- Advertisement -
Home Blog Page 38

“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

0

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
4த் ஃப்ளோர் டிரெய்லரைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ராஜா சார், நீங்கள் திருப்பூரிலிருந்து வந்து இவ்வளவு பேஷனோட ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடையணும். ஆரி 10 வருடமாக நல்ல படங்கள் செய்து வருகிறார். அவர் பெரிய வெற்றி பெற வேண்டும். இன்றைக்கு தமிழ் சினிமாவில் நிறைய புது புது, திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்த படத்தின் டிரெய்லரிலேயே நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். அனிமேஷன், திரில்லர், கனவுகள்… ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது, அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது, அந்த சம்பவங்கள் உண்மையாகும்போது, ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன?, இதை எல்லாம் டிரெய்லரிலேயே அழகாக சொல்லியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது..,
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது. அமைதியாக, நேர்த்தியாக, மிகப் பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல. அந்த வகையில் இந்த படக்குழு பாராட்டுக்குரியது. இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம். நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும், என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,
நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்
அந்த ஃப்ரேமுக்கு, ஒரு தனி உயிர் கிடைக்கிறது. அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை, அமைதி, சென்சிபிலிட்டி.
எதையும் மிகைப்படுத்தாமல், இயல்பாகவே கவர்கிறவர் அவர். நடிகனாக மட்டுமல்ல, மனிதராகவும் மதிக்கத் தக்கவர். அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார்.
அதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.
நடிகர்களும் டெக்னிக்கல் டீமும்
ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள். சினிமா என்பது தனி மனித சாதனை அல்ல
என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.
இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் பரத் பேசியதாவது..,
ஆரியும் நானும் பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில், க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும்.
என்னுடைய திரைப்பயணத்தில் தெரியாமலேயே, கடைசி ஏழு படங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது.
அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம் எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.

இயக்குநர் சேரன் பேசியதாவது..,
திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.
“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.

இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள்.

நடிகர் பிரஜின் பேசியதாவது..,
இது ராஜா சார் தயாரித்த நான்காவது திரைப்படம். ராஜா சாரை நான் முதலில் சந்தித்தது, “இந்த படம் நான் செய்வதாக விவாதிக்காகத்தான். ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் எவ்வளவு நேர்மையான, தெளிவான தயாரிப்பாளர் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதை முழுமையாக செய்து தரக்கூடியவர் ராஜா சார். நல்ல தயாரிப்பாளர்.

இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மணன் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.
கேமராவில் அவர் செய்த வேலை மிகவும் அருமை. அதுமட்டுமல்ல, அவர் ஒரு நல்ல நண்பரும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள்.

இன்று நான் இங்கே வந்திருப்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம் என் நண்பர்… என் மச்சான்… ஆரி.
நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் Mr. Chennai Finalists ஆக எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள். அந்த நேரத்திலிருந்து இன்று வரை, ஆரியின் பயணம் எப்போதுமே உழைப்பின் அடையாளமாகத்தான் இருக்கிறது.
அவன் மிகக் கடினமாக உழைக்கும் மனிதன்.
ஒரு நல்ல நடிகன். அதற்கும் மேலாக, ஒரு நல்ல நண்பன்… ஒரு நல்ல மனிதன். எந்த விதமான ஈகோவும் இல்லாமல்,
யார் எப்போது என்ன உதவி கேட்டாலும்
“பண்ணிடலாம்” என்று முன்னால் வந்து நிற்பவன். இந்த படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்று என் மனதார நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த படக்குழுவின் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

இசையமைப்பாளர் தரண்குமார் பேசியதாவது..,
இன்று என்ன பேச வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை. ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்த படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தை மனசு கொண்டவர். இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன். ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும், இந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.

சின்ன படங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் அது நடக்கணும்னா, இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது. அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா, இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்.

ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று அது நிறைவேறியிருக்கிறது. அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி. மிக நேர்மையான, பொறுமையான, சின்சியரான மனிதர்.

இயக்குனர், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் உட்பட முழு டெக்னிக்கல் டீமும் மிக அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். ஸ்கிரீன்ப்ளேவும், இசையும் சரியான இடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த படம் ஜெயிக்கணும். ஜெயிக்கும்.
அதுதான் என் முழு நம்பிக்கை. நன்றி.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,
‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது.
ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் பேசியதாவது..,
எனக்கு முதன்முதலில் சினிமாவை உணர வைத்தவர் என்றால், அது ராஜா சார் தான். சென்னை வந்த போது, ஆரம்பித்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.
இந்த படம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு, கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு வெற்றியாக இந்த படம் மாற,
உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு தேவை. அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள். நன்றி.”

இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது..,
இது எனக்கு மூன்றாவது படம்.
தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.
“இது என்ன ஜானர்?” என்று கேட்டால்,
ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.

கதையை முதலில் கேட்டவுடனே
ஆரி சார் இந்த படத்தில் இணைந்தார்.
இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான்.
அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும்
அவர்தான் கொடுத்தார்.
இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன்
எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி.
அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகர் ஆரி பேசியதாவது..,
இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.

பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி. இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A ராஜா

Avni Movies & Benzz Media Announce Wrap of Romantic Fantasy ‘Double Occupancy’, Now Gearing Up for Release

0

Avni Movies, in collaboration with Benzz Media, proudly announced that filming for their upcoming romantic-fantasy drama Double Occupancy has officially wrapped, marking a major milestone for one of the year’s most anticipated genre-bending films. The project—now swiftly moving into its final stages of post-production, is led by debutant filmmaker Aswin Kandasamy, whose vision blends tender romance with imaginative fantasy and contemporary reflections on identity.

Set for release soon, Double Occupancy promises to push the boundaries of mainstream Tamil cinema with its daring premise and emotionally resonant storytelling.

At its heart, Double Occupancy (DO) is a sweeping romantic fantasy exploring identity, duality, science versus faith, and the aching beauty of loving someone who exists in two different forms. With its innovative narrative structure and emotional core, the film offers an immersive experience that merges magical realism with raw human conflict.

Leading the film is Santhosh, of Ponniyin Selvan fame, stepping into one of his most challenging roles yet—one that demands emotional range, vulnerability, and an exploration of love beyond form.

Adding to the ensemble are Reshma Venkatesh, continuing her streak of bold, dynamic roles, and Vinoth Kishan, celebrated for his intense, layered performances in films such as Naan Mahaan Alla and Andhaghaaram—bringing a unique gravitas and unpredictability to the film’s tonal landscape.

Samyuktha Viswanath, whose craze since ‘Katchi Sera’ has made her one of the most exciting talents of her generation. She’s paired opposite Santhosh and her character in Double Occupancy adds both charm and emotional grounding to the film’s fantastical undertones.

Adding to the mix are VTV Ganesh, Bagavathi Perumal and a host of vibrant supporting faces who elevate the film’s world-building.

With its fusion of grounded emotion and fantastical flair, Double Occupancy is crafted to appeal to audiences seeking visually compelling, emotionally driven cinema.

After years of experience working with leading production houses, Aswin Kandasamy steps into the spotlight with a debut that promises freshness, boldness, and heart. His approach to blending fantasy with intimate storytelling marks Double Occupancy as a potential genre milestone.

Having completed its shoot, Double Occupancy now moves into the final phase of post-production with an eye on release. With anticipation building among industry insiders and fans alike, the film is poised to become one of the year’s most talked-about romantic fantasies.

CAST
• Santhosh

  • Reshma Venkatesh
  • Samyuktha Viswanath
  • Vinoth Kishan
  • VTV Ganesh
  • Bhagavathi Perumal (Bucks)

TECHNICAL CREW

  • Director: Aswin Kandasamy
  • Producers: ACS Arun Kumar (Benzz Media) and Khushbu Sundar (Avni Movies)
  • CEO: R. Madhan Kumar
  • Creative Producer: Anandita Sundar
  • Music: Sam CS
  • DOP: Santhakumar Chakravarthy
  • Editor: Praveen Antony
  • Production designer: Senthil Raghavan
  • Costume Designer: Sruthi R. Kannan
  • Head of Production: N Manivannan
  • Production Executive: P Balagopi
  • VFX: Head Of Studio – Fazil Mohammad S (Pixel Light Studio)
  • Colorist: Prasath Somasekar (Knack Studios)
  • Sound design: Suren G – S Alagiakoothan
  • Sound Mixing: Suren G (Hum Audio)
  • Stills: V. Rajan
  • Make-up: N. Chelladurai
  • Publicity design: Viyaki
  • PRO: Riaz K Ahmed, Paras Riyaz
  • Creative Promotions: Kachcha Mango
  • Digital Marketing: Beatroute
  • Label: Saregama India Limited, A RPSG Group Company

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்:

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ‘நான் மகான் அல்ல’, ‘அந்தகாரம்’ படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் முத்திரை பதித்த வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள்:
சந்தோஷ்
ரேஷ்மா வெங்கடேஷ்
சாம்யுக்தா விஸ்வநாத்
வினோத் கிஷன்
வி.டி.வி கணேஷ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)

தொழில்நுட்பக் குழு:
இயக்கம்: அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள்: ஏ.சி.எஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பூ சுந்தர் (அவ்னி மூவீஸ்)
CEO: ஆர். மதன் குமார்
கிரியேட்டிவ் புரொடியூசர்: ஆனந்திதா சுந்தர்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
கலை இயக்கம்: செந்தில் ராகவன்
ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்
தயாரிப்பு நிர்வாகத் தலைவர்: என். மணிவண்ணன்
தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
VFX: ஸ்டுடியோ ஹெட் – ஃபாசில் முகமது எஸ் (பிக்சல் லைட் ஸ்டுடியோ)
கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ். அழகியகூத்தன்
ஒலி கலவை: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)
புகைப்படம்: வி. ராஜன்
மேக்கப்: என். செல்லதுரை
விளம்பர வடிவமைப்பு: வியாகி
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்
பாரஸ் ரியாஸ்
கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மேங்கோ
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ரூட்
ஆடியோ லேபிள்: சரீகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)

World’s Youngest Environmentalist – 6-Year-Old Roohi Mohazzab Stuns the United Nations l A Historic Speech at UN Asia-Pacific HQ, Bangkok | Thailand 12 February 2026

0

In a moment of immense pride for India—Roohi Mohazzab, a six-year-old environmentalist and first-standard student of Common Ground International Academy, has achieved a historic global milestone. She was officially invited as a Keynote Speaker and SDG Impact Awardee at the Global Conference on Education for a Sustainable Future (GCE 2026), organized by the UNESCO Youth Education Research Center and held at the United Nations Asia-Pacific Headquarters.With this prestigious recognition, Roohi becomes India’s one of the youngest child environmental voices to be honoured at a UNESCO-led global forum—marking a landmark achievement in youth-led and child-driven climate action and sustainability advocacy.

The international conference took place on 11–12 February 2026 at the United Nations Conference Centre, in collaboration with the Sustainable Development Council—an international organization holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (ECOSOC).A Historic Launch at the United Nation In an extraordinary and symbolic moment, Roohi also officially launched her foundation, “The Children Movement for Climate Compassion,” at the prestigious United Nations platform in Bangkok.The launch marks the formal global beginning of a pioneering child-led movement dedicated to nurturing environmental responsibility, compassion for nature, and civic consciousness among children worldwide.By unveiling the foundation at an international forum, Roohi positioned children not as passive beneficiaries of climate policies—but as active stakeholders and changemakers in shaping a sustainable future. A Child with a Global Vision.

Roohi Mohazzab is widely recognized as one of the world’s youngest environmentalists, known for her ambitious, action-oriented initiatives that combine grassroots impact with global vision.

CounTree Project
Launched on World Environment Day 2025, the CounTree Project aims to plant one crore (10 million) trees by establishing 10 lakh micro-nurseries in schools across India—empowering children to actively participate in ecological restoration.

Tree Bank Nursery Project
Formally launched by Kerala Governor Rajendra Vishwanath Arlekar, this initiative targets 10,000 schools to promote environmental conservation and sustainable learning ecosystems.

Recycled Paper Passports Campaign
At just five years old, Roohi drew international attention by writing to Prime Minister Narendra Modi and 195 world leaders, advocating for recycled paper passports to save millions of trees annually.
From leading tree-planting drives in landslide-prone regions like Wayanad to donating saplings to schools and public institutions, Roohi translates advocacy into measurable environmental action.

A Powerful Voice at GCE 2026
At GCE 2026, Roohi’s keynote address delivered a compelling child-centred perspective to a distinguished global audience of educators, policymakers, youth leaders, and development practitioners.Her message was clear and powerful.

“Children are not just the future—they are the present guardians of Mother Earth.”

In its formal communication, UNESCO acknowledged her exceptional contribution to environmental awareness and climate advocacy, commending her ability to balance academic life with meaningful civic engagement at such a young age.

A Historic Moment for India
Roohi Mohazzab’s invitation to a UNESCO-led global platform is not merely a personal milestone—it is a historic moment for India.
It reaffirms that age is no barrier to leadership, courage, or impact.

Roohi Mohazzab—a young voice of Mother Earth inspiring the world with empathy, responsibility, and action.
Her journey sends a powerful message to children everywhere.

Compassion creates change.
Courage shapes the future.
And even the smallest voice can echo across the world.

RoohiMohazzab

Roohi

ClimateCompassion

ChildClimateLeader

UnitedNations

Education

Sustainability

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்,
ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award – விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து பெற்ற நிலையான வளர்ச்சி கவுன்சிலுடன் (
Sustainable Development Council) இணைந்து நடத்தப்பட்டது.

GCE 2026 மாநாட்டில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், , உலகம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் முன்னிலையில் ரூஹி தனது ஆழமான மற்றும் வலிமையான உரையை வழங்கினார்.
“குழந்தைகள் நாளைய எதிர்காலம் மட்டுமல்லர். இன்றைய பூமித் தாயின் காவலர்களும் ஆவர்” என்ற முழக்கத்தை அவரது உரை எடுத்துரைத்தது.

UNESCO தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் காலநிலை செயற்பாட்டில் ரூஹியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டியது.

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய மேடையில் ரூஹி மொஹசப் பெற்ற இந்த அழைப்பு, தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல — இந்தியாவிற்கே ஒரு வரலாற்று தருணமாகும்.

வயது தலைமைத்துவத்திற்கோ, தைரியத்திற்கோ, தாக்கத்திற்கோ தடையல்ல என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த அங்கீகாரத்தின் மூலம், யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய அரங்கில் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராக ரூஹி மொஹசப் வரலாறு படைத்துள்ளார்.

Promising Kannada Production House embarks on its journey in Tamil Film Industry

0

In the recent years, the arrival of production houses from neighbouring industries in Tamil industry like Hombale Films, Mythri Movie Makers and many others have heightened the Pan-Indian Success Rate. And now, here’s yet another Promising production house landing on Tamil Industry.

Sri Puranthana Film Productions, one of the prominent production houses in the Kannada Film Industry, is widely recognised for its blockbuster hit movie S/o Muthanna and are currently work on their next venture titled “MGR”. The renowned production house, headed by Hari Prasad B V, is now embarking on its exciting journey into the Tamil Film Industry. The production house has approached leading artistes of Tamil film industry for the protagonist role and Selvaraghavan is one among them.. The yet-to-be titled movie will be directed by most talented Srikanth Hunsur, who earlier collaborated with the producer on S/o Muthanna and ongoing project MGR.

Producer Hari Prasad, Sri Puranthana Film Productions, says: “Tamil cinema has always held a special place in the Indian Film Fraternity. It is an industry celebrated for its creativity, storytelling excellence, and its ability to consistently present fresh and unique narratives. Venturing into Tamil cinema has long been a cherished aspiration for me as a producer, and I am delighted that this journey begins with this film. We are holding talks with leading actors from Tamil film industry, and will be soon making official announcement.”

Having Selvaraghavan sir headline this project makes it even more special. His artistic brilliance, distinctive screen presence, and immense contribution to cinema bring tremendous value to the film. We are equally excited to have Charan Raj, one of the most promising music directors from the Kannada Film Industry, composing the music, while Skating Krishna will be handling cinematography.

We look forward to unveiling more exciting announcements regarding the rest of the cast and crew very soon.”

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ’S/o முத்தண்ணா’ மற்றும் ’எம்ஜிஆர்’ படங்களில் இணைந்து பணியாற்றிய திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஹுன்சூர் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய தமிழ் படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஹரி பிரசாத் கூறுகையில், “இந்திய சினிமாவில் தமிழ் சினிமா துறைக்கென்று எப்போது சிறப்பான இடம் உண்டு. புதுமை, சிறந்த கதைகள் மற்றும் தனித்துவமான படங்கள் ஆகியவற்றிற்காக தமிழ் சினிமா கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுவது மகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இந்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்த புதிய படத்தில் நடிகர் செல்வராகவன் இணைந்திருப்பது கூடுதல் பலம். அவரின் திறமையான நடிப்பு, திரை ஆளுமை மற்றும் சினிமாவிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். இப்படத்திற்கு கன்னட திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்கேட்டிங் கிருஷ்ணா மேற்கொள்கிறார்.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

Santhosh Prathap starrer “Signal at 11.30” First Look Unveiled

0

“Time and tide wait for no man” – a timeless proverb that resonates with profound realism. Drawing inspiration from this thought, an engrossing narrative has been crafted with a riveting thriller treatment. Producers Malarvizhi Natesan and Dr. Shivani Subramani of Alar Studios are now presenting a promising new film titled “Signal At 11.30”, starring Santhosh Prathap in the lead role. The film’s first look, marked by emotional intensity and a cryptic design, delivers an immediate visual impact with a strong attention-grabbing appeal. The first look was unveiled recently in Chennai amidst great fanfare at a reputed college.

In response to the overwhelming reception, producers Malarvizhi Natesan and Dr. Shivani Subramani state: “When the core idea of ‘Signal at 11.30’ was conceptualised, it instantly captivated us. What began as a casual exchange of thoughts soon evolved into a compelling creative journey. As the script’s final draft was locked, the protagonist’s characterisation left us deeply contemplative about its emotional layers. We envisioned someone with a heroic appeal, yet possessing a face capable of conveying profound emotional depth. We believed Santhosh Prathap would impeccably embody this role, as he naturally carries these attributes. Notably, he has delivered some of his finest acting nuances in this film. It has been an absolute pleasure collaborating with talented actors such as Bhavya Trikha, Poojitha Ponnada, Jayaprakash, Munishkanth, and others. Our technical team has been a formidable pillar, significantly elevating the script into a thoroughly satisfying cinematic experience. When we approached D Imman sir for the musical score, he pleasantly surprised us with his deep engagement in the project. His passionate involvement has assured us of an unparalleled theatrical experience.”

Reflecting on the significance of the title, Director-Producer Malarvizhi Natesan states: “It is too early to reveal any spoilers. However, the story revolves around the protagonist’s unprecedented encounter at 11.30 p.m. at a signal, and how that singular moment transforms the trajectory of his life.”

While Raja Bhattacharjee handles the cinematography, editing is overseen by R. Kalaivanan, with choreography by Sherif.

அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!

’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி கூறியதாவது,
“‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை கேட்டதுமே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மிக சாதாரணமாக இந்தப் படத்தின் கதை கேட்க ஆரம்பித்து, பின்பு மறக்க முடியாத பயணமாக இது மாறியது. இந்தக் கதையில் கதாநாயகன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கதாநாயகனுக்குரிய தோற்றத்துடன், ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒருவரை நாங்கள் எதிர்பார்த்தோம். எங்கள் எதிர்பார்ப்பிற்கு சந்தோஷ் பிரதாப் சரியாக பொருந்தி போனார். படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாது பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் குழுவினரின் திறமையான உழைப்பு இந்த கதையை முழுமையான திரை அனுபவமாக உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளர் டி. இமான் கதையில் மிகவும் ஈடுபாடு காட்டியதோடு அற்புதமான இசையையும் கொடுத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரும் பலம்” என்றனர்.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான மலர்விழி நடேசன் கூறியதாவது, “அதுபற்றி இப்போதே விரிவாக சொல்வது கதையின் ஸ்பாய்லராக இருக்கலாம். இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு நேரும் எதிர்பாராத சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையை எப்படி மாற்றுகிறது என்பதே கதையின் மையக்கரு” என்றார்.

இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை செய்திருக்க, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனிக்கிறார். ஷெரீஃப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Thiagarajan Kumararaja’s ‘Pocket Novel’ shoot kicks off!

0

The third directorial venture of acclaimed filmmaker Thiagarajan Kumararaja, ‘Pocket Novel’, has officially begun shooting. This multilingual film, made in Tamil, Telugu, Kannada, and Hindi, promises to be a game-changer with its unique storytelling style.

The film boasts an impressive cast, including Vijay Sethupathi, Raj B. Shetty, Kishore, and Malavika Mohanan. Isaignani Ilaiyaraaja’s music and Yugabharathi’s lyrics will add to the film’s grandeur. The first-look poster has already generated buzz on social media.

With cinematography by Nirav Shah and editing by Sathyaraj Natarajan, ‘Pocket Novel’ is shaping up to be a visual treat. The film’s audio rights are with Think Music, and talks are on for OTT release.

Produced by Tyler Durden And Kino Fist (TDKF), ‘Pocket Novel’ is targeting a theatrical release by end of this year.

Technical Crew

Production – Thiagarajan Kumararaja, S.D. Ezhilmathy (Tyler Durden And Kino Fist)
Director – Thiagarajan Kumararaja
Music – Isaignani Ilaiyaraaja
Story & Screenplay – Andrew Louis
Cinematography – Nirav Shah
Editing – Sathyaraj Natarajan
Art Direction – V. Shanmuga Raja
Costume Design – S.D. Ezhilmathy
Lyrics – Yugabharathi
Publicity Designer – Gopi Prasanna
Stills – C.H. Balu
Colorist – G. Balaji
Sound Design – Tapas Nayak
SFX Designer – Arun Seenu
VFX Supervisor – Aravind Naga
Production Controller – Arun Arunachalam
Executive Producer – Sathyaraj Natarajan
Public Relations – Sathish (AIM)

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசை இந்த படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தற்போது படத்தின் இசைப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் திரைப்படம், வதந்தி சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ஒளிப்பதிவில், இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Nirav Shah இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் இந்த படத்திலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது எடிட்டிங், படத்தின் கதை சொல்லல் வேகத்துக்கும் தாக்கத்துக்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை உரிமையை முன்னணி இசை நிறுவனமான Think Music கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்காக முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது படத்தின் வணிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘பாக்கெட் நாவல்’ வித்தியாசமான கதை சொல்லல், வலுவான நடிகர்களின் பங்களிப்பு மற்றும் இசைஞானியின் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தனித்துவமான திரைப்படமாக உருவாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜாவின் சினிமா உலகில், இந்த படம் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – தியாகராஜன் குமாரராஜா, S.D. எழில்மதி (Tyler Durden And Kino Fist (TDKF)
இயக்கம் – தியாகராஜன் குமாரராஜா
இசை – இசைஞானி இளையராஜா
கதை, திரைக்கதை – ஆண்ட்ரூ லூயிஸ்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
எடிட்டிங் – சத்யராஜ் நடராஜன்
கலை இயக்கம் – வே.சண்முகராஜா
உடை வடிவமைப்பு – S.D. எழில்மதி
பாடல்கள் – யுகபாரதி
பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா
ஸ்டில்ஸ் – C. H. பாலு
கலரிஸ்ட் – G. பாலாஜி
ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக்
SFX – அருண் சீனு
VFX supervisor: அரவிந்த் நாகா
தயாரிப்பு மேற்பாவையாளர் – அருண் அருணாசலம்
நிர்வாக தயாரிப்பாளர் (Executive Producer) – சத்யராஜ் நடராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Star studded ‘Nambikkai Global Launch’ attended by R. Sarathkumar, Seeman, Radhika Sarathkumar, Nassar and much more!

0

The Malaysia-based media platform Nambikkai, which has built a strong identity over the past 27 years, grandly launched its new Indian branch in Chennai. The inaugural event was attended by leaders from various political parties, film personalities, media representatives and several distinguished guests.

Speaking at the event, Naam Tamilar Katchi chief coordinator Seeman said:
“Amid today’s media landscape controlled by parties or leaders, people like me look at ‘Nambikkai’ with great hope. Trust is not just a word. We hear that Nambikkai has spread its branches in countries like Singapore and Malaysia — my wish is that it spreads deep roots. In the coming election period, I believe Nambikkai will carry honest and truthful news to the people. I wholeheartedly wish that it earns the trust of Tamilians across the world.”

School Education Minister Anbil Mahesh Poyyamozhi said:
“Today is a day that sows trust. Trust can only be earned through our actions. In the social media era, we are in danger of losing authenticity. The trust we receive depends on how honestly we deliver ground realities. After Malaysia, Nambikkai has now arrived here. As Seeman said, convey things as they are. People will guide us. Media often first attracts the foolish with charm and speech, then silences the wise. Instead, boldly point out mistakes no matter who commits them. On behalf of the movement I belong to, I extend my wishes to Nambikkai along with all the dignitaries gathered here.”

Actor Sarathkumar said:
“Greetings to the Nambikkai group, which began in Malaysia and has now come to Chennai to earn everyone’s trust. My Paternal father Adithanar founded the newspaper Thanthi through immense effort. My father too worked alongside him for some time and I also spent a period in journalism. Journalism must function with the intention of speaking only the truth. Nambikkai has been operating for 27 years and plans to expand from Malaysia to Singapore, India and Dubai. I wish that it reaches many more countries and earns the trust of many more people.”

Actress Radhika Sarathkumar said:
“I’m happy to be here for the ‘Nambikkai Digital Launch’ in India. You have come with a voice, a vision, and a promise — my congratulations. Media is not just about breaking news; it must act with responsibility. Justice, courage and honesty are the true ethics of journalism. Wishing you great success.”

Actor Nassar said:
“Today people are gradually losing trust in the media. Many stories are twisted just to create sensation. In our film industry, several good films disappear because of distorted reporting. I had stopped watching news channels for this reason. But Nambikkai makes me want to watch news again. Humanity runs on the hope that even if today is difficult, tomorrow will be better. We will receive clear and truthful news through Nambikkai. As Seeman said, you must grow deep roots. My best wishes.”

திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.

நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.

நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

Maragadha Naanayam 2 Begins with Grand Pooja! Fantasy Comedy Blockbuster Returns!

0

Following the remarkable success of Maragadha Naanayam (2017), a fantasy comedy that carved a unique space in Tamil cinema with its magical premise and humor, the much-anticipated sequel Maragadha Naanayam 2 has officially commenced production.

Marking the auspicious occasion of Shivaratri, the film’s shooting began Yesterday (February 16, 2026) with a traditional pooja ceremony held in Chennai. Actor Karthi sounded the clapboard, actor Arya and director Venkat Prabhu ceremoniously called out “Camera Rolling, Action,” adding to the celebratory spirit of the launch. Several prominent filmmakers associated with Axess Film Factory were also present to grace the occasion.

Produced by Sudhan Sundaram, Manish Singhal, Durgaram Choudhary, Dev & KV Durai, under the banners of Passion Studios, Dangal TV, RDC Media, Axess Film Factory and Good Show, the film is directed by ARK Saravan, who earlier directed the Blockbuster ‘Maragadha Nanayam’.

Maragadha Naanayam 2 features an ensemble cast including Aadhi, Sathyaraj, Priya Bhavani Shankar, Nikkii Galrani Pinisetty, Munishkanth, Anandaraj, Danie, Arunraja Kamaraj, and Muruganandam in pivotal roles.

The technical team comprises Dhibu Ninan Thomas (Music), PV Shankar (Cinematography), NK Rahul (Art), Thirumalai Rajan R (Editing), Rajesh Kannan (Dialogues), and PC Stunts (Action).

With expectations soaring since its announcement, Maragadha Naanayam 2 promises bigger laughs, grander magic, and an even more thrilling cinematic experience. The film’s shooting will progress continuously and more interesting updates on the project will be revealed soon.

Star-cast

Aadhi
Sathyaraj
Priya Bhavani Shankar
Nikkii Galrani Pinisetty
Munishkanth
Anandaraj
Danie
Arunraja Kamaraj
Muruganandam

Technical Crew

Director- ARK SARAVAN
Music Director- DHIBU NINAN THOMAS
DOP – PV SHANKAR
Art Director- NK RAHUL
Editor-THIRUMALAI RAJAN R
Dialogue – RAJESH KANNAN
Stunts- PC STUNTS
Production Executive – SS SRIDHAR
Costume Designer – A. KEERTHIVASAN
Choreography – RAGHU THAPA
Executive Producer – MOHAN P
Production Manager – S PRABHAKAR
Sound design – SYNC CINEMA
Sound mixing – UDHAYKUMAR
VFX – RESOL FX
VFX Supervisor – KIRAN RAGHAVAN
Marketing & Promotion – DEC
PRO – Suresh Chandra-Abdul S Nassar
Publicity design – VIYAKI
Legal Advisor – MV BHASKAR

காமெடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!

நடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர்கள்: இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம் – ஏஆர்கே சரவன் ,
இசை – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,
கலை இயக்கம் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,
வசனம் – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,
உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,
நடன அமைப்பு – ரகு தாபா,
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,
தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,
ஒலி கலவை – உதயகுமார்,
விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,
மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,
சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

தமிழ் சினிமாவின் மைல்கல்… ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; ஒன்று கூடிய படக்குழு !!

0

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்

Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் M சந்திரகுமார் அவர்களின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை” திரைப்படம், போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தின் கொடூர முகம், அடித்தட்டு மக்களின் வலி – இவை அனைத்தையும் மிக நேர்மையாகவும், தைரியமாகவும் திரையில் பதிவு செய்தது. எந்த பெரிய வணிக சமரசங்களும் இல்லாமல், உண்மையை அப்படியே சொல்லும் சினிமாவாக இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது.

வெற்றிமாறனின் இயக்கத்தில், இயல்பான நடிப்பு, ஆவணப்படத் தன்மையிலான காட்சியமைப்பு, மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை ஒரு சாதாரண திரைப்படத்தையும் தாண்டிய, ஒரு சமூக ஆவணமாக மாற்றின. தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அங்கீகாரம், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

‘விசாரணை’ போன்று துணிச்சலான, சமூக பொறுப்புள்ள படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், 10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் உயிருடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாகவே திகழ்கிறது.

‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்

0

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.

முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

Recent Posts