறது. காப்பி அடிக்க வேண்டாம், புதிதாக எதாவது செய்யலாம் என்பதால்தான் நான் ஒரிஜினல் தொடரை இன்னும் பார்க்கவில்லை.

என்னுடைய நடிப்பு அசலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழ் பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் ஆழமாக இணைவதைப் பார்ப்பது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் குழுவினருக்கும், என் சக நடிகர்களான சம்பத், ஆரி அர்ஜுனன் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. ‘தி குட் வைஃப்’ எப்போதும் எனக்கு ஸ்பெஷல்!” என்றார்.

சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ’தி குட் வைஃப்’ இணையத்தொடர் வெளியானது. கதையின் தீவிரம், ஈர்க்கும் பரபரப்பான திரைக்கதை மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பிற்காக பாராட்டப் பெற்றது. சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இந்தத் தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

Black Team Reunites! Jiiva 46 Kicks Off with a Grand Launch!

0

Actor Jiiva teams up once again with director KG Balasubramani of Black fame for his 46th film, titled “Jiiva 46”, which officially began with a traditional pooja ceremony today.

This exciting new venture is being produced by Kannan Ravi under the banner of KR Group, with Muthukumar Ramanathan as Associate Producer.

In this film, Jiiva plays the lead role, and Rabia Kadhoon stars as the female lead. The cast also includes Babloo Prithiveeraj, Nyla Usha, and Aadukalam Naren in pivotal roles. Actor Vishal, Producer RB Choudary and Tiruppur Subramaniam graced their presence in the pooja event.

The technical crew features:

Cinematography: Gokul Benoy
Editing: RS Satheesh Kumar
Production Design: Sivasankar
Costume Design: Rithesh Selvaraj
Makeup: Vikram
Project Designer : Vinita Kumari
Publicity & Promotions: Sathish Kumar of S2 Media

Further announcements about the film will be made officially very soon.

நடிகர் ஜீவா நடிப்பில், பிளாக் பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும்  புதிய படம் “ஜீவா 46” இனிதே துவங்கியது!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை  முத்துக்குமார் ராமநாதன்  மேற்கொள்கிறார்.  

இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.  மேலும் இந்த பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு கோகுல் பெனாய், எடிட்டர் RS சதீஷ்குமார், புரொடக்சன் டிசைனர் சிவசங்கர், காஸ்ட்யூம் டிசைனர் ரிதேஷ் செல்வராஜ், மேக்கப் ஆர்டிஸ்ட் விக்ரம், பிராஜக்ட் டிசைனர் வினிதா குமாரி, மக்கள் தொடர்பு சதீஷ்குமார் S2 Media ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தில் மற்ற விபரங்கள் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ரசிகர்கள் அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் – நடிகர் கார்த்தி

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார்.

சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, ” பிறந்த நாளில் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் ஊரில் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இரத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில்  இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.‌ அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது.

உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என‌ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.‌ இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் Love You என்று தான் சொல்ல வேண்டும்.

மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் வேட்டி அணிந்து மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன் ” என்றார்.

Tamil Cinema Welcomes a Charming New Hero

0

Actor Rudra Wins Hearts with Oho Enthan Baby

There’s something magical about watching a new star blossom on screen, especially when it happens in a film filled with warmth, love, and laughter. Tamil cinema has always embraced fresh talent with open hearts, and the latest to receive that affection is actor Rudra, whose debut as a hero in last week’s romantic comedy Oho Enthan Baby has been met with heartfelt appreciation and joy from audiences and critics alike.

Rudra’s natural charm, expressive innocence, and honest performance have struck an emotional chord, especially among female audiences. His screen presence radiates sincerity, and his dedication to the craft is already being praised as promising and refreshing. The young actor is deeply moved by the support and encouragement coming his way.

Actor Rudra says, “Experiencing such warmth and love is a priceless moment for any actor. I’ve seen my brother Vishnu Vishal go through these beautiful emotions with his fans—but to feel it myself for the first time is truly magical. Tamil audiences have a special way of embracing newcomers with genuine affection. I’m overwhelmed by the response to Oho Enthan Baby. My heartfelt thanks to director Krishna for entrusting me with this role. The way he sketched the character allowed me to explore so many emotions, it was both challenging and fulfilling. I’m grateful to my father and brother for encouraging my dreams, and to my wonderful co-stars, who were incredibly kind and supportive. The love I’ve received from the film industry, audiences, and the media inspires me to keep growing and give my best in every performance ahead.”

Oho Enthan Baby, a breezy romantic entertainer, is presented by Vishnu Vishal Studioz and Romeo Pictures. The film is directed by Krishnakumar Ramakumar, produced by Raahul and Vishnu Vishal, with KV Durai (Good Show)and Javid (Romeo Pictures) as co-producers.

The film boasts a delightful ensemble cast including Mithila Palkar, Anju Kurian, Mysskin, Redin Kingsley, Karunakaran, Geetha Kailasam, Balaji Sakthivel, Sujatha Babu, Nirmal Pillai, Nivaashiyni Krishnan, Arun Kurian, Vijayasarathy, Kasthuri, and Vaibhavi Tandle, alongside Rudra in the lead.

With Jen Martin composing the music, Harish Kannan handling cinematography, and RC Pranav on the edit table, Oho Enthan Baby delivers a soulful and vibrant cinematic experience, leaving audiences smiling as they walk out of the theatre.

NEELAM PRODUCTIONS CONDOLENCE NOTE

0

On the morning of 13th July, we lost unexpectedly a talented stunt artist and a long time colleague Mr. Mohan Raj on the sets of our film “Vettuvam” in Nagapattinam District of Tamizh Nadu. Our heart is broken for his wife, children, family and all who knew and loved Mohan Raj Anna as a colleague and a friend.

A day that started out with detailed planning, caution, clarity in execution, prayers and all our good will, as it does on every film set that stages crash sequences, ended up in his unexpected death. This has sent us all into shock and heart break.

Mohan Raj Anna was valued and respected by his colleagues in the stunt team and all of us in the crew. He was a veteran in performing stunts whose planning, clarity and execution we all relied on.
We relied on the expertise of our Stunt Director Dilip Subbarayan and followed every protocol, every detail that was needed to make this safe. That inspite of all of our preparations and precautions, we ended up losing a man who had unparalleled experience and achievements, who made his family, colleagues and Directors proud with the quality of his work has affected us deeply. He will have our respect, love and adoration always.

This death is devastating. We deeply mourn the loss of Mohan Raj Anna a husband, father, an incredible stunt artist and a graceful human being. He wanted to be remembered for his work as a fabulous stunt artist and that’s how he will always stay in our memory.

ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.
ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.
செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்.

உச்சத்திற்கு செல்லவில்லை என்றாலும் நல்ல நடிகராக பயணிப்பேன் – ‘யாதும் அறியான்’ பட நாயகன் தினேஷ் பேச்சு

0

‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஜூலை 14 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம், கலக்கப்போவது யாரு, டான்ஸ் ஜோடி, ’பாவம் கணேசா’, ‘ராஜா ராணி’ சீரியல்கள் ஆகியவற்றில் நான் பணியாற்றியிருக்கிறேன். சாருஹாசன் சார் நடித்த ‘தாதா 87’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது ‘யாதும் அறியான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஒரே ஒரு போன் கால் தான், இப்படி ஒரு படம் இருக்கு பண்றீங்களா? என்று கேட்டார். அண்ணே இப்படி கேட்கிறீங்களே நீங்க பண்ண சொன்ன பண்ண போறேன், என்று சென்று விட்டேன். நல்ல கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை நாம தான் புரோமோட் பண்ணனும் என்று சில வரிககளை எழுதியிருக்கிறேன், அதை இங்கே சொல்ல நினைக்கிறேன், “கரண்டுக்கு தேவை ஒயரு, லாரியா ஓட்ட வேண்டும் டயரு, யாதும் அறியான் படம்னாலே ஃபயரு..”, “பரீட்சை எழுதுனா போடுவாங்க பாஸ், யாதும் அறியான் படம் எப்பவுமே மாஸ்”, படம் நிச்சயம் கலக்கலாக இருக்கும். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தாலும், 2016 ஆம் ஆண்டு தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அண்ணன் தான். அவரோட வாய்ஸ் பேச ஆரம்பித்ததும் நான் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டேன், அதன் பிறகு தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த படத்தையும், படக்குழுவையும் சிவகார்த்திகேயன் அண்ணா வாழ்த்தியிருக்கிறார். படம் சூப்பரா வந்திருக்கிறது. விஜய் சாரை வைத்து எங்க இயக்குநர் சூப்பரா ஒரு விசயம் பண்ணியிருக்காரு. அதுவும் இப்போது வைரலாக போய்ட்டு இருக்கு, படம் நிச்சயம் பெரிய அளவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் வாய்ப்பு தேடும் போது பூந்தமல்லியில் இருந்து சாலிகிராமம் வருவோம், தூரமாக இருப்பதால் சாலிகிராமத்தில் ரூம் எடுத்து தங்கி விடலாம் என்று நண்பர்கள் சொல்வார்கள். ஆனால், இப்போது சாலிகிராமத்தில் இருப்பவர்களை விட இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். சாலிகிராமத்தில் நிறைய பேர் வாய்ப்பு தேடிக்கொண்டு கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் எல்.டி பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு அதிகம் பேச தெரியாது, இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். ஒரு நல்ல படம் பண்ணனும் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது இயக்குநர் இந்த கதையை சொன்னார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று நம்புகிறோம். நீங்க தான் பார்த்துவிட்டு சொல்லனும், நன்றி வணக்கம்.” என்றார்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் பேசுகையில், “யாதும் அறியான் சிறிய அளவில் தொடங்கி, பெரிய அளவில் முடிந்திருக்கிறது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. மூன்று பாடல்கள் இருக்கிறது, மூன்று பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி பேசுகையில், “யாதும் அறியான் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது அனைத்தையும் தெரிந்து பண்ணியிருக்கிறார்கள். விளம்பரத்தில் விஜய் முதல்வர் என்ற போஸ்டர் பெரிய வைரலாகியுள்ளது. இப்போது கூட நாயகன் தினேஷ், கொலை செய்துவிட்டு அப்படியே வருவது போல் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். படத்தின் பெயர் யாதும் அறியான், ஆனால் இயக்குநர் அனைத்தையும் அறிவான். ஒரு படத்தை எப்படி எடுக்கணும், எடுத்த படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், என்பதை மிக தெளிவாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான் வர காரணம், திருநெல்வேலி தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ் தான். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், கால்கள் தரையில் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் தினேஷ், அவரது எளிமையும், பன்பும், இந்த படத்தை வெற்றியடைய வைக்கும், அவரை உயரத்திற்கு கொண்டு போகும். படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்த குழு அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுப்பார்கள், என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “தினமலர் குடும்பத்தில் இருந்து அம்பி, ரெமோ வருவார் என்று எதிர்பார்த்தால் அந்நியனே வந்திருக்கிறார். இன்று சைவத்தை விட அசைவம் தான் டிரெண்டாகி விட்டது. அதனால், அசைவமாகவும், கமர்ஷியலமாகவும் ஒரு படம் கொடுப்போம், என்று திட்டமிட்டு தினேஷ் சார் ஒரு படம் நடித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட படம் ஜெயிக்கமோ அப்படி ஒரு படத்தை தினேஷ் சார் கொடுத்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். நேரில் சில மனிதர்களை பார்ப்போம், அப்போ ரொம்ப அமைதியானவர்களாக இருப்பார்கள், ஆனால் திரையில் அப்படியே எதிர்மறையாக அதிரடியாக இருப்பார்கள். நடிகர் விஜய் சாரும் அப்படி தான், அவருடன் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே அமைதியாக இருப்பார், சத்தமாக பேச மாட்டார், ஆனால் திரையில் அசத்திவிடுவார். அப்படிப்பட்டவராக தான் நான் தினேஷ் சாரை பார்க்கிறேன். அவரும் அமைதியாக இருப்பார், ஆனால் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது நடிப்பில் அசத்திவிட்டார். இந்த படத்தை பற்றி பல விசயங்களை தினேஷ் சார் என்னிடம் பகிர்ந்துக் கொள்வார், என்னையும் மற்றவர்களுக்கு பகிர சொல்வார், அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, காரணம் இது எங்களது கடமை அவங்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியது.

இயக்குநர் கோபி படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார், அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், விஜய் சார் அடுத்து படம் நடிப்பார், அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்த படத்தை அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார், அவரது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன். நடிகர் விஜயை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கும், அதற்கான ஆரம்பமாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவர் நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பிரபலமானவர்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், புதியவர்கள் வெற்றி பெற்றால் வாய்ப்பு கொடுத்த நமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால், இன்று புதுமுகங்கள் என்றால் சினிமா வியாபாரத்தில் தயக்கம் காட்டுகிறார்கள், அது மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் சம்பத் ராம் பேசுகையில், “இந்த படத்தின் ஹீரோ தினேஷ் சார், பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தினேஷ் சார் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார், என்று நம்புகிறேன். இயக்குநர் கோபி சார் சிறப்பாக இயக்கியிருக்கிறார், டிரைலர் மிக சுவாரஸ்யமாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புகுட்டிக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுபாஷ் பேசுகையில், “இயக்குநர் கோபி, இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கைதட்டல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கு நிறைய பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள், என்றால் அது தினேஷுக்காக தான். நம்முடைய பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அனைவருடனும் எளிமையாக பழக கூடியவர். அவரது எளிமை அவரை பெரிய உயரத்திற்கு கொண்டு போகும். இயக்குநருக்கு இந்த நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும், காரணம் அப்புக்குட்டி உள்ளிட்ட பலருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல் புதியவர்களுக்கும், வளர்ந்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இன்று விஜய் சாரை பற்றி அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என்பது செளந்தர்ராஜன் சொன்னது தான், அது விஜய் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் நடிகராகவதற்கு முன்பாகவே சிறந்த சமூக செயல்பாட்டாளராக இருந்தார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சகோதரர்கள், யார் யாரோ முன்னேற உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நம்ம குடும்பத்தைச் சேர்ந்த தினேஷுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில், “ஒரு படத்தின் டிரைலர் அந்த படத்தின் தரத்தை நிர்ணயிக்கும், அதுபோல் இந்த படத்தின் டிரைலர் இந்த படம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. பல படங்களின் டிரைலரை நாம் பார்க்கிறோம், ஆனால் யாதும் அறியான் டிரைலர் மிக சிறப்பாக இருக்கிறது. 2026 பற்றி இயக்குநர் ஒரு விசயம் சொல்லியிருக்கிறார், அது அவரது நம்பிக்கை. விஜய் மீது இயக்குநருக்கு இருக்கும் பற்றால் அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார். எனக்கும் அவர் மீது பற்று இருக்கிறது, அவருடன் 45 படங்கள் செய்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதற்காக தினேஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார், அப்போது அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பிறகு டிரைலரை அனுப்ப சொல்லி பார்த்தேன், வியந்து விட்டேன். மிக சிறப்பாக நடித்திருக்கிறார். டிரைலரும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பின்னணி இசை மிக சிறப்பு. இங்கு வந்ததும் இசையமைப்பாளர் யார்? என்று கேட்டு அவரை பாராட்டினேன். அதேபோல் டிரைலரை எடிட்டர் நிரஞ்சன் சிறப்பாக கட் செய்திருக்கிறார். டிரைலரை பார்க்கும் போது படம் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. இந்த குழு பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் கோபி விஜய் சாரின் ரசிகர். அவர் முடிவு செய்துவிட்டார், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் சாருடன் எதாவது தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று. என்னையும் அந்த தகுதியால் தான் அழைத்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் விஜயின் ஆட்கள். விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை, அவர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். இரண்டு வாழ்க்கை கொடுத்தார். அது என் வாழ்நாள் முழுவதும் பெருமையாக நினைக்கும் விசயம். படத்தின் நாயகன் தினேஷ் பத்திரிகை துறையில் இருக்கிறார். பல்வேறு துறைகளில் இருந்து சினிமாவுக்கு வருவார்கள், அவர்கள் ஒரு ஆர்வத்தில், ஆசையில் வருவார்கள். அப்படி தான் தினேஷ் சாரையும் நினைத்தேன், ஆனால் தினேஷ் சாரிடம் முழுமையான நடிகருக்கான தகுதி இருக்கிறது. அவரிடம் கலை வெறி இருக்கிறது, அதற்காக தான் இப்போதும் கொலை வெறியோடு உட்கார்ந்து இருக்கிறார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் சார் இருந்தார், அவருக்குப் பிறகு காதல் இளவரசன் கமல்ஹாசன் வந்தார். அதன் பிறகு யாரும் இல்லை, இந்த டிரைலரை பார்த்த போது, அதில் வந்த பெட்ரூம் காட்சியில் மனுஷன் பூந்து விளையாடியிருக்கிறார். எல்லாமே செய்துவிட்டு லவ் என்று சொல்லும் இடம் செமையாக இருந்தது. அந்த காட்சிக்காக தான் அவர் கதையை ஒத்துக்கொண்டு இருப்பார் போல. கொஞ்சம் மூட் அவுட் ஆனவுடன், செல்போனை பார்த்து மூடை ஏத்திக்கிறாரு, பாக்யராஜ் சார் முருங்கைக்காய் பற்றி சொன்னார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் புது யோசனையை சொல்லியிருக்கிறார். செல்போனை பார்த்து மூட் ஏத்துறது. அந்த ஒரு காட்சியில் தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு அந்த ஒரு காட்சி போதும். ஹீரோயின் வராததற்கு காரணமும், தினேஷ் இன்னும் அந்த மூட்ல இருந்து மாறாம இருப்பாரோ என்று பயந்து இருப்பாங்க. ஆனால், காதல் காட்சி, செண்டிமெண்ட் என அனைத்து இடங்களிலும் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு முழுநேர நடிகராகி விட வேண்டும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது.

இயக்குநர் கோபி விஜய் ரசிகர், விஜயின் விசயத்தை எங்கயாவது பதிவு செய்ய வேண்டும் ஒரு ரசிகராக, அதனால் தான் 2026 என்ற கான்சப்ட்டை வைத்திருக்கிறார். அவரது கனவு, ஆசை, நம்பிக்கை, விஜய் மீது உள்ள பற்று என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் விஜய் சாரிடம் ஒரு உதவி இயக்குநராக கதை சொன்னேன், அவர் கதையை ஓகே சொன்னதும் நான் இயக்குநராகி விட்டேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது, அப்போது நான் அவரது ரசிகராகி விட்டேன். அப்படி மாறினால் தான் ரசிகர்களுக்கு ஏற்ற படத்தை கொடுக்க முடியும். திருப்பாச்சி கதையில், ஓபனிங் பாடல், பில்டப் ஆகியவை எதுவும் இல்லை. அவரது ரசிகரான பிறகு தான், அவரை ரசித்து, அவரது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல விசயங்களை சேர்த்தேன். ஒரு ஆக்‌ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக்க வேண்டும், மனதளவில் பீல் பண்ணி ரசிக்க வேண்டும், அப்போது தான் நாம் அந்த காட்சியை எடுத்தால் ஆடியன்ஸ் ரசிப்பார்கள். இதுல கோபி இரண்டையும் செய்துவிட்டார். கதாநாயகியையும் லவ் பண்ணிட்டாரு, ஹீரோவையும் லவ் பண்ணிட்டாரு. இசை சிறப்பாக இருக்கிறது, மிரட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி மிகப்பெரிய இயக்குநராவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. தினேஷ் சார் பெரிய ஹீரோவாகி விடுவார். இயக்குநர் கோபி பெரிய ஹிட் படம் கொடுத்துவிட்டு, விஜய் கட்சியில் இணைந்து விட வேண்டும். செளந்தர்ராஜனும் விஜய் சார் கட்சியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ ஆகி, மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

நடிகர் செளந்தரராஜன் பேசுகையில், “மண்ணுக்கும், மக்களுக்கும் வணக்கம். எனக்கு இந்த படத்தை பற்றி எதுவும் தெரியாது. பிறகு இந்த படத்தின் ஹீரோ எனக்கு போன் பண்ணார். ஒரு வருடத்திற்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் நிகழ்ச்சியில் தினேஷும் வந்திருந்தார். அங்கே அவர் எனக்கு அறிமுகமானார். தினேஷ் காதல் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். நான் பேச நினைத்தது அனைத்தையும் மற்றவர்கள் பேசி விட்டார்கள், அதை நான் வழிமொழிகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நான் இப்போது நிறைய படங்கள் பண்ணுவதில்லை, ஆனால் இந்த பிரசாத் லேபில் தான் நான் ஒரு நடிகராக உணர்கிறேன். பத்திரிகையாளர்களிடம் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் வாங்குவது தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வந்தவர்கள் அனைவரும் அனைவரையும் பாராட்டுகிறார்கள், இந்த பாசிட்டிவான விசயம் படக்குழுவுக்கு ஆசீர்வாதமாக அமையும். அப்புக்குட்டி சார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால், விஜய் அண்ணா போஸ்டர் தான் நான் பார்த்தேன், இலவசம் இருக்க கூடாது, தமிழக முதல்வர் விஜய், என்று போஸ்டரில் போட்டு இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது தான் விசயம் இந்த படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது. தளபதி விஜய் என்பது வெறும் பெயர் இல்லை, ஒருகோடி பேரின் உயிர், அதில் நானும் ஒருவன். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், விஜய் அண்ணா பேசிய பிறகு தான் எனக்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைத்தது. என் பெயருக்கு உயிர் கொடுத்தது தளபதி விஜய் அண்ணா தான். அவருடன் பழகியதில் இருந்து சொல்கிறேன், நான் இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன், உலகத்தமிழர்கள் மனதில் விஜய் அண்ணா வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இது நம்பிக்கை இல்லை, 2026-ல் அவர் முதல்வராவது உறுதி. இலவசம் என்பது எனக்கும் பிடிக்காது. அது ஊக்கத்தொகையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இலவசத்தை கொடுத்து நம்மை சோம்பேறிகளாக்கி விட்டார்கள். இயக்குநர் கோபி அதை சொன்னது சிறப்பாக இருந்தது. அப்போது என்றால் இளைஞர்கள் அந்த மாற்றத்தை நோக்கி வந்துவிட்டார்கள். நான் இதற்கு முன்பாகவே விஜய் அண்ணாவை முதல்வராக காலண்டர் அடித்துவிட்டேன், ஆனால் அதை வெளியிடவில்லை, என் உறவினர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டேன். இதில் நான் கோபியை விட சீனியர் என்பதில் பெருமை.

அரசியலும், கலையும் இல்லாத வாழ்க்கை முழுமையடையாது. இது இசை வெளியீட்டு விழா இதில் அரசியல் பேசக்கூடாது என்றால் எப்படி, பொது இடத்தில் கலைப்பற்றி பேசக்கூடாது என்றா எப்படி, ஒவ்வொரு மனிதரிடமும் இரண்டும் இருக்கிறது. லாக்கப் மரணமடைந்த அஜித்குமாருக்காக போராட்டம் நடத்த த.வெ.க அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்த கட்சிக்கும் போடாத விதிகளை போட்டிருக்கிறார்கள். காவல்துறையை பார்க்கும் போது பாவமாக தான் இருக்கிறது. கலைஞர் ஐயா முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வஞ்சிக்கப்படுவார், ஜெயலலிதா முதல்வராக இருந்தால் கலைஞர் ஐயா வஞ்சிக்கப்படுவார். ஆனால் இரண்டுமே ஒரே காவல்துறை தான். எங்களுக்கு இதுபோல் எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் தலைவர் விஜயையும், தமிழக வெற்றிகழகத்தை ஒடுக்க முயற்சித்தாலும் நாங்கள் போராடி வெல்வோம், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடுவோம். கம்யூனிசக் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாற்றத்தை நோக்கி எங்களுடன் கைகொடுத்தால், எங்கள் தலைவர் விஜய் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் இப்படி இரத்த கரை படிந்த சட்டையுடன் வருவதற்கு இயக்குநர் தான் காரணம், படம் வெளியாகும் வரை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். நானும் மீடியா ஃபேமிலியில் இருந்து தான் வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன். விஜய் விசயம் பற்றி சொன்ன போது, வேண்டுமா என்று கேட்டேன். ஆனால், அவர் ஏற்கனவே செய்து வைத்தது என்று சொன்ன போது, நான் ஓகே சொல்லிவிட்டேன். நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க இங்கு வந்தது எனக்கு பூஸ்ட் போல் இருக்கிறது. மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு அன்பான வணக்கம், நன்றி.” என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், “மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கோபி சாருக்கு நன்றி. எனக்கு காட்சியை சொல்லாமலேயே நடிக்க வைத்தார். ஹீரோ யார் என்று கேட்கும் போது, கண்ணாடி போட்டுக்கொண்டு தினேஷ் சார் வந்தார். அவர் பட்டைய கிளப்பிட்டாரு, செமயாக நடித்திருக்கிறார். அவர் தினமலர் குடும்பம் என்று தெரியாது, பிறகு தான் தெரிந்தது. தெரிந்த உடன் அவரிடம் நான் பயந்தால், அவர் என்னிடம் பனிவோடு அடக்கமாக பேசுகிறார். ஆனந்த் பாண்டி சிறப்பாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒரு குடும்பமாக ஜாலியாக நடித்தோம். சுற்றுலா போனது போல் தான் இருந்தது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் சாரை முதல்வர் என்று போட்டது எனக்கும் கொஞ்சம் ஷாக்காகதான் இருந்தது. எப்படி வருது என்று பார்ப்போம். ரசிகர்களை பயமுறுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறேன், வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி, அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நேரம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த மற்ற டெக்னீஷியன்களுக்கு நன்றி. செளந்தரராஜன் பிரதர் பேசும் போது நிறைய எதிர்ப்புகள் வந்தது, நாம எதிர்ப்புகளையும், எதிர்மறைகளையும் கடந்து செல்வோம், நம்பிக்கையுடன் இருங்க. விஜய் சாரின் விசயம் எதற்காக வைத்தீர்ங்கள் என்று கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தது. இந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கிடுவாங்க என்று சொன்னாங்க. நீங்க டிரைலரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாங்க.

இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்.” என்றார்.

ஒளிப்பதிவு : எல்.டி
இசை : தர்ம பிரகாஷ்
கலை : நெல்லை லெனின்
பாடல்கள் : எஸ்.கே.சித்திக்
பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

சின்னப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!

0

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் மற்றும் நாயகன் நாகரத்தினம் பேசியதாவது…
எங்களை வாழ்த்த வந்துள்ள கலைத்துறை ஜான்பவான்ங்களுக்கு நன்றி, எத்தனையோ ஜாம்பவான்ங்கள் கோலோச்சிய இந்த கலைத்துறையில் நானும் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு உங்கள் ஆதரவைத் தந்து வாழ்த்துங்கள் நன்றி.

இயக்குநர் V சேகர் பேசியதாவது…
வள்ளிமலை வேலன் படத்தை வாழ்த்த வந்திருக்கும் உள்ளங்களுக்கு நன்றி.  வள்ளிமலை வேலன்  படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள், இப்போது முருகன் தான் சீசன் தான் போல, அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். இந்தப்படத்திற்கேற்ற மாதிரி கதாநாயகன், காதாநாயகி பொருத்தமாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லோரும் நன்றாகச் செய்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான், அதை புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும். நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய  படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்.  வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
வள்ளிமலை வேலன் ஆடியோ ரிலீஸ், பாடல்கள் பார்த்தேன் அப்பா பாடல் மிக அருமையாக இருந்தது. சுரேந்தர் பாடியுள்ளார், என் படத்தில் பாடல்  பாடியவர், நண்பர்கள் நாங்கள், சினிமா பல அழகான உறவுகளைத் தருகிறது. இயக்குநர் V சேகர், இப்போது சினிமா இருக்கும் மோசமான நிலையை அருமையாகப் பேசினார். இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது. சினிமா மோசமாக இருக்க அரசு தான் காரணம், அரசு தான் முறையாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அந்த காலத்தில் கதை அவ்வளவு ஈஸியாக எல்லாம் ஓகே ஆகிவிடாது, ஒரு படம் எடுத்தால் விநியோகஸ்தர் வரை கதை சொல்ல வேண்டும். இப்போது யாராவது கதை சொல்கிறார்களா?, சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும். சின்னப்படங்களை தவமிருந்து கொண்டு வருகிறார்கள், ஆனால் தியேட்டர் கிடைப்பதில்லை. தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் முடுவெடுக்க வேண்டும். இப்போது சினிமா என்றால் என்னவென்றே தெரியாத தயாரிப்பாளர்கள் தான் இன்று நிறைய இருக்கிறார்கள். பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் நிறைய ஓடுகிறது ஆனால் அதற்கான வாய்ப்பைத் தர வேண்டும். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை, சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது. எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.  

இசையமைப்பாளர் ஆல்ட்ரின்
இது கிராமத்துப் படம், 2 பாடல்கள் உள்ளது. கதையோடு வரும் பாடல்கள் தான் இரண்டுமே, வெஸ்டர்ன் மியூசிக் இல்லாமல் முழுக்க கிராமத்து இசையில் பாடல்களை உருவாக்கியுள்ளோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி இலக்கியா பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்குக் கிடைத்த முதல் மேடை, காவிரி பாய்ந்தோடும் மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உங்கள் முன்னால் நாயகியாக நிற்கிறேன். நானெல்லாம் ஹிரோயின் ஆவேனா என நினைத்துள்ளேன். நான் சினிமாவுக்கு வந்து, 4 வருடங்கள் ஆகிவிட்டது, சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோயினாக நடித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. சினிமாவில் நிறையப் பேர் குறுக்கு வழியில் முன்னேறுகிறார்கள்,  ஆனால் உண்மையாக உழைக்கும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையான திறமையாளர்களுக்கு சினிமா கலைஞர்கள் அனைவரும் வாய்ப்பு தர வேண்டும். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மிக மிக எளிமையாக இருப்பார். எனக்கு அருமையாகச் சொல்லித் தந்து நடிக்க வைத்தார். எல்லோரும் குடும்பமாகப் பழகினோம்.  நாகரத்தினம் சார் இந்த காலத்தில் இப்படி ஒரு ஆளா என்று ஆச்சரியப்பட வைத்தவர். அவர் ஊர் மக்கள் அவரை தலைவராக நேசிக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இப்படத்தில் எம் நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகான கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் எஸ் மோகன். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கே ஆல்ட்ரின்  இசையமைத்துள்ளார். ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்ய, இடி மின்னல் இளங்கோ சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.

Maayakoothu Movie Review

0

Maayakoothu marks the debut of writer and short filmmaker A.R. Raghavendran (son of Malayalam director K.G. Rajashekharan), and it’s a commendably bold attempt to blend fantasy with social commentary. The result is a film that is both novel in its premise and refreshingly brisk in execution.

At its core, the film follows Vasan (played convincingly by Nagarajan Kannan, who also pens the dialogues), a magazine writer whose serialized stories center on marginalized individuals—characters from the fringes of society. There’s Selvi (Aishwarya), a domestic worker accused of theft; Dhanapal (Sai Dheena), a gangster chasing his 50th kill; Raji (Mirdhula), a village girl with dreams of becoming a doctor; Chandru (Murugan), an auto driver; and others. These characters are fictional—until they suddenly aren’t.

In a fantastical twist, Vasan’s creations begin to manifest in real life, confronting him and demanding justice for the way their stories have been written. What follows is a surreal, nightmarish spiral as Vasan grapples with his ethical responsibilities as a storyteller.

The concept is intriguing, with plenty of scope for drama, tension, and moral introspection. The first half lays the groundwork, introducing Vasan and his fictional universe. There are flashes of self-aware humor in Vasan’s character, which land unevenly—some witty, others flat. However, the second half is where the film truly finds its rhythm. When Vasan is pulled into the world of his characters, the narrative picks up momentum and offers some thought-provoking moments about the creator’s accountability.

Visually and emotionally, the film could have benefitted from more finesse and depth. Some transitions between reality and fantasy feel undercooked, and the emotional beats don’t always land with impact. Yet, what stands out is the clarity of vision and the steady pacing. At just 106 minutes, the film doesn’t overstay its welcome, maintaining viewer interest with timely twists and turns.

Performances are solid across the board. Nagarajan Kannan is effective as the cynical and dry-witted Vasan. Supporting actors like Aishwarya, Murugan, Delhi Ganesh (as the magazine editor), Mu Ramasamy (as Vasan’s mentor), and Gayathri (as Vasan’s wife) add credibility and depth to the world.

Verdict:
Maayakoothu is an inventive debut that attempts something different in Tamil cinema—a blend of social realism, fantasy, and creator introspection. While not without its flaws, it marks A.R. Raghavendran as a director to watch. A promising start indeed.

Freedom Movie Review

0

A Story That Demands to Be Told – But Stumbles in the Telling

History’s darkest chapters often inspire cinema that feels essential, and Freedom is one such film. Set in the turbulent aftermath of Rajiv Gandhi’s assassination in 1991, it attempts to shine a spotlight on the plight of Sri Lankan Tamil refugees who arrived in India seeking shelter—but were instead treated with suspicion, cruelty, and silence.

Director Sathyasiva tackles this politically loaded and emotionally charged subject with a sense of duty. The result is a film that’s heavy with intent and righteous anger—but not always effective in execution.

Plot Summary

Freedom follows the story of Maaran (played by Sasikumar), who arrives in India with his pregnant wife Selvi (Lijomol Jose) and a forgotten pistol in his bag. That weapon is enough to raise suspicions, and the couple is quickly swept up by the authorities. Along with dozens of others, they are transported to the Vellore Fort, which becomes an unofficial prison, holding them for years without trial.

What follows is a grim tale of endless abuse—beatings, humiliation, mental breakdowns, and even suicides. The refugees are stripped of dignity and hope. Amidst this despair, a flicker of rebellion begins to grow. By 1995, forty-three prisoners decide they’ve had enough. In a daring climax, they tunnel, climb, and swim their way to freedom in a desperate mass escape attempt.

The Good: Emotional Weight and Strong Intent

There are moments in Freedom that genuinely land. The arrival scenes, showing refugees being rounded up and brutalized, are deeply moving. The suicide of a mute inmate—a symbol of voiceless suffering—hits hard. The separation of families, the unrelenting isolation, and the bureaucracy’s cold indifference create a painful emotional landscape that’s impossible to ignore.

Sathyasiva’s research into the real-life 1995 escape is evident. He gives a face to history’s forgotten victims, bringing their stories to the forefront. For viewers unfamiliar with this disturbing chapter, Freedom serves as a sobering introduction.

Sasikumar, in a role similar to his recent work in Tourist Family, lends quiet strength to Maaran. His portrayal is grounded, even when the script occasionally leans toward melodrama. Lijomol Jose, though underused, brings depth to the role of a grieving mother and resilient wife. Ghibran’s score enhances key emotional beats, shifting between mournful restraint and urgent tension. Uthayakumar’s cinematography captures the grim, claustrophobic atmosphere of the fort convincingly.

The Weakness: Heavy-Handed and One-Dimensional

The biggest issue with Freedom lies in its execution. The story is important, but the film struggles to strike a balance between emotional engagement and narrative depth. Nearly every scene arrives with a clear directive: now feel sad, now feel angry. This removes room for subtlety or audience reflection.

The villains, particularly the prison officer (Sudev Nair), are written like caricatures—brutal for the sake of being brutal, lacking complexity. The refugees, in contrast, are portrayed almost entirely as suffering victims, with little nuance or individuality beyond their pain.

Maaran’s action-hero moments, including surviving assassination attempts or overpowering inmates, feel out of place in an otherwise grounded story. The lawyer’s character (Malavika) is barely developed, and the final escape sequence, while thrilling, is filled with improbabilities and plot holes that undercut its emotional payoff.

Final Verdict

Freedom is a film with its heart in the right place. It takes a real, buried piece of history and brings it to the screen with sincerity and urgency. However, its storytelling lacks the subtlety, complexity, and polish needed to make it truly powerful cinema.

Instead of letting the story speak for itself, it often pushes the audience too hard, reducing its characters to symbols rather than people. That said, the film does enough to encourage viewers to look up the true events, which may well be its greatest achievement.

- Advertisement -

Recent Posts