Thursday, June 25, 2026
- Advertisement -
Home Blog Page 67

Draupathi 2 Ignites Buzz as Chirag Jani Leads a Ferocious Villain Line-Up

0

*The much-awaited ‘Draupathi 2’ heightens the expectation meter with its next phase of unveiling three villains with Chirag Jani roaring as First-Level Antagonist.”

From the moment it was launched, Mohan G’s historical action drama Draupathi 2 has continued to build strong curiosity in audience and trade circles alike. Mounted as a grand multilingual period film rooted in 14th-century South India, the project has completed post-production and recently received its U/A certification from the Central Board of Film Certification (CBFC). Richard Rishi’s magnetic look, the scintillating songs, and the film’s striking visual scale have added further momentum to the hype, and the introduction of three powerful villains, with Chirag Jani positioned as the first-level antagonist, has intensified the intrigue surrounding the narrative.

Speaking about the casting of Chirag Jani, director Mohan G says, “Chirag portrays Mohammad Bin Tughlaq, not simply as a villain, but as a layered ruler whose brilliance often clashed with the consequences of his own choices. I wanted an actor who could convincingly bring together physical gigantism and intellectual brilliance. History remembers Tughlaq as an ‘intelligent fool,’ and capturing that contradiction requires tremendous control. Chirag immersed himself completely, he brings menace, dignity, calculation, and emotional depth to the role. He doesn’t just act the character; he lives it, and that presence lifts the film.”

Draupathi 2 features Richard Rishi in the lead, with Rakshana Indusudan as the female lead and Natti Natraj in a pivotal role. The ensemble cast includes Y.G. Mahendran, Nadodigal Barani, Saravana Subbiah, Vel Ramamoorthy, Siraj Johnny, Dinesh Lamba, Ganesh Gaurang, Divi, Devayani Sharma, and Arunodayan.

The film is produced by Chola Shakkaravarthi (Netaji Productions) in association with G.M. Film Corporation, with cinematography by Philip R. Sundar, music by Ghibran Vaibodha, action choreography by Action Santosh, choreography by Thanika Tony, editing by Devaraj, and production design by Kamalnathan. Dialogues are written by Padma Chandrasekhar and Mohan G.

With censor formalities completed, Draupathi 2 is now set to kick-start its marketing campaign, the trailer and audio launch will be unveiled shortly, followed by the worldwide theatrical release announcement very soon.

‘திரௌபதி 2’ திரைப்படத்தில் நடிகர் சிராக் ஜானி வில்லனாக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது!

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு.

நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்‌ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.

சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.

Superstar Rajinikanth Launches the First Look of Gautham Ram Karthik Starrer“ROOT – Running Out of Time”

0

The first look of “ROOT – Running Out of Time”, a sci-fi crime thriller produced by Verus Productions, was officially launched by none other than Superstar Rajinikanth, making the moment truly unforgettable for the entire team.

It was a proud and emotional occasion for the makers to present the visuals of ROOT to Thalaivar. The legendary actor graciously viewed the first look and a few glimpses from the film, appreciated the effort and vision of the team, and extended his heartfelt wishes for the project’s success.

For debut director Sooriyaprathap, this moment marked a truly special full-circle milestone. He had earlier worked as an associate director on Kochadaiiyaan, and now, his directorial debut’s first look being launched by the same Superstar Rajinikanth made the moment deeply emotional and unforgettable in his journey.

ROOT – Running Out of Time is written and directed by Sooriyaprathap S and stars Gautham Ram Karthik in the lead role, alongside Aparshakti Khurana (making his Tamil debut), Bhavya Trikha, Y. Gee. Mahendra, Pavni Reddy, Linga, RJ Anandhi, and others. The film explores a compelling sci-fi concept layered with intense emotional depth.

Shot extensively across Chennai and multiple locations, the project is progressing steadily and has now moved into its post-production phase.

Technical Crew:

Cinematography: Arjun Raja

Editing: John Abraham

Music: Aran Ray

CEO: Dr. D. Alice Angel

Action Choreography: Miracle Michael

Production designer : Jagan Nandhagopal

VFX: Santhakumar (Hocus Pocus Studios)

Costume Design: Deepthi RJ

Production Controller: Dhanalingam

DI: Prasad Studios

Colorist: Ranga

Sound Designer: Anand Ramachandran

Publicity Designer: Dinesh Ashok

Public Relations: Rekha

Digital promotions: Digitally Powerful

The launch of ROOT – Running Out of Time by Superstar Rajinikanth stands as a proud milestone for the team, adding immense strength and encouragement as the film gears up for its next phase.

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.

‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகளை தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் , கிரைம் திரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் இருக்கிறது.

ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா தொகுப்பு : ஜான் அபிரகாம்
இசை : அரன் ரே
CEO : டாக்டர் D. அலிஸ் ஏஞ்சல் சண்டை பயிற்சி : மிராக்கிள் மைக்கேல்
கலை இயக்கம் : ஜகன் நந்தகோபால் VFX : சந்தகுமார் (Hocus Pocus Studios) உடை வடிவமைப்பு : தீப்தி RJ தயாரிப்பு கட்டுப்பாடு : தனலிங்கம்
DI : பிரசாத் ஸ்டூடியோஸ்
கலர் கிரேடிங் : ரங்கா
ஒலி வடிவமைப்பு : ஆனந்த் ராமச்சந்திரன்
விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு : ரேகா டிஜிட்டல் விளம்பரங்கள் : Digitally Powerful
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்ட ‘ROOT – Running Out of Time’ பட முதல் பார்வை காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வவ்வால்’

0

இயக்குனர் ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் படம் வவ்வால்.

“வவ்வால் ” திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, ‘ஆன்டிமாண்ட்ஸ்’ என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது.

ஒரு திரில்லர் ஆக்‌ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் கலந்து எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே,
மலையாளத்தில் இருந்து லெவின் சைமன் மற்றும் மணிகண்டன், மற்றும் சுதி கோப்பா, கோகுலன், பிரவீன் டிஜே, மெரின் ஜோஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இயக்குனர் ஷாமன் பி. பரேலில் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 2026 இல் வரவிருக்கும் பெரிய படங்களின் பட்டியலில் ‘வவ்வால்’ திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, STREAMING FROM JANUARY 1, 2026 ON JIOHOTSTAR

0

Hotstar Specials ‘LBW – Love Beyond Wicket’, the upcoming original series starring Vikranth in his OTT debut, is set to stream from January 1, 2026, exclusively on JioHotstar. Available across Tamil, Malayalam, Telugu, Kannada, and Hindi, the series is poised to reach audiences across regions.

Following the successful launch of its promo, which received an enthusiastic response across platforms, audiences were particularly excited to see Vikranth in the role of a cricket coach, marking a refreshing and impactful turn in his career. The buzz around the promo has further heightened anticipation for the series’ premiere.

After the stupendous success of long-running, 100+ episode Tamil originals such as Kana Kaanum Kalangal, Heartbeat (Season 1 & 2), Uppu Puli Kaaram, Office, and Police Police, LBW – Love Beyond Wicket becomes the sixth title from JioHotstar’s Tamil slate to achieve this landmark format, reinforcing the platform’s leadership in creating deeply engaging, audience-loved series.

Marking the first Tamil original series to premiere from the slate announced at the JioHotstar South Unbound event, LBW – Love Beyond Wicket brings together cricket, emotions, and human relationships in a compelling narrative. Set against the backdrop of grassroots cricket, the series follows Rangan, a once-promising cricketer whose career never reached its potential. Now a reluctant coach, he is entrusted with shaping an underdog team at a struggling cricket academy, while navigating complex personal relationships that influence his journey. More than just a sports drama, LBW – Love Beyond Wicket is a deeply rooted relationship drama, exploring love, ambition, sacrifice, failure, and redemption—showing how relationships evolve under the weight of unrealised dreams and second chances, both on and off the field.

Written by Aruna Rakhee and directed by Ganesh Karthikeyan, the series features a strong ensemble cast including Sindhu Shyam, Niyathi, Harish, Ayaz Khan, Akshatha, Naveen, Nikhil Nair, and Viswa Mithran, among others.

Produced by AteleFactory, the creators behind the blockbuster and long-running series Heartbeat, LBW – Love Beyond Wicket promises emotionally rich storytelling, relatable characters, and a narrative that resonates across generations.

Streaming Details
Streaming From: January 1, 2026. Platform: JioHotstar
Languages: Tamil, Malayalam, Telugu, Kannada, Hindi

About JioHotstar
JioHotstar is India’s leading premium streaming platform, offering a rich library of blockbuster movies, original series, live sports, and entertainment across multiple languages. With a commitment to compelling storytelling and immersive digital experiences, JioHotstar continues to redefine entertainment for audiences across India.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LWB- லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட்பீட்’ (சீசன் 1 & 2), ‘உப்பு புளி காரம்’, ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட வருகிறது ‘LBW’.

சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ கதைப்படி ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர்.

அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிகரமான ‘ஹார்ட்பீட்’ இணையத்தொடரை தயாரித்த அட்லீஃபேக்டரி ‘LBW’ தொடரையும் தயாரித்துள்ளது. வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ ப்ரீமியர் ஆகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!

0

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும்.

‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் இருப்பதாக சொல்கிறார். அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்கிறார் நம்பிக்கையாக.

’மார்க்’ படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “என் மீது நம்பிக்கை வைத்து என் நடிப்பு திறமைக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் தெளிவும் வழிகாட்டுதலும் இந்த கதாபாத்திரத்தை திறமையுடன் கையாள உதவியது. மேலும் நடிகர் கிச்சா சுதீப்பின் ஊக்குவிப்பும், அக்கறையும் சகநடிகாராக எனக்கு தேவையான தன்னம்பிக்கை கொடுத்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் ஆதரவு கொடுத்தனர். ‘மார்க்’ திரைப்படம் உணர்வுப்பூர்வமாகவும் கிரியேட்டிவாகவும் பார்வையாளர்களுக்கு முழுமையான படமாகவும் இருக்கும்” என்றார்.

திறமை, சின்சியாரிட்டி, வசீகரம் மற்றும் உழைப்பு என சினிமாவுக்கு தேவையான அனைத்து தகுதிகளோடும் ‘மார்க்’ திரைப்படம் மூலம் தீப்ஷிகா சந்திரன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘மார்க்’ படத்தின் மீதுள்ள அதீத எதிர்பார்ப்பு போலவே தீப்ஷிகாவின் பிரகாசமான வருங்காலத்திற்கும் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The Tamil film industry is warmly welcoming Deepshikha Chandran, who delivers a compelling and confident performance as the female lead in the much-anticipated film Mark. With her expressive acting, emotional depth, and commanding screen presence, Deepshikha is being widely regarded as one of the most promising new talents, with many seeing her as a potential next big star in Tamil cinema.

In Mark, Deepshikha portrays a character layered with strength, vulnerability, and conviction. Her role plays a vital part in the film’s narrative, offering her ample scope to perform and connect deeply with audiences. Early buzz highlights her ability to balance intensity with subtle emotion, marking her arrival as a performance-driven actress.

Deepshikha Chandran has emphasized that versatility is central to her vision as an actor. She is keen to explore diverse roles across genres and narratives, choosing characters that challenge her creatively rather than confining her to a single image. She believes meaningful storytelling and artistic growth go hand in hand.

Speaking about her experience on Mark, Deepshika expressed deep gratitude to Sathyajothi Thyagarajan for placing immense trust in her and backing a role that truly valued performance. She spoke warmly of the director Vijay Karthikeya, whose sensitivity and clarity helped her discover the emotional core of her character. Deepshikha Chandran also shared heartfelt thanks to Kiccha Sudeep, whose encouragement, humility, and generosity as a co-actor gave her the confidence to push her limits. She credits the entire team for giving her the freedom and space to express herself fully, noting that their belief in her made the journey of Mark both emotionally fulfilling and creatively empowering.

With Mark, Deepshikha Chandran marks a significant milestone in her cinematic journey, signaling the arrival of an actress defined by talent, sincerity, and adaptability. As anticipation for the film continues to grow, both the industry and audiences are watching closely as she takes confident strides toward a bright future.

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

0

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.

தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe Hella படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது. பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன், ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.

தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

0

As Yash’s Toxic: A Fairytale for Grown-Ups inches closer to its highly anticipated theatrical release on 19th March 2026, the makers continue to peel back layers of its dark, immersive world. Adding to the rising anticipation, the team has now unveiled a striking new poster revealing Nayanthara as Ganga. Stunning, lethal, and formidable, the first look positions Nayanthara as a defining force within the universe of Rocking Star Yash’s most ambitious project yet.

Known for her star power, emotional depth and versatility, Nayanthara has built a legacy as one of India’s iconic actresses. With Toxic, she steps into darker territory – one that amplifies her innate presence while revealing a version of her that feels startlingly new.

Nayanthara’s portrayal of Ganga is visually breathtaking, radiating a fearlessness that matches the film’s massive scale. She commands the frame with a striking composure, wielding a gun with a practiced authority that feels both elegant and dangerous. Set against the opulence of a grand casino entrance, the lavish, high-stakes setting frames Ganga as a woman who owns the room and calls her own shots.

Speaking about casting Nayanthara as Ganga, director Geetu Mohandas said, “We all know Nayan as a celebrated star with a commanding screen presence, and a remarkable career spanning two decades but in Toxic, audiences will witness a talent that had been quietly waiting to explode. I wanted to portray Nayan in a way that she’s never been showcased before. But as the shoot progressed I began to see how closely her own personality echoed the soul of the character. It wasn’t imitation, it was alignment.The depth, the honesty, the restraint, and the emotional clarity she brought were not performances layered on top of the character,they were qualities she already possessed. I found my Ganga, so brilliantly performed by her, and even more unexpectedly, I found a dear friend.”

After redefining box-office history with KGF: Chapter 2, Rocking Star Yash returns to the big screen with Toxic: A Fairytale for Grown-Ups, a project that has been generating extraordinary anticipation across industries. With each reveal, the film continues to signal a bold departure from convention. Earlier, Kiara Advani ignited a firestorm of anticipation with her unveil as Nadia—ethereal yet melancholy, whose elegance and glamour barely conceal the scars. Following Kiara’s first look, Huma Qureshi’s dramatic reveal as the enigmatic Elizabeth deepened the mystery, leaving audiences intrigued with her never-seen-before old-world, Gothic glamour.

Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been filmed simultaneously in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages—underscoring its global ambition. The film boasts a formidable technical team, including National Award winner Rajeev Ravi as cinematographer, Ravi Basrur on music, Ujwal Kulkarni on editing, and TP Abid as production designer. High-octane action is choreographed by Hollywood action director JJ Perry (John Wick) alongside National Award-winning duo Anbariv and Kecha Khamphakdee. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a grand theatrical release on the long festive weekend of 19th March 2026, coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.

தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.

கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.

இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) கூறுகையில்,

“நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.

KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி அமைத்துள்ளனர்.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு

0

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..

வரும் ஜனவரி-2ஆம் தேதி உலகமெங்கும் ‘தி பெட்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையடுத்து இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. படம் பார்க்க வருகை தந்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்த ‘தி பெட்’ படக்குழுவினர், மேலும் ஒவ்வொருவருக்கும் வெள்ளை நிற பூத்துண்டு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வரவேற்புடன் பத்திரிகையாளர்களை வரவேற்று ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது இதுதான் முதன்முறை.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்

படத்தில் அம்மாவாக நடித்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர் பேசும்போது,

“நான் கேரளாவைச் சேர்ந்த பெண். தி பெட் படத்தின் மூலம் தான் முதன்முதலாக தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளேன். இது கொஞ்சம் சவாலான, துணிச்சலான கதாபாத்திரம்தான். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி. நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களைப் பேச வைக்கும்” என்று கூறினார்.

நடிகர் ப்ளாக் பாண்டி பேசும் போது,

“இயக்குநர் மணிபாரதியுடன் எனக்கு இது இரண்டாவது படம். நான் இதுவரை நண்பர்கள் கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. ஒரு பெட் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்தக் கதையை இயக்குநர் சொல்லி இருக்கிறார். இயக்குநர் மணிபாரதியைப் பொருத்தவரை எப்போதுமே யுவுக்கும் ஏவுக்கும் நடுவில் இருக்கும் (யு/ஏ) படமாகவே எடுப்பார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் சிறந்த இசையைக் கொடுத்து இருக்கிறார்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும்போது,

“ஆரம்பத்தில் இந்த படம் திரில்லர் ஜானர் என்றுதான் சொன்னார்கள். ஆனால் படத்தில் ஒரு பெட் கதை சொல்வது போல அவர்கள் உருவாக்கி இருந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

இயக்குநர் மணிபாரதி பேசும்போது,

“படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வெளியூர் சென்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை. நாயகி சிருஷ்டி டாங்கேவை நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இரண்டு முறை அழைப்பு விடுத்தும் ஏனோ அவர் வரவில்லை.

இத்தனைக்கும் அவருக்கு முழு சம்பளமும் செட்டில் செய்து விட்டோம். ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் வந்திருப்பாரோ என்னவோ ?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள்.

அவர்களை இந்த படத்தில் உள்ள அம்மா கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. அழைத்தாலும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள்.. அப்படி சில நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால் தான் அதற்கு கேரளா சென்று ஒரு புதிய முகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். இவர் இனி கொஞ்ச காலத்துக்கு தமிழ் சினிமாவில் புதிய அம்மாவாக வலம் வருவார்.

படத்தில் ஐடி இளைஞர்களைத் தவறாகக் காட்டவில்லை. இதேபோல இன்னும் பல துறைகளிலும் இளைஞர்கள் ஜாலி என்கிற பெயரில் இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படி சென்றால் இறுதியில் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை தான் ஒரு எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறோம். ஒரு போலீஸ் அதிகாரியின் படுக்கை அறைக் காட்சியை காட்டுவது கூட, ஒரு போலீஸ்காரனை தேடி எந்த நேரத்தில் எல்லாம் வேலை வரும், அதனால் அவரது குடும்பத்தில் எந்தவிதமான பாதிப்பு இருக்கும் என்பதை சொல்வதற்காகத் தான் அந்த காட்சியை வைத்தோம். அதில் கூட ஒரு டான்ஸ் மாஸ்டரை மனைவியாக நடிக்க வைத்தோம். டான்ஸ் ஆடுபவர் என்றால் அதற்கு மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டுமா என்ன ? இத்தனைக்கும் என் முதல் படத்தில் அவர் நடனமாடியவர்தான். இந்த படத்தில் கதாபாத்திரமாக நடிக்க வைத்தேன்” என்று கூறினார்.

இதன் தொழில்நுட்பக் கலைஞர்களாக கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, இவர்களோடு ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்..

மக்கள் தொடர்பு ; A.ஜான்

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

0

“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் மிகப் பெரிய அளவில் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகையை இரட்டிப்பு கொண்டாட்டமாக மாற்றும் வகையில், ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் மகேஷ் அச்சந்தா கூறியதாவது :

“2026 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் படம் ‘தி ராஜா சாப்’. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாருதி அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
பிரபாஸ் அண்ணா எனக்கு ஒரு டி-ஷர்ட் பரிசாகக் கொடுத்தார். அந்த ஒரு விஷயமே எனக்கு பெரிய சந்தோஷம். அவருக்கும், பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்த நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்தால், பிரபாஸின் ரசிகர் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”

பாடலாசிரியர் கஸர்லா ஷ்யாம் கூறியதாவது :

“பிரபாஸ் சாருக்காக நான் முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடல் விரைவில் ஒரு சர்ப்ரைஸாக வெளிவரும். மூன்று கதாநாயகிகளுடன் பிரபாஸ் நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்கிறேன்.”

நடிகை ஜரீனா வாஹப் கூறியதாவது :

“நான் கடந்த 40 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு நல்ல படத்தில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வழங்கிய பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும், மாருதி காருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் முழு குழுவும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இந்த படத்தில் பிரபாஸ் உடன் எனக்கு பல காட்சிகள் உள்ளன. நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபாஸ் போல நல்ல மனம் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இந்த படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.”

நடிகர் ரோஹித் கூறியதாவது :

“நான் பாலிவுட்டிலிருந்து வந்தவன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே ஒரு யூ-டர்ன் எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ரெபல் ரசிகர்களுக்கு எனது வணக்கம். பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”

நடிகர் சப்தகிரி கூறியதாவது :

“நான் பிரபாஸ் அண்ணாவுடன் ‘சாலார்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தின் இடைவேளை காட்சியைப் பார்த்த உடனே, ‘இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும்’ என்று சொன்னேன் — அது உண்மையாகவே நடந்தது. இப்போது தயாரிப்பாளரின் போனில் ‘தி ராஜா சாப்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். அது வேறு லெவலில் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக 2000 கோடி வசூல் செய்யும். மாருதி சார், நாமெல்லாம் பார்க்க ஆசைப்பட்ட அந்த பழைய ஸ்டைல் பிரபாஸ் அண்ணாவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார். கையில் பூ வைத்துக் கொண்டு, ரொமான்டிக் தோற்றத்தில் அவர் தோன்றுவது — இனிமேல் பல வருடங்கள் இப்படிப் பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இப்போது ஆக்ஷன் படங்கள் மட்டுமே செய்து வருகிறார். இந்த படத்தில் நம்மெல்லாரையும் விட பிரபாஸ் அண்ணாதான் அதிகமாகச் சிரிக்க வைப்பார்.
உங்களைப் போல நானும் பிரபாஸ் அண்ணாவைப் பார்க்கத்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.”

வட இந்திய விநியோகஸ்தர் அனில் தடானி கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக மாருதி அவர்களுக்கும், விஷ்வ பிரசாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரபாஸ் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். அவர் உங்கள் அனைவரின் அன்பிற்கும் முழுமையாக தகுதியானவர். இவ்வளவு பெரிய அளவில் பிரபாஸ் ரசிகர்கள் திரண்டிருப்பதைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் VTV கணேஷ் கூறியதாவது:

“இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் தான். அவர்கள் எனக்கு அளித்த வாய்ப்பினால், ‘பீஸ்ட்’ படத்தில் நான் பேசிய ‘யாருடா நீ இவ்வளவு டாலண்ட்டா இருக்க?’ என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அந்த ஒரே வசனம் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. சப்தகிரி அடிக்கடி என்னிடம் சொல்வார் – ‘நீ பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த ஒரு டயலாக் தந்த புகழ் வேறு எதுவும் தரவில்லை’ என்று.

‘தி ராஜா சாப்’ படத்தில் நான் 55 நாட்கள் வேலை செய்தேன். பிரபாஸ் காருடன் நடித்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.”

கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ படத்திற்கான தயாரிப்புப் பணிகள் 2021 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இந்தப் படத்தை முடிவு செய்த பிறகு, மாருதி இயக்கிய ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் மாருதி, பிரபாஸ் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம் —
‘என் வாழ்க்கையின் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் முழுக்க “ராஜா சாப்” பற்றித்தான் நான் யோசிக்கப் போகிறேன்’ என்றார். அதற்கு நான், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னது — ‘அந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் அதில் என் தவறு என்ன? நாம் ஒரு படம் உருவாக்கப் போகிறோம்; அதில் கவனம் செலுத்துவோம்’ என்று பிரபாஸ் கூறியதாகச் சொன்னார்.

பிரபாஸ் ஒருபோதும் சொன்னதை மாற்றிப் பேசுபவர் இல்லை. இந்த படத்திற்காக நான் செய்தது எதுவும் பெரிய விஷயம் அல்ல; அது ஒரு அணில் செய்த உதவி மாத்திரம். பிரபாஸ் எப்போதும் எந்தக் கள்ளம் கபடமும் இல்லாத மனிதர். அவருக்கு சினிமா தான் வாழ்க்கை.

யூரோப்பில் படப்பிடிப்பு நடந்தபோது, அவர் முழு குழுவுக்காக ஒரு வில்லாவை எடுத்துக் கொண்டு, தனிப்பட்ட சமையல்காரரை வைத்து, அனைவருக்கும் தெலுங்கு உணவு ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதரைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?

இந்த சங்கராந்திக்கு, நாங்கள் ஒரு 3 மணி 10 நிமிடங்கள் கொண்ட மாஸ் எண்டர்டெய்னரை திரையரங்குகளில் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு சங்கராந்திக்கும் நாம் சேவலுக்கு பந்தயம் கட்டுவோம்; இந்த முறை டைனோசருக்கு பந்தயம் கட்டப் போகிறோம். இந்த பண்டிகையை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடப் போகிறோம்.”

நடிகை ரித்தி குமார் கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். பிரபாஸ் எங்களுக்கெல்லாம் டார்லிங் தான். இந்தப் படத்தில் அவரை மாருதி சார், அவர் உண்மையிலேயே எப்படியோ அதே மாதிரி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் அவர்களின் அனைத்து நல்ல பண்புகளையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த படத்தைப் பார்த்த பிறகு அவரை இன்னும் அதிகமாக விரும்புவீர்கள். ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் ரசித்துப் பாருங்கள்.”

நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது:

“தெலுங்கு திரையுலகின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது. பிரபாஸ் போல ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன், ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ‘ரெபல் ஸ்டார்’, ‘ரெபல் கடவுள்’. ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ‘ராஜா சாப்’. நல்ல மனம் கொண்ட ஒரு உண்மையான நட்சத்திரம் அவர்.

இந்த படத்தில் நான் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக கதாநாயகிகளுக்குக் காதல் காட்சிகள், பாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் மாருதி சார் எனக்குக் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை அளித்தார். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.”

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

0

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.

மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில்,
“மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில்..,
“இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
படத்தொகுப்பு – ஆர். ராமர்.

ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான கதை சொல்லலுடன், மாஸ்க் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.

‘மாஸ்க்’ – ஜனவரி 9, 2026 முதல் ZEE5 தளத்தில், தமிழில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

- Advertisement -

Recent Posts