Saturday, July 4, 2026
- Advertisement -
Home Blog Page 156

‘Had given up on the idea of making Saiyaara with newcomers as I didn’t come across debutants with acting calibre!’: Mohit Suri

0

Saiyaara has become the hottest debutant film in the Hindi film industry after a long, long time and Yash Raj Films released the trailer of Saiyaara today to immediate internet frenzy.

Mohit reveals he is humbled with the love the film is getting because at one point he ‘had given up on the idea of making Saiyaara with newcomers’ because he ‘didn’t come across debutants with acting calibre’! The ace director is happy that he found Ahaan Panday & Aneet Padda who lived up to his expectations with their sheer acting talent.

Mohit says, “I wouldn’t have made Saiyaara if I hadn’t found formidable actors like Ahaan Panday and Aneet Padda. I was honestly thinking about making something else before my path crossed with Yash Raj Films that was looking for a young love story and was grooming Ahaan and Aneet to star in such a film.”

Watch the trailer of Saiyaara here : https://youtu.be/9r-tT5IN0vg?si=DMcFvG6B7XNl9aU7

He adds, “When you make a love story with debutants, they have to be convincing as actors to pull off the emotional layers and depths that makes the love story feel believable for people. No one expects newcomers to have Ranbir Kapoor and Alia Bhatt level of acting but they need to be actors who hold their own on screen. I didn’t come across debutants with acting calibre, I didn’t find the vulnerability in the young crop and I had given up on the idea of making this script with debutants.”

Mohit further says, “I had pivoted it to have faces that sell from a commerce point of view. Somehow, the writing process of Saiyaara took time and I met YRF and then I saw the auditions of Ahaan and Aneet and decided to spend time with them to get convinced about their acting, intellectual and emotional depth. I was blown away that here are two absolutely fresh new actors who have it in them to act, to surrender to a vision! It’s a rarity today honestly and it’s so refreshing to make a love story with newcomers! I’m glad I found these two because I’m making this story as it was meant to be made.”

The much-anticipated intense romantic film, Saiyaara, brings together Yash Raj Films and Mohit Suri, both known for creating timeless love stories, for the first time!

Saiyaara has already delivered the best album of the year with all songs like Faheem-Arslan’s Saiyaara Title Track, Jubin Nautiyal’s Barbaad, Vishal Mishra’s Tum Ho Toh, Sachet-Parampara’s Humsafar and Arijit Singh & Mithoon’s Dhun making waves on the musical charts of India!

YRF CEO, Akshaye Widhani, who is producing Saiyaara says, “At YRF, we have a legacy of making love stories that have connected and stayed in people’s hearts for a long, long time. So, this collaboration with Mohit Suri, who loves this genre as much as we do, was always meant to happen. We were looking to tell a real love story that connects to today’s youth by showing how deep and true their feelings, emotions and commitments are and we are thrilled to have found Saiyaara.”

He adds, “It is a love story that is inherently YRF but it has all the tropes of the vintage Mohit Suri romance that everyone has loved for over 20 years! An intense love story with debutants has not been made in a long, long time and we are hoping our audience finds that extremely refreshing.”

Saiyaara launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine.

Saiyaara is set to release on July 18, 2025 in theatres worldwide.

“புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை “: மோஹித் சூரி

சையாரா திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோஹித் சூரி கூறுகையில், “ஒரு கட்டத்தில், நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதுமுகங்களுடன் சையாராவை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். ஆனால், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டாவின் திறமையான நடிப்பால் எனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது ” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மோஹித்.

மேலும், இது குறித்து மோஹித் கூறுகையில், “அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா போன்ற திறமையான நடிகர்களைக் கண்டுபிடிக்காவிட்டால் நான் சையாரா படத்தை உருவாக்கியிருக்க முடியாது. இளம் காதல் கதையை உருவாக்குவதற்காக யஷ் ராஜ் நிறுவனத்தில் அஹான் மற்றும் அனீத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, அவர்களை வைத்து வேறு ஏதாவது ஒரு படத்தை உருவாக்குவது பற்றி யோசித்தேன்.

“புதுமுகங்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கும்போது, அவர்கள் உணர்ச்சிகரமான நடிப்பு நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும், இதனால் காதல் கதை மக்களுக்கு உண்மைக்கு நெருக்கமாக தோன்றும். புதுமுகங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் திரையில் தங்களைத் தாங்கி நிற்கக்கூடிய நடிகர்களாக இருக்க வேண்டும்.”

மோஹித் மேலும் கூறுகையில், “வணிக ரீதியான வியாபாரத்திற்காக பிரபல நடிகர்களுக்காக இந்தக் கதையை மாற்றியிருந்தேன். ஆனால், சையாரா படத்தின் திரைக்கதைக்காக சற்று நேரம் எடுத்தது, பின்னர் யஷ் ராஜ் நிறுவனத்தை சந்தித்தேன். அஹான் மற்றும் அனீத்தின் ஆடிஷன்களைப் பார்த்து, அவர்களின் நடிப்பு, அறிவு மற்றும் உணர்ச்சி ஆழத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் சில நேரங்களை செலவிட்டேன்.புதுமுகங்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்குவது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது.இவர்கள் இருவரையும் இந்த படத்திற்காக கண்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் ”என கூறினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சையாரா படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆல்பமாக உள்ளது. பஹீம் அர்ஸ்லானின் சையாரா டைட்டில் ட்ராக் பாடல், ஜூபின் நௌதியாலின் பர்பாத் பாடல், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ பாடல், சச்சேத்-பரம்பராவின் ஹம்சஃபர், மற்றும் அர்ஜித் சிங், மிதூனின் தூன் ஆகியவை இந்தியளவில் சையாரா இசை ஆல்பம் இடம்பெற்றது.

யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அக்ஷய் விதானி, சையாரா பட தயாரிப்பாளர் கூறுகையில் , ” யஷ் ராஜ் நிறுவனம், மக்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் காதல் கதைகளை உருவாக்குவதற்கு பெயர் வாய்ந்தது .யஷ் நிறுவனம். இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் அர்ப்பணிப்புகளின் ஆழத்தைக் காட்டி, அவர்களுடன் இணைந்து ஒரு உண்மையான காதல் கதையைச் கூற விரும்பினோம், மேலும் சையாரா படத்தை தயாரித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

அவர் மேலும் கூறுகையில், “இது யஷ் ராஜ் நிறுவனத்திலிருந்து உருவான இயல்பான காதல் கதையாகும், ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அனைவரும் விரும்பிய விண்டேஜ் மோஹித் சூரி காதல் கதையின் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது .புதுமுகங்களுடனான ஒரு தீவிர காதல் கதை நீண்ட காலமாக உருவாக்கப்படவில்லை.எங்கள் பார்வையாளர்கள் இந்த படத்தை மிகவும் புத்துணர்ச்சியாகக் காணுவார்கள் என்று நம்புகிறோம்.”

சையாரா, அஹான் பாண்டேயை யாஷ் ராஜ் நிறுவனம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது. மிகவும் பாராட்டப்பட்ட பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கவர்ந்த அனீத் பட்டாவை யஷ் ராஜ் நிறுவனம் கதாநாயகியாக தேர்ந்தெடுத்துள்ளது.

சையாரா திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

0

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து வெற்றி படமாக்கிய படக்குழுவினருக்கு நன்றி”.

எடிட்டர் மதி, “என்னுடைய முதல் படம் இது. முதல் படமே வெற்றி பெற்றிருக்கிறது. நான் சந்தோஷமாக இருந்தது மட்டுமல்லாது திரையரங்கில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம் சாருக்கு நன்றி”.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்த வெற்றிப் படைப்பில் பங்கெடுத்து கொண்டது மகிழ்ச்சி. யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றியாக இது அமைந்திருக்கிறது. காலங்காலமாக இருந்த வழக்கங்களை ராம் சார் உடைத்திருக்கிறார். முத்துக்குமார் சாரையும் இந்தத் தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன். இவ்வளவு சிரித்து படம் பார்க்கும்போது ஏன் எல்லாரையும் அழ வைக்கும்படியாகவே சமீபகாலங்களில் அதிக படங்கள் வருகிறது என என் மகன் கேட்டார். ஓடிடியில் மட்டுமே இந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், பிறகு தியேட்டரில் படம் ரிலீஸ் என்று முடிவெடுத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் மிதுல், “திரையரங்குகளில் எல்லோரும் படத்தை சிரித்து பார்த்தார்கள். வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஸ்விமிங், வேவ் போர்டு என பல விஷயங்கள் இந்தப் படம் மூலமாகதான் கற்றுக் கொண்டேன். நன்றி”.

நடிகை கிரேஸ் ஆண்டனி, “படிப்பை விடவே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. அன்பு வயதிலேயே நடிக்கும் முடிவு எடுத்து விட்டேன். என்னுடைய முதல் தமிழ் படம் வெற்றி பெற்றிருப்பது எமோஷனலாக உள்ளது. ராம் சார், சிவா சார், அன்பு மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”.

நடிகர், விமர்சகர் கேபிள் சங்கர், “சிவா பண்ணக்கூடிய பல விஷயங்கள் இந்தப் படத்தில் நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பல விஷயங்கள் எல்லை மீறாமல் நாம் ரசித்ததற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ராம். சந்தோஷ் தயாநிதி இசை படத்திற்கு பெரிய பலம். குட்டிபையன் மிதுலின் நடிப்பும் அருமை. படத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்”.

கமலா சினிமாஸ், விஷ்ணு, “’பறந்து போ’ படத்தின் டைட்டில் போலவே டிக்கெட்ஸூம் பறந்து கொண்டிருக்கிறது. ஷோ ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் படம் பார்த்து ஆடியன்ஸ் சிரித்து கொண்டாடி வருகிறார்கள். சிவாவும் படத்தில் சூப்பராக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்”.

நடிகர் சிவா, “மனதார அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலி, மதுரை, சேலம் எனப் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போய்க் கொண்டிருக்கிறோம். கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அருமையான இசை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவன் இசை படத்திற்கு இல்லையே என்ற குறை எங்கேயும் தெரியாமல் வைத்திருந்தார் சந்தோஷ். ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார். ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ராம், “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் பிரதீப் சார் இந்தப் படத்திற்கு பெரிய பலம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சார் படம் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டதற்கு நன்றி. சுரேஷ் சந்திரா சார் மற்றும் டீமுக்கு நன்றி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகனுக்கும் என் மனைவி, மகளுக்கும் நன்றி”.

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5thCensored with U/A Certificate | Winner of Multiple Prestigious International Awards

0

After an extraordinary global festival run, Bad Girl, the bold and emotionally stirring coming-of-age drama, is all set to release in theatres across India on September 5th, 2025. The film has been officially certified U/A by the censor board.

Written and directed by debutante Varsha Bharath, and produced by acclaimed filmmaker Vetri Maaran, the film is presented by Anurag Kashyap under the banner of Grass Root Film Company.

Bad Girl has garnered widespread critical acclaim and accolades on the international film festival circuit:

NETPAC Award for Best Asian Film at the International Film Festival Rotterdam (IFFR)

Young Jury Award for Best Feature Film at the 40th Cinema Jove – Valencia International Film Festival (Spain)

Jury Mention for Music for Amit Trivedi at Cinema Jove

Student Choice Award at the Indian Film Festival of Toulouse (France)

Additionally, the film has been officially selected and screened at prestigious festivals including the Shanghai International Film Festival, Indian Film Festival of Los Angeles, and more.

Upcoming international screenings include:

Karawan Fest (Italy)

New Horizons International Film Festival (Poland)

With more festival appearances lined up ahead of the theatrical release

With a powerful narrative rooted in identity, freedom, and resistance, Bad Girl features an impressive ensemble cast including Anjali Sivaraman, Shanthi Priya, Hridhu Haroon, TeeJay Arunasalam, Sashank Bommireddipalli, and Saranya Ravichandran.

Technical Brilliance
The film’s compelling visual and emotional tone is crafted by a stellar crew:

Cinematography: Preetha Jayaraman (ISC), Jagadeesh Ravi, Prince Anderson

Editing: Radha Sridhar

Music: Amit Trivedi

Production Design: V Shanmugaraja

Costume Design: Shruthi Manjari

Sound Design: Vinoth Thanigasalam, Sound Mix: Prathap

Intimacy Coordination: Jayalakshmi Sundaresan

Color Grading: Siva Sankar (Infinity Media)

VFX: R. Harihara Suthan (Lorven)

Behind the Scenes

Casting: Varsha Varadarajan

Production Manager: Ve. Ki. Duraisamy

Executive Producer: Vikrem Vybav R S

COO (Grass Root Film Company): Abdul Rahman

PRO: Rekha

Publicity Design: Bharanidharann

Stills: Amir Raj

With its international honors and fearless storytelling, Bad Girl is poised to be a complete packed entertainer. Don’t miss the theatrical release on September 5th, 2025.

புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் நடிகர் தனுஷின் “அம்பிகாபதி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

0

மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் ” அம்பிகாபதி ” திரைப்படம் மீண்டும் வெளியாகிறது

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம் !

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், 2013 ஆம் வெளியான படம் “அம்பிகாபதி”.

இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுமகமான முதல் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. இந்தியில் “ராஞ்சனா” என்ற பெயரில் வெளியான இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.

இப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தமிழகமெங்கும் பெரும் வசூல் வெற்றியைக் குவித்தது குறிப்பிடதக்கது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை, பட்டி தொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

இப்படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் பல்வேறு காட்சிகள் மெருக்கேற்றப்பட்டு, AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியிடப்படவுள்ளது.

அருண் விஜய்யின் ” தடையறதாக்க ” படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், வரும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது.

ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் பார்க்கிங் ஏரியவாக மாறிய கிரி சாலை

0

சென்னையில் அதிக வாகனங்கள் சென்றுவரும் ஜி.என் செட்டி சாலையிலுள்ள கிரி சாலை தனியார் உணவகங்களால் கார் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது. இதுகுறித்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள ஜி.என் செட்டி சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள “கிரி சாலை “ எப்போதும் போக்குவரத்து நெரிசலாக தான் இருக்கும்.

காரணம என்னவென்றால், கிரி சாலையில் மூன்று பிரபல தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கார்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே, அதாவது சாலை வழியாக மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல முடியாதபடி கார்களை நிறுத்தி விடுகிறாரகள். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் உணவகங்கள் கண்டுகொள்வதே இல்லையாம்..!

காலை 12 மணி முதல் மாலை, இரவு நேரம் என எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கார்களில் வெளியே சென்று வர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
இந்த சாலையை கடப்பதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆவதாக மக்கள் வேதனை அடைகிறார்கள்.

சினிமா பிரபலங்களில், சின்னத்திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி தினமும் சென்று வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து போக்குவரத்து போலீசாகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் பயன்படுத்தும் கிரி சாலையை தனியார் உணவகங்கள் பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளது கண்டனத்துக்குரியது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து பார்க்கிங் ஏரியாவை அப்புறவுப்டுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை இப்படி கார் பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, மதியம் 12 மணிக்கு மேல் இந்த சாலையில் போக்குவரத்து சிரமமாக உள்ளதாகவும், இந்த சாலையை கடந்து செல்வதற்கு அரை மணிநேரத்துக்கு மேலாவதாகும் குற்றம் சாட்டுகின்றனர்.

மாதக் கணக்கில் உள்ள விவகாரம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தெரிந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“அவ வருவாளாவர மாட்டாளா”

0

படையாண்ட மாவீரா
அடித்து ஆடும்
இரண்டாம் பாடல் நாளை வெளியீடு.

“அவ வருவாளா
வர மாட்டாளா”

துள்ளலிசைப் பாடல்
08.07.2025
செவ்வாய் காலை 11 மணிக்கு வெளியீடு.

எனது “மகிழ்ச்சி” படத்தில் வரும் “புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா” எப்படி
பட்டித் தொட்டி, தேர் திருவிழா என தமிழர் வாழுமிடங்களிலெல்லாம் ஒலித்ததோ அதனைவிடவும் ஒரு படி மேலே சென்று நீண்ட நெடுங்காலம் நம் அனைவரையும் கும்மாளமிட வைக்கும் “அவ வருவாளா வர மாட்டாளா ” பாடல்.

அடுத்தடுத்த பாடல் வெளியீடுகளோடு
பேரதிர்வுகளுடன்
விரைவில் திரையில்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்

0

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற ஸ்தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

இந்த கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பிறகு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூபாய் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்டவளாக பணிகள் நடந்தது. இதில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்தது. அதை தொடர்ந்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை ஏழாம் தேதியான இன்றைய தினம் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து நடந்தது. குறிப்பாக கோவிலின் மேற்கு கோபுரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8000 சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலை பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது.

கடந்த ஒன்றாம் தேதி முதல் குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடந்தது.

இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்கான வசதிகளை காவல்துறையினர் செய்திருந்தனர். இதற்காக சுமார் 6,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது.

கோவிலை சுற்றி வந்த கடத்திற்க்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து அதிகாலை சரியாக 6.22 மணிக்கு 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது கலந்து கொண்ட பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு ஆரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.

குடமுழுக்கு விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20 ராட்சத ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு ட்ரோன் மூலம் மூன்று முறை பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதும் பக்தர்கள் காவல்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை வழியாக தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை குடும்பத்துடன் கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர்.

“அகம் பிரம்மாஸ்மி” ஆல்பம் அதற்கு முன்னோட்டமாக எடுத்துள்ளேன்.

0

சமஸ்கிருத்தில் திரைப்படம்
இயக்க போகிறேன்…
நடிகர் மன்சூர் அலிகான்!

“அகம் பிரம்மாஸ்மி” ஆல்பம் அதற்கு முன்னோட்டமாக எடுத்துள்ளேன்.

சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்கள் பயன்படுத்தி ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்ப பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!

‘ராஜாதி ராஜ ராஜ குலத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்தில் பாடல்கள், இசை, நான் அமைத்திருந்தேன். வாணி ஜெயராம், சந்திரபோஸ், சொர்ணலதா, டி.எஸ்.ராகவேந்தர் ஆகியோரை பாட வைத்திருந்தேன். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். ‘டிப் டாப் தமிழா’ ஆல்பம் இசையமைத்து வெளியிட்டேன்.

தமிழ் என் தாய் மொழி. மூத்த மொழி, தொன்மையான மொழி. கலைஞனுக்கு மொழி, இனம், நாடு வித்யாசம் கிடையாது. அந்த வகையில் சமஸ்கிருதத்தில் ஜதி பிடித்திருந்தது. பரதநாட்டியம், குச்சிப்புடி நடன அசைவுகளுக்கும், சிவ தாண்டவம் ஆடவும் சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. அதனால் ‘அகம் பிரம்மாஸ்மி’ இந்த ஆல்பத்தில் சமஸ்கிருதம் பயன்படுத்தி உள்ளேன். ஆல்பத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளேன். விரைவில் முழு ஆல்பம் வெளிவரும்.

முன்னணி நடிகர்களை வைத்து, முழுக்கமுழுக்க சமஸ்கிருதத்திலேயே ஒரு படத்தை விரைவில் இயக்க உள்ளேன். அந்தப் படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி சப் டைட்டிலில் வெளிவரும் என்கிறார் மன்சூர் அலிகான்!

On the occasion of Rishab Shetty’s birthday, Hombale Films released a new amazing poster of Kantara: Chapter 1, releasing on 2nd Oct. 2025!

0

With the release of Kantara in 2022, a new dynamic was introduced to Indian cinema. Emerging as the biggest sleeper hit of the year, the film set new benchmarks for success and dominated the box office, becoming one of the biggest Pan-India films. Produced by Hombale Films—India’s leading Pan-India production house known for delivering blockbusters like KGF, Kantara, and Salaar—the film laid a strong foundation for its upcoming, Kantara: Chapter 1, the much-awaited prequel to the global blockbuster, is now one of the most anticipated films of the year.

The poster featuring Rishab Shetty in a never-seen-before thrilling avatar had already created a stir among audiences. Now, the makers have released a new poster and announced the completion of the shoot, marking the occasion of Rishab’s birthday.

Yes, A prequel to the masterpiece that moved millions, Kantara: Chapter 1, has officially wrapped up its shoot. The newly released poster has only intensified the excitement, making it the perfect birthday gift for Rishab Shetty and his fans. Kantara: Chapter 1 takes us to the origins of the legend that captivated millions. Now, Get ready to witness the rise before the roar.

The makers took to their social media while sharing the new sticking poster and jotted down the caption –

Where legends are born and the roar of the wild echoes… 🔥

Kantara – A prequel to the masterpiece that moved millions.

Wishing the trailblazing force behind the legend, @rishabshettyofficial a divine and glorious birthday.

The much-awaited prequel to the divine cinematic phenomenon…

KantaraChapter1 roars into cinemas worldwide on October 2nd, 2025.

As the makers have announced the release the new poster of film the excitement surrounding Kantara: Chapter-1 has multiplied. With Hombale Films’ vision, Rishab Shetty’s dedication, and the legacy of the first chapter, this film is on its way to become yet another cinematic milestone.

Hombale Films are leaving no stone unturned in taking the legacy of this 2022 masterpiece forward. The makers have curated an extensive war sequence for Kantara Chapter-1 with national and international specialists, hiring over 500 skilled fighters and featuring 3000 people, shooting this sequence in an entire town spanning 25 acres situated on the terrains of the state for around 45 – 50 days, making it one of the biggest sequences in the history of Indian Cinema.

While Hombale Films continues to rule the hearts of audiences, they have an exciting lineup of films like Kantara: Chapter-1 releasing on 2nd October 2025, Salaar: Part 2 – Shouryaanga Parvam, and many more.

ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது – இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது!

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம்) அடுத்ததாக தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1 – தற்போது இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தப் ப்ரீக்வலில், ரிஷப் ஷெட்டி இதுவரை பார்த்திராத ஒரு அதிரடி தோற்றத்தில் வெளிவந்திருக்கும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதென அறிவித்துள்ளனர் – இது ரிஷபின் பிறந்தநாளுக்கான சிறந்த பரிசாக அமைந்துள்ளது!

காந்தாரா: Chapter 1 திரைப்படம், அந்தக் கதையின் தோற்றத்தை சொல்வதோடு, லட்சக்கணக்கான ரசிகர்களை மயக்கிய அந்த மாஸ்டர் பீஸ்க்கு முன்னோட்டமாக அமையவுள்ளது.

இது குறித்துப் படக்குழுவினர் சமூக ஊடகத்தில் கூறியுள்ளதாவது..:
“அழகிய அரண்களில் பிறக்கும் புராணங்கள்… காட்டு கர்ஜனையின் ஒலி எங்கும் ஒலிக்கிறது…
மில்லியன் மக்களின் மனதை நெகிழவைத்த அற்புதத்தின் முன்னோடி…

Kantara – Chapter 1.”

“மக்களுக்காக ஒரு புராணமாக உருவெடுத்த நாயகன் ரிஷப் ஷெட்டி அவர்களுக்குத் தெய்வீகமான பிறந்தநாள் வாழ்த்துகள்!”

இந்த புதிய போஸ்டர் வெளியாகியவுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸின் பிரம்மாண்ட உருவாக்கம், ரிஷப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு, முதல் பாகத்தின் மரபு – இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு மாபெரும் சினிமா அனுபவமாக மாற்றுவதை உறுதி செய்கின்றன.

படத்தில் இடம்பெறும் ஒரு பெரிய போர்க் காட்சிக்காக, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்து வந்த நிபுணர்களுடன் இணைந்து, சன்டைப் பயிற்சி பெற்ற 500 பேருடன் மேலும் 3000 கலந்துகொள்ள, 25 ஏக்கர் பரப்பளவில் 45–50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்க்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து ரசிகர்களின் இதயங்களை வென்றுகொண்டிருக்கிறது. இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களான காந்தாரா: சேப்டர் 1 (அக். 2, 2025) மற்றும் சலார் பார்ட் 2– சௌர்யங்க பர்வம் ஆகியவை விரைவில் திரைக்கு வரவுள்ளன.

Bollywood Star Aamir Khan Praises ‘Oho Endhan Baby’!

0

Presented by Romeo Pictures and Vishnu Vishal Studioz, the upcoming romantic entertainer Oho Endhan Baby is made in association with Good Show. Directed by Krishna Kumar Ramakumar, the film marks the debut of Rudra, the younger brother of actor-producer Vishnu Vishal, in the lead role. The film is all set to hit theatres on July 11. A grand pre-release event was recently held.

Actress Mithila Palkar shared, “Oho Endhan Baby is an heartfelt romantic entertainer. I’m sure everyone will relate to this film. It features many fresh faces and can’t wait to see you all in theatres on July 11!”

Actress Anju Kurian added, “It’s a true rom-com! Everyone from this team have worked incredibly hard for this film. We hope you’ll show your support by watching it in theatres.”

Actor Rudra said, “The film releases on July 11. After the pandemic, we’ve all gone through some level of emotional stress. This movie is here to take that weight off your chest , it’ll make you laugh, celebrate, and feel good. When you walk out of the theatre, there will be a smile on your face.”

Actor-Producer Vishnu Vishal shared from the heart, “I’ve always believed in working with new directors, because they carry a certain magic. And that same magic shines through every debut actors in this film. Your support means everything. With it, I’ll keep opening doors for fresh talent. When I entered the industry, opportunities didn’t come easy. But today, by God’s grace, I’m in a place where I can create opportunities for others. Here’s an update for you, my upcoming projects are Kattakusthi 2 & Ratsasan 2 were also confirmed to roll next year under my banner! One more proud moment, after watching Oho Endhan Baby, Bollywood star Aamir Khan was moved with tears and personally praised this film. I consider my brother truly lucky and for me, acting as a film hero in his debut film is something I’ll always cherish.”

’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நடிகை மிதிலா பால்கர், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்”.

நடிகை அஞ்சு குரியன், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்”.

நடிகர் ருத்ரா, “ஜூலை 11 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கோவிட் காலகட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் ஒரு விதமான மன அழுத்தம் இருக்கிறது. அதை எல்லாம் போக்கி உங்களை ‘ஓஹோ எந்தன் பேபி’ ஜாலியாக சிரிக்க வைக்கும், கொண்டாட வைக்கும். படம் முடித்து நீங்கள் தியேட்டர் விட்டு வெளியே போகும்போது நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கும்”.

நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ” புதுமுக இயக்குநர்களுடன் தான் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஏனெனில், அவர்களிடம் தான் ஒரு மேஜிக் இருக்கும். அந்த மேஜிக் இந்த படத்தில் இருக்கக்கூடிய அனைத்து புது முக நடிகர்களிடமும் இருக்கிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அது இருந்தால் அடுத்தடுத்து நிறைய புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன். நான் புதுமுகமாக திரையுலகில் வந்த பொழுது எனக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று கடவுள் புண்ணியத்தில் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறேன். உங்களுக்கு ஒரு அப்டேட்! என்னுடைய அடுத்த படம் ‘கட்டாகுஸ்தி2’. ‘ராட்சன்2’ படமும் அடுத்த வருடம் என்னுடைய தயாரிப்பில் நிச்சயம் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிர்கான் பாராட்டிவிட்டு கண்கலங்கினார். என் தம்பி ரொம்பவே லக்கி. என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

- Advertisement -

Recent Posts