- Advertisement -
Home Blog Page 262

மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி” உங்கள் ZEE5 தளத்தில் !!

0

அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ஜனவரி 31 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இந்த பிளாக்பஸ்டர் படத்தினை தவற விடாதீர்கள்.

பழிவாங்கும் கதைப்பின்னணியில், நீதியின் அவசியத்தைச் சொல்லும் இப்படம், ஆரம்பம் முதலே நம்மை ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் சவாரிக்கு அழைத்துச் செல்கிறது. இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கியுள்ள, இந்த உளவியல் த்ரில்லர், ஒரு பிளாக்மெயிலரான அமர் பெலிக்ஸின் கொலையின் மோசமான மர்மத்தை அவிழ்க்கிறது -. அந்தக்கொலையை நேரில் பார்த்த, முகங்களை அடையாளம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்ட அலிஷாவை, சிஐ ஆலன் ஜேக்கப் விசாரிக்கிறார். அந்த விசாரணை கராத்தே பயிற்றுவிப்பாளரான ஹரன் சங்கரிடம் செல்கிறது. ஆனால் கதை அங்கு முடிவதில்லை. ஹரனும் அலிஷாவும் கொலையின் பின்னணி குறித்த, அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த உண்மைகள் ஒரு பெரிய குற்ற நெட்வொர்க்கை வெளிக்கொண்டு வருகிறது.

இயக்குநர் அகில் பால் கூறுகையில்..,
“ஐடென்டிட்டி படத்தை உருவாக்கியது, ஒரு மறக்க முடியாத பயணமாகும். ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் மனித உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த ஒரு அழுத்தமான கதை. ஒவ்வொரு திருப்பத்திலும் பார்வையாளர்கள் யூகிக்க முடியாத, ஒரு உளவியல் த்ரில்லரை உருவாக்க நாங்கள் விரும்பினோம், திரையில் புதிய அனுபவமாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் உள்ள பரந்துபட்ட பார்வையாளர்களை இப்பட சென்றடையவுள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படத்தின் திருப்பங்களும் ஆழமும் அதைப் பார்க்கும் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.”

இயக்குநர் அனஸ் கான் கூறுகையில்..,
“ஐடென்டிட்டி திரைப்படம் ஒரு மிகப்பெரிய சவாலாகவும், ஆவலைத் தூண்டுவதாகவும் இருந்தது. இது மனித ஆன்மாவின் இருண்ட மூலைகளுக்குள் ஆழமாக மூழ்கி, பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் வைக்கும், ஒரு நல்ல பொழுதுபோக்கு திரில்லர். திறமையான நடிகர்கள் மற்றும் அற்புதமான குழுவினரின் உழைப்பில், இப்படம் மிகச்சிறந்த படைப்பாக உருவானது. இப்படம் ZEE5 மூலம் அனைத்து பார்வையாளர்களையும் சென்றடைவது மகிழ்ச்சி. இப்படத்தை உலகமெங்கும் உள்ள பார்வையாளர்கள் கண்டுகளிப்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

நடிகர் டோவினா தாமஸ் கூறுகையில்…, “
ஐடென்டிட்டி படத்தில் ஒரு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தது, எனது கேரியரில் மிகவும் த்ரில்லான மற்றும் சவாலான அனுபவங்களில் ஒன்றாகும். இந்தத் திரைப்படம் தீவிரமான உணர்ச்சிகள், சிக்கலான உறவுகள் மற்றும் நீதிக்கான இடைவிடாத போராட்டத்தைச் சொல்கிறது. உணர்வுப்பூர்வமான ஒரு அழுத்தமான திரில்லர் கதையில், நானும் ஒரு பங்காக இருந்தது மகிழ்ச்சி. ZEE5 மூலம், பார்வையாளர்கள் “ஐடெண்டிடி” படத்தின், அட்டகாசமான திருப்பங்களுடன் கூடிய, இந்த உளவியல் திரில்லரைக் கண்டு களிப்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் பேசுகையில்,
“ஐடென்டிட்டி என்பது வெறும் த்ரில்லர் அல்ல; இது மனித இயல்பினை, இருண்ட மனங்களை ஆராயும் கதையாகும், அதே நேரத்தில் இது பார்வையாளர்களை அதன் எதிர்பாராத திருப்பங்களுடன் கவர்ந்திழுக்கிறது. கதையின் ஆழமும் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும் தான் என்னை இந்த திரைப்படத்தை நோக்கி உண்மையிலேயே ஈர்த்தது. திறமையான நடிகர்களுடன், மிகச்சிறந்த இயக்குநர்களின் கீழ் பணியாற்றியது, ஒரு ஆக்கப்பூர்வமாக நிறைவான பயணமாக இருந்தது. இப்படம் உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களுக்குச் செல்லவுள்ளது மகிழ்ச்சி.

நடிகர் வினய் ராய் கூறுகையில்,
“இந்த திரைப்படத்தில், அகில் மற்றும் அனஸ் ஆகியோருடன் இந்த அற்புதமான குழுவில் ஒரு பகுதியாக இருந்ததை, அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். தடயவியல் துறையில் இணைந்து பணியாற்றியதால், அவர்களிடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. என்னை இந்த திரைப்படத்தில் வரவேற்ற பார்வையாளர்களுக்கு நன்றி. இந்தப் பாத்திரம் எனது கேரியரில் நான் நடித்த மிகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும். அகில் மற்றும் அனஸ் ஆகியோரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதை, உண்மையிலேயே தனித்துவமானது. இது மூன்று அழுத்தமான கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. இது துரோகம், சஸ்பென்ஸ் மற்றும் சிலிர்ப்பூட்டும் திருப்பங்களால் நிரம்பியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நீங்கள் விரும்பும் அனைத்தும், இப்படத்தில் இருக்கிறது. “ஐடெண்டிடி” 2025 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவிற்கு ஒரு அற்புதமான தொடக்கமாக இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

ஜனவரி 31 ஆம் தேதி, ZEE5 ஒரிஜினலான ஐடென்டிட்டி படத்தினை, மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

Velammal Nexus Honours Sports Achievers and Physical Education Teachers with Scholarships and Awards

0

Chennai, 28th January 2025

Velammal Nexus hosted a grand felicitation ceremony today at Velammal Hall to honor 416 athletes who have represented India and Tamil Nadu in various sports. The event celebrated the dedication and achievements of these athletes, reinforcing Velammal’s commitment to fostering sports excellence.

The ceremony was graced by prominent chief guests, including:

Ms. Thulasi Mathi, Para Badminton Player (Arjuna Awardee)
Ms. Manisha Ramadass, Para Badminton Player (Arjuna Awardee)
Ms. Nithya Sre Sivan, Para Badminton Player (Arjuna Awardee)
Mr. Abhay Singh, Indian Squash Player (Arjuna Awardee)
Mr. Kirubakararaja, General Secretary, Tamil Nadu Paralympic Sports Association
In a monumental gesture, Velammal Nexus announced sports scholarships worth ₹2.55 crores for the academic year 2025-26. Additionally, the institution will sponsor airfare expenses amounting to ₹30 lakhs for athletes representing Tamil Nadu at various national games.

As a highlight of the event, Velammal Nexus also felicitated their five best Physical Education Teachers for their exceptional contribution to sports development. These teachers were honored with brand-new cars, acknowledging their dedication to nurturing and mentoring young athletes.

This celebration underscores Velammal’s vision of nurturing talent and inspiring the next generation of champions while recognizing the efforts of educators who make these achievements possible.

விளையாட்டுத் திறமைகளை கொண்ட மாணவர்களையும் உடற்தகுதி ஆசிரியர்களையும் வெலம்மாள் நெக்சஸ் பாராட்டுகிறது

சென்னை, 28 ஜனவரி 2025

வெலம்மாள் நெக்சஸ், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 416 விளையாட்டு வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியை இன்று வெலம்மல் ஹாலில் மிகச் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சி, விளையாட்டுத் துறையில் மாணவர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாகவும், வெலம்மாளின் விளையாட்டு முன்னேற்றக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள்

திருமதி. துளசி மதி, பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்)
திருமதி. மணிஷா ராமதாஸ், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்)
திருமதி. நித்யா ஸ்ரீ சிவன், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்)
திரு. அபய் சிங், இந்திய ஸ்குவாஷ் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்)
திரு. கிருபாகரராஜா, செயலாளர், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம்
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, வெலம்மாள் மேட்ரிக் பள்ளியின் மாணவரும், சர்வதேச பேட்மின்டன் வீரருமான ரெதின் பிரணவ் பங்கேற்று பாராட்டப்பட்டார். அவரது சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பு, இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிகுந்த உத்வேகமாக உள்ளது.

வெலம்மாள் நெக்சஸ் 2025-26 கல்வியாண்டுக்காக ₹2.55 கோடி மதிப்புள்ள விளையாட்டு உதவித்தொகைகளை அறிவித்தது. மேலும், தமிழ்நாட்டை தேசிய விளையாட்டுகளில் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மாணவர்களின் விமான பயண செலவுகளுக்காக ₹30 லட்சம் மதிப்புள்ள நிதியையும் வழங்கியுள்ளது.

இதற்குட்பட்டது, வெலம்மாள் நெக்சஸ் தங்கள் சிறந்த ஐந்து உடற்தகுதி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து புதிய கார்கள் வழங்கியது. இப்புரட்சிகரமான நடவடிக்கை, விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

இந்த விழா, விளையாட்டு திறமைகளை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பதற்கும் வெலம்மாள் மேற்கொள்ளும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சசிகுமார் – ராஜு முருகன் இணையும் ‘ மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் – கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி – தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி – மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ‘ மை லார்ட் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமாரின் தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் – தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

” செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி.

0

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில்,
எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல ‘முதல்’ விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார்.

படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் பேசும் பொழுது,

இயக்குனர் வர்ஷா பரத் நிறைய காட்சிகள் படம் பிடித்து எடுத்துட்டு வந்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு வெர்ஷன் ரெடி பண்ணும் போது, அதைவிட இன்னொரு வெர்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மாறி மாறி உழைத்தோம். இப்பொழுதும் இன்னும் சிறப்பான வெர்ஷன் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தினை எடிட் செய்யும் பொழுது இயக்குனர் வர்ஷாவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

மூத்த நடிகை சாந்தி பிரியா பேசும் பொழுது,

” செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி. இப்பொழுது ‘Bad Girl’ படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு come back கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், casting director வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன்” . ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்ப முடியுமா? என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன், பின் Sun light ல் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன். பின் இயக்குனர் வர்ஷா பரத் இந்தக் கதையை சொல்லி முடித்த பின், நான் அவரிடம், ” இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்கு சிகப்பு கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாக கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது”. படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும் என்று கூறினார்.

படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன் பேசும் பொழுது,

இயக்குனர் இந்த கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்த கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக ‘ஒரு முழு கதையும் என்னை வைத்து நகர்கிறது’ எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது, ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி என்று கூறினார்.

இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது,

இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, ” வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார்”. பொதுவாக close up shots எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, close up shots நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது,

15 வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை? என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் இந்த படத்தை பற்றி பேசும்பொழுது,

விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி கூறினார். படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையை பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும், ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் வர்ஷாபரத் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,

பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர் இந்த கதை தேரும், தேராது! படமாக வரும், வராது என்று feed back கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் “Bad Girl” படத்தின் கதை உருவானது.

நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்று கூறினார்.

விழா நிறைவாக இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,

இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், ” சார். இந்த படம் எல்லா Festvel லையும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார்” என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், ” இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன். வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் Gross Root Film Company ய பெருமைப்பட வைக்கும்.

நிறைவாக படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.

Zee Studios and Producer Prerna Arora Join Hands again after Rustom for Jatadhara

0

“At Zee Studios, we believe in bringing stories that resonate with audiences across generations. Jatadhara is a thrilling super Natural exploration of India’s rich history and folklore , and we are excited to collaborate with Prerna Arora once again to bring this epic tale to life.” – Umesh KR Bansal – CEO, Zee Studios.

JATADHARA is a collaboration that promises to bring an exciting new cinematic experience to the audience. The film, produced by Prerna Arora, is an exciting venture by Zee Studios starring Sudheer Babu, marking a significant collaboration following the success of Rustom. The partnership between Zee Studios and Prerna Arora promises to bring a captivating cinematic Super Natural thriller experience to audiences, one that blends history, myth, and science in a thrilling narrative.

JATADHARA will delve into the intrigue surrounding the Anantha Padmanabha Swamy Temple, unraveling the story of its hidden treasures and the scientific and mystical phenomena that have baffled historians and researchers for years. The film will explore not just the treasure itself but the legends and theories about the temple’s unexplained forces, blending suspense, adventure, and mystery as the story unfolds. “Jatadhara” promises heart-pumping action scenes . To prepare for the physically demanding role, Sudheer Babu has been undergoing rigorous training for the action sequences.

JATADHARA as it prepares to take audiences on an unforgettable journey into the heart of one of India’s greatest mysteries. The collaboration between Zee Studios and Prerna Arora along with the vision oriented producers Umesh KR Bansal , Prerna Arora , Shivin Narang , Rajiv Agarwal , Arvind Agarwal , Nikhil Nanda , Monesh Manghnani whose expertise is set to elevate the narrative of this captivating thriller and is poised to bring a fresh perspective to one of India’s most fascinating folklores , offering an exhilarating exploration of what lies beyond the known world.

Filming for JATADHARA will begin in February with Hyderabad.

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்தல்::-

0

நேற்றைய தினம், “கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகரும், கலைமாமணியுமான *திரு.ராஜேஷ் அவர்களின் உத்தரவுப்படி, “இயக்குநர் சிகரம்” “கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு” என்கிற பெயர் பலகை திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக”இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் மருமகன் திரு.கந்தசாமி அவர்களையும்,
நடன ஆசிரியர் திருமதி.கிரிஜா ரகுராம், அவர்களையும், நடிகரும், சின்னத்திரை நடிகர் சங்க தலைவருமான திரு.சிவன்சீனீவாசன் அவர்களையும், “தமிழ்நாடு திரைப்படம் மாற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஜெகன்நாதன் அவர்களையும், சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக நன்றி தெரிவித்த தருணம்.
இங்ஙனம்,
கவிதாலயா வீ.பாபு,
(பொ.செ).

Producer, Writer and Director Gopinath Narayanamoorthy of My Kinda Films has been roped into the creative and production team of an English Feature Film titled “B”

0

Producer, Writer and Director Gopinath Narayanamoorthy of My Kinda Films has been roped into the creative and production team of an English Feature Film titled “B” produced by Adolf El Assal of an European Production Company, Edgy Films based in TwoFour54 studios, Abu Dhabi, headquartered in Luxembourg, Europe.

“B” is Written and Directed by an established Emirati Director Nawaf Al Janahi. The movie will soon go on floors.

Earlier Gopinath Narayanamoorthy has an IT corporate profile, working with investment banks Swiss bank, RBS and Goldman Sachs in London and Hong Kong, deputed by Infosys.

And his Indian cinema profile includes him working as a former associate director with Directors Milind Rau, R Kannan and Bejoy Nambiar in their super hit projects. He earlier graduated with a screenwriting and film making degree from Rajiv Menon’s Mindscreen, Chennai. Also Director Gautham Vasudev Menon earlier launched his script consulting company, Shaping Scripts.

His recent short film “Kothaiyin Kural” through his production company My Kinda Films, released by AP International on their youtube channel with English subtitles, where a 12 year old girl kid in India files a lawsuit in court asking for voting rights from their age itself after getting affected by one of the urgent problems in the society and system, has gained international recognition after being liked by many Production companies and Directors in TwoFour54 studios, Abu dhabi, Dubai and across the World.

Also talks are going on with an American production company in TwoFour54 Studios for a collaboration of his Indo-American feature film project, which will be announced soon too.

His English Schooling was done in St.Bedes Anglo Indian Higher Secondary School. Coincidentally, his 2k batch is celebrating their 25th year reunion now. And he attributes most of his success and achievements in life to their Beloved School of their hearts and his Bedean friends.

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்…

0

இயக்குனர் முனி இயக்கத்தில் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம் இன்று பூஜையுடன் பிரம்மண்டாமாக துவங்கியது…

பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கடலச்சிமி படம் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.

▪️ முனி இயக்க, பான் இந்தியா படமாக ஆறு மொழிகளில் வெளியாகிறது.
▪️ ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.

பழங்குடி பெண் ஒருத்தி பழிதீர்க்கும் அதிரடி ஆக்‌ஷன் படம்.

RX 100 படத்தில் கவனம் பெற்று, மங்களவாரம் படத்தில் ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பரந்துபட்ட பார்வையாளர்களின் கவனத்தைப் பெற வாய்ப்புண்டு. முனி இயக்கத்தில் ராஜா மற்றும் என். எஸ். செளத்ரி தயாரிக்கும் இப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கப்பட்டது.

படம் குறித்து இயக்குநர் முனி கூறுகையில், “வெங்கடலச்சிமியின் கதையை நான் கற்பனை செய்தபோது, பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வாக இருந்தார். இந்த பான்-இந்தியா படம் தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது. ஒரு பழங்குடி பெண்ணின் அதிரடியான பழிவாங்கும் ஆக்‌ஷன் படமாக, வெங்கடலச்சுமி இந்திய சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்க உள்ளது” என்றார்.

கதாநாயகி பாயல் ராஜ்புத் மிகுந்த
உற்சாகத்துடன் , “மங்களவாரத்திற்குப் பிறகு, நான் பல ஸ்கிரிப்ட்களைக் கேட்டேன், ஆனால் எதுவும் என்னை ஈர்க்கவில்லை. இயக்குநர் முனி வெங்கடலச்சிமியை விவரித்தபோது, நான் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கதை மிகவும் அழுத்தமாக, அதிரடியுடன் இருப்பதால், மக்கள் என்னை ‘வெங்கடலச்சிமி’ என்று என்றென்றும் நினைவில் வைத்திருக்கக்கூடும். இந்த பான்-இந்தியா படம் எனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

தனது அழகு மற்றும் சிறப்பான நடிப்பாற்றலால் இளைஞர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ள பாயல் ராஜ்புத், இப்போது இந்தப் படத்தில் ஒரு சவாலான மற்றும் தனித்துவமான பாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்ப நிலையிலேயே திரைத்துறையில் இந்தப் படம் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.

படக்குழு விவரம்: 👇🏻

கதை திரைக்கதை இயக்கம்: முனி
இசை: விகாஸ் பதிஷா
தயாரிப்பாளர்கள்: ராஜா, NS செளத்ரி
மக்கள் தொடர்பு : ஷேக்

Payal Rajput’s Lead Role in ‘Venkatalachimi’ Movie Launched Grandly

▪️ Directed by Muni, a Pan-India Film in Six Languages
▪️ Inauguration Held at Ramanaidu Studios, Hyderabad
Tribal girl Action revenge drama

Hyderabad: After making waves with RX 100 and winning hearts with Mangalavaaram, the talented actress Payal Rajput is now stepping into the Pan-India space with her upcoming movie Venkatalachimi. The film, which will release in six languages, marks her entry into a broader audience base. Produced by Raja and NS Choudhary under the direction of Muni, the project was launched with a grand pooja ceremony at Ramanaidu Studios in Hyderabad.

Speaking about the movie, director Muni said, “When I envisioned the story of Venkatalachimi, Payal Rajput was the perfect choice for the lead role. This Pan-India movie will be released in Telugu, Hindi, Punjabi, Kannada, Malayalam, and Tamil. With a Tribal girl Action revenge at its core, Venkatalachimi is set to create a sensation in Indian cinema.”

Heroine Payal Rajput shared her excitement, saying, “After Mangalavaaram, I came across several scripts but none impressed me. When director Muni narrated Venkatalachimi, I was captivated. This story is so powerful that it might even make people remember me as ‘Venkatalachimi’ forever. I firmly believe this Pan-India project will take my career to the next level.”

Payal Rajput, who has become a youth favorite with her hot and impactful performances, is now taking on a challenging and unique role with this film. The project has already become a hot topic in the industry.

Crew Details : 👇🏻

Story-Screenplay-Direction : Muni
Music Director : Vikas Badisha
Producers : Raja, NS Choudhary
PRO : Shiek

I am deeply humbled and honoured to receive the esteemed Padma Award by the President of India.

0

I extend my heartfelt gratitude to the Hon’ble President of India, Smt. Droupadi Murmu and the Honourable Prime Minister, Shri Narendra Modi for this prestigious honour. It is a privilege to be recognized at such a level and I am truly grateful for this generous acknowledgment of my contributions to our nation.

At the same time, I am mindful that this recognition is not just a personal accolade but a testament to the collective efforts and support of many.

I would like to express my sincere thanks to the members of the film industry, including my distinguished seniors, various peers, and untold others. Your inspiration, collaboration, and support have been instrumental in my journey, including the pursuit of my passion in other areas as well.

I am also grateful for the kind support, over the years, of the motor racing fraternity and the sports pistol and rifle shooting community. I thank the Madras Motor Sports Club (MMSC), the Federation of Motor Sports Clubs of India (FMSCI), the Sports Development Authority of Tamil Nadu (SDAT), the National Rifle Association of India, and the Chennai Rifle Club for their encouragement of sports and the community of sportspersons.

To my family and friends: Your love and support have been both a refuge and source of strength. Thank you!

I wish my late father had lived to see this day. Yet, I like to think he would be proud that his spirit and legacy live on in all that I do. I want to thank my mother for her unconditional love and the sacrifices that enabled me to become all that I could be.

To Shalini, my wife and companion of nearly 25 wonderful years: Your partnership has been a joy and cornerstone of my success. And to my children, Anoushka and Aadvik: You are my pride and the light of my life, motivating me to set an example for how to do well and live right.

Lastly, to all my fans, supporters, and well-wishers: Your unwavering love and support have fueled my passion and dedication. This award is as much yours as it is mine.

Thank you all for this incredible honour and for being part of this journey. I am committed to continuing to serve with integrity and passion and wish you all just as well on your own journeys.

With utmost gratitude,
Ajith Kumar

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.

இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.

பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!

இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.

இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!

நன்றியுடன்,
அஜித் குமார்

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் “BAD GIRL”

0

தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள
வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .

Coming of Age Family Drama “BAD GIRL” படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்கள்

நடிப்பு:

அஞ்சலி சிவராமன்

சாந்தி பிரியா

ஹ்ரிது ஹாரூன்

‘TeeJay’ அருணாசலம்

சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி

சரண்யா ரவிச்சந்திரன்

படக்குழு:

ஒளிப்பதிவாளர்: ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

தயாரிப்பு வடிவமைப்பு: வி.ஷண்முகராஜா

ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி

நடிகர்கள் ஒருங்கிணைப்பாளர்: வர்ஷா வரதராஜன்

Intimacy ஒருங்கிணைப்பாளர்: ஜெயலட்சுமி சுந்தரேசன்

ஒலி வடிவமைப்பு: வினோத் தானிகாசலம்

Sound Design: பிரதாப்

DI: இன்ஃபினிட்டி மீடியா

Colorist: சிவ சங்கர்

VFX தலைமை: R.ஹரிஹர சுதன் (Lorven)

தயாரிப்பு மேலாளர்: வெ.கி.துரைசாமி

நிழற்படம்: அமீர் ராஜ்

விளம்பர வடிவமைப்பாளர்:பரணிதரன்

PRO: ரேகா

COO(கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி): அப்துல் ரஹ்மான்

நிர்வாக தயாரிப்பாளர்: விக்ரம் வைபவ் R.S.

தயாரிப்பு: வெற்றி மாறன்

இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் “BAD GIRL” படம், வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Recent Posts