Harish Kalyan’s ‘Diesel’ has been bringing forth an impeccable stream of exhilaration among the fans with back-to-back chartbuster songs, which keep scaling millions of views. The first single, “Beer Song,” became a massive success, capturing the hearts of not just the Tamil regions, but also top Bollywood actors and international audiences. Well, the song is now the most-celebrated one on the social media platforms, and during this juncture, the ‘Diesel’ team throws yet another feast for the fans with the new single ‘Dillubaru Aaja’. With iconic Silambarasan TR crooning the track in his signature style, and the energetic composing by music director Dhibu Ninan Thomas, with the icing on the cake – the dazzling dance by Harish Kalyan, the track has become an instant attraction. Not to miss the exquisite elegance added by Swetha Mohan well complimented by Athulyaa Ravi’s screen presence, and the bunch of kids and male chorus singers, who make it more enlivened. Shobi Master, who has made it a point of showcasing unique styles in every song, has yet again proved his credibility as a brilliant choreographer through this song. With both the songs proving to be tremendous hits, the expectations towards the film’s teaser has significantly peaked up. STR’s voice, Harish Kalyan’s dance and Dhibu’s composing together have made it an appealing track.
‘Diesel’ is written and directed by Shanmugham Muthusamy, and it is the first-ever big-budgeted movie in the career of Harish Kalyan to date. The film is produced by Devarajulu Markandeyan of Third Eye Entertainment. Dhibu Ninan Thomas, whose discography is brimming with unstoppable Chartbuster hits has composed music for this movie, which features cinematography by M.S. Prabhu and Richard M Nathan. San Lokesh is the editor, and action choreography is done by Stunt Silva & Rajasekhar. Production is by SP Cinemas.
Diesel’s star cast includes Harish Kalyan, Athulya Ravi, Vinay, Sai Kumar, Ananya, Karunaas, Vivek Prasanna, Sachin Kedhekar, Zakir Husain, Thangadurai, and KPY Dheena.
The others in the technical are, Scarecrow (Production Designer), Shobi (Dillubaru Aaja), Rajusundaram, Sherif (Choreography), Praveen Raja, Harsha Chalapalli, Swapna (Costume Designers), V Kishore Kumar (Creative Producer), and Suresh Chandra-Abdul Nassar (PRO).
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுபரு ஆஜா’ வெளியாகியுள்ளது!
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் சிங்கிளான ‘பீர் சாங்’ தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் மற்றும் சர்வதேச ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இந்த பாடல் சமூக ஊடக தளங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. இப்போது, ‘டீசல்’ படக்குழு அடுத்தப் பாடலான ‘தில்லுபரு ஆஜா’ மூலம் ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிலம்பரசன் டிஆர் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் எனர்ஜிடிக் இசையமைப்பில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஹரிஷ் கல்யாணின் எனர்ஜிடிக் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஸ்வேதா மோகனின் ஈர்க்கும் குரல் நடிகை அதுல்யா ரவியின் திரை இருப்புக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் குழந்தைகள் மற்றும் கோரஸ் பாடகர்களின் குரல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பாடலிலும் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தி வரும் ஷோபி மாஸ்டர், இந்தப் பாடலிலும் சிறந்த நடனத்தைக் கொடுத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான இந்த இரண்டு பாடல்களுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கிய ‘டீசல்’ படம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்.எஸ் பிரபு மற்றும் ரிச்சர்ட் எம் நாதன் ஆகியோர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர் ஆக்ஷன் கோரியோகிராஃபியும் செய்திருக்கின்றனர். புரொடக்ஷன் பை எஸ்பி சினிமாஸ்.
‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தல்!
இந்தப் புதிய ஆண்டு 2025தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’.
இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன்,
அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர்.
மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.
காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.
இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள்.
படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.
உதாரணத்திற்குச் சில:
படங்களைத் தர நிர்ணயம் செய்யும் IMDB படத்திற்கு 10 க்கு 9.9 தர மதிப்பெண்கள் கொடுத்திருந்தது.’புக் மை ஷோ ‘தளம் 10 க்கு 9 குறியீட்டைக் காட்டியது.
தமிழின் முன்னணி இதழான தினத்தந்தி ‘துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குநராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி ‘என்றும் ‘கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் ‘என்றும் பாராட்டிருந்தது .
இந்து தமிழ் திசை இதழ் ‘யூகிக்க முடியாத ஆனால் நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையால் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு’ என்று கூறியிருந்தது.
தினகரன் இதழ், ‘ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‘என்று பாராட்டியது.
மாலைமலர் இதழ், ‘யாருமே எதிர்பாராத திருப்பத்தை இறுதிக்காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. சுவாரசியம் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக லாரா படம் அமைந்துள்ளது ‘என்று பாராட்டியது.
ZEE தமிழ் NEWS, ‘ க்ரைம் தில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு’ லாரா’ நிச்சயம் பிடிக்கலாம்’ என்று கூறியது.
டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில இதழ் ,’ ஒரு சிறு நகரம் சார்ந்த மர்மக் கதையாக இது சரியாக எடுக்கப்பட்டுள்ளது’ என்று பாராட்டியது .
அது மட்டுமல்லாமல் நான்கரை நட்சத்திர மதிப்பையும் கொடுத்து இருந்தது.
இவ்வாறு ஊடகங்களில் கவனம் பெற்றுப் பாராட்டுகளைப் பெற்ற ‘லாரா’ படம்
வணிகரீதிலும்
வெற்றி பெற்று இந்த ஆண்டின் திரைப்படங்களிலேயே முதலில் வெற்றிக்கனி ருசித்த படம் என்ற பெருமையைப் பெற்றது.
இப்போது ‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி அடுத்த தளத்திலான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றிப் பரிமாணத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
The Dhoniverse and its trusted secrets: Dhoni’s hair strategy you’ll want to steal When the power couple MS Dhoni and Sakshi team up, you know something special is in the air—this time, it’s all about looking naturally awesome, thanks to Garnier Black Naturals! In their latest teaser, the playful banter between them steals the spotlight (and your heart). As Sakshi teases Dhoni about his endless candid interviews, she can’t help but mention how someone recently asked him how he looks like he’s still in his 30s at 43. His response? “Hair colour and beard colour”. But hold on—Sakshi quickly points out that she’s the one who colors his hair, not to be left behind in the credit game! So, when she asks him, “Which colour do you use?”, Dhoni flashes that signature grin and, in true Dhoni style, says, “I can’t reveal all my secrets just yet.” And there it is—the Dhoniverse and its Trusted Secrets that only a select few know! Now, we’ve all seen MS Dhoni’s cool, calculated decisions on the cricket field! But when it comes to his hair, Dhoni’s got a winning call off the field too. And remember, the Dhoniverse and its Trusted Secrets are the key to making every moment feel like a winning streak! Link : https://www.instagram.com/reel/DGS966iKaAx/?igsh=MTE4MjNycXY2OWsyNw==
தோனிவர்ஸ் மற்றும் அதன் நன்கு பாதுகாக்கப்பட்ட இரகசியங்கள்: தோனியின் ஹேர்ஸ்டைலை நீங்கள் நகலெடுக்க விரும்புவீர்கள்!
சக்திவாய்ந்த தம்பதிகளான எம்.எஸ். தோனியும் சாக்ஷியும் இணையும்போது, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள் – இந்த முறை, இயற்கையாகவே அற்புதமாகத் தோன்றுவது பற்றியது, கார்னியர் பிளாக் நேச்சுரல்ஸுக்கு நன்றி!
அவர்களுக்கு இடையேயான இந்த மகிழ்ச்சியான கிண்டல் அவர்களின் சமீபத்திய டீசரில் மையமாகிறது (உங்கள் இதயத்தையும்). சமீபத்தில் ஒருவர் தோனியிடம் 43 வயதில் 30 வயதில் எப்படி இருக்கிறார் என்று கேட்டதை சாக்ஷி நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது, ஆனால் அவர் தொடர்ந்து வெளிப்படையாக பேட்டி அளித்ததற்காக அவரை கேலி செய்கிறார். அவரது பதில் என்ன? “முடியின் நிறமும் தாடியின் நிறமும்.” பெருமைக்குரிய விளையாட்டிலிருந்து விடுபடாமல் இருக்க, சாக்ஷி அவரது தலைமுடிக்கு கலர் பூசுவது தான் என்று விரைவாக தெளிவுபடுத்துகிறார். எனவே, “நீங்கள் எந்த கலரைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கும்போது, தோனி தனது முத்திரை புன்னகையுடன் புன்னகைத்து, வழக்கமான தோனி பாணியில், “என்னால் இன்னும் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த முடியாது” என்று பதிலளிக்கிறார்.
ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த தோனிவர்ஸ் மற்றும் அதன் நன்கு பாதுகாக்கப்பட்ட இரகசியங்கள் இங்கே!
இப்போது, கிரிக்கெட் மைதானத்தில் எம்.எஸ்.தோனியின் நன்கு யோசித்த பிறகு எடுத்த முடிவுகளை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்! இருப்பினும், அவரது தலைமுடியைப் பொறுத்தவரை, தோனிக்கு மைதானத்திற்கு வெளியேயும் வெற்றி வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒவ்வொரு தருணத்தையும் ஒரு வெற்றித் தொடராக உணர வைப்பதற்கான இரகசியம் தோனிவர்ஸ் மற்றும் அதன் பாதுகாக்கப்பட்ட இரகசியங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
புதிய தகவல்களுக்கு தொடர்ந்து பாருங்கள்…..ஏனெனில் மிகச் சிறந்த விஷயங்கள் விரைவில் வருகின்றன!
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகிற்கு நிவாரணமாக அமையும் என்றார்.
தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு துணை முதல்வர், கலைஞானி அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார். தவிர, பனையூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக்கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக தனது நன்றிகளை திரு. கமல்ஹாசன் மேடையிலேயே தெரிவித்தார்.
We are excited to share that Anchal Kumar Mittal has collaborated with Recode Studios to promote their latest range of beauty products, including Kajal, Lipstick, Goat Milk Moisturizer, and Strobe Cream. She is the better half of Anupam Mittal, the founder, and CEO of People Group(Shaadi.com, Makan.com) – and also one of the most popular judges of Shark Tank India.
Attached are a few pictures from the recent shoot that complement the story. For any media queries, please feel free to reach out. Thank you for your time and consideration. We look forward to your continued support.
Anchal Kumar Mittal Partners with Recode Studios to Showcase New Beauty Product Line
Mumbai, February 2025 – Model and influencer Anchal Kumar Mittal has teamed up with Recode Studios to promote their latest beauty products, including Silky Matte Lipstick, Goat Milk Moisturizer, Strobe Cream, Foundation HD Luminous & All That She Wants Black Kajal. Recode Studios is known for making premium beauty products accessible and affordable, catering to women seeking both style and convenience in their daily beauty routines.
Anchal expressed her enthusiasm about the collaboration, stating, “I’ve always been drawn to brands that offer simplicity and ease without compromising quality. Recode’s new range does just that—it’s versatile and perfect for someone like me who is always on the go. I love how I can create a variety of looks without needing an overwhelming number of products.” Commenting on the association Dheeraj Bansal, Co-Founder of Recode Studios said “”At Recode, we believe that beauty should be luxurious yet within reach. This collaboration with Anchal is a testament to our commitment to making high-performance makeup that fits seamlessly into every woman’s routine. Whether you’re glamming up for an event or keeping it minimal, our collection has something for everyone.”
Recode Studios continues to push the boundaries of accessible beauty with its ethos of making premium products affordable for all. Through this collaboration, the brand aims to reach a broader audience of makeup lovers who seek everyday elegance and functionality in their beauty routines.
Chennai, 7th–8th February 2025 – The School of Commerce at S.A. College of Arts & Science successfully hosted a two-day National Seminar on “Promoting Sustainable Development Goals (SDGs) Through Regional Language Translation,” organized by the Commission for Scientific and Technical Terminology (CSTT), Ministry of Education, Government of India. The seminar highlighted the pivotal role of language in advancing sustainable development and ensuring accessibility for all.
The seminar was inaugurated by Ms. Mercy Lalrohluo Hmar, Assistant Director – Chemistry, CSTT, New Delhi. The day one’s sessions featured distinguished speakers addressing various Sustainable Development Goals:
Dr. Prof. C. Vethirajan from Alagappa University spoke on SDG – Peace & Justice, emphasizing the importance of fairness, transparency, and strong institutions in achieving sustainable societies. Mr. Abishek Sham Ranjan, Program Director of PRS Group, explored SDG – Industry, Innovation, and Infrastructure, discussing the role of technological advancements and resilient infrastructure in fostering economic growth. Mr. Sandeep Modi, Founder of Swastick Tea Pvt. Ltd., addressed SDG – Responsible Consumption and Production, advocating for sustainable business practices and mindful resource utilization. Dr. Sowmiya, Professor at Vel Tech University, spoke on SDG – No Poverty and Zero Hunger, stressing the need for strategic policies and community-driven initiatives to eradicate poverty and hunger.
The second day of the seminar featured thought-provoking sessions by eminent scholars:
Dr. Nazeema A emphasized the necessity of gender equality through education and leadership opportunities. Mr. Sendhil Annamalai underscored the significance of partnerships in achieving SDGs, highlighting the need for multi-stakeholder collaboration. Dr. Gayathri E advocated for quality education and teacher development as catalysts for sustainable progress. Dr. Shobha L addressed the importance of decent work and fair labor practices in economic sustainability. Dr. J.S. Bhuvaneswaran highlighted the critical role of universal healthcare and mental well-being in holistic development. Prof. Girish Nath Jha, CSTT Chairman gave a special address through online platform in the valedictiory session. The seminar was planned and organized by the Director, Dr. V. Sayi Satyavathi, and the Principal, Dr. Malathi Selvakkumar. The Correspondent, Thiru. P. Venkatesh Raja presided over the Valediction. The seminar reinforced the necessity of regional language translation in realizing the SDGs, advocating for linguistic inclusivity and cross-sector collaboration to build a more equitable and sustainable future.
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் முதலிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி பேசுகையில், “தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “கல்லா இருந்த என்னை மாணிக்கக்கல்லாக மாற்றினார் சமுத்திரக்கனி. ராமரால் அகலிகைக்கு வாழ்க்கை கிடைச்சது போல், அவரால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது. அவர் சிறகில்லா தேவதை. அனைவரையும் கை பிடிச்சு உயர கூட்டிட்டுப் போவார். ‘ராமம் ராகவம்’ பத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது, என் மனதில் அப்பா மின்னல் போல் வந்துட்டுப் போனார். இதுதான் இந்தப் படத்தோட வெற்றி” என்றார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசுகையில், “அன்பாலான அனைவர்க்கும் வணக்கம். ராமம் என்றால் புகழ்; ராகவம் என்றால் மகன். தாயாக யார் வேண்டுமானால் வாழ்ந்துடலாம். தாயின் வயிற்றில் பத்து மாதம் இருப்பதால் தாய்மை அனைவரிடமும் இருக்கு. ஒரு மனிதன் தாயாக வாழ்வது இயற்கையான விஷயம். ஆனால் ஒரு மனிதன் தந்தையாக மாறுவதென்பது தவம். 40 வயதில், ஒருவனது முகம் அவனோட தந்தை முகமாக மாறும். சின்ன வயதில் என் முகம் என் அம்மா அமுதவல்லியின் முகமாக இருந்தது. நாற்பதைத் தாண்டியதும், என் அப்பா வடிவேலுவின் முகமாக மாறிவிட்டது. பெண்மையும் அன்பும் சேரும் போது தந்தை உருவாகிறான். தந்தை மட்டுமே மகனிடம் தோற்க ஆசைப்படுவான். வேறெந்த உறவும் யாருடனும் தோற்க ஆசைப்படுவதில்லை. ராமாயணத்தில் தசரதனும் கஷ்டப்படுறான், மகாபாரதத்தில் கெட்ட பிள்ளை பெற்ற திருதுராஷ்ட்ரனும் கஷ்டப்படுகின்றான். பெரிய வெற்றி பெற்ற தந்தையின் மகன், தந்தையை வெல்ல முடியாமல் வாழ்நாளெல்லாம் கஷ்டப்படுவான். அவன் எப்படி வெற்றி பெறலாம் என்றால் நல்ல பெயர் எடுத்து ஜெயிக்கலாம்.
காந்தியை சுயசரிதையை எழுதச் சொல்றாங்க. ‘சுயசரிதை என்றால் தன் புகழைப் பாடுவது’ன்னு முன்னுரையில் எழுதுறார். ‘அது எனக்குக் கூச்சமா இருக்கு’ என்று சொல்லிவிட்டு, ‘நான் சத்தியத்தை எழுதுகிறேன்’ எனச் சொல்லியிருப்பார். காந்திக்கு 14 வயசு இருக்கும். பீடி பிடிப்பார், புலால் சாப்பிடுவார், திருடுவார். படுக்கையில் இருக்கும் அவர் அப்பாவிற்குக் கால் அமுக்கிக் கொண்டே, துளசிதாஸின் ராமாயணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘சிறந்த மகனான ராமன் பற்றியக் கதையைக் கேட்கிறோம். தான் நிறைய செய்கிறோம்’ என காந்திக்குக் குற்றவுணர்வு எழுகிறது. நேராகத் தந்தையிடம் பேச பயம். அதனால் வீட்ல இருந்து கொண்டே தந்தைக்குக் கடிதம் எழுதுறார். ‘ராமாயணம் மிகச் சிறந்த மகனைப் பற்றிய கதையா இருக்கு. ஆனா நான் நிறைய தவறு பண்றேன்’ என எழுதி போஸ்ட் பண்ணுகிறார். காந்தியின் அப்பாக்குக் கடிதம் வருது. காந்தியின் எதிரிலேயே அவரது அப்பா அந்தக் கடிதத்தைப் படிப்பார். காந்தி மூலையில நிப்பாரு. ‘அப்பா அடிப்பார்’ என காந்தி நினைக்கிறார். ஆனா காந்தியின் அப்பா அழுதுட்டே அந்த லெட்டரைப் படிப்பார். அதைப் பார்த்து காந்தியும் அழுகிறார். காந்தியை அவர் அப்பா எதுவும் கேட்காமல், அழுதுட்டே, ‘நீ போ’ என்கிறார். ‘அஹிம்சை தான் சிறந்த ஆயுதம் என நான் கண்டுபிடிச்ச இடம் இதுதான்’ என்கிறார் காந்தி.
தந்தையின் கண்ணீர் என்பது சாதாரண விஷயமில்லை. கண்ணீர் அமிர்தம் போன்றது. ஒரு ஏழைக்காகக் கண்ணீர் விட்டால் நீங்க கடவுள் ஆகிடுறீங்க. கஷ்டப்படும் மனிதனுக்காகக் குரல் கொடுத்தால் பாதி கடவுள். சத்தமிடப் பயந்து, மனதால் அங்கே நல்லது நடக்கணும் என நினைத்தால் கால் கடவுள். இறங்கித் தடுத்துட்டா முழுக் கடவுள். தந்தையின் மனம் என்பது கடவுளின் மனது. கடவுள் மாதிரி ஆகணும்ன்னா நீங்க தந்தை ஆகணும். புது இயக்குநர் தன்ராஜ் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
அறிமுக இயக்குநர் தனராஜ் பேசுகையில், “கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் கை இதுவரை எனக்குத் துணையாக இருக்கு. அப்பாவாக 21 படங்கள் சமுத்திரக்கனி நடித்திருக்கிறாராம். படத்தின் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எனக்கு அப்பா இல்லை. இப்போ சமுத்திரக்கனி அப்பா இருக்காங்க. எனக்கு இந்தப் படம் குடும்பத்தைக் கொடுத்துச்சு. எனக்கு அம்மாவும் இல்லை. இப்போ இருக்காங்க. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம்” என்றார்.
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், “தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல கதை சொன்னான். கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான். கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா’ என்றேன். ‘அண்ண!!’ என்றான். ‘நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.
Created and written by the visionary duo Pushkar & Gayatri, this season is directed by Bramma & Sarjun and produced under the banner of Wallwatcher Films.
The eight-episode series features an exceptionally talented cast, including Kathir and Aishwarya Rajesh in the lead along with Lal, Saravanan, Gouri Kishan, Samyuktha Vishwanathan, Monisha Blessy, Rini, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Kalaivani Bhaskar, and Ashwini Nambiar in pivotal roles, along with Manjima Mohan and Kayal Chandran making special appearances
Suzhal-The Vortex Season 2 is set to premiere exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide on February 28
Mumbai, India—February 19, 2025—Prime Video, India’s most loved entertainment destination, launched the enthralling trailer for the second season of its critically acclaimed Tamil crime thriller Original series Suzhal—The Vortex, which transported the audience right into the eye of the storm. Produced under the banner of Wallwatcher Films, written and created by Pushkar and Gayatri, and directed by Bramma and Sarjun KM, the series features a highly talented ensemble cast, including Kathir and Aishwarya Rajesh returning in lead roles, along with Lal, Saravanan, Gouri Kishan (Muthu), Samyuktha Vishwanathan (Naachi), Monisha Blessy (Muppi), Rini (Gaandhari), Shrisha (Veera), Abhirami Bose (Senbagam), Nikhila Sankar (Sandhanam), Kalaivani Bhaskar (Ulagu), and Ashwini Nambiar in pivotal roles, along with Manjima Mohan and Kayal Chandran making special appearances. Suzhal—The Vortex season 2 is set to exclusively premiere on Prime Video in India and over 240 countries and territories worldwide on February 28 in Tamil, Telugu, Hindi, Malayalam, and Kannada with English subtitles.
The second season of the award-winning series is set against the backdrop of the annual Ashtakaali festival held in the fictional village of Kaalipattanam in Tamil Nadu, where the brutal murder of a veteran activist lawyer and social worker, Chellappa (Lal), shakes the entire village to its core and casts a dark shadow reaching far beyond the village and its people. As Sakkarai (Kathir) is tasked with solving the mysterious and unsettling crime, the ghosts of Nandini’s (Aishwarya) past continue to haunt her as she stares at an uncertain future in prison. The investigation takes both of them spiraling down a maze of deceit, secrecy, crime, conspiracy, and deaths that gets more entangled when 8 young women, unconnected to each other become the primary suspects in the murder. To solve the case and get to the truth, Sakkarai will have to navigate conspicuous motives, personal vendettas, and deeds of the past before he is consumed by the darkness of the gruesome crime.
“After the phenomenal response to the first season of Suzhal—The Vortex, we set a high bar for ourselves to ensure the audience finds the second season even more captivating,” said directors Bramma and Sarjun KM. “Pushkar and Gayatri have crafted an even more engrossing narrative, which we meticulously and creatively directed to bring to life. As Kathir and Aishwarya deliver yet another spellbinding performance, along with the stellar ensemble cast, our task as directors became much easier. We can’t wait for the audience to immerse themselves in the world of Suzhal—The Vortex once again and are confident they will find season two incredibly compelling.”
“I am thrilled to reprise my role as Sub-Inspector Sakkarai in the second season of Suzhal—The Vortex, a groundbreaking series that pushed the envelope in Tamil storytelling, putting our industry on the global map, and winning national accolades. Pushkar and Gayatri are true visionaries who have crafted yet another gripping and entertaining narrative for season two. The overwhelming response from both audiences and critics to my performance and the first season was truly humbling, and I am hopeful that everyone will appreciate the second season just as much or more,” said Kathir.
Aishwarya Rajesh added, “Suzhal—The Vortex will always be one of my most rewarding and memorable projects, and I still feel overwhelmed by the love and appreciation I received for my performance in the first season of the series. Playing Nandini was a complete rollercoaster, as she went from searching for her younger sister to reliving her suppressed memories and then avenging the heinous crime committed against herself and her sister. And in season two, she isn’t free of the nightmares, as she finds herself in the middle of another unfathomable murder mystery. If season one was exciting, season two will be even more unpredictable for the audience, and I can’t wait for them to watch it when it premieres on Prime Video in over 240 countries and territories worldwide.”
பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லரை வெளியிட்டு!
முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர்
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது.
மும்பை, இந்தியா—பிப்ரவரி 19, 2025— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பார்வையாளர்களை புயலின் மையத்துக்குள் கடத்திச் சென்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் இன் மனதைக் கொள்ளை கொள்ளும் டிரெய்லரை வெளியிட்டது. புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால் Lal, சரவணன் Saravanan, கௌரி கிஷன் Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி Monisha Blessy (முப்பி), ரினி Rini (காந்தாரி), ஷ்ரிஷா Shrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர் Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார் Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன் Manjima Mohan மற்றும் கயல் சந்திரன் Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
“சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசனுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக கவர்ந்திழுப்பதை உறுதி செய்ய எங்களது திறனளவு குறியெல்லையை இன்னும் சற்று உயரே அமைத்து அதை நோக்கிப் பயணித்தோம்,” என்று இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் KM. கூறினார்கள். “புஷ்கரும் காயத்ரியும் மேலும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய கதையை உருவாக்கி, அதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கியுள்ளனர் அதற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் நாங்கள் கவனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயக்கியுள்ளோம். ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கதிர் மற்றும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒரு மனதை மயக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில், இயக்குநர்களாக எங்கள் பணி மிகவும் எளிதாகிவிட்டது. சுழல் – தி வோர்டெக்ஸ் உலகில் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மூழ்கடித்துக்கொண்டு பரவசமடைவதை காண நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் இந்த இரண்டாவது சீசன் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு ஈர்ப்பதாக உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
“தமிழ் கதைசொல்லலில் புரட்சிகரமான ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து நமது கலைத் துறையை உலகளவில் புகழ் பெறச்செய்து, தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற சூழல் – தி வோர்டெக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையாக மீண்டும் தோன்றி நடிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது சீசனுக்காக மேலும் ஒரு ஆர்வத்தை தூண்டும் பரபரப்பான பொழுதுபோக்கு கதையை வடிவமைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி.. இருவரும் உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புரட்சிகரமான படைப்பாளிகள் . இதன் முதல் சீசன் மற்றும் அதில் நான் வெளிப்படுத்திய நடிப்பு இரண்டுக்கும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு உண்மையிலேயே மனதளவில் என்னை உற்சாகமடையச் செய்துவிட்டது, மேலும் அனைவரும் அதே அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக இரண்டாவது சீசனையும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கதிர் கூறினார்.
“சுழல் – தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு நெருக்கமான பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒரு படைப்பாக எப்போதும் நிலைத்திருக்கும். மேலும் தொடரின் முதல் சீசனில் எனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளில் இருந்து இன்னும் நான் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். தனது தங்கையைத் தேடிச் செல்வது தொடங்கி மறக்க நினைத்த நினைவுகளை சுமந்து மீண்டும் வாழ்க்கையை தொடர்ந்து தனக்கும், தன் சகோதரிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்குப் பழி வாங்கியது வரையிலான நந்தினியின் பாத்திரத்தில் நடித்தது… நடிப்பது…. ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் பயணமாக எளிதில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இரண்டாவது சீசனிலும் அந்த பயங்கரம் அவளை விட்டு விலகுவதாக இல்லை, அவள் மற்றொரு மர்மம் நிறைந்த கொடூரமான கொலைக்கு மத்தியில் தான் சிக்குண்டுள்ளதை காண்கிறாள். முதல் சீசன் உற்சாகமளித்ததாக, பார்வையாளர்கள் கருதியிருந்த நிலையில் இந்த இரண்டாவது சீசன் அவர்கள் எதிர்பாராத அளவு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இது உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Megastar Chiranjeevi is not only known for his exemplary acting and superstardom but also for his humanitarian services. By establishing a Blood Bank and Eye Bank, Chiranjeevi has helped a lot of people in need and has also persuaded his fans to donate their blood and eyes.
Copyright FREE Video Link 🔗
https://we.tl/t-y6yoNBSaJU
Not only fans but many film celebrities and influential personalities have shown their love towards Chiranjeevi by participating in blood donation at his blood bank. Recently, renowned music director, “Melody Brahma” Mani Sharma, also donated his blood at Chiranjeevi Blood Bank and showed his love towards the actor. This is the second time he has donated blood at Chiranjeevi Blood Bank.
As per Chiranjeevi’s appeal, many fans donate their blood without any second thoughts. Even Mani Sharma obliged Megastar’s appeal and inspired others by donating his blood. Mani Sharma has composed many successful albums for Chiranjeevi over the years. Now, by donating his blood, he has showcased his love towards Megastar and also set an inspiration for others to donate their blood.
On this occasion, Mani Sharma said, “I have been thinking about donating my blood for a long time. I showed my admiration towards Chiranjeevi garu by composing music for his films. Now, I donated blood as I felt it is my duty, and I am happy about it. Lakhs of people have taken part in this noble initiative, and I have become a small part of it now. I hope many others also take part in this blood donation drive in the coming days.”
Vanshika Makkar Films சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன், முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்
தயாரிப்பாளர் ப்ரீத்தி அமித் குமார் பேசியதாவது…
எங்கள் திரைப்படத்திற்கு வருகை தந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம், அனைவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி.
இசையமைப்பாளர் தீனா பேசியதாவது…
தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்த படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கழிப்பறை மிக நல்ல கருத்து கொண்ட படம். உலகில் யாரும் உயர்ந்தவனில்லை, அனைவருமே நம் உடலில் கழிப்பறையை வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டு, அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல கிராமத்தில் கழிப்பறை இல்லாத நிலை இருந்தது, அதை நம் பிரதமர் மோடி மாற்றி வருகிறார். கழிப்பறை இல்லாத வீடு இல்லாத நிலை இன்று வந்துள்ளது. இந்த கருத்தைப் பேசும் இப்படம் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
பாடகர் உன்னி கிருஷ்ணன் பேசியதாவது…
இது மிக முக்கியமான தருணம், அமீத் சார் ஃபேமிலி எனக்கு மிக நெருக்கம், அவர்களின் பட விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இயக்குநர் கிஜு போன் செய்து, ஒரு டூயட் சாங்க் இருக்கு என்றார், அமீத் சார் பெண் தான் பாடப்போகிறார் என்றார், அவர் குரல் மிக அருமையாக இருந்தது, அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தது, அவருக்காகத் தான் இந்தப்படத்தில் நான் பாடினேன். ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கிஜுவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த டீம் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் RK அன்புச்செல்வன் பேசியதாவது….
விடாமுயற்சி எனும் பெயர் அமீத் சார், வன்ஷிகா, கிஜு ஆகியோருக்கு தான் பொருந்தும், அவ்வளவு உழைத்துள்ளார்கள். வன்ஷிகா மிக அருமையாகப் பாடுவார். என் மகளுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொன்னார் அமீத். இப்போது படம் எடுத்து அவர் மகளைப் பாட வைத்துள்ளார். கழிவறை இல்லாத வீடு இல்லை, கழிப்பறை இல்லாமல் வாழ முடியாது. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
பாடகி வன்ஷிகா பேசியதாவது…..
என் குருவிற்கு என் முதல் நன்றி. தயாரிப்பாளர்கள் என் அம்மா அப்பாவுக்கு என் நன்றி. எனக்குப் பாட வாய்ப்பளித்த ஸ்ரீகாந்த் சார், கிஜு சாருக்கு என் நன்றி. கழிப்பறை டீமுக்கு நன்றி. எனக்கு உங்கள் வாழ்த்தைத் தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தன் பேசியதாவது…
இது எங்களுக்கு மிக முக்கியமான படம், எங்கள் விழாவிற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
கழிப்பறை பட இயக்குநர் கிஜு பேசியதாவது…
கழிப்பறை, முதன் முதலில் இந்தப்படத்தின் கதையை அமித் சாரிடம் சொன்ன போது, பட்ஜெட் சின்னது தான், ஆனால் பட்ஜெட் தாண்டியும், சரி பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் தந்தார். Vanshika Makkar Films க்கு என் நன்றி. ஸ்ரீகாந்தன் என் இசையமைப்பாளர் மிக அருமையான பாடல் தந்துள்ளார். பாலமுருகன் என் நண்பர், செல்போனில் படமெடுத்த காலத்திலிருந்து அவர் தான் என் கேமராமேன், நான் என்ன படமெடுத்தாலும் அவர் தான் கேமராமேன். உன்னி சாரிடம் பாடல் பற்றிச் சொன்னேன், பாடல் பாடிவிட்டு பாட்டு நல்லாருக்கா ? என என்னிடம் கேட்டார். இந்த பணிவால் தான் அவர் இந்தளவு வளர்ந்துள்ளார். வன்ஷிகா என்ன மாதிரி பாடல் என்றாலும், மிக திறமையாகப் பாடி அசத்திவிட்டார். தமிழ் சினிமாவில் பெரிய உயரம் தொடுவார். என் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. கழிப்பறை ஒரு நல்ல படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது, உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.