Wednesday, June 17, 2026
- Advertisement -
Home Blog Page 632

Lively break-up album ‘Single Aayiten Di’ starring Mugen Rao, Teju Ashwini, directed by Magesh Ram K, produced by SGC Media, with music by Dharan Kumar gears up for release

0

In a bid to change the trend that break-up means a sad song in films and albums, ‘Single Aayiten Di’ produced by SGC Media & Entertainment, directed by Magesh Ram K and music composed by Dharan Kumar has taken shape as a lively break-up album.

The song features Mugen Rao and Teju Ashwini in lead roles and also stars Imman Annachi, Deepa and Prankster Rahul.

After the success of the album ‘Baby Nee Sugar’ starring Ashwin and Losliya, SGC Media & Entertainment and Magesh Ram K have teamed up again for the album ‘Single Aayiten Di’. It is to be noted that Magesh Ram K has also directed the film ‘Ivan Thaan Uthaman’ starring Mahat Raghavendra.

Magesh Ram K has joined forces with a skilled team for ‘Single Aayiten Di’. Noted director Vignesh Shivan has penned the lyrics, Dharan Kumar composed the music, ‘Cobra’ cinematographer Harish Kannan handled the cinematography and R C Pranav has taken care of editing.

Sharing details about ‘Single Aayiten Di’, Magesh Ram K said, “‘Single Aayiten Di is an album that cheerfully tells break-up is not the end of the life and it should be taken positively. This is the idea behind the album. Normally in romantic albums,
only the hero and the heroine will be there. But in ‘Single Aayiten Di’, there are Imman Annachi, Deepa and Prankster Rahul apart from Mugen Rao and Teju Ashwini. ‘Single Aayiten Di’ has been made like a movie with no compromises in production values. I am sure everyone will enjoy the album, which will be released on March 21 by Sony Music.”

Rubini S is the creative producer of the album. Satish Krishnan has handled the concept and choreography, Karthik has taken care of art direction and Poorthi Pravin is the costume designer. Nikil Murukan handles public relations.

Produced by SGC Media & Entertainment, directed by Magesh Ram K, music composed by Dharan Kumar, and starring Mugen Rao and Teju Ashwini in lead roles, ‘Single Aayiten Di’ is a lively break-up album releasing on March 21 on Sony Music.

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

பிரேக் அப் என்று அழைக்கப்படும் காதல் முறிவு என்றாலே சோகப்பாடல் தான் என்பதை மாற்றி அமைக்கும் முயற்சியாக எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ உருவாகி உள்ளது.

முகேன் ராவ், தேஜு அஷ்வினி முன்னணி பாத்திரங்களாக தோன்றும் இந்த பாடலில் இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

அஷ்வின் மற்றும் லாஸ்லியா நடிப்பில் பலரது இதயங்களை வென்ற ‘பேபி நீ சுகர்’ ஆல்பத்தின் வெற்றிக்கு பிறகு எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் மகேஷ் ராம் கே ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மகத் நடித்த ‘இவன் தான் உத்தமன்’ திரைப்படத்தையும் மகேஷ் ராம் கே இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மிகவும் திறமை வாய்ந்த குழுவினருடன் மகேஷ் ராம் கே கைகோர்த்துள்ளார். பாடல் வரிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, தரண் குமார் இசை அமைக்க, ‘கோப்ரா’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவை கையாள, ஆர் சி பிரணவ் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார்.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ பாடலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் மகேஷ் ராம் கே, “பிரேக் அப் என்றால் மனம் உடைய தேவையில்லை என்பதையும், அதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கலகலப்பாக சொல்லும் ஆல்பமாக ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ உருவாகி உள்ளது. காதல் ஆல்பத்தில் பொதுவாக நாயகன், நாயகி மட்டும் தான் இடம் பெறுவார்கள். ஆனால் இதில் முகேன் ராவ், தேஜு அஷ்வினி தவிர இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோருக்கும் முக்கிய இடமுண்டு. தயாரிப்பில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை போன்று ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ அமைந்துள்ளது. மார்ச் 21 அன்று சோனி மியூசிக்கில் வெளியாக உள்ள ஆல்பத்தை அனைவரும் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக ரூபிணி எஸ் பங்களித்துள்ளார். கான்செப்ட் மற்றும் நடன இயக்கத்தை சதீஷ் கிருஷ்ணன் கையாள, கலை இயக்கதிற்கு கார்த்திக்கும், ஆடை வடிவமைப்புக்கு பூர்த்தி பிரவீனும் பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக உருவாகி உள்ள ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ மார்ச் 21 அன்று சோனி மியூசிக்கில் வெளியாகிறது.

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

0

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து,
இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”!

நினைக்காத நாளில்லை படத்தில் வடிவேலு, பார்த்திபன் இருவர் கூட்டணியில் ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற… காமெடி, தீக்குச்சி படத்தில் நரிக்குறவனாக வடிவேலு படம் முழுவதும் செய்த காமெடி போல், விழுந்து சிரிக்க காமெடிகளும், விறுவிறுப்பான காட்சிகளும், இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது!

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா.

சாதிக்க துடிப்பவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை, உயிரோட்டத்தோடு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.ராஜா!

நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன் ரசிகர்கள் ரசிக்கவும், மக்கள் சிந்திக்கவும், விரைவில் திரைக்கு வருகிறது “சூரியனும் சூரியகாந்தியும் “!

“‘பத்து துல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன்.

0

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘பத்து துல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘முன்பே வா என் அன்பே வா’ பாடலை குறிப்பிடுவேன். இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும் அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன். ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அப்படியே நடந்தது. அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார். அவருடைய பொறுமை, இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள். படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அக்கரையில..’ பாடல் சிம்பு பாட வேண்டியது. ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன். டி.ஆர். சார் இங்கு இருக்கிறார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம். படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்’ என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்திரன். அவர் பேசியதாவது, ” இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை. ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம். இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம். நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும் வாட்டம். என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த ‘பத்து தல’ என்ற தேரோட்டம். என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார். சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார். அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார். கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார். அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு. அந்த அன்புக்காகவே இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்’ என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அடுத்து இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தோம். கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது. அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன். ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா. ஆனால் நான் பேசிய பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை. இது அனைத்தும் கடவுளின் அருள்தான். நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் இசை கேட்டேன். அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார். எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய ‘தம்’ படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது. அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார். என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது. கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார். ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது. அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் நான் மாறி இருக்கிறேன். நன்றி சார்”.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, ” எனக்கும் சிம்புவுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவருக்கு இணையான எதிரி அவரை தவிர வேறு யாருமில்லை என்று நினைக்கும் பாசிட்டிவான எண்ணம் தான். நான் சிம்புவை முதல்முறை சந்தித்தபோது எத்தனை எளிமையாக இருந்தாரோ இத்தனை வருடங்கள் கழித்தும் அதேபோலத்தான் இருக்கிறார். அவருடைய நல்ல குணத்திற்காகவே இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை கடந்து இப்பொழுது நாங்கள் நிற்கிறோம். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு வேறொரு பெரிய இடம் காத்திருக்கிறது. அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய மகனாகவே அவரைப் பார்க்கிறேன். என்னுடைய அடுத்த சினிமா வாரிசு அவர்தான். அவருடைய கடின உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் இன்னும் ஒன்று இரண்டு வருடங்களில் தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகனாக நிச்சயம் வருவார். அடுத்து கிருஷ்ணா! என்னுடைய சிறந்த நண்பர். இடையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் கதை சொல்கிறேன், படம் இயக்குகிறேன் என்று வாய்ப்பு கேட்டதே இல்லை. நானே தான் அவரிடம் எனக்கு படம் இயக்க வேண்டும் என்று கேட்டேன். இந்த படம் ஜெயித்து, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறுவதற்கான இடம் அவருக்கு இருக்கிறது என்பது எனக்கு பெருமையான ஒரு விஷயம். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி”.

படத்தின் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கர் பேசியதாவது, ” விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் கிருஷ்ணா மிகவும் பொறுமையான உறுதியான மனிதர். சிலம்பரசனில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை எல்லாரையும் ஒன்று போலவே மதித்து மரியாதையாக நடத்தினார். அதற்கு எப்பொழுதுமே அவருக்கு நன்றி சொல்கிறேன். அடுத்து கௌதம் மேனன் சார். அவர் நடித்து வெளியாகும் படங்களை பார்க்கும் பொழுது பயமாக இருக்கும். அவர் இயக்கத்தை கைவிட்டு விடுவாரோ என்று. கெளதம் சார் தயவு செய்து நிறைய படங்களை எங்களுக்காக இயக்குங்கள். மனுஷ்யபுத்திரன் சார் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன். அவரது முதல் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் மிகப் பெரிய ரஹ்மான் சார் ரசிகை. கடவுள் எங்களுக்காகவே உங்களை ஸ்பெஷலாக படைத்து அனுப்பி இருக்கிறார் என்று தான் சொல்வேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் இசையில் என்னுடைய முகம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய தோழியின் கணவர். உங்கள் இரண்டு பேருக்குமே என்னுடைய அன்பு. அடுத்து சிலம்பரசன் சார், அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு அங்கு கிடைக்கவில்லை. இத்தனை பேருடைய அன்பு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பது அவருடைய ஆசீர்வாதம் என்றுதான் சொல்வேன். இந்த படப்பிடிப்பை எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி தந்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம்! ‘பத்து தல’ என் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம். படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நிச்சயம் படம் வெற்றியடைய வேண்டும். என்னை நம்பி மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா சாருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் சார் அதை அற்புதமாக செய்திருக்கிறார். அஜய், சாண்டி, பிருந்தா மாஸ்டருடன் வேலை பார்த்தது எனக்கு ‘கடல்’ படத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. கெளதம் மேனன் சாருடன் இந்தப் படத்தில் எனக்கு காட்சிகள் இல்லாதது வருத்தம்தான். அறிமுக நடிகராக எனக்கு முதல் படத்தில் ரஹ்மான் சாருடைய இசை மிகப்பெரிய கனவாக இருந்தது. இப்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறேன். படத்தின் பாடல்களை கேட்கும் பொழுது சில இடங்களில் கண் கலங்கினேன். அடுத்து எஸ் டி ஆர் அண்ணன்! முதன்முதலில் அவரை 2013 இல் லண்டனில் தான் சந்தித்தேன். என்னை அவருக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவரே வந்து என்னிடம் பேசி லண்டனை முழுவதும் சுற்றிக்காட்டி பாதுகாப்பாக கூட்டிச் சென்றார். அப்போதே அவர் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. அப்பொழுது அவர் என்னிடம் ஆன்மீக பயணம் குறித்து சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கு அது சரியாக புரியவில்லை. இப்பொழுது அதை பின்பற்றி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரமிப்பை தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வந்து நின்றாலே அத்தனை தலையும் அவரை தான் திரும்பி பார்க்கும். கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டால் அவரது தலையில் இருந்து கால் வரை அத்தனையும் நடிக்கும். அவர் போல ஒரு நடிகராக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஏ.ஜி.ஆர்ரின் பவரை நீங்கள் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வந்து பார்த்து ரசியுங்கள்”.

நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, ” அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு வரும்போது எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அது நான் அழக்கூடாது என்பதுதான். நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர். அப்படி இருக்கும்பொழுது ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக தான். இவ்வளவு நாள் எல்லா கஷ்டத்தையும் பார்த்தாகி விட்டது. அந்த கஷ்டத்தை எல்லாம் எனக்காக பார்த்த நீங்கள் இனிமேல் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த சோகம் எல்லாம் முடிந்து விட்டது. இந்த நேரு ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு நிறைய முறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மற்றவர்களுக்காக கூடிய கூட்டத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக என்னை நேசிக்கும் ரசிகர்களை நேரில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு நான் மனதளவில் மிகவும் அமைதியாக இருந்தேன். சினிமா எல்லாம் வேண்டாம் ஆன்மீகம் பக்கம் போகலாம் என்று வீட்டிற்குள்ளேயே இருந்தேன். அப்பொழுதுதான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார். கன்னட படமான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். இந்த படத்தை அங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ் அண்ணா நடித்திருப்பார். அவரை போல் எப்படி நடிக்க முடியும் என்று யோசித்தேன். பிறகு இந்த படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் கௌதம்தான். இங்கு தட்டிக் கொடுப்பதற்கு தான் ஆள் இல்லை, தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு தட்டி கொடுக்க இத்தனை நாள் வரை இருந்தது ரசிகர்கள் மட்டும்தான். கௌதம் கார்த்திக் ஒரு திறமையான நல்ல மனிதர். எனக்கு இந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அவருடைய உழைப்புக்கு நிச்சயம் மிகப்பெரிய இடத்தை இது வாங்கி கொடுக்கும். இந்த படம் நான் ஒத்துக்கொண்ட பொழுது மிகவும் குண்டாக இருந்தேன். அது அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தது. பின்புதான் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடந்தது. ‘மாநாடு’ படம் வெளியானது. பிறகு மீண்டும் ‘பத்துதல’ படத்துக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது நான் நினைத்திருந்தால் தயாரிப்பாளரை கூப்பிட்டு பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் இப்பொழுது வேறு லைனில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்பொழுதும் என் நினைவுக்கு வந்தது கௌதம் தான். அவருக்காக இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் உள்ளே வந்தேன். அப்பொழுது இயக்குநர் என்னிடம் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார். நான் அதை செய்து விடுவேன்! ஆனால் பார்ப்பவர்கள் சிம்பு மீண்டும் உடல் எடை அதிகரித்து ஷூட்டிங் வராமல் போய்விடுவான் என்று எழுதி விடுவார்கள், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து பார்த்த பொழுது அது செட்டாகவில்லை. பின்பு 108 கிலோ உடல் எடை அதிகரித்து இப்பொழுது குறைத்தேன். ‘மீண்டும் உன்னை ரசிகர்கள் திரையில் எதிர்பார்த்து இருக்கும்பொழுது, ரசிகர்களுக்காக மீண்டும் அதிகரித்த உடல் எடையை உன்னால் குறைக்க முடியாதா’ என்று எனக்கு தோன்றியது. பிறகு உடல் எடை அதிகரிக்க கிருஷ்ணாவிடம் சம்மதம் தெரிவித்தேன். என்னுடைய வயதுக்கு இது மெச்சூர்டான ஒரு கதாபாத்திரம்தான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை கொடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்து ‘சூர்யா 42’, ‘தங்கலான்’ ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். என்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்திலேயும் எனக்கு துணை கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் துணை இல்லை. அது பிரச்சனை இல்லை! எனக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ‘தம்’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா என்னுடன் ஒரு படம் இயக்க வேண்டி இருந்தது. அப்பொழுது அது நடக்கவில்லை. அப்பொழுது கிடைத்திருந்தாலும் அவருக்கு ஒத்ததல தான் கிடைத்திருக்கும். இப்பொழுது, ‘பத்து தல’ கிடைத்து இருக்கிறது. அடுத்தது என்னுடைய காட்ஃபாதர் ரஹ்மான் சார். அவர் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நிச்சயம் நடந்து கொள்வேன். இதுவரை 50 படங்கள் நடித்து முடித்து இருக்கிறேன். ஆனால் எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கும் வராத என் அம்மா அப்பா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்கள் தான். அதற்கான ஏற்பாடுகளை அத்தனை சிரத்தை எடுத்து செய்து கொடுத்தவர்களுக்கு நன்றி. முன்பெல்லாம் அதிரடியாக எனர்ஜியாக பேசுவேன். அது இப்பொழுது என்னுடைய பேச்சில் இல்லை அமைதியாக பேசுகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். அது உண்மைதான்! அதற்கு காரணம் என்னவென்றால், அந்த நேரத்தில் எனக்கு தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை. என்னுடைய ரசிகர்களை தவிர வேறு யாரும் அப்பொழுது இல்லை, எனக்கு நானே துணை நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால்தான் அப்படி கத்தி பேசினேன். அது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஊக்கம் தான். அதனால்தான் 39 கிலோ என்னால் குறைக்க முடிந்தது. பிறகு ‘மாநாடு’ படம் வெளியாகி வெற்றியடைந்து, ‘வெந்து தணிந்தது காடு’ வந்து, இப்பொழுது ‘பத்து தல’ படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி இருக்கும்பொழுது எப்படி நான் கத்த முடியும் பணிந்து தான் பேச முடியும். என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக தான் படத்தை முடித்துவிட்டு மூன்று மாதம் சென்று மறுபடியும் உடல் எடை குறைத்து இப்பொழுது வந்து நிற்கிறேன். இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல் மட்டும் தான். ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே தான். ஒவ்வொரு நாளும் நம்மை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு நாட்கள் ரசிகர்கள் எனக்காக கஷ்டப்பட்டது போதும். கூலாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு இனிமேல் என்னை ரசியுங்கள். நான் திரும்ப வந்துவிட்டேன். வேற மாதிரி வந்திருக்கிறேன். விடவே மாட்டேன். நம் தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமை பட வைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அது எனக்கும் நிச்சயம் உண்டு. உங்களுடைய தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் நீங்களாகவே இருங்கள். இதுதான் என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது” என்று கூறிய சிம்பு மேடையில் ‘லூசுப்பெண்ணே’ பாடலைப் பாடி நடனம் ஆடினார்.

பின்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டோடு விழா நிறைவடைந்தது.

Sudhanshu Saria’s Psychological Thriller ‘Knock Knock Knock gets a new home

0

Sudhanshu Saria’s psychological thriller ‘Knock Knock Knock’ is now streaming on the EPICON platform. The short film for which Saria won the National Award in 2021 for Best Direction in the Non-Feature section, is a haunting exploration of mental health and the ways in which we cope with our deepest fears.

Starring Santilal Mukherjee and Phuden Sherpa, the short is set in the Himalayan foothills and tells the story of a man who is visited by a mysterious stranger in the middle of the night. As the two men engage in a tense conversation, we begin to unravel the deep-seated traumas and insecurities that plague their lives.

The film premiered at the BUSAN International Film Festival and went on to screen at the TALLINN Black Nights Film Festival and the NEW YORK INDIAN Film Festival. It was programmed alongside films by acclaimed directors like Yorgos Lanthimos and Peter Strickland.

Saria said, “I am excited that a whole new audience will have the chance to experience ‘Knock Knock Knock’ and engage with its take on loneliness, bullying and mental health. It is a deeply personal film for me, and I am grateful that EPICON is bringing it to a wider audience.”

In addition to ‘Knock Knock Knock’, Saria has several upcoming projects in the works. He is currently working on ‘Sanaa’, an introspective drama, and a young adult show for Amazon Prime Video. He is also co-producing and writing ‘Delhi Crime Season 3’ for Netflix and is set to direct a spy thriller titled ‘Ulajh’ with Junglee Pictures.

‘Knock Knock Knock’ is a gripping exploration of the human psyche, and a must-watch for fans of psychological thrillers. With Saria’s deft direction and powerful performances from the cast, it is a film that will stay with you long after the credits roll.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

0

ஏப்ரல் 7 இல் வெளியாகவிருக்கும் திலீபனின் ‘எவன்’

சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘எவன்’. இதில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க, இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு ஷண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன். அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகிறது. ” என்றார்.

இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிளிலும் எந்த வித டூப் போடாமல் இவரே நடித்துள்ளார் .முறையாக சண்டை பயிற்சி கற்ற நடிகர் திலீபன் அவர்கள் .படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நா

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் மாயம்

0

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே என் ஆர் மூவிஸ் சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மாவீரன் பிள்ளை

0

இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 23 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு நாயகன் ராஜாவும் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் வீரப்பனின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி இப்படத்தின் போஸ்டரை அங்கே வெளியிட்டார்கள்..
பிறகு காடுவெட்டி குருவின் நினைவிடம் சென்று அங்கேயும் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள்…

Pan India star Pooja Hegde shows her foodie side in her recent Instagram story.

0

Pan India star Pooja Hegde, on Friday, interacted with her fans on social media where the fans quizzed the actor about her favorite food. Sharing a picture of the famous Gujarati dish Khandvi the actor pointed out how she loves Gujarati food, especially Khandvi and often prepares it at home too.

Pooja Hegde also revealed she learned to make Khandvi as her mother enjoys it too. The versatile actor also shared her fondness for curd rice, which she often enjoys along with some pickles, especially when she is tired or sick.

Recently, Pooja Hegde grabbed eyeballs with her dance moves in Billi Billi from Kisi Ka Bhai Kisi Ki Jaan. The electrifying chemistry between Pooja Hegde and Salman Khan is unmatched and the netizens can’t wait to watch the pair on the big screen.

Fourth edition of Iconic Gold Awards 2023 a grand success!

0

The fourth edition of CBTF Presents Iconic Gold Awards 2023 (in association with Ankibai Ghamandiram Gowani Trust) which was held on 18th March, 2023 at hotel Sahara Star, is back with a bang and the celebration was ten times more joyous, rewarding and entertaining on all fronts!

The IGA 2023 was a grand success with the best of the best in attendance. As usual, the coveted award found its way into the hands of the most deserving talent from the film, television and OTT industry.

The awards night saw the presence of several celebrities including Anupam Kher, Dr. Jayantilal Gada, producer Depak Mukut, Pallavi Joshi, Ankita Lokhande with husband Vicky Jain, Richa Chadha, Rupali Ganguly with her family, Tina Dutta, Pratik Sehajpal, Shiv Thakare, Abhishek Agarwal (producer of The Kashmir Files), Nikhil Siddhartha who were welcomed by the CEO of Iconic Gold Awards, Piyush Jaiiswaal.

The highlight of the award ceremony this year includes special performances by singers Udit Narayan and Laqshay Kapoor. Popular Dancer Ritu Gupta also performed on a spiritual group performance.

The IGA 2023 saw many popular faces from the television and entertainment industry walking away with the prestigious Iconic Gold trophies flaunting their fashionable best on the red carpet including singer Laqshay Kapoor, Sikandar Kher, Karan Tacker, Nikita Dutta, Rajiv Adatia, Mukesh Chhabra, Warda Nadiadwala, Udit Narayan, Palak Muchhal, Priyanka Choudhary, Gauahar Khan, Anees Bazmee, Karan Kundra, Karan Tacker, Vineet Kumar Singh, Sanjana Sanghi, Hina Khan, Dheeraj Dhoopar and Anjali Arora Manish Sharma, Nidarshana Gowani, Ameer Merchant amongst others.

Actor Dileepan, who trained in fighting properly, surprised everyone by acting like Jackie chan

0

Dhileepan’s ‘YEVAN’ movie is set to release on April 7.

The film ‘YEVAN ‘ is produced and directed by debutant director Duraimurugan on behalf of Sun Light Cinemas. Dhileepan pugazhendhi is the hero of the story and actress Deepani Mano has been paired with him along with J.K. Sanjeeth, Ujjini Roy, gana Bala, Paandi Ravi, and others have acted. Cinematography by Sivaraman and  A.K. Sasitharan composed the music. The songs featured in the film were written by the late Pulavar Bulamaipitthan, Viveka, gana Bala and Ekha Rajasekhar did the film editing work. Dhileepan Pugazhendhi, the grandson of poet Pulavar  Pugazhendhi, is the hero of the film.

Speaking about the film, the director said that there have been many films centered on the mother-son relationship in the Tamil film industry. But in this film, we have set the screenplay of mother son relationship from a new angle. That means the hero of the story will give his life to his mother and also, take life for his mother. This is the one line story in this film. ‘YEVAN ‘ is all set to entertain all types of audiences.
He has acted in all the fight scenes in this film without putting any dope. Actor Dileepan, who trained in fighting properly, surprised everyone by acting like Jackie chan in a scene where he jumped from the 20th floor even when the people on the set told him to do so. Dhileepan pugazhendhi, the hero of the movie Evan (YEVAN), has the ability to show stunts like actor Ajith Kumar in two-wheeler and four-wheeler vehicle stunts.

ஏப்ரல் 7 இல் வெளியாகவிருக்கும் திலீபனின் ‘எவன்’

சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘எவன்’. இதில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க, இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு ஷண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன். அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகிறது. ” என்றார்.

இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிளிலும் எந்த வித டூப் போடாமல் இவரே நடித்துள்ளார் .முறையாக சண்டை பயிற்சி கற்ற நடிகர் திலீபன் அவர்கள் .படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்

- Advertisement -

Recent Posts