2000 த்திற்கு பிறகு பிறந்தவர்களின் திருமணம் அதிகமாக
விவாகரத்து ஆவதற்கு காரணம் என்ன?
காதல் திருமணம் செய்தவர்களும் விரைவில் மணமுறிவுக்கு உட்படுவது ஏன்?
பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? என்ற கேள்விகளுக்கு விடைதாங்கி விரைவில் வரும் படம்தான் ” 2 K ஹார்ட்” என்கிறார் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ள பர்வதன்.
லிங்கேஷ் குமார், பிரகதி, வித்யா, தேவஶ்ரீ, கார்த்திக் ராஜா, பாலகிருஷ்ணன், பவர்ஸ்டார் சீனிவாசன், சாப்ளின் பாலு, ஜானி .கே.மணிகண்டன் என நிறைய பேர் நடித்துள்ளனர்.
சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ளது. தர்வேஷ் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன்
பாடலுக்கு இசையையும், சேலம் சண்முகசுந்தரம் – – சேலம் துரைராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும், சாய் நரேஷ்குமார் படத்தின் பின்னணி இசையையும், பா. சேதுமாதவன் பாடல்களையும், பர்வதன் கதை வசனத்தையும் , விக்னேஷ் குமார் நடன பயிற்சியையும், சேலம் துரைராஜ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
“ஆறடி ” மற்றும் ” தகவி ” ஆகிய படங்களை தயாரித்த எஸ். நவீன்குமார் தமது
ஸ்ரீ சிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் மூன்றாவது படமாக “2 கே. ஹார்ட்” படத்தை தயாரித்துள்ளார்.
திரைக்கதை அமைத்து படத்தொகுப்பையும் ஏற்று தமது மூன்றாவது படமாக டைரக்ட் செய்துள்ள ஜெ. சந்தோஷ் குமார் படத்தைப் பற்றி கூறியதாவது, ” பர்வதன் அவர்களின் கதைவசனத்தில் ஆறடி என்ற படத்தை முதலாவதாத இயத்தினேன். அதில் சுடுகாட்டில் பெண் வெட்டியாளாக கதாநாயகியை நடிக்க வைத்து விருதுகள் பல பெற்றேன். அடுத்து தகவி என்ற படத்தை தரைப்படை, கப்பல்படை, விமானபடை என்பதன் சுருக்கமே தகவி இதில் சிறார்களால் நக்சலைட்டுகள் திருந்துவதாக எடுத்தேன். இதுவும் பல்வேறு விருதுகளை பெற்றது. 3வது படமாக ” 2 K ஹார்ட் ” என்ற படத்தை இயக்கி உள்ளேன். இதில் 2000க்குப் பின் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை சுவைபட அனைத்து செக்டாரும் பார்க்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறேன். பர்வதன் அவர்களின் கதை வசனம் படத்திற்கு மிகவும் , வலுவுள்ளதாக இருக்கிறது என்று படம் பார்ப்பவர்கள் கூறுவார்கள்” என்கிறார்.
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமநேனி, டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து வழங்கும் பான் இந்தியத் திரைப்படம் “மிராய்” ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியீடு !!
“மிராய்” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!
இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “ஹனுமேன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான “மிராய்” படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இப்படத்தை கார்த்திக் கட்டமநேனி இயக்க, பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான் இந்தியா திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் ஆகிய விடுமுறைகளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரில், தேஜா சஜ்ஜா பனியால் மூடப்பட்ட மலைச் சிகரங்களின் நடுவில் நின்று, ஒரு இரும்பு கம்பியைப் பிடித்தபடி ஆழமாகப் பார்க்கும் தோற்றம், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
“மிராய்” படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிக வலுவானதாகவும், மனதில் நிற்கக்கூடியதுமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரித்திகா நாயக் படத்தின் நாயகியாக, தேஜா சஜ்ஜாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
தேஜா சஜ்ஜாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு படம் தொடங்கும் முன்பிருந்தே வெளிப்பட்டு வருகிறது. அவர் சூப்பர் யோதா கதாபாத்திரத்தைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவர முழு அர்ப்பணிப்புடன் உழைப்பை கொட்டி வருகின்றார். இயக்குநர் கார்த்திக் கட்டமநேனி மிகுந்த கவனத்துடன் புதிய உலகத்தை உருவாக்கி வருகின்றார்.
கார்த்திக் கட்டமநேனி படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியவற்றைக் கையாளுவதோடு, மணிபாபு கரணம் உடன் இணைந்து வசனங்களையும் எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைக்க, ஸ்ரீ நகேந்திர தங்காலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விவேக் குசிபோட்லா இணை தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “மிராய்’
நடிப்பு:
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா
வில்லன் மனோஜ் மஞ்சு
நாயகி ரித்திகா நாயக்
“மிராய்” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொழில்நுட்பக் குழு: இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத் பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி எழுத்து: மணிபாபு கரணம் இணை தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி இசை: கௌரா ஹரி கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா மக்கள் தொடர்பு : யுவராஜ்
Super Hero Teja Sajja, Karthik Ghattamaneni, TG Vishwa Prasad, Krithi Prasad, People Media Factory’s Pan India Film Mirai Releasing Worldwide On August 1st !
Super Hero Teja Sajja, the rising star of Indian cinema, is on a mission to redefine the superhero genre in the country. The actor, who is riding high on the immense success of Hanu-Man across the nation, is all set to captivate once again with his next ambitious project, Mirai. This pan-India action-adventure film will see Teja Sajja donning the larger-than-life role of a Super Yodha, a character that promises to be as thrilling and dynamic as the superhero genre itself. Directed by Karthik Ghattamaneni, Mirai is being produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory.
As officially announced by the makers, this much-awaited Pan India movie will have a grand release worldwide in 8 different languages in 2D and 3D formats on August 1st. With the Raksha Bandhan and Independence Day holidays following closely, Mirai is poised to capitalize on the festive spirit, further boosting its appeal.
In the release date poster, Teja Sajja is seen standing between snow mountain peaks, holding a staff, and gazing intently. The grandeur of the movie is evident in this single poster.
Mirai boasts a stellar cast, with Rocking Star Manoj Manchu stepping into the shoes of the antagonist, a role that promises to be as menacing as it is memorable. Ritika Nayak plays the leading lady opposite Teja Sajja.
Teja Sajja’s dedication and hard work are clearly visible in the exciting promos of the film. The young actor is pushing his limits to bring the character of Super Yodha to life. Under the expert direction of Karthik Ghattamaneni, Mirai is shaping up to be a cinematic experience unlike any other. His meticulous approach to creating a completely new world on screen is also evident in the promotional material.
Karthik Ghattamaneni handled the cinematography, besides penning the screenplay, alongside Manibabu Karanam who also wrote dialogues. Gowra Hari provides the music. Sri Nagendra Tangala is the art director of the movie, whereas Vivek Kuchibhotla is the co-producer. whereas Sujith Kumar Kolli is the Executive Producer.
Cast: Super Hero Teja Sajja, Manoj Manchu, Ritika Nayak
Technical Crew:
Director: Karthik Gattamneni
Producer: TG Vishwa Prasad & Krithi Prasad
Banner: People Media Factory
Co-producer: Vivek Kuchibhotla
Executive Producer: Sujith Kumar Kolli
Cheif co Ordinator : Meghashyam
Music: Gowra Hari
Art Director: Sri Nagendra Tangala
Writer: Manibabu Karanam
PRO: Yuvraaj
தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களால், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதற்கு அவரே திரைப்பட நகரம் என்று பெயரும் சூட்டினார். ஆனால், சில காரணங்களால் அந்த இடத்தின் அரசாணை புதுபிக்கபடாமல் இருந்தது. அதனை புதுப்பித்து தர வேண்டி மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி கடந்த 2010 ம் ஆண்டு மேற்கண்ட இடத்திற்கு என்ன அரசாணை வழங்கப்பட்டதோ அதே போல இந்த முறையும் புதுப்பித்து வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்து, அரசாணையை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் செழிக்க, தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ள மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு.வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. மு. பெ.சாமிநாதன் அவர்களுக்கும், மற்றும் அரசாணை புதுப்பிக்க உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலக சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்கு பார்வையில் உள்ள திட்டங்களால் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதே போல் தமிழ் திரைப்பட துறைக்கு செய்துள்ள இந்த விஷயம், தமிழ் திரையுலகம் இருக்கும் வரை மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் கிரீடத்தில் வைரக்கல்லாய் திகழும் என்பதில் ஐயமில்லை. தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்து திரைத்துறையினர் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மீண்டும் ஒரு முறை இரு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Chennai: Puthiyathalaimurai successfully launched the 10th edition of its prestigious Sakthi Awards, celebrating a decade of honoring women who have redefined boundaries and made remarkable contributions to society across diverse fields.
Presented annually, the Sakthi Awards recognize six extraordinary individuals who embody strength and inspire change. The awards are given in six distinct categories: Courage, Talent, Leadership, Knowledge, Compassion, and Achievement. The theme for the Sakthi Awards 2025 is “Accelerate Actions towards Achieving Gender Equality.”
This year’s distinguished awardees include:
Courage Award: Mrs. Muthamizh Selvi, the first woman from Tamil Nadu to conquer Mount Everest, inspiring countless others with her determination and grit.
Talent Award: Mrs. Purnaa Sundari I.R.S., a beacon of perseverance, who overcame visual impairment to serve as an officer in the Indian Revenue Service.
Leadership Award: Maj Gen Ignatius Delos Flora, who rose through the ranks in the military Nursing service to become the first Tamil Major General, breaking stereotypes with her exceptional service.
Compassion Award: Mrs. Shyamala Nataraj, recognized for her groundbreaking advocacy and policy work on HIV/AIDS awareness and rights.
Knowledge Award: Dr. Tara, honored for her tireless efforts to dispel superstitions surrounding mental illness and to promote mental health awareness in society.
Lifetime Achievement Award: Captain Lakshmi Krishnan, 98 years old, she was actively involved in the Indian freedom struggle alongside Netaji Subhas Chandra Bose, beginning her journey of patriotism and courage at the young age of 15.
The vibrant awards ceremony took place recently at the Nandambakkam Trade Center in Chennai, attended by the public and several distinguished guests.
This grand celebration of women’s strength and resilience will be telecast on Puthiyathalaimurai Television on March 8, marking International Women’s Day.
புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 2025
ஆண் பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் விழா இந்த ஆண்டு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
சக்தி விருதுகள் விழாவில் சக்தியின் சாட்சிகளாய் குன்றென நிமிர்ந்து நிற்கும் ஆறு ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. துணிவு, திறமை, தலைமை, புலமை, கருணை மற்றும் சாதனை ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.”வேறுபாடு களைய …. வேக நடை போடு.” என்பதை மையக்கருத்தாக 2025 ஆம் ஆண்டு சக்தி விருது விழா கொண்டுள்ளது.
சாதிக்கத் துடிக்கும் மங்கையருக்கு முன்மாதிரியாகத் திகழும் முத்தமிழ்ச் செல்விக்கு, துணிவுக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. தன்னுடன் எவரஸ்ட் மலை சிகரத்தை தொட முயன்ற சிலர் உயிரிழந்தை கண் முன்னே கண்டது உட்பட ஏராளமான சவால்களைத் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி முத்தமிழ் செல்வி. அவரது மன உறுதியும், கனவுகளைத் மெய்பிக்க தடைகளை தாண்டும் தைரியமும், விடா முயற்சி வெற்றி தரும் என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டுகின்றன.
பார்வை போனாலும் அகத்தில் ஆயிரம் கண்கள் உண்டு, விழியிழந்தாலும் ஆயிரம் வழிகள் உண்டு என்று பார்வைச் சவாலை தன்னம்பிக்கையால் தகர்த்துக்காட்டியுள்ள பூர்ண சுந்தரி ஐ.ஆர்.எஸ்-க்கு திறமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. பார்வை குறைபாடு இருந்தபோதிலும், தடைகளைத் தாண்டி, அனைத்து இடர்களையும் மீறி, பூர்ண சுந்தரி 2019 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இந்திய வருவாய் சேவை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். விடாமுயற்சியின் சக்தி மற்றும் மன வலிமைக்கு சான்றாக உள்ளார் பூர்ண சுந்தரி.
இராணுவத்தில் செவிலியராய் பணிபுரிந்து, முதல் தமிழ் மேஜர் ஜெனரலாக உயர்ந்த திருமிகு இக்னேசியஸ் டெலஸ் புளோரா-வுக்கு தலைமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இக்னேஷியஸ் டெலஸ் புளோரா சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர விரும்பினார். தனது 17வது வயதில் இந்திய ராணுவ செவிலியர் சேவைப் பிரிவில் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்று, செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவர். தனது தலைமைப் பண்பால் குடியரசு தலைவரிடம் நைட்டிங்கேல் விருது பெற்றவர் இக்னேசியஸ் டெலஸ் புளோரா.
ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வரும் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான திருமிகு. ஷ்யாமளா நடராஜ்-க்கு கருணைக்கான சக்தி விருதுகள் வழங்கப்பட்டது. தென்னிந்திய எய்ட்ஸ் செயல் திட்டத்தின் (SIAAP) நிறுவனரான ஷியாமளா, HIV/AIDS குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டவர். HIV/AIDS குறித்து கொள்கை மாற்றங்கள் கொண்டு வர அவர் செய்த புரட்சிகரமான பணியின் காரணமாக, ஷ்யாமளா நடராஜ் 2005 ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இன்றும் பின்தங்கிய சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக செயலாற்றி வருகிறார். நான்கு தசாப்தங்களாக சத்தமின்றி சமூகப்பணியாற்றி வரும் திருமிகு. சியாமளா நடராஜ் அவர்களுக்கு கருணைக்கான சக்தி வருது வழங்கப்பட்டது.
ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் (SCARF) இணை நிறுவனர், மனநல மருத்துவர் தாரா-வுக்கு புலமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. மனநோய் குறித்த மூட நம்பிக்கைகள் மற்றும் மன நோயாளிகள் குறித்து சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி மருத்துவ உதவி பெற வேண்டும் என்பது உள்பட மன நலன் குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 (PWD Act) இல் மனநலக் குறைபாட்டைச் சேர்ப்பதில் டாக்டர் தாரா முக்கிய பங்கு வகித்துள்ளார். மனநலக் குறைபாட்டை மதிப்பிடும் ‘ஐடியாஸ்’ கருவி உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் டாக்டர் தாரா. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்கிசோஃப்ரினியா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
தேசத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிய கேப்டன் லட்சுமி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்போது 98 வயதாகும் லட்சுமி கிருஷ்ணன் நேதாஜியுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் தனது 15வது வயதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றினார். இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உத்வேகம், நாட்டிற்காக உயிரையும் அர்ப்பணிக்க முன்வந்த அவரது துணிச்சலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது. தேசத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிய லட்சுமி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த வண்ணமிகு விழாவில் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவின் தொகுப்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்வதேச மகளிர் நாளான மார்ச் 8 ஆம் நாள் ஒளிபரப்பாக இருக்கிறது.
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்
இப்படத்தின் கதை
சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் எழுதி உள்ளார்..
“உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.
‘ பெற்றோர் பெண் குழந் தைகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உதவினார்..தற்போது இந்த படத்தின் டிரெய்லர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு உதவினார்..ராபர் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது .
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.
அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை
அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
இந்த படத்தில் ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி படத்தை இயக்கி உள்ளார்.
ராபர் படம் மார்ச் 14ம் மாதம் வெளியிட அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன..
7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது…
இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம். இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்த படத்திற்காக குழுவாக இணைந்து கடினமான உழைப்பை வழங்கியுள்ளோம். இந்த படத்தில் ஹீரோ சார் முதல், படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இந்த குழுவோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி.
எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது….
இந்த மேடையில் நான் நிற்க காரணம், 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய, இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இங்கு வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. இப்போது சப்தம், இப்படத்தைப் பொறுத்தவரை ஹோம்கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவது போலத் தான். கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்ன சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன். சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஹீரோ ஆதி எனக்கு நண்பர், அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும், இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும்.
ஆடியோகிராஃபர் உதயகுமார் பேசியதாவது….
அறிவழகனின் ஈரம் தவிர அனைத்து படத்திலும் வேலை பார்த்துள்ளேன், ஈரம் வேலை பார்க்க வில்லை என்ற வருத்தம் இருந்தது, அது இந்தப் படத்தில் நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி சார், ஊமை விழிகள் படங்கள் எல்லாம் செய்தவர், இந்தப்படம் ஊமை விழிகள் படம் போன்ற உணர்வைத் தரும். இந்த டிரெண்டில் அந்தப்படம் வந்தால் எப்படி இருக்குமோ? அது மாதிரி இருக்கும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள், அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்ப கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆதி மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
இயக்குனர் அறிவழகன் பேசியதாவது….
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது. ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம். 7G Films நிறுவனம் 7G சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி. விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார் சார், பல விசயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் ஆதி பேசியதாவது….
இந்த மேடை மிக முக்கியமானது. “சப்தம்” என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன், இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் மிக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
225 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தும், திரௌபதி, ருத்ர தாண்டவம், படங்களை இணைத்தயாரிப்பு செய்த 7G Films நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா, முதல் முழுமையான தயாரிப்பாக, இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக தயாரித்துள்ளார். நடிகர் ஆதியின் திரை வாழ்க்கையில், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், உலகத்தரத்தில் ஒரு அதிரடியான திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சத்தங்களையே மிக வித்தியாசமாக உருவாக்கி ஒரு புதுமையான ஹாரர் அனுபவத்தை இசையில் கொண்டு வந்துள்ளார் தமன்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு – 7G Films
தயாரிப்பாளர் – 7G சிவா
எழுத்து, இயக்கம் – அறிவழகன்
இசை – தமன் S
ஒளிப்பதிவு – அருண் பத்மனாபன்
எடிட்டிங் – சாபு ஜோசப்
கலை இயக்கம் – மனோஜ்குமார்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம்
பாடலாசிரியர் – விவேகா
மிக்சிங் -உதய் குமார்
ஒலி வடிவமைப்பு – Sync Cinema
மார்க்கெட்டிங், புரமோசன்ஸ் – DEC
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media
மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான “ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது…
2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75 திரையரங்குகளில் ஓடியது.. எந்த திரையரங்கில் பார்த்தாலும் ஆட்டோஃகிராப் திரைப்படம் மட்டுமே ஓடிய காலத்தை முதல்முதலாக உருவாக்கியது.. இதனால இப்படம் மக்களால் மறக்கமுடியாத படமாக மாறியது..
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் அதைப்போலவே உருவானது… அவைகளும் வெற்றி கண்டன.. அப்படி டிரெண்ட் செட்டிங் படமான ஆட்டோஃகிராப் வரும் மே மாதம் மீண்டும் திரையரங்குகளில் திரையிட வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது..
இப்போது ஆட்டோஃகிராப் படத்தின் ஒரு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது… இந்தியாவில்
முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஒரு படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிலும் முன்னோடியாக முயற்சிகளை மெனக்கெடும் இயக்குனர் சேரன் AI தொழில்நுட்பத்தில் ஏற்கனவே வெளியான ஆட்டோஃகிராப் திரைப்படத்திற்கு உருவாக்கியிருப்பதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் திரையுலகத்தினர்..
விதியோகஸ்தகர்கள் சங்க தலைவர்
கே ராஜன் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.வி உதயகுமார்,பேரரசு, திரை நட்சத்திரம் வனிதா விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER). ‘வெப்பன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் ராஜு கோவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக யுக்தா பிரேமி நடித்திருக்கிறார். வில்லனாக அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசை அமைத்திருக்கிறார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். சினேகா அசோக் நடனம் அமைத்துள்ளார். அஷ்ரப் குருக்கல் மற்றும் கே.டி.வெங்கடேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ‘டெக்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் கலையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, தாயரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சூரியன்.ஜி பேசியதாவது
”டெக்ஸ்டர் படத்தின் வாய்ப்பு கிடைப்பதற்கு என் நண்பர் தான் காரணம். நான் மலையாள சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. டெக்ஸ்டர் அமெரிக்காவின் பிரபலமான வெப் சீரிஸ். சிறுவயதில் தன் அம்மா கற்பழித்து கொலை செய்யப்பட்டதை பார்க்கும் சிறுவன், பெரியவன் ஆனதும் அம்மாவை சீரழித்தவர்களை தேடிப்பிடித்து கொடூரமாக கொலை செய்வார். அதுவே அவருக்குப் பிடித்துப் போக தொடர்ந்து கொலை செய்ய தொடங்குவார். அந்த கதையின் தொடர்ச்சியாக தான் நான் இந்த கதையை எழுதியிருக்கிறேன். என்னுடைய டெக்ஸ்டர் படத்திலும், சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதன் மூலம் நடக்கும் கொலைகள், அதன் விசாரணை என்று படம் சுவாரஸ்யமான சைக்கோ திரில்லராக பயணிக்கும். என் படத்தில் நடித்திருக்கும் நாயகன் மற்றும் வில்லன் இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் அவர்களுக்கு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். படத்தின் இசை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசியதாவது
“பொன்னாடை வேண்டாம் என்று பல நிகழ்ச்சிகளில் சொல்லி வருகிறேன், யாரும் கேட்க மாட்டுகிறார்கள். நம்ம ஊரில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க வேண்டும். முதலில் நம்ம மக்களை பாருங்கள் பிறகு இந்த பொன்னாடை தயாரிக்கும் சூரத் போன்ற வெளிமாநிலங்களை பார்க்கலாம். அது போல் திரைப்படங்களிலும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், பிறகு வேறு மாநிலத்தவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் இயக்குநரை வைத்து கன்னட தயாரிப்பாளர் தயாரித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பான் சவுத் இந்தியா படமாக இருக்கிறது. படத்தின் கதை பற்றி இயக்குநர் சொன்னார், சிறப்பாக இருந்தது. இது சைக்கோ திரில்லர் என்பதால் இதற்கு மொழி தேவையில்லை, அனைத்து மொழிகளிலும் இந்த படம் ஓடும். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனவே, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழில் படம் தயாரித்த கன்னட தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள். மற்ற மாநிலத்தில் இருப்பவர்கள் தமிழகத்தை நம்பி படம் எடுக்க வரவேண்டும், தமிழர்கள் நாங்கள் கெட்டாலும் மற்றவர்களை வாழ வைப்போம், என்று கூறிக்கொண்டு டெக்ஸ்டர் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது
“டெக்ஸ்டர் நல்ல தலைப்பு, படமும் நன்றாக இருக்கும் என்று பாடல் மற்றும் டிரைலர் நிரூபிக்கிறது. இப்போதெல்லாம் சிறிய படங்களுக்கு அழைத்தால் உடனே சென்றுவிடுகிறேன், காரணம் அனைத்து சிறிய படங்களும் ஓடுகிறது. சமீபகாலமாக பெரிய படங்கள் வெற்றி பெறுவதில்லை. காரணம் அதில் நடிகர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். ஆனால், சிறிய படங்களில் நல்ல கதை இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமாவின் தரம் பற்றி குறை சொல்ல முடியாது. ஆனால், கண்டெண்ட் இல்லை. நாங்கள் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பான படம் எடுத்தோம். ஆனால், இப்போது பல கேமராக்களை வைத்துக்கொண்டு கண்டெண்ட் இல்லாமல் எடுக்கிறார்கள். தெளிவான திரைக்கதை, தெளிவான காட்சி அமைப்பு இருக்கும் திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். மூன்று கேமரா வைத்து எடுப்பவர்கள் தான் சிறந்த இயக்குநர் என்று நடிகர்கள் தப்பா நினைக்கிறார்கள். ஒரே ஒரு கேமரா வைத்து எதை எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பவன் தான் இயக்குநர், அது இந்த படத்தில் இருக்கிறது. இயக்குநர் சூரியன்.ஜி சிறப்பாக இயக்கியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட முத்தக்காட்சிகள் இருக்கிறது, ஆனால் அதை நெருடல் இல்லாமல் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நடன இயக்குநருக்கு வாழ்த்துகள்.
இந்த படம் மிக சிறப்பாக இருக்கிறது, ஆனால் இதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும், அப்போது தான் படம் வெற்றி பெறும். இன்று படம் எடுப்பது சுலபம், அதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சிரமம். அதனால், படம் வெளியீட்டின் போது விளம்பர பணிகளை சரியான முறையில் திட்டமிட்டால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது, படம் வெற்றி பெற்றால் திரையரங்கங்கள் அதிகரிக்கும். அதேபோல் சினிமாவை சுதந்திரமாக விட்டால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். இன்று ஆட்டம் போட்டவர்கள் நாளை ஆட்டம் இல்லாமல் போவார்கள், இன்று அமைதியாக இருப்பவர்கள் நாளை ஆட்டம் போடுவார்கள், அதனால் சினிமாவை மட்டும் சுதந்திரமாக விட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். அறிமுக இளைஞர்கள் வளர்ந்து வரும் கலைஞர்கள், புதிய தயாரிப்பாளர் இணைந்து எடுத்திருக்கும் இந்த படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
“டெக்ஸ்டர் படத்தின் டிரைலரை பார்க்கும் போதே இது ஒரு திரில்லர் படம் என்பது தெரிகிறது. ராஜன் சார் சொன்னது போல் இதுபோன்ற படத்திற்கு மொழிகள் தேவையில்லை, பார்க்க கண்கள் இருந்தாலே போதும். இயக்குநர் சூரியன்.ஜி, சுந்தர்.சி, மோகன்.ஜி போல் வெற்றி பெறுவார். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. நாயகன் நல்ல உயரம், நல்ல கலர், ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. கதாநாயகி ஹோம்லியாக இருக்காங்க, அதே நேரத்தில் மாடர்ன், கவர்ச்சி என அனைத்தையும் சிறப்பாக செய்கிறார். வில்லன் அபிஷேக் நல்லா பண்ணியிருக்கார். சிறிய படம் என்று சொல்வார்கள், ஆனால் படம் வெளியான பிறகு சிறிய படங்கள் பெரிய படமாகி விடுகிறது. இன்று சினிமாவில் சிறிய படங்களுக்கு அதிகமாக திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், குறை சொல்லாமல் ஏன்? என்று சிந்திக்க வேண்டும். ஒரே நேரத்தில் பத்து படங்கள் வெளியானால் எப்படி ஓடும், மக்கள் எப்படி பார்ப்பார்கள். அதனால் நமக்குள் ஒரு கட்டுக்கோப்பு வேண்டும். இந்த டெக்ஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, இயக்குநர் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
கதாநாயகி யுக்தா பெர்வி பேசுகையில்
“ஒரு நாள் படத்தின் மேனஜர் எனக்கு போன் செய்து, ஒரு படம் பற்றி பேச வேண்டும் என்று அழைத்தார். அதன்படி நானும் சென்ற போது அனைவரும் அங்கிருந்தார்கள், அரை மணி நேரத்தில் பேசி முடித்துவிட்டு, எனக்கு சம்மதமா என்று கேட்டார்கள், நான் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன். சஸ்பென்ஸ் திரில்லர், சிறுவயது டிராமா, காதல் என அனைத்தும் படத்தில் இருக்கிறது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. நான் மகராஷ்டிராவைச் சேர்ந்தவள், இப்போது பெங்களுரில் செட்டிலாகியிருக்கிறேன், நான்கு வருடங்களில் கன்னட மொழியை நன்றாக பேச கற்றுக் கொண்டேன், அதுபோல் அடுத்த முறை தமிழகத்தில் பேசும்போது நிச்சயம் தமிழில் பேசுவேன், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
நடிகர் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் பேசியதாவது
“இயக்குனர் சூரியன் சார் என்னை அழைத்த போதும் எனக்கு வில்லன் வேடம் என்று தான் சொன்னார், ஆனால் இன்று என்னை ஹீரோ என்று சொல்கிறார். அதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நானே ஒரு கோட்டில் பயணிக்கும் போது திடீரென்று ஹீரோ என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு இதுவே போதும். எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. ஐடி துறையில் பணியாற்றினேன், பிறகு விளம்பரத்துறையில் பணியாற்றினேன், இன்று நடிகராக உங்கள் முன்பு நிற்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கு பின்னாடி நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது, அந்த கதாபாத்திரம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் நான் மட்டும் அல்ல, அதன் பின்னணியில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். அதன்படி, இயக்குநர் சூரியன் சார் ஒரு சிறந்த குழுவை உருவாக்கினார். விநியோகஸ்தர் ஹரி சார் வந்தவுடன் இந்த படத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது. இப்போது உங்கள் முன்பு நிற்கிறோம். இந்த படத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், நன்றி.” என்றார்.
கதாநாயகன் ராஜு கோவிந்த் பேசியதாவது
“டெக்ஸ்டர் படத்திற்காக முதலில் தயாரிப்பாளர் பிரகாஷ் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சூரியன் சார், படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி. இந்த படம் ஒரு திரில்லர் ஜானர். பொதுவாக திரில்லர் படங்களில் ஏன்? என்ற கேள்வி இருக்கும், ஒரு விசயம் செய்தால் இது எதற்கு? என்ற கேள்வி இருக்கும். படப்பிடிபு நடந்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காட்சியில் எங்களுக்குள் ஏன்? என்ற கேள்வி வரும், எதற்காக இந்த கதாபாத்திரம் இதை செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால் உடனே அதை நிறுத்திவிடுவார், அதற்கான சரியான பதில் கொடுக்காமல் அந்த காட்சியை எடுக்க மாட்டார், அப்படி தான் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விளக்கங்களை கொடுத்து சூரியன் சார் எடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது
“டெக்ஸ்டர் படம் என்னுடைய பயணத்தில் ஒரு வித்தியாசமான படம். இயக்குநர் மற்றும் பி.ஆர்.ஓ தான் இந்த படத்தை வெளியிடுமாறு என்னை அனுகினார்கள். படம் பார்த்தோம், வித்தியாசமாக இருந்தது. சிறு வயதில் நடக்கும் ஒரு சம்பவம், அதனால் ஏற்படும் வெறுப்பை மனதுக்குள் வைத்திருப்பதால் பின்னாளில் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் கதை. அதேபோல் ஒரு மெசஜ் சொல்லியிருந்தார்கள். மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை கேட்டிருந்தால், இவ்வளவு தூரத்திற்கு இந்த விசயம் வந்திருக்காது, என்ற ட்விஸ்ட் படத்தில் இருக்கும், அது ரொம்ப நல்லாவே இருக்கிறது. இந்த படத்தின் மீது இயக்குநர் சூரியன் சார் நம்பிக்கையோடு இருக்கிறார், அதற்கு படத்தின் கதை முக்கிய காரணம். இன்று சிறு முதலீட்டு படங்களுக்கு பத்திரிகையாளர்கள் நிறைய சப்போர்ட் பண்றாங்க, இன்னும் நிறைய பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், அதற்காக பத்திரிகையாளர்களுக்கும், பிரசாத் லேபிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது, ஆனால் இன்று அதையும் தாண்டி மற்றொரு சிக்கல் உருவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் தேவா சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்கப்போவதில்லை, என்று அறிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இப்போதெல்லாம காப்பிரைட் பிரச்சனை சிறிய படங்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. ஒரு இயக்குநர் தான் சந்தித்த, அனுபவித்த சில சம்பவங்களை, நிகழ்வுகளை தங்களது படங்களில் எங்கேயாவது சிறியதாக பதிவு செய்ய விரும்புகிறார்கள், அதற்காக எதாவது ஒரு மூளையில் சில படத்தின் பாடல்கள் சிறியதாக இடம்பெறுகிறது, இதற்கு காப்பிரைட் சொல்லி பல லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். இது சிறிய படங்களை பெரிதும் பாதிக்கிறது. எனவே இந்த காப்பிரைட் பிரச்சனையில் இருந்து சிறிய படங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பணம் கேட்கலாம் சிறு தொகை கேட்டால் பரவாயில்லை, பெரியதாக கேட்டால் தயாரிப்பாளரகள் கஷ்ட்டப்படுவார்கள். எனவே இதை தமிழ் திரையுலகிற்கு ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். சிறிய படங்களுக்கு தயவு செய்து காப்பிரைட் கேட்க வேண்டாம். டெக்ஸ்டர் படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார்
பேசியதாவது
“படத்தோட டிரைலரை பார்க்கும் போது திரில்லர் ஜானர் என்பது தெரிகிறது. உண்மையாக இது சந்தோஷமான மாலையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் திறமையைப் பற்றி விருந்தினர்கள் நன்றாக பேசினார்கள். இங்கு ஹீரோ, வில்லன் என்று பேசினாலும், இறுதியில் அனைவரும் நடிகர்கள் என்பது தான் உண்மை. அந்த விதத்தில் அனைவரும் அவர் அவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். படம் தரமாகவும், அழகாகவும் இருக்கிறது. கிரைம் திரில்லர் படங்களை எல்லாம் பல கோடிகள் செலவு செய்து எடுக்கிறார்கள், ஆனால் அவற்றை பார்க்கிறது போல் இருக்காது. ஆனால், டெக்ஸ்டர் அப்படி இல்லாமல் ரொம்ப அழகான கிரைம் திரில்லர் ஜானர் படமாக இருக்கிறது. மிகப்பெரிய் ஹீரோக்களின் படங்கள் பார்க்கிற மாதிரி இல்லை, பாடல்கள், நடனம் என அனைத்துமே வல்கராக இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் அனைத்தும் அழகாக இருக்கிறது, எந்தவித ஆபாசமும் தெரியவில்லை, அந்த விதத்தில் பாடலை வைக்க வேண்டும் என்று இல்லாமல், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களை எடுத்திருக்கிறார்கள். லொக்கேஷன், இசை, வரிகள் என அனைத்துமே நன்றாக இருக்கிறது. இந்த படக்குழுவினர் பேசும் போதே அவர்களிடம் ஒரு ஒற்றுமை தெரிகிறது, நம்பிக்கை தெரிகிறது. கதை இருக்கிறது, திரைக்கதை நிச்சயம் நன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள், இயக்குநர் சூரியனுக்கு வாழ்த்துகள். சின்ன படம் பெரிய படம் என்பது எனக்கு தெரியவில்லை, படம், சினிமா அவ்வளவு தான். அந்த சினிமா தான் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சின்ன படங்களை வாழவைப்பது ஊடகங்கள் தான், இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். சினிமாவுக்கு மொழி இல்லை, ஊமை படங்களும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனவே சினிமாவுக்கு மொழி தேவையில்லை, ஆனால் சினிமாவை நம்பியிருப்பவரகள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள், நடிகர்களாகட்டும், தொழில்நுட்ப கலைஞர்களாகட்டும், அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை தான் நம்பியிருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த மொழி பேசினாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டை நம்பியிருப்பவ்ர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
திவா வைஸ் பிரசிடெண்ட் கலரிஸ்ட் முத்து, “இந்த நிகழ்விற்கு வருகை புரிந்திருக்கும் இயக்குநர்கள் செல்வமணி, ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம். நிறைய பேருக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ் பற்றி தெரிந்திருக்கும். ஆனால், டிஐ பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கு ஏற்ற நல்ல விஷூவல் கொண்டு வரும் புராசெஸாக டிஐ இருக்கிறது. தொழில்நுட்ப ககைஞர்களுக்கு என ஒரு அசோஷியேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. கலரிஸ்ட், டிஐ, விஎஃப்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விருதுகளும் வழங்கி உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அதன் முன்னெடுப்பாகதான் இந்த ‘திவா ஒடிஸி விருதுகள்’ தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
ஒடிஸி நிறுவனர் ஹர்ஷவர்தன், “திவா ஃபெப்ஸியில் இணைய உறுதுணையாக இருக்கும் செல்வமணி சாருக்கு நன்றி. விஎஃப்எக்ஸ் சூப்ரவைஸர் என்ற பொசிஷன் நமக்குத் தெரிய வருவதற்கு முன்பே ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களில் கமல் சாரே நடிகர், விஎஃப்எக்ஸ் போன்ற எல்லா பணிகளையும் சேர்த்து ஒரே நபராக செய்திருக்கிறார். அவருக்கும் முன்பே என் தாத்தா விஎஃப்எக்ஸ் இல்லாத காலக்கட்டத்திலேயே பல படங்களில் திறம்பட பணிபுரிந்திருக்கிறார். இது போன்று பல கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ராஜமவுலி போன்ற இயக்குநர்களின் கற்பனையை திரையில் கொண்டு வருவதற்கு இவர்களது பங்கு மிகப் பெரியது. எங்களது இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார், “ஃபிலிம் இருந்த காலத்தில் டிஐ தேவைப்படவில்லை. ஆனால், டிஜிட்டல் வந்த பின்பு இதன் பயன்பாடு அதிகரித்தது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதும் யூனியனாக அவர்கள் ஒன்றிணைவதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தொழிலாளர்களின் அடிப்படைத் தேவை இன்று விழாவாக மாறியிருக்கிறது. முன்பெல்லாம் படம் முடித்த பின்பு தான் விஎப்எக்ஸ் பற்றி தயாரிப்பாளர்களிடம் பேச முடியும். ஆனால், இன்று ஸ்கிரிப்ட் முடிந்த உடனேயே படக்குழுவினர் அனைவருக்கும் படம் எப்படி வரப்போகிறது என்பதை முன்கூட்டியே காண்பிப்பதற்கான தொழிலாளர்கள் எல்லாருமே இந்த சங்கத்தில் இருக்கிறார்கள். இது படத்தின் பட்ஜெட்டை பெருமளவு குறைக்கவும் உதவுகிறது. இந்த சங்கத்திற்கும் முன்னெடுப்பிற்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “திவாவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்! முன்பு நான் படம் செய்யும் பொழுது நினைத்ததை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும் பண உழைப்பும் தேவைப்பட்டது. அதிலும் 40% தான் எட்ட முடியும். ஆனால், இன்று அது தொழில்நுட்பத்தின் உதவியால் 100% மாறி இருக்கிறது. பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் காலகட்டத்தில் தான் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்பு ரஜினி, கமல் என நடிகர்களின் கட்டுப்பாட்டிற்கு சினிமா வந்தது. இப்போது 2025 ல் இருந்து 2050 வரையிலான காலக்கட்டத்தில் சினிமாவை ஆளப்போவது விஎஃப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பம் தான். அவர்களுக்காக ஒரு சங்கம் என்பது பெரிய விஷயம். உங்கள் திறமையை எல்லோருக்கும் கொடுங்கள். அப்பொழுது தான் நீங்களும் சினிமாவும் வளர முடியும். மூன்று வருடம் உங்கள் யூனியனை சரியாக நடத்தினால் ஃபெப்சியில் இணைய வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி இருந்தேன். இப்பொழுது இரண்டாவது வருடத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் ஃபெப்சியில் இணைவதற்கான முன்னெடுப்பை எடுப்போம். அதேபோல மத்திய மாநில அரசிடமும் பேசி உங்களை அங்கீகரிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காமல் அவர்களுடன் இணைந்து இணக்கமாக பணிபுரிவதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மையும் வாய்மையும் எப்போதும் வெல்லும். சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள்” என்றார்.
அமெரிக்கன் சொசைட்டி ஆப் சினிமாட்டோகிராபர்ஸ் ASC இல் நான் ஏற்கப்பட்டதற்கு எனது இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது என் தனிப்பட்ட சாதனை அன்று:
பல தரப்பட்ட மனிதர்களின் ஆதரவின்றி சாத்தியமே இல்லாத ஒரு மைல்கல் ஆகும்.
என்னை ஊக்கப் படுத்திய
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, பெரும் நன்றி: என் தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றதற்கு.
நான் பணி புரிந்த படங்களை இயக்கிய ஒவ்வொரு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் , சக தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், ஒவ்வொரு கட்டத்திலும் என்னைச் சிறப்பாகச் செயல் படத் தூண்டியதற்கும் நன்றி.
ASC இல் உள்ள நண்பர்கள் மற்றும் மரியாதைக்குரிய ஒளிப்பதிவாளர்களுக்கு, மிக்க நன்றி, நீங்கள் என்னில் ஏதோ ஒன்றைக் கண்டு, இந்த அசாதாரண வாய்ப்பை எனக்குக் கொடுத்தீர்கள். உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது.
என்னிடம் உள்ள அனைத்து திறமைகளையும் ASC சமூகத்திற்கு பங்களிக்க நான் விழைகிறேன்.
இது என் வாழ்வில் மிகுந்த தன்னடக்கத்தை போதிக்கிற தருணம், இதை நான் நெஞ்சார்ந்த நன்றியுடனும், பெரும் பொறுப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
*
I would like to take a moment to reflect and express my gratitude for my induction into ASC, a milestone that would not have been possible without the support of so many incredible people.
To the press and media, thank you for carrying the news far and wide.
To every director, producer, fellow crew member I’ve had the privilege of working with, thank you for being a part of my journey and pushing me to be better with every project.
To the friends and respected dignitaries at ASC , you saw something in me and gave me this extraordinary opportunity. Your support has been invaluable. I look forward to learning, growing, and contributing to the ASC community with everything I have.
This is a humbling moment, and I accept it with immense gratitude and responsibility.