- Advertisement -
Home Blog Page 93

Filmmaker and director Prabhu Jayaram who had created a sensation with his debut film “yennanga Saar unga Sattam” that was a good hit in the OTT circles marks his directorial presence in this film.

0

Passion Studios & Goldmines present

Filmmaker and director Prabhu Jayaram who had created a sensation with his debut film “yennanga Saar unga Sattam” that was a good hit in the OTT circles marks his directorial presence in this film.

Arulnithi-Mamta Mohandas starrer “My Dear Sister” announcement with an unscripted fun-filled visual promo that creates wide spread attention.

Passion Studios continues to reaffirm its commitment to producing quality cinema across diverse genres, appealing to audiences from every walk of life. What consistently distinguishes the banner is its ability to create films that engage, entertain, and emotionally connect with family audiences.

Tamil cinema has long celebrated the bond between siblings, from timeless classics such as Paasa Malar to the 1990s gem Kizhakku Cheemaiyile, and the blockbuster Vedalam, the brother-sister sentiment has remained a beloved narrative, transcending generations and genres.

Carrying forward this cherished tradition, Passion Studios now presents an emotionally rich and engaging story titled My Dear Sister. The film is produced by Sudhan Sundaram of Passion Studios in association with Manish Shah of Goldmines Telefilms. Direction is by Prabhu Jayaram, who earned critical acclaim for his debut feature Ennanga Sir Unga Sattam.

Even before its official launch, My Dear Sister has been the subject of much anticipation, thanks to its unexpected yet compelling casting. The film brings together Arulnithi, known for his content-driven roles, and Mamtha Mohandas, celebrated for her versatility and depth. The duo will portray a brother-sister relationship central to the film’s emotional core.
Music director Nivas Prassana who is riding on the wave of success after the stupendous musical journey with “Bison” is the music director. My dear sister the film has got seven songs that are sure to capture the imagination of the music lovers.

The project was officially announced through a captivating visual promo, capturing a light-hearted tug-of-war between the two leads, an unscripted, spontaneous moment filmed on set. The video not only reflects their natural chemistry but also subtly hints at the playful conflict and emotional resonance that form the heart of My Dear Sister.

According to director Prabhu Jayaram says, “The film’s narrative centres on the ideological clash between the protagonist Pachai Krishnan, a staunch male chauvinist, and his elder sister Nirmala Devi, a committed feminist. The concept behind the visual promos draws inspiration from real-life light-hearted exchanges between Arulnithi and Mamtha Mohandas on the shooting sets. These moments have been subtly woven into the promotional material, reflecting the essence of their on-screen character dynamics in an indirect yet engaging manner.

Producer Sudhan Sundaram, Passion Studios says, “It is a privilege to collaborate with actors who have consistently sought out distinctive and meaningful roles. Arulnithi, known for his discerning choice of scripts and commitment to originality, once again demonstrates his versatility through this compelling story. Mamta Mohandas, needless to say, is an artist of remarkable depth and presence. The announcement video offers a unique glimpse into the tone and essence of the film. Passion Studios is delighted collaborating with producer Manish Shah of Goldmines Telefilms. He has been one big pillar in bringing more attention towards Tamil Cinema by dubbing and publicizing in Hindi regions. As producers, we take pride in assuring that the project will both entertain and resonate emotionally with audiences.”

The postproduction work is on the verge of completion. The first look of the film that was released today shows the siblings in the same weightage and it is that the content of the film. Equality in the gender both in social and family lives.

Cast & Crew Details

Starring: Arulnithi, Mamta Mohandas, Arunpandian, Meenakshi Govindarajan, Etc…

Technical Crew
Movie Name: My Dear Sister
Written & Directed – Prabhu Jeyaram
Produced – Sudhan Sundaram, Manish Shah
Production House – Passion Studios & Goldmines
Executive Producer – A. Kumar
DOP – Vetrivel Mahendran
Editor – Venkat Raajen
Art Director – K Arusamy
Music – Nivas K Prasanna
Co Director – Kapil Dev. M & Aashish. B
Lyricst – Uma Devi, Mohan Raajen, Vignesh Srikanth, Jegan Kaviraj, Prabhu Jeyaram
Stunt – Ganesh
Choreographer – Shankar R
Stills – Akash Balaji
Costumes – Dinesh Manoharan
DI colourist – John Sriram
VFX Supervisor – Fazil
DI & VFX STUDIO – Pixel Lights
Sound Design – Jaison Jose, Daniel Jefferson
Dubbing Engineer – N Venkata Pari
DUB, SFX & Mix – Four Frames
PRO – Suresh Chandra – Abdul Nassar
Publicity Design – Kannadasan DKD

பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படம் இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!

வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’, பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘வேதாளம்’ எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது.

அந்த வகையில், ‘மை டியர் சிஸ்டர்’ என்ற உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது பேஷன் ஸ்டுடியோஸ். கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், மனிஷ் ஷாவுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மம்தா மோகன்தாஸ் இருவரும் அண்ணன்- தங்கை கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர்.

‘பைசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘மை டியர் சிஸ்டர்’ படத்தில் இசை ரசிகர்களுக்குப் பிடித்த ஏழு பாடல்களை இயற்றி இருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.

உணர்வுப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பல தருணங்களைக் கொண்ட ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கண்ணை கவரும் புரோமோ அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் பகிர்ந்து கொண்டதாவது, “ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. இந்த விஷூவல் புரோமோ உருவாவதற்கு பின்னால் செட்டில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் மூலம் தனது திறமையை நிரூபித்து வரும் அருள்நிதி இந்தப் படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வார். தனது தேர்ந்த ஆழமான நடிப்பிற்கு பெயர் பெற்ற மம்தா மோகன்தாஸ் இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் மையக்கருவை விளக்கும் வகையில்தான் இந்த புரோமோ கிளிம்ப்ஸை உருவாக்கினோம். கோல்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், தயாரிப்பாளர் மனிஷ் ஷாவுடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தமிழின் பல படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட்டு அங்குள்ள பார்வையாளர்களின் கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்புவதில் மனிஷ் ஷா முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தக் கதை எண்டர்டெயின் செய்வதோடு பல உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொண்டுள்ளது என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர்கள்:

அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம் – பிரபு ஜெயராம்,
தயாரிப்பு – சுதன் சுந்தரம், மனிஷ் ஷா,
தயாரிப்பு நிறுவனம் – பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ்,
நிர்வாக தயாரிப்பாளர் – ஏ. குமார்,
ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன்,
எடிட்டர் – வெங்கட் ராஜன்,
கலை இயக்குநர் – கே. ஆறுசாமி,
இசை – நிவாஸ் கே. பிரசன்னா,
இணை இயக்குநர் – கபில் தேவ். எம் & ஆஷிஷ். பி,
பாடலாசிரியர் – உமா தேவி, மோகன் ராஜன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஜெகன் கவிராஜ், பிரபு ஜெயராம்,
ஸ்டண்ட் – கணேஷ்,
நடன இயக்குநர் – ஷங்கர் ஆர்,
ஸ்டில்ஸ் – ஆகாஷ் பாலாஜி,
ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்,
டிஐ கலரிஸ்ட் – ஜான் ஸ்ரீராம்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – ஃபாசில்,
டிஐ & விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோ – பிக்சல் லைட்ஸ்,
ஒலி வடிவமைப்பு – ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன்,
டப்பிங் இன்ஜினியர் – என் வெங்கட பாரி
டியுபி, எஸ்எஃப்எக்ஸ் & மிக்ஸ் – ஃபோர் ஃபிரேம்ஸ்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்,
விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டி.கே.டி

“வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” பொது உறவு நிகழ்ச்சி

0

வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை வளாகத்தில், ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” என்ற தலைப்பில் பொது உறவு நிகழ்ச்சி 05.11.2025 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபாகர் ராஜ், ஃபங்ஷனல் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் My Health School நிறுவனர் கலந்து கொண்டு, “ஆரோக்கியமான மனநிலைக்கான ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி பேராசிரியர் டாக்டர் எம். சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், இறுதி ஆண்டு பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் — பாரத் குமார், பாலமுருகன், ரஃபிக் பகி, மகேஷ் கேஷப், சித்திக் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது.
நிகழ்ச்சி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.

Vel Tech Rangarajan Dr. Sagunthala R&D Institute of Science and Technology, Avadi, Chennai The School of Media Technology and Communication organized a Public Relations Campaign titled “Wake Up to Live – Sleep Right, Eat Right, Live Bright” on 5th November 2025 at the Vel Tech Rangarajan Dr. Sagunthala R&D Institute of Science and Technology, South Campus, Avadi. With the blessings of Col. Prof. Vel Dr. R. Rangarajan (Founder President & Chancellor), Dr. Sagunthala Rangarajan (Foundress President), and Prof. Dr. Raj Gupta (Vice Chancellor), Public Relations Campaign titled “Wake Up to Live – Sleep Right, Eat Right, Live Bright” on 5th November 2025 at the South Campus. The PR Campaign began with Tamil Thaai Vazhthu and was graced by Dr. Prabhakar Raj, Functional Nutritionist and Founder of My Health School, as the Chief Guest. He delivered an inspiring talk on “Healthy Living for a Balanced Mind”, highlighting the importance of good sleep, nutrition, and stress management for overall well-being.

The campaign was organized by final-year B.Sc. Visual Communication students — Bharath Kumar, Balamurugan, Rafik Bagi, Magesh Keshep, and Siddick — under the guidance of Dr. M. Saravanan, Associate Professor. Over 300+ students from various departments participated enthusiastically. The event concluded with a Vote of Thanks, appreciating the management, faculty, and organizing team for their support and contribution to the success of the campaign.

Kichcha Sudeep’s MARK Wraps Up Shoot in Grand Style!

0

The much-anticipated film MARK, starring Kichcha Sudeep, has successfully completed its shoot. The final schedule featured a grand song sequence filmed on a massive 200-foot-long ship set, bringing together over 100 artists and 300 junior artists for a spectacular visual treat.

The production team has gone all out to create a film that exceeds fan expectations in both scale and grandeur. The film also features leading actors Naveen Chandra, Yogi Babu, Guru Somasundaram, and Vikrant in key roles, with music composed by Ajaneesh Loknath.

With the shoot now complete, MARK sails into post-production, gearing up for release.

கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!

கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.

Ril – Ak Racing Press Release

0

Ajith Kumar Racing is pleased to associate with Reliance Consumer Products Ltd (RCPL) and welcome them on board with their brand CAMPA Energy. Our sincere thanks to all at RCPL who share our vision to popularising motor sport.

Our association hopefully energises motor sports in India to get the attention it rightfully deserves.

Race mode on for RCPL and AKR ,- this is just the beginning

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், “டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது. இயக்குநர் கிஷோருக்கு வாழ்த்துக்கள்”.

கலை இயக்குநர் மாதவன், “நான் ராஜீவ் அவர்களின் சிஷ்யன். ‘லிஃப்ட்’ படம் செய்து கொண்டிருக்கும்போது துரைதான் என்னை கூப்பிட்டார். ஏனோதானே என்று இந்தப் படம் செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயமும் கவனமாக செய்திருக்கிறோம். நம்பிக்கை கொடுத்த இயக்குநர், கேமரா மேனுக்கு நன்றி”.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார், “இங்கு இருக்கும் நம் எல்லோருடைய கதைதான் ‘மிடில் கிளாஸ்’. ரொம்ப முக்கியமான கதை இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம். “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் ‘மிடில் கிளாஸ்’. படம் வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது”.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜூமுருகன், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது”.

இயக்குநர் விஜய் வரதராஜ், “படம் பார்த்துவிட்டேன். படத்தில் பேசப்பட்ட பல பிரச்சினைகளை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஆனந்த், “டில்லி பாபு சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ’மிடில் கிளாஸ்’ படம் பார்க்கும்போது டில்லி பாபு சார் முகம்தான் நிறைந்திருந்தது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை அவர் மாற்றியிருக்கிறார். படத்தின் பல தருணங்களை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. இசை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்”.

எடிட்டர் சான் லோகேஷ், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், “இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன். கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

இயக்குநர் விஷால் வெங்கட், “டில்லி பாபு சார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பொறுப்புடன் அடுத்து எடுத்து செல்லும் தேவ் மற்றும் துரை இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதை தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும். முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள். படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “இயக்குநர் கிஷோர் திறமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை. விஜயலட்சுமிக்கு இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, “என் கதையே படமாக இருக்கிறதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம். முனீஷ்காந்த், விஜயலட்சுமி பற்றி பேசாமல் இந்தப் படம் கிடையாது. விஜி அசத்தி இருந்தார். முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். தொழில்நுட்பக் குழுவினரின் பணிக்கு வாழ்த்துக்கள். தேவ் மற்றும் துரைக்கு வாழ்த்துக்கள். திரையில் இந்தப் படத்தை என் குடும்பத்தோடு மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்”.

பாடகர் ஆண்டனி தாசன், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளருக்கு நன்றி. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சக்திவேல், “டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர்தான் டில்லி பாபு. ’மிடில் கிளாஸ்’ படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”

இயக்குநர் ரவீந்திரன், “என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். முனீஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் குரேஷி, “டில்லி பாபு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். என்னை மதித்து அவர் கொடுத்த வாய்ப்பு இது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி நன்றாக நடித்துள்ளார்கள். ராதாரவி சார், கோடாங்கி என எல்லோரும் கலக்கி இருந்தார்கள். ‘மிடில் கிளாஸ்’ என்ற பெயருக்கு ஏற்ப பல விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

பாடகி சுப்லாஷினி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி. வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை”.

இயக்குநர் ராகவ் மிருதுத், “படத்தின் முதல் ஷாட் அருமையாக இருந்தது. பல பெரிய விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற படங்கள்தான் நூறு கோடி வசூலிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் மாறும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்”.

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் பிரணவ், “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி. படம் 21 ஆம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “’கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடைய பணியாற்றியுள்ளார் பிரணவ். ரொம்ப திறமையானவர். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்”

தயாரிப்பாளர் தேவ், “எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப் தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நன்றி. அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.

நடிகை விஜயலட்சுமி பேசியதாவது, “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கிஷோர், “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்”.

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்

0

நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதிலுமிருந்து வந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் வணிக தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வியில் தலைமைத்துவம் குறித்த தனது ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

உலக அரங்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கல்வித்துறைக்கு இது பெருமைமிகு மைல்கல் தருணமாக அமைந்தது.

✨Proud Moment🇮🇳✨

Our Chancellor Dr. Regeena Jeppiaar Murali was a Special Guest and Speaker at the UK Parliament, London, during the 2025 London Global Convention on Corporate Governance & Sustainability – Global Business Meet, organized by Institute of Directors (IOD India) on 6 Nov 2025.

She addressed eminent education and business leaders from around the world, sharing her inspiring vision on innovation, sustainability and leadership in education.

👏 A proud milestone for Jeppiaar University and Indian academia on the global stage

Miley Cyrus’ original song, Dream as One from Avatar: Fire and Ash is out now

0

Directed by James Cameron, Avatar: Fire and Ash will release in India on 19th December in six Indian languages

Miley Cyrus has finally released her much-anticipated song, Dream As One, from the upcoming film, Avatar: Fire and Ash. The singer took to her social media to share a clip of the soul-stirring song. 

Sharing her sentiment, the singer wrote, “Writing this song with Mark Ronson and Andrew Wyatt came straight from the heart. Every lyric remembers where we’ve been, reflects where we are, and holds hope for what’s ahead for all of us. It was an honor to create something so personal for a film that connects so deeply with people around the world.”

With Avatar: Fire and Ash, James Cameron takes audiences back to Pandora in an immersive new adventure with Marine turned Na’vi leader Jake Sully (Sam Worthington), Na’vi warrior Neytiri (Zoe Saldaña), and the Sully family. The film, which has a screenplay by James Cameron & Rick Jaffa & Amanda Silver, and a story by James Cameron & Rick Jaffa & Amanda Silver & Josh Friedman & Shane Salerno, also stars Sigourney Weaver, Stephen Lang, Oona Chaplin, Cliff Curtis, Britain Dalton, Trinity Bliss, Jack Champion, Bailey Bass and Kate Winslet.

20th Century Studios India will release Avatar: Fire and Ash on 19th December 2025 in 6 languages, English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தில் இருந்து மைலி சைரஸின் ‘ட்ரீம் ஆஸ் ஒன்…’ அசல் பாடல் வெளியாகியுள்ளது!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார். மனதை வருடும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸை தனது சமூக ஊடக தளங்களில் மைலி சைரஸ் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மைலி பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் பாடலை மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வயட் ஆகியோருடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடல் வரியும் நாம் எங்கிருந்தோம் என்பதையும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது. நம் அனைவருக்கும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கான நம்பிக்கையை இந்தப் பாடல் வைத்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் மிகவும் உணர்வுப்பூர்வமாக இணைந்த ஒரு படத்திற்காக அர்த்தமுள்ள பாடல் ஒன்றை எழுதியது மகிழ்ச்சி” என்றார்.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மரைன் நவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (சோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் புதிய சாகசத்திற்கு பார்வையாளர்களை பண்டோராவுக்கு அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் ஆகியோரின் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் & ஜோஷ் ஃப்ரீட்மேன் & ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

Venkat Prabhu, Raju Murugan & D. Imman Unveil the First Look of Mustafa Mustafa

0

Feel-good cinema has long enjoyed a cherished place among audiences across generations, with its warmth and relatability earning unwavering affection. Continuing this tradition, Mustafa Mustafa, a heartwarming new film in the feel-good genre, is poised to delight viewers.

Directed by Praveen Saravanan and produced by Pradeep Mahadevan of The Mapogos Company, the film features a vibrant ensemble cast. Tamil cinema’s most humorous and relatable artistes — Sathish, Suresh Ravi, Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran, Pugazh, Aishwarya Dutta, and Pavel Navageethan, come together to infuse the narrative with charm, wit, and spontaneity.

The film’s much-awaited first look was unveiled by acclaimed filmmakers Venkat Prabhu and Raju Murugan, along with celebrated music director D. Imman.

Speaking about the project, director Praveen Saravanan says, “Mustafa Mustafa isn’t a heavy film. It’s a slice-of-life Fri-Com (Friendship Comedy) that explores how a simple lie can spiral into absurd chaos. The story dives into the drama that unfolds when ordinary people panic and scramble to fix things, only to make them funnier and messier. My heartiest thanks to Venkat Prabhu sir, Raju Murugan sir, and D Imman sir for their kind gesture of showing support for our humble project by unveiling the film’s first look.”

Shot entirely in Chennai over 35 days, the film captures the city’s natural cadence, its humour, bustle, and heartbeat. The music, composed by MS Jones Rupert, features four enchanting tracks that echo the emotional fabric of the story.

The soundtrack is further elevated by soulful and vibrant vocal performances from GV Prakash, Vaisagh, Antony Dassan, Deepthi Suresh, and Gana Bala.

Cinematographer VishnuShri frames the film’s visual world with authenticity and vibrancy, while editor Dinesh Ponnuraj sculpts the narrative with deft rhythm, clarity, and emotional precision.

Produced under The Mapogos Company banner, Mustafa Mustafa brings together a spirited young creative team dedicated to crafting a modern, entertaining, and deeply relatable Tamil comedy.

Star-Cast:

Sathish

Suresh Ravi

Monica Chinnakotla

Maanasa Choudhary

Karunakaran

Pugazh

Pavel Navageethan

Aishwarya Dutta

VJ. Maheswari Chanakyan

VJ. Parvathy

Livingston

Java Sundaresan

Supergood Subramani

Deepz

Uma Padmanabhan

Rathna (Sun News)

Vinoth Munna

Rail Ravi
Roshan

Vibitha Thekkepat

Sangeetha Raju

Mahima

Madhuri Watts

Mrithula Suresh

Technical Crew:

Banner – The Mapogos Company

Writer & Director – Praveen Saravanan

Producer – Pradeep Mahadevan

Music Director – M.S. Jones Rupert

Director of Photography – K.S. Vishnu Shri

Editor – Dinesh Ponraj

Art Director – S. Madan Kumar

Choreographer – Azar

VFX – Selvadhasan (Raymax Studios)

Story – Shammeer Sultan

Costume Designer – Preethi Singh (Au Linen)

Chief Co-director – E. Dhamudharan

Co-director – S. Suriya Prakash

Costumer – K.K. Dhanraj

Stills – Anbhu

Makeup – Mani Seeralan

Lyrics – Naveen Bharathi

Sound Mix – Ramji Soma

Dubbing – Leo Dhas (Sounds Right)

SFX – Shanmugam, S. Nishok

Colorist – G. Balaji

Publicity Stills – Benu Nantha

Publicity Designer – Poster Kaaran

Production Executive – Vijayakumar Shanmugam

Production Controller – V.K. Srijith

Executive Producer – B.S. Vinodh Chelliah

Creative Producer – Praveen Saravanan

PRO – Suresh Chandra – Abdul Nassar

Audio On – Saregama

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.

மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

சென்னையில் 35 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த கதை சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்த இந்தப் படத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை பிரதிபலிக்கும் நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், வைஷாக், ஆண்டனி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் கானா பாலா ஆகியோர் தங்கள் குரல்களால் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தி மாபோகோஸ் கம்பெனி பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் நவீனத்துவம், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள இளம் திறமையாளர்களைக் கொண்ட படம்.

நடிகர்கள்:
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, வி.ஜே. மகேஸ்வரி, சாணக்கியன், வி.ஜே. பார்வதி, லிவிங்ஸ்டன், ஜாவா சுந்தரேசன், சூப்பர் சுப்ரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், ரத்னா (சன் நியூஸ்), வினோத் முன்னா, ரயில் ரவி, ரோஷன், விபிதா தெக்கேபட், சங்கீதா ராஜு, மஹிமா, மாதுரி வாட்ஸ், மிருதுளா சுரேஷ்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

பேனர் – தி மாபோகோஸ் கம்பெனி,
எழுத்து, இயக்கம் – பிரவீன் சரவணன்,
தயாரிப்பாளர் – பிரதீப் மகாதேவன்,
இசையமைப்பாளர் – எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,
ஒளிப்பதிவாளர் – கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,
எடிட்டர் – தினேஷ் பொன்ராஜ்,
கலை இயக்குநர் – எஸ். மதன் குமார்,
நடன இயக்குநர் – அசார்,
விஎஃப்எக்ஸ் – செல்வதாசன் (ரேமேக்ஸ் ஸ்டுடியோஸ்),
கதை – ஷம்மீர் சுல்தான்,
ஆடை வடிவமைப்பாளர் – ப்ரீத்தி சிங் (Au லினன்),
தலைமை இணை இயக்குநர் – இ. தாமுதரன்,
இணை இயக்குநர் – எஸ்.சூரிய பிரகாஷ்,
காஸ்ட்யூமர் – கே.கே. தன்ராஜ்,
படங்கள்– அன்பு,
ஒப்பனை – மணி சீராளன்,
பாடல் வரிகள் – நவீன் பாரதி,
ஒலிக்கலவை – ராம்ஜி சோமா,
டப்பிங் – லியோ தாஸ் (சவுண்ட்ஸ் ரைட்ஸ்),
எஸ்எஃப்எக்ஸ் – சண்முகம், எஸ். நிஷோக்,
கலரிஸ்ட் – ஜி. பாலாஜி,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – பெனு நந்தா,
விளம்பர வடிவமைப்பாளர் – போஸ்டர் காரன்,
தயாரிப்பு நிர்வாகி – விஜயகுமார் சண்முகம்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – வி.கே. ஸ்ரீஜித்,
நிர்வாக தயாரிப்பாளர் – பி.எஸ். வினோத் செல்லையா,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரவீன் சரவணன்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்,
ஆடியோ ஆன் – சரிகம.

Kaantha Movie Review

0

Kaantha has received overwhelmingly positive reviews, especially for the performances of its lead cast, technical brilliance, and emotional storytelling. Dulquer Salmaan’s portrayal is regarded as a career-best by many viewers and critics, with his depth and intensity earning widespread acclaim. The film’s authentic period setting and production design also stand out, with critics praising the cinematography and music that evoke the golden era of Madras cinema.​

Strengths

  • Dulquer Salmaan delivers a powerhouse performance, often called one of his most compelling roles to date, with his emotional range and focus captivating audiences.​
  • Samuthirakani impresses as the idealistic mentor, and their on-screen confrontations are charged with history and emotion.​
  • Bhagyashri Borse contributes a promising and natural performance, especially notable for a newcomer.​
  • Rana Daggubati’s presence in the film’s investigation angle adds excitement and energy in the second half.​
  • The film is technically rich, with top-notch cinematography, period-authentic set design, and a memorable background score.​
  • The storytelling is praised for its layered narrative, engaging genre shifts, and thought-provoking ego clashes.​

Audience Reception

Viewers and early critics have described Kaantha as a “distinctly different theatrical experience” and called it a “visual and emotional masterpiece” with “well-written and well-executed drama”. On social media, fans have singled out standout moments such as the mirror scene and the climax, noting that Dulquer’s artistry elevates the film.​

Notable Aspects

  • The first half is especially engaging, supported by strong emotional scenes and impressive technical elements.​
  • The investigation angle and genre shifts in the latter half keep the film gripping, though some feel the pacing slows down toward the end.​
  • The movie is recommended for fans of high-quality performances and classic industry nostalgia.

Kaantha is best enjoyed for its acting, authentic ambiance, and challenging emotional dynamics, making it a must-watch for those seeking substance and artistry in cinema.​

Cast & Crew Details:

Cast : Dulquer Salmaan, Samuthrakani, Rana Daggubati, Bhagyashri Borse, Ravindra Vijay, Aadukalam Naren, Vaiyapuri, Gayathri Shankar, Brijesh Nagesh, Bucks, Barathan, Nizhalgal Ravi, Java Sunderasan and others

Written & Directed – Selvamani Selvaraj
Produced – Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, Jom Varghese
Production House – Spirit Media, Wayfarer Films
DOP – Dani Sanchez Lopez
Editor – Llewellyn Anthony Gonsalvez
Art Director – Ramalingam
Music – Jhanu Chanthar
Executive Producer – SaiKrishna Gadwal, Sujai James Line Producer – Sravan Palaparthi
Additional Dialogues & Story Consultant – Thamizh Prabha
Additional Screenplay – Thamizh Prabha
Costumes – Poojita Tadikonda, Archana Rao, Harmann Kaur DI colourist – Glen Denis Castinho Sound Design – Allwin Rego, Sanjay Maurya Marketing Head – Pasuparthy Sona Raju
Assistant Line Producer – Challa Chandra Shekar
VFX – Deccan Dreams
Telugu PRO – Vamsi Sekhar Tamil PRO – Suresh Chandra/Abdul Nasser
Publicity Design – Aesthetic Kunjamma, TooSid

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

0

“திருக்குறளுக்கே திரைக்கதை எழுதியுள்ளார்” ; வள்ளுவன் பட இயக்குநரை பாராட்டிய இயக்குநர் ராதா பாரதி

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.

விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”
என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன்.

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ? இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.

“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை.

இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.

இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,

இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,

“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.

நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,

“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,

“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்

நடிகர் பரத் பேசும்போது,

“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.

நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,

“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.

நடிகர் பிரேம்குமார் பேசும்போது,

“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.

நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,

“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.

இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,

“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப் பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள்.

ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள்.

இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச் செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது.

நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.

சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்

இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,

“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம் என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.

இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது,

“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ, கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.

நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,

“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.

நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.

தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,

“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,

“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர் கத்தியைக் கொடுக்கத் தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..

நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

- Advertisement -

Recent Posts