Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 58

Sundar C, Vishal and Hiphop Tamizha Join Together for a New Commercial Entertainer – Purushan!

0

The successful Sundar C – Vishal combination is back once again with a brand-new commercial entertainer titled Purushan, which is set to begin shooting very soon. The official announcement has created strong excitement among fans and within the Tamil film industry.

Produced by A. C. S. Arun Kumar of Benzz Media (P) Ltd, along with Khushbu Sundar under Avni Cinemax (P) Ltd, Purushan is directed by Sundar C and stars Vishal in the lead role. Popular musician Hiphop Tamizha has been roped in as the music director for the film. The project has now been officially announced, generating significant buzz across trade circles.

This marks the fourth collaboration between Sundar C and Vishal, a duo known for delivering successful commercial entertainers. Notably, the Sundar C – Vishal – Hiphop Tamizha combination reunites after their earlier film Aambala, further adding to the anticipation surrounding Purushan. Screenplay & Dialogues by Venkatt Ragavan

The recently released announcement video of Purushan impressed audiences with its energetic blend of action and comedy, quickly going viral on social media. Even in its brief runtime, the video clearly showcased Sundar C’s trademark commercial style, significantly raising expectations for the film.

The film features Tamannaah Bhatia as the female lead, while popular comedian Yogi Babu plays a key role. With the unmistakable stamp of “Commercial King” Sundar C, Purushan is being shaped as a full-fledged, family-friendly commercial entertainer, with the shoot expected to commence shortly. Further details regarding the cast and technical crew will be officially announced soon.

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் – வெங்கட் ராகவன்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

0

கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் நினாசம்,  சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி , ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில், ” ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின்  ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இணை தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், ” ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் அவனுடைய உரிமைக்காக போராடுகிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தானே படத்தின் கதை. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சப்தமி கௌடா பேசுகையில், ”
இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.‌ 80,  90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

தமிழ்நாடு ரசிகர்கள் என் மீதும் என்னுடைய இந்த படக் குழு மீதும் ஏராளமான அன்பை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படமும், பாடலும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில், ” இது எனக்கு மிகப்பெரிய நிகழ்வு. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால் தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம் இயற்கையின் ஒத்துழைப்பின் காரணமாக தமிழிலும் வெளியாகிறது.

இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

என்னுடைய பத்து ஆண்டுகால திரை உலக பயணத்தில் பத்து அல்லது பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் நான் உணர்வுபூர்வமான கதைகளை தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால் தேர்வு செய்து.. காத்திருந்து.. அதன் பிறகு படங்களில் நடிக்கிறேன்.

என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில் இந்த கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாக கொண்டது.‌ அந்த மண்ணின் நிறம்.. அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம்.. என்னுடைய நிறம்.. ஆகிய அனைத்தும் ஒத்துப் போகிறது. இந்த தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.‌ அந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு கூட தமிழ் கலந்திருக்கும்.‌ தமிழ்- தெலுங்கு- கன்னடம் -என எல்லா மொழிகளும் ஒன்று தான். உணர்வுகள் ஒன்றுதான்.
இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.

நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். வரவேற்பு தாருங்கள். இந்த குழுவினருக்கும் இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் தாருங்கள்.

நான் கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்ப்பேன். அங்கு தமிழ் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில் எங்களுடைய ரைஸ் ஆஃப் அசோகா எனும் திரைப்படமும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் ” என்றார்.

”Draupathi 2 isn’t just a routine period film! It’s our ancestors’ war cry reborn” – Richard Rishi

0

Actor Richard Rishi, being in the industry for more than a decade, has been experimenting with challenging scripts and roles. From kick-starting his career as a romantic hero, and later switching over to promising characters, the actor has incessantly proved his caliber as a good performer. Now the actor is all set to witness his breakthrough with a never-before appearance as a warrior in Historic movie ‘Draupathi 2’. With the film all set to release on January 15 for the festive occasion of Pongal, the actor shares his thoughts on the film.

“Embodying King Veera Simha Kadavarayan in Draupathi 2 has been a career-defining transformation. This isn’t merely acting, it’s breathing life into Tamil Nadu’s blood-soaked legacy of bravery and sacrifice. Mohan G’s vision for Draupathi 2 transcends cinema, it’s a resurrection of history. Working with him again after the original Draupathi feels like returning to battle alongside a trusted commander. A Ghibran’s score stirs the soul of emperors, Philip K Sundar’s frames capture royal majesty, and Action Sandhosh choreographs battles worthy of legend. Sharing screen space with Rakshana Induchoodan, Natty Natraj, and Vela Ramamoorthy elevates every scene. Draupathi 2 isn’t just a movie, but re visiting the buried past of our ancestors’ war cry reborn. From Netaji Productions, this is Tamil cinema’s boldest historical epic, destined to echo through generations. The film has been crafted with ingredients that will keep audience engaged from beginning till end. “

Draupathi 2, directed by Mohan G and produced by Sola Shakkaravarthi under Netaji Productions, features Richard Rishi alongside Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy, and a stellar ensemble. With A Ghibran’s evocative musical score, Philip K Sundar’s breathtaking cinematography, and the technical mastery of S Kamal (art), Action Sandhosh, and editor Devaraj, the film promises an electrifying cinematic experience.

“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார்.

“’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.

மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

Draupathi 2 Leading Ladies Unveil Their Powerful Roles!

0

Actresses Rakshana Induchoodan, Deviyani Sharma, and Divi Vaidhyan bring extraordinary depth to Draupathi 2’s female characters, each portraying women of remarkable strength and emotion in Mohan G’s historical epic. As the film prepares for its worldwide release on January 23, these talented actresses share their exhilarating experiences embodying Draupathi, Ayesha, and Kodhai.

Rakshana Induchoodan as Draupathi reflects: “Portraying Draupathi in Draupathi 2 has been a career-defining journey. This character embodies grace under fire: her emotional depth and unyielding strength challenged me profoundly. My heartfelt gratitude to director Mohan G for this opportunity, producer Sola Shakkaravarthi for relentless support, and Richard Rishi sir whose commanding presence elevated every scene. Working with Natty Natraj, and the entire cast felt like family.”

Deviyani Sharma as Ayesha shares: “Stepping into Tamil cinema with Draupathi 2 as Ayesha, a woman of intelligence and quiet resilience, feels like destiny. My character as Ayesha’s journey reflects inner strength and emotional clarity, perfectly suited for Mohan G’s vision. I’m deeply thankful to the entire team, especially Ghibran sir for his soul-stirring music that amplified my performance, Philip K Sundar sir’s breathtaking visuals, and my co-stars who made every day inspiring.”

Divi Vaidhyan, who plays the character of Kodhai says, ”Kodhai in Draupathi 2 represents fiery determination and emotional authenticity, qualities I poured my heart into bringing alive. This role marks my grand Tamil cinema entry alongside such legends. Tremendous thanks to director Mohan G for trusting me, producer Sola Shakkaravarthi for this opportunity. I express my gratitude for my co-star Richard Rishi sir for his guidance. My deepest thanks to Action Sandhosh sir for choreographing sequences that showcase Kodhai’s warrior spirit.”

Draupathi 2, directed by Mohan G and produced by Sola Shakkaravarthi under Netaji Productions, features Richard Rishi, Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy alongside Malavika Induchoodan, Deviyani Sharma, and Divi Vaidhyan. With A Ghibran’s evocative musical score, Philip K Sundar’s breathtaking cinematography, S Kamal’s art direction, Action Sandhosh’s gripping choreography, and Devaraj’s editing, the film arrives worldwide on January 23.

‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர்.

திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும் வெளிப்படுத்துவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ஜி சாருக்கு மனமார்ந்த நன்றி. எப்போதும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும், ஒவ்வொரு காட்சியிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலருடன் இந்தப் படத்தில் பணியாற்றியது மனதுக்கு நிறைவான அனுபவமாக இருந்தது” என்றார்.

ஆயிஷா கதாபாத்திரத்தில் நடித்த தேவியானி ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது எனக்கு பெருமையான விஷயம். அறிவும் அமைதியும் மன உறுதியும் கொண்டவள் ஆயிஷா. இயக்குநர் மோகன் ஜி இதை சரியாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் மனதை தொடும் இசை, கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம். உடன் பணிபுரிந்த அனைவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

கோதை கதாபாத்திரத்தில் நடித்த திவி வைத்யன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் கோதை கதாபாத்திரம் உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிப்பாள். அதை முழுமையாக நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நம்புகிறேன். பல திறமையான கலைஞர்களுடன் இந்தப் படத்தில் நான் அறிமுகமாவது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் மோகன் ஜி அவர்களுக்கும், தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் எனக்கு வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. கோதையின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்த ஆக்‌ஷன் சந்தோஷ் சாருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

Bhaarath-Saanve Megghana starrer Production No.4 shooting starts with ritual pooja ceremony

0

Shanthi Talkies Arun Viswa presents Filmmaker Hariharasuthan Azhagiri’s Directorial Bhaarath-Saanve Megghana starrer Production No.4 shooting starts with ritual pooja ceremony

Shanthi Talkies, headed by producer Arun Viswa, has been churning out commendable entertainers that wins the approval of universal crowds.. The production house has ritually inclined to the agenda of making movies that have entertainment factors with good values.. Following successful movies like Maaveeran, 3BHK, and with it’s third venture titled “Chiyaan 63” starring actor Vikram, under production , the producer is delighted to officially announce “Production No.4”, featuring Bhaarath in the lead role, who has become the most celebrated emerging hero in the horizon. Saanve Megghana is playing the female lead character in this film, directed by Harihara Suthan Azhagiri.

The shooting took off this morning (January 21, 2026) with ritual pooja ceremony.. The entire film’s shooting is scheduled to be completed in a span of 45-50 days in and around exotic locales of Pattukottai.

Bhaarath who has been constantly entertaining the crowds with his humorous appeal is playing the lead role in this movie. Saanve Megghana, who shot to fame for her commendable acting in Kudumbasthan is performing the female lead role. Bala Saravanan is performing an important character in this movie. Film’s title will be revealed soon.

This yet-to-be-titled film, written and directed by Harihara Suthan Azhagiri, is produced by Arun Viswa of Shanthi Talkies..

Theni Eswar is handling Cinematography, CS Balachandar is taking care of art work and Kiruthikha Sekar is overseeing costume designing.

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது தயாரிப்பான ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது நான்காவது தயாரிப்பான ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடிக்க, இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்குகிறார்.

இன்று (ஜனவரி 21, 2026) காலை, படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45–50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலந்த நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாரத், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘குடும்பஸ்தன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டப்பட்ட நடிகை சான்வி மேக்னா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலசரவணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்க, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனிக்க, கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.

Music Director Ghibran Crafts Draupathi 2’s Timeless Soundscape for ‘Draupathi 2’

0

Music composer Ghibran, whose discography consistently leaves music lovers awestruck through masterful fusion of spiritual essence across diverse genres, delivers an extraordinary score for Mohan G’s historical epic Draupathi 2, directed by Mohan G, and produced by Sola Shakkaravarthi of Netaji Productions. From debut album to recent chart-toppers, Ghibran’s compositions now elevate this emotional saga ahead of its worldwide release tomorrow, January 23, 2026.

Music Director A. Ghibran shares: “Travelling back in time to create music beyond our era proved profoundly challenging. I thank director Mohan G and producer Sola Shakkaravarthi for this opportunity. Draupathi 2 transcends routine war drama, embodying our people’s emotional and cultural values, pain, poetry, romance, revenge, patriotism. This project let me explore unique musical domains, reminiscent of my work with Kamal Haasan sir on Uthama Villain. The background score carried deep responsibility given Philip K Sundar’s brilliant visuals. I eagerly await tomorrow’s theatrical experience.”

Draupathi 2, produced under Netaji Productions, boasts an ensemble star-cast featuring Richard Rishi in the lead and the others in the star-cast include Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy, Chirag jani, Dinesh lamba, Ganesh gourang, Y Gee Mahendran, Barani, Deviyani Sharma, Divi, Saravanan Subbiah, jayavel among others . Philip K Sundar’s cinematography, S Kamal’s art direction, Action Sandhosh’s choreography, and Devaraj’s editing complement Ghibran’s score for the January 23, 2026 worldwide release.

‘திரெளபதி 2’ திரைப்படத்திற்காக மனதை ஊடுருவும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, “நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பொங்கல் கலைவிழா கலைச் சங்கமம்

0

தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றமுத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும்விதத்தில், 1973 -ம்ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நா டக மன்றம் எனப் பெயர் சூட்டப்ட்டது. கலை, பண்பாட்டு இயக்ககத்தின்ஓர்அங்கமாகத்திகழும், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் தமிழ்நாடு அராசால் வழங்கப்டும் நிதியுதவியின் மூலம் பழமையான கலை களை வளர்த்தல், அக்கலை களில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய கலை நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்ப ரியக் கலைகளை பல மாநிலங்களிலும் உல களவிலும் எடுத்து செல்லுதல் மற்றும் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைய்யும் கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நலிந்தநிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தமிழ்நாடுஇயல்இசை நாடகமன்றம் மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் “கலை சங்கமம்” கலை விழாவாக சிறப்பாக கொ ண்டாட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்..தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒரே நாளில் (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கலை சங்கமம் கலை விழா அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொள்ளும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த சிறப்பிற்குரிய, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

வருகிற 22.01.2026 மாலை 6 மணியளவில் சென்னை, ராஜாஅண்ணாமலை புரம், முத்தமிழ் அரசவையில் இயல் சங்கமமும், 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டிய சங்கமமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைச் சங்கமம் கலை விழாக்களின் வாயிலாக “நான்காயிரத்திற்கும் மேற் ட்டகலைஞர்கள் பங்கு பெறுவார்கள் மன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் • நலிந்த நிசலை யில் வாழும் கலை ஞர்களுக்கு திங்கள் தோ றும் நிதியுதவிரூ.3000/- உயர்த்தப்ட்டு அதற்கான உத்தரவு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் 2021 ஜுன் மாதத்தில்வழங்கப் ட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி, இந்த ஆண்டு (2025-26) அகவை முதிர்ந்த, நலிவுற்ற நிலையில்வாழும் கலை ஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பத்திருந்த 2,500 கலைஞர்களுக்கும் ஒரே நேரத்தில் மாதாந்திர நிதியுதவி வழங்குவதற்கு ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 05.09.2025 அன்று கலைஞர்களுக்கு ஆவணகள் வழங்கப்ட்டன.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு, ஆண்டுததாறும்வழங்கப்ட்டு வந்த நிதி ரூ.3.00 கோ டியிலிருந்து ரூ.4.00 கோ டியாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் 2025–2026ஆம் ஆண்டு நிதி அறிவித்து உயர்த்தி வழங்கப் ட்டது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியின் கலை விழா மற்றும் கlaiத் திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப் பணிகளை மன்றம் செய்படுத்தியது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஓன்றிய அளவில்மட்டு இல்லாமல் உலக அளவில் தலை சிறந்த கலை நிறுவனமாகச் செயல் ட்டுவருகிறது . இச்செய்திகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் மற்றும்தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத் தலைவர் திரு. வாசகை சந்திரசேகர் அவர்களும், உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களும் தெரிவித்தார்கள்.

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி…

0

விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்,
சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள்,

சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன்,

சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை,

நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு,

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு
விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் உரையாற்றிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி,
“நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம்.

நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்றார்.

இந்த விழாவில், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

மொத்தத்தில், விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சவால்கள், அவற்றுக்கான அவசியமான முன்னெடுப்புகள் என்ன என்பதையும் அனைவருக்கும் முழுமையாக புரிய வைக்கும் நிகழ்ச்சியாக இந்த ‘உழவர் விருதுகள் 2026’ விழா அமைந்தது.

கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு

0

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே‌.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Rockstar DSP’s Scintillating Dance on Times Square, New york for an reel blown away social media.

0

ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் (டி எஸ் பி) துள்ளல் நடணம் மகவும் அருமை. நியூயார்க் கலைஞர்கள் உடன் இணைந்து அவர் ஆடியுள்ள அற்புத நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் (டி எஸ் பி) இசையில் விஷால் தட்லானி தேக்லேங்கே சாலா என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலையும் படத்தையும் புரமோட் செய்வதற்காக நடனக் கலைஞர்கள் உடன் இணைந்து அமெரிக்காவில் தேவி ஶ்ரீ பிரசாத் உற்சாகமாக நடனமாடி ரீல்ஸ் உருவாக்கியுள்ளார்.

இது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் (டி எஸ் பி) இசையில் விஷால் உறுவான பாடல்.

**

Rockstar DSP’s Scintillating Dance on Times Square, New york for an reel blown away social media. DSP rocked with his amazing Dance steps on iconic location around times square, with his team of dancers. The swag and style in snow weather the social media is really amazed with his dedication. ew year..

Rockstar Devi Sri Prasad (DSP) the music composer of the song Deklenge Saala song from the film ‘Ustaad Bhagat Singh’, starring Pawan Kalyan, directed by Harish Shankar and produced by Mythri Movie Makers.

- Advertisement -

Recent Posts