Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 96

Indian Film “BRAMAYUGAM” to screen at Academy Museum in Los Angeles on February 12, 2026

0

Indian film Bramayugam [2024] [Malayalam], produced by Night Shift Studios & YNOT Studios and written & directed by Rahul Sadasivan, will screen at the Academy Museum of Motion Pictures in Los Angeles.
The screening will take place on February 12, 2026, as part of the Academy Museum’s Where the Forest Meets the Sea: Folklore from Around the World film series, screening January 10 – February 12.
Written and Directed by Rahul Sadasivan, Bramayugam is a haunting exploration of fear, power, and human frailty, set within the dark ages of Kerala’s folklore. The film made and presented in Black & White has been celebrated for its craftsmanship, immersive storytelling, and atmospheric precision.
‘Bramayugam’ stars the legendary Mammootty as Kodumon Potti. Arjun Ashokan, Sidharth Bharathan, and Amalda Liz play significant roles.
The film features cinematography by Shehnad Jalal (ISC), music by Christo Xavier, production design by Jothish Shankar, editing by Shafique Mohammed Ali, sound design by Jayadevan Chakkadath, sound mix by M.R. Rajakrishnan, dialogues by T.D. Ramakrishnan, makeup by Ronex Xavier and George S., prosthetics by Preetisheel Singh D’Souza, and costumes by Melwy J.
About Bramayugam
Bramayugam is a Malayalam feature film starring Mammootty, written and directed by Rahul Sadasivan. It marks the prestigious inaugural production under the Night Shift Studios banner, a production house established to exclusively create films in the horror-thriller genre. The film is presented by Night Shift Studios and YNOT Studios.
The latest release from Night Shift Studios is ‘Dies Irae’ on October 31, 2025, starring Pranav Mohanlal, which marks the studio’s second production and reunites the same director and core creative team behind Bramayugam.
About the Academy Museum of Motion Pictures
The Academy Museum is the largest museum in the world devoted to the arts, sciences, and artists of moviemaking. The museum advances the understanding, celebration, and preservation of cinema through inclusive and accessible exhibitions, screenings, programs, initiatives, and collections. Designed by Pritzker Prize–winning architect Renzo Piano, the museum’s campus contains the restored and revitalized historic Saban Building—formerly known as the May Company building (1939)—and a soaring spherical addition. Together, these buildings contain 50,000 square feet of exhibition spaces, two state-of-the-art theaters, the Shirley Temple Education Studio, and beautiful public spaces that are free and open to the public. These include: The Walt Disney Company Piazza and the Sidney Poitier Grand Lobby, which houses the Spielberg Family Gallery, Academy Museum Store, and Fanny’s restaurant and café. The Academy Museum is open six days a week from 10am to 6pm. 
Follow Night Shift Studios
For updates and announcements, follow @allnightshifts on Instagram, X, Threads, Facebook, and YouTube.
🔗 https://linktr.ee/allnightshifts

NightShiftStudios #Bramayugam #DiesIrae

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 – பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும்.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது.

‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியர் இசை, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு, ஜெயதேவன் சக்கடத் ஒலி வடிவமைப்பு, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலி கலவை, டி.டி. ராமகிருஷ்ணன் வசனம், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ். ஒப்பனை, பிரீத்திஷீல் சிங் டி’சோசா புரோஸ்தெடிக்ஸ் மற்றும் மெல்வி ஜெ ஆடை வடிவமைப்பையும் கவனித்துக் கொண்டனர்.

பிரமயுகம் பற்றி:

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘பிரமயுகம்’. ஹாரர்- த்ரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பு இந்தப் படம். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தை வழங்கியது.

‘பிரமயுகம்’ படத்தின் இயக்குநர் மற்றும் அதே அணியினரோடு நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் தனது இரண்டாவது படமாக பிரணவ் மோகன்லால் நடிப்பில் அக்டோபர் 31, 2025 அன்று வெளியான ‘டைஸ் ஐரே’ என்ற படத்தை தயாரித்தது.

தி அகாடெமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் பற்றி:

கலை, அறிவியல் மற்றும் திரைக்கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மியூசியம் இந்த அகாடெமி மியூசியம். இந்த அகாடெமியில் கண்காட்சிகள், திரையிடல்கள், நிகழ்ச்சிகள், புதிய முயற்சிகள் மற்றும் கலெக்‌ஷன்ஸ் மூலம் சினிமாவைப் புரிந்துகொள்வது, கொண்டாடுவது மற்றும் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது. பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இந்த அகாடெமியின் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்டு புத்துயிர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சபான் கட்டிடம் (முன்னர் மே கம்பெனி கட்டிடம் (1939) அழைக்கப்பட்டது) உள்ளது.

இந்த கட்டிடங்களில் ஒன்றாக, 50,000 சதுர அடி கண்காட்சி இடங்கள், இரண்டு அதிநவீன தியேட்டர்கள், ஷெர்லி டெம்பிள் எஷூகேஷன் ஸ்டுடியோ மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாகவும் திறந்திருக்கும் அழகான பொது இடங்கள் உள்ளன. இவற்றில் வால்ட் டிஸ்னி கம்பெனி பியாஸ்ஸா மற்றும் ஸ்பீல்பெர்க் ஃபேமிலி கேலரி, அகாடமி மியூசியம் ஸ்டோர் மற்றும் ஃபான்னி உணவகம் மற்றும் கஃபே ஆகியவற்றைக் கொண்ட சிட்னி போய்ட்டியர் கிராண்ட் லாபி ஆகியவை அடங்கும். அகாடமி மியூசியம் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

அடுத்தடுத்த அப்டேட் மற்றும் அறிவிப்புகளுக்கு இன்ஸ்டாகிராம், எக்ஸ், த்ரெட்ஸ், முகநூல் மற்றும் யூடியூபில் @allnightshifts -ஐ பின்தொடருங்கள்!

🔗 https://linktr.ee/allnightshifts

NightShiftStudios #Bramayugam #DiesIrae

The Magic of A. R. Rahman Returns with ‘Avalidam Sol’: The Heartbeat of Aanand L Rai’s Tere Ishk Mein, Backed by Bhushan Kumar

0

After the first track ‘O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, backed by Bhushan Kumar, captured hearts and continues to dominate music charts, the makers T-Series and Colour Yellow have now unveiled the film’s second song, ‘Avalidam Sol’. Composed by the legendary A. R. Rahman, this latest song deepens the film’s emotional landscape, offering another chapter of its intense love story through music that hits straight to the heart.

With heartfelt lyrics by Mashook Rahman and vocals by A. R. Ameen and Jonita Gandhi, the song feels both timeless and intensely personal in Rahman’s inimitable style. The song also shares new intense glimpses featuring Dhanush and Kriti Sanon, offering poignant moments of the film’s evolving love story, highlighting Mukti’s (Kriti Sanon) emotional journey and deepening the emotional connection between the two leads.

Music maestro A. R. Rahman shared the inspiration behind the melody, “This next song, Avalidam Sol, was inspired from when we travelled to Himachal and witnessed the reflection of the mountains in the Ganges. Everything around inspired the creation of the melody, inspiring our teams Aanand L Rai, Irshad Kamil, Himanshu and it evolved into something which is just the bare minimum of just the piano, strings and a newfound voice of Nitesh. I hope people enjoy it and feel the same way we felt creating it.”

Speaking about the song, master storyteller and Director-Producer Aanand L Rai said, “Music is the strongest form of magic… and I’ve had the privilege to watch the greatest magician create it up close the one and only A. R. Rahman. Avalidam Sol is another gem, straight from our hearts.”

Visionary Producer Bhushan Kumar added, Avalidam Sol brings out the unspoken emotions that lie at the heart of Tere Ishk Mein. It’s a song about love that is constant; one that is raw, real and deeply human. With A. R. Rahman’s soulful composition, Mashook Rahman’s heartfelt lyrics and A. R. Ameen’s voice complimented by Aanand L Rai’s impeccable storytelling and directed visuals that capture the vulnerability of the two characters with such honesty, this track beautifully carries forward the film’s emotional core.”

The combination of Rahman’s music, Himanshu’s powerful dialogues, and Aanand L Rai’s stirring visuals continues to build anticipation with every new release, promising one of the most soulful cinematic and musical experiences of the year.

Gulshan Kumar, T-Series, and Colour Yellow present ‘Tere Ishk Mein’, produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின் மேஜிக்கில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28, 2025 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஓ காதலே’ ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல்வேறு இசை தளங்களை ஆட்கொண்ட நிலையில், இப்போது T-சீரீஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள இரண்டாவது பாடல் ‘அவளிடம் சொல்’ ரசிகர்களின் உணர்ச்சிகளை மேலும் ஆழமாக தொடுகிறது.

இந்த பாடல் இசை வித்தகன் AR ரஹ்மான் இசையில் உருவாகி உள்ளது. இதன் உணர்ச்சி நிறைந்த வரிகளை மஷூக் ரஹ்மான் எழுதியுள்ளார். AR அமீன் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோரின் குரல் சேர்க்கையுடன், ரஹ்மானின் தனித்துவமான பாணியில் இதயம் தொடும் இசை வெளிப்படுகிறது. பாடலுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இருவரின் தீவிரமான காதல் காட்சிகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக க்ரிதி சனோன் நடித்துள்ள முக்தி என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சி பயணத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

இசை வித்தகன் AR ரஹ்மான் கூறியதாவது, “இந்த பாடல், ‘அவளிடம் சொல்’, ஹிமாச்சலுக்கு சென்றபோது கங்கை நதியில் பிரதிபலிக்கும் மலைகளை பார்த்து கிடைத்த ஒரு உணர்வில் இருந்து பிறந்தது. அந்த இயற்கையின் அமைதியிலிருந்து, பியானோ, ஸ்ட்ரிங்ஸ் மற்றும் புதிய குரல் நிதேஷ் ஆகியோருடன் ஒரு எளிமையான ஆன்மீகமான இசை உருவானது. இதை நாம் உருவாக்கியபோது உணர்ந்ததை மக்கள் கேட்டும் உணர வேண்டும் என்று நம்புகிறேன்.”

இயக்குனர் ஆனந்த் L ராய் கூறியதாவது, “இசை என்பது மிக வலிமையான மாயம்… அந்த மாயத்தை நேரில் உருவாக்கும் அற்புதமான மந்திரவாதி AR ரஹ்மான். அவருடன் பணிபுரிவது எனக்கு சிறப்பாக இருந்தது. ‘அவளிடம் சொல்’ நமது இதயத்திலிருந்து வந்த மற்றொரு ரத்தினம்.”

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது, “‘அவளிடம் சொல்’ என்பது ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் இதயத்திலுள்ள சொல்லப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அது உண்மையான காதலை பற்றியது. பசுமையானது, இயல்பானது, மனிதனின் உணர்வுகளைத் தொட்டது. AR ரஹ்மானின் ஆன்மீக இசை, மஷூக் ரஹ்மானின் வரிகள், அமீனின் இனிய குரல் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிமிக்க காட்சிகளுடன் சேர்ந்து, இந்த பாடல் படத்தின் உணர்ச்சி மையத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.”

AR. ரஹ்மானின் இசை, ஹிமான்ஷுவின் வலிமையான வரிகள் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிகரமான காட்சிகள் இணைந்து, ஒவ்வொரு வெளியீட்டிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகின்றன. இது ஆண்டின் மிகவும் ஆன்மீகமான சினிமா மற்றும் இசை அனுபவங்களில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியாகிறது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தேவையான சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது. அந்த வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

எடிட்டர் ஆண்டனி கோன்சால்வஸ், “வாய்ப்பு கொடுத்த துல்கர் சார், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வா எல்லோருக்கும் நன்றி. ‘காந்தா’ படத்தின் செட் நான் பார்த்தபோதே அசந்துவிட்டேன். எல்லா நடிகர்களும் அசத்தி விட்டார்கள். கதாநாயகி கதாபாத்திரம் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சிம்ரன் மேம் போல இவரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இரண்டாவது பாதியில் ராணா சார் வருவார். துல்கர்-ராணா-சமுத்திரக்கனி எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். நான் இதுவரை எடிட் செய்த படங்களிலேயே ‘காந்தா’ படம்தான் மிகவும் சவாலானது. நிச்சயம் இந்தப் படமும் இயக்குநர் செல்வாவும் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள்”.

ஸ்பிரிட் மீடியா, பிரஷாந்த், “2018ஆம் வருடத்தில் நானும் செல்வாவும் இந்தப் படத்திற்காக இணைந்தோம். எல்லோருக்கும் டிரைய்லர் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சினிமாவை கொண்டாடும் படமாக இது இருக்கும். உயிரைக் கொடுத்து இதற்காக வேலை பார்த்திருக்கிறோம். நடிப்பு சக்ரவர்த்தியாக துல்கர் படத்தில் அசத்தியிருக்கிறார். ராணா கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சமுத்திரக்கனி அய்யா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பாக்கியஸ்ரீயும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்”.

இயக்குநர் செல்வமணி, “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க பிடிக்கும். எந்தப் புத்தகமும் தனி மனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா சொல்லித்தந்தது. நேற்று இருந்ததை விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என சொல்லித் தந்தது இந்த சினிமாதான். சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக் கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன். 1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன். என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால்தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது. 2016-ல் நான் எழுதிய இந்தக் கதையை 2019-ல் ராணாவிடம் சொன்னேன். அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால்தான் ‘காந்தா’ ஆரம்பிக்க முடிந்தது. ராணாவும் துல்கரும் என் போன்ற புதுமுக இயக்குநருக்கு அமைந்தது பெரிய விஷயம். நாங்கள் எல்லோரும் ரசித்து எடுத்த இந்தப் படத்தை நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். அய்யா கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்கியஸ்ரீ தமிழைக் கற்றுக் கொண்டு சின்சியராக நடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் சமுத்திரக்கனி, “என்னுடைய சினிமா பயணத்தையே ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்னால் எனக்கு காய்ச்சல் வருவது மாதிரி இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை. என் பிள்ளை மகாதேவன், குமாரி, என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை. துல்கரின் மகாதேவன் என்ற கதாபாத்திர பெயரை உச்சரிக்கும்போதே எனக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்தப் படைப்பு எங்களை இயக்கியது. சினிமா மாறிக்கொண்டிருப்பதை ‘காந்தா’வில் உணர்ந்தேன். இயக்குநர் செல்வா பெரிய இடத்திற்குப் போவார். துல்கர் சிறப்பாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். நல்ல படைப்பில் இருக்க வேண்டும் என்பது ராணாவின் எண்ணம். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.

நடிகை பாக்கியஸ்ரீ, “’காந்தா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். என்னைப் போலவே இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி. துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை!”.

நடிகர் ராணா, “சிறுவயதில் சினிமா பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்தப் படம் மூலம் நேரில் இயக்குநர் செல்வா என்னைப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு பாக்கியஸ்ரீயை வரவேற்கிறேன். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கர் நடிப்பு சக்ரவர்த்தியாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

நடிகர் துல்கர் சல்மான், “இந்தப் படத்தின் கதை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும். நவம்பர் 14 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் ஜானு சந்தார், “ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தக் கதையில் செல்வா பயணித்துக் கொண்டிருக்கிறார். ராணா, துல்கர் எல்லோருக்கும் நன்றி. சில படங்கள் மட்டுமே உங்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அதில் ஒன்று” என்றார்.

கலைஞர் தொலைக்காட்சியில் “சமைக்க சுவைக்க – சீசன் 2” – தற்போது இலங்கையில்..!

0

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க – சீசன் 2” என்கிற புத்தம்புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

“சமைக்க சுவைக்க” நிகழ்ச்சியின் முதல் சீசனில்தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்றநிலையில், தற்போது இரண்டாவது சீசனானதுஇலங்கையின் தனித்துவமான உணவுகளை நம் கண் முன்கொண்டு வரும்.

நிகழ்ச்சிக்காக “கற்றது கையளவு” சமையல் குழுவினர்இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளைருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள்இடம்பெறுகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொருஉணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல், இந்தமுறை இலங்கையின் தனித்துவமான உணவுகளைசுவைக்க, “சமைக்க சுவைக்க சீசன் 2” -வை தொடர்ந்துபாருங்கள்.

The 23rd edition of the Asia Masters Athletics Championships held from 5th to 9th November 2025, in the vibrant city of Chennai, Tamil Nadu, India.

0

Organised under the auspices of Asia Masters Athletics (AMA) and hosted by the Masters Athletics Federation of India (MAFI), this continental championship brings together male and female masters athletes (aged 35 and above) from across Asia and beyond, in a celebration of sport, vitality and lifelong athletic endeavour at the world-class athletics venue in Chennai, with related road race events scheduled (for example, the Masters 10K) as part of the programme.

Open to men and women who are 35 years or older as of 5 November 2025, medically fit and registered through their national AMA-member federations.

Athletes may participate in up to four individual track & field events, plus one road-race (10K) and up to two relay events.

This year’s championship marks a historic moment for both India and Asia Masters Athletics.

For the first time in history, total entries for the Asian Masters Athletics Championships have exceeded 3,500 athletes from across the all the Asian Members Countries.

From the Indian contingent alone, a record-breaking of 2,600+ athletes have participated and the largest ever representation from India in any Asian Masters event.

This milestone reflects the growing strength, enthusiasm, and inclusivity of the Masters athletics movement in India and Asia.

The Government of Tamil Nadu and local organising committee are committed to providing world-class facilities, warm hospitality and a seamless competition experience for all participants and officials.

This event marks a major continental gathering of masters athletes—those who have chosen to continue their athletic journeys beyond the typical elite competitive years—thus embodying the ethos of sport “beyond age”.

Hosting the 23rd edition in India—specifically in Tamil Nadu—underscores India’s growing prominence in the masters athletics movement and its capacity to host large-scale international athletics events.

Beyond competition, the championships foster camaraderie, cultural exchange and personal inspiration: athletes from diverse nations and backgrounds will compete, connect, and share experiences on and off the track.

The event contributes to the wider aims of AMA and World Masters Athletics (WMA) of promoting athletics as a lifelong pursuit and enhancing quality of life for older athletes.

Tamil Nadu is honoured to host this prestigious event that celebrates excellence, perseverance, and the spirit of sportsmanship among masters athletes from across Asia and beyond.”
— Thiru Udhayanidhi Stalin, Deputy Chief Minister & Minister of Youth Welfare & Sports Development, Government of Tamil Nadu have inaugurated and declare the Championship open.

The following Guest has been present and film actor Mr. Arya is a Brand Ambassador of the Championship.

Thiru. Ma. Subramanian (Department of Health and Family Welfare, Tamil Nadu)
Thiru P.K. Sekar Babu (Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu)
Greater Chennai Corporation Mayor Priya
Thiru. Atulya Misra, IAS, (Additional Secretary Govt of Tamil Nadu)
Thiru. J Meghanatha Reddy, IAS, Member Secretary SDAT
Mrs. H. Dorothy Sheela, Patrons
Mrs. Margit Jungmann, President, WMA
Mr. Viwat Vigrantanoros, President, AMA
Mr. W.I.Davaram, I.P.S, Patron, MAFI
Mr. Juan Ordonez, Secretary, AMA
Mr. S. Sivapragasam, Secretary, AMA
Mr. M.Shenbagamoorthy, Patron, MAFI
Mr.Dr. Dharam Vir Dhillon, Chairman, Organising Committee
Mr. D.David Premnath, Organising Secretary

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் தொடங்கியது !!

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது.

ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics – AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics Federation of India – MAFI நடத்திய இந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தடகள வீரர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான விளையாட்டுக் கொண்டாட்டமாகும்.

சென்னையின் உலகத் தரத்திலான தடகள அரங்கில் நடைபெறும் இவ்விழாவுடன், மாஸ்டர்ஸ் 10K போன்ற சாலைப்பந்தய நிகழ்வுகளும் இடம்பெறும்.

இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வீரர்கள் 2025 நவம்பர் 5ஆம் தேதிக்குள் 35 வயதைக் கடந்தவர்களாக, மருத்துவ ரீதியாக தகுதியானவர்களாகவும், தங்களது தேசிய AMA உறுப்பினர் சம்மேளனங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் நான்கு தனிநபர் துறை (track & field) போட்டிகளில், ஒரு சாலைப்பந்தயத்தில் (10K) மற்றும் இரண்டு ரிலே போட்டிகளில் பங்கேற்கலாம்.

இந்த ஆண்டு நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், இந்தியாவிற்கும் ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். முதன்முறையாக, மொத்தப் பதிவுகள் 3,500-ஐ கடந்துள்ளன, இது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகப்பெரிய பங்கேற்பாகும். இந்திய அணியிலிருந்து மட்டும் 2,600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர் — இது எந்தவொரு ஆசிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் இந்தியாவின் மிகப்பெரிய பங்கேற்பாகும்.

இது இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் இயக்கத்தின் வலிமை, உற்சாகம் மற்றும் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளூர் ஏற்பாட்டு குழு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் உலகத் தரத்திலான வசதிகள், அன்பான வரவேற்பு மற்றும் சீரான போட்டி அனுபவத்தை வழங்க உறுதியுடன் செயல்படுகின்றனர். மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் என்பது வயதை மீறிய விளையாட்டு உற்சாகத்தை பிரதிபலிக்கும் ஒரு தத்துவம் — “வயதுக்கு அப்பாற்பட்ட விளையாட்டு” என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த 23வது பதிப்பை இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்துவது, இந்தியாவின் வளர்ந்துவரும் திறனை மற்றும் ஆசிய அளவில் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இந்த சாம்பியன்ஷிப், போட்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றிணைவு, கலாச்சார பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட ஊக்கத்தை ஊட்டும் நிகழ்வாகும். பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டு, உறவுகள் வளர்த்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வு, மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (AMA) மற்றும் உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (WMA) ஆகியவற்றின் நீண்டகால இலக்குகளான “வாழ்நாள் முழுவதும் தடகளம்” என்ற எண்ணத்தை ஊக்குவிக்கிறது.

தமிழ்நாடு அரசு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவை திறந்து வைத்து, சாம்பியன்ஷிப் தொடங்கியதாக அறிவித்தார். மேலும் “ஆசியா முழுவதிலுமிருந்து வந்த மாஸ்டர்ஸ் தடகள வீரர்களின் திறமை, பொறுமை மற்றும் விளையாட்டு மனப்பாங்கை கொண்டாடும் இவ்விழாவை தமிழ்நாடு நடத்துவதில் பெருமை கொள்கிறது.” எனக் கூறினார். பிரபல திரைப்பட நடிகர் திரு. ஆர்யா இவ்விழாவின் பிராண்ட் தூதராக (Brand Ambassador) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வினில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்:

திரு. மா. சுப்பிரமணியன் – சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
திரு. பி. கே. சேகர் பாபு – இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா
திரு. அதுல்ய மிஸ்ரா, ஐ.ஏ.எஸ் – கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு
திரு. ஜே. மேகநாத் ரெட்டி, ஐ.ஏ.எஸ் – உறுப்பினர் செயலாளர், SDAT
திருமதி எச். டோரோத்தி ஷீலா – தலைவர், MAFI
திருமதி மார்கிட் யங்மேன் – தலைவர், WMA
திரு. வி. விக்ரந்தனோரோஸ் – தலைவர், AMA
திரு. டபிள்யூ.ஐ. தவரம், ஐ.பி.எஸ் – தலைவர், MAFI
திரு. ஜுவான் ஓர்டோனெஸ் – செயலாளர், AMA
திரு. எஸ். சிவப்பிரகாசம் – செயலாளர், AMA
திரு. எம். செண்பகமூர்த்தி – தலைவர், MAFI
டாக்டர் தரம் வீர தில்லோன் – தலைவர், ஏற்பாட்டு குழு
திரு. டி. டேவிட் பிரேம்நாத் – ஏற்பாட்டு செயலாளர்

‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

0

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற ‘அறியாத பசங்க’ திரைப்பட துவக்க விழா

0

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி.பவுனம்மாள், இளஞ்செழியன் ஆகியோர் தயாரிப்பில், எம்.வி.ரகு கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படம் ‘அறியாத பசங்க’. இப்படத்தில் மணிகண்டன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மற்றொரு நாயகனாக மதன்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக அனு நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு குமார் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். பழனி பாரதி, சினேகன், புலவர் சிதம்பரநாதன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ரமேஷ் கமல் மற்றும் சக்தி.எம் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஹரி முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் துவக்க விழா நவம்பர் 5 ஆம் தேதி சென்னை, பரணி ஸ்டுடியோவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் செந்தில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, யூடியுப் பிரபலம் காந்தராஜ், பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “சாதாரண அப்பரண்டீஸாக ஏ.வி.எம் சேர்ந்த நான் இயக்குநராக மட்டும் இன்றி, பிரமாண்டமான திரைப்படமான ‘சிவாஜி’ மூலம் இணைத் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறேன். இதற்கு காரணம் நான்கு விசயங்கள் தான். தொழிலை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும் மற்றும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இந்த நான்கும் இருந்தால் வெற்றியை நாம் தேடிப் போக வேண்டாம், வெற்றி நம்மை தேடி வரும். 20 வருடங்களாக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த ரகு இன்று சினிமாவில் சாதித்திருக்கிறார், என்றால் அவரது நம்பிக்கை தான் காரணம். அவரைப் போல் நம்பிக்கையோடு உழைத்தால் நிச்சயம் அனைவரும் வெற்றி பெறலாம். எனவே ரகுவின் இந்த புதிய படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் செந்தில் பேசுகையில், “ரகு எனக்கு நீண்ட ஆண்டுகளாக பழக்கம். அவர் மிகவும் திறமையானவர், அவரது திறமை தற்போது தான் வெளிப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் பல வெற்றிகளை குவிப்பார். எங்கள் காலத்தில் ஒரு படத்தில் நடித்தால், அந்த படத்தின் போஸ்டர் எப்போது ஒட்டுவார்கள், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் இப்போது ஓடிடி, வெப் சீரிஸ் என்று என்ன என்னவோ வந்து விட்டது. அதனால், நாங்கள் எதில் நடித்தோம், அது எப்போது வெளியாகும், எங்கு வெளியாகும் என்பதே இப்போது தெரியவில்லை. ரகுவின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

யூடியுப் பிரபலம் காந்தராஜ் பேசுகையில், “சினிமா மூட நம்பிக்கை நிறைந்த துறை, அதில் இருந்துக் கொண்டு அறியாத பசங்க என்று 8 வார்த்தைகளில் தலைப்பு வைத்திருக்கிறார். இதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும். இந்த படத்தின் ஹீரோக்கள் பக்கத்து வீட்டு பையன்கள் போல் சாதாரணமாக இருக்கிறார்கள், இதுவே படத்தின் வெற்றிக்கு முதல்படி. சினிமா துறை பாதுகாக்க வேண்டிய துறை. இந்த துறையில் ரகு போன்றவர்கள் ஈடுபட்டிருப்பது பாராட்டக்கூடியது, அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “சினிமாவில் முன்னேறுவதை விட, முன்னேறிய பிறகு அந்த இடத்தில் இருந்து சறுக்கி விடாமல் இருக்க வேண்டும். எனவே, என் தம்பி ரகுவுக்கு நான் சொல்வது, நீங்கள் வெற்றி என்ற படிக்கட்டில் ஏறும் போது அதை எண்ணிக்கொண்டு ஏறுங்கள், ஏறிய பிறகு அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பி பேசும் போது, பலர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது, எனவே தம்பியை வாழ்த்துங்கள் என்று சொன்னார். 19 வயதிலேயே நான் திருமணங்களுக்கு சென்று வாழ்த்தியவன், நான் வாழ்த்தியவர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள். எனவே, தம்பி ரகு மிகப்பெரிய வெற்றியை பெறுவார், அவர் வெற்றி பெற்ற பிறகு என்னை மறவாமல் இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

பூஜையுடன் மிக சிறப்பாக துவங்கியுள்ள ‘அறியாத பசங்க’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் மற்றும் படம் பற்றிய பிற தகவல்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Sony Pictures Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Tamil and Telugu

0

Sony Pictures Entertainment India has unveiled the trailer of their upcoming action-thriller, titled Sisu: Road to Revenge. The film is a wall-to-wall cinematic action event, a sequel to the original sleeper hit SISU. The film is set to hit the Indian theatres on 21st November 2025 in English, Hindi, Tamil and Telugu.

Returning to the house where his family was brutally murdered during the war, “the man who refuses to die” (Jorma Tommila) dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe in their honor. When the Red Army commander who killed his family (Stephen Lang from Don’t Breathe) comes back hellbent on finishing the job, a relentless, eye-popping cross-country chase ensues – a fight to the death, full of clever, unbelievable action set pieces.

Written and directed by Jalmari Helander, and produced by Mike Goodridge and Petri Jokiranta, the film stars Jorma Tommila, Richard Brake, and Stephen Lang among others.

Sony Pictures Entertainment India will exclusively release the film in Indian theatres on 21st November, 2025.

Keerthy Suresh – Antony Varghese starrer Thottam – The Demesne title video out now: A Landmark Collaboration in Indian Cinema

0

The much-awaited title reveal of the Malayalam feature film Thottam premiered on YouTube today, marking one of the most exciting announcements in contemporary Indian cinema.

Written and directed by Rishi Sivakumar, Thottam brings together an unprecedented on-screen collaboration between National Award-winning actress Keerthy Suresh and action star Antony Varghese (Pepe). This high-octane blend of action, adventure, and drama showcases Keerthy Suresh in a never-before-seen avatar, marking her grand return to Malayalam cinema.

Breaking new ground in action filmmaking, Thottam features groundbreaking stunt choreography by the internationally acclaimed V Action Design Team led by Muhammad Irfan, celebrated for their dynamic work on The Shadow Strays, The Raid franchise, Headshot, The Night Comes for Us, and The Big 4. This collaboration marks a first-of-its-kind milestone in Indian cinema.

The film’s musical score is composed by National Award-winner Harshavardhan
Rameshwar, known for his powerful soundtracks in Arjun Reddy, Kabir Singh, and Animal.

Cinematography is handled by George C.Williams ISC, the visionary behind Raja Rani, Theri, Kaththi, and Sardar 1 & 2.

Chaman Chakko, editor of Lokah: Chapter 1 and the National Award-winning film 2018, leads the editing team.

Production design is helmed by Mohandas, National Award winner for 2018 and Empuraan, while Ronex Xavier, recent State Award recipient for Bramayugam, heads the makeup department, bringing his expertise from Kantara 2, Manjummel Boys and ARM.

Costume design is by Praveen Verma (ARM, Kurup), and sound design is supervised by Sync Cinema, the National Award-winning team behind Animal, Vikram, and Coolie. The sound mix is managed by M.R.Rajakrishnan, another National Award winner, celebrated for his work on Animal and Kantara 1 & 2.

Writer and Director Rishi Sivakumar emphasises his belief in the theatrical experience and is committed to delivering a cinematic journey designed for the big screen.

Thottam is produced by Monu Pazhedath, A.V. Anoop, Novel Vindhyan, and Simmy Rajeevan, under the banners of First Page Entertainment, AVA Productions, and Maargaa Entertainers.

This collaborative production unites their shared vision and commitment to the director’s ambitious creative journey. A vision rooted in artistic excellence, Thottam promises not just a film, but a spectacle of emotion, action, and cinematic craftsmanship that celebrates the spirit of Indian storytelling.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள தோட்டம் – தி டிமேன் ரிவீல்ட் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் தோட்டம் திரைப்படம், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆக்சன் நடிகர் ஆண்டனி வர்கீஸ் (Pepe) ஆகியோரின் முதல் பிரம்மாண்டமான ஆன்-ஸ்கிரீன் கூட்டணியை உருவாக்குகிறது. அதிரடி, ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்டுகிறது, இது மலையாள சினிமாவிற்கு அவரது பிரம்மாண்டமான மறுபிரவேசத்தை குறிக்கிறது.

ஆக்சன் படத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில், The Shadow Strays, The Raid franchise, Headshot, The Night Comes for Us, and The Big 4 போன்ற படங்களில் சிறந்த பணிகளுக்காக பாராட்டப்பட்ட, முகமது இர்ஃபான் தலைமையிலான சர்வதேச அளவில் புகழ்பெற்ற வி ஆக்ஷன் டிசைன் குழுவின் அற்புதமான ஸ்டண்ட் கோரியோகிராஃபியை தோட்டம் படம் கொண்டுள்ளது. இந்த கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு முதல் மைல்கல் ஆகும்.

இப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங், மற்றும் அனிமல் போன்ற படங்களில் தனது சிறந்த இசைக்காக அறியப்பட்ட தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். ராஜா ராணி, தெறி, கத்தி மற்றும் சர்தார் 1 & 2 ஆகிய படங்களில் பணியாற்றிய ஜார்ஜ் C வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவை கையாளுகிறார். லோகா: அத்தியாயம் 1 மற்றும் தேசிய விருது பெற்ற 2018 திரைப்படத்தின் எடிட்டரான சாமன் சாக்கோ, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தயாரிப்பு வடிவமைப்பை 2018 மற்றும் எம்புரான் படங்களில் பணியாற்றிய தேசிய விருது வென்ற மோகன்தாஸ் வழிநடத்துகிறார். அதே நேரத்தில் காந்தாரா 2, மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் ARM போன்ற பிரமாண்ட படத்தில் பணியாற்றியவரும், பிரம்மயுகம் படத்துக்காக சமீபத்தில் மாநில விருது பெற்ற ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை துறையை வழிநடத்துகிறார்.

ஆடை வடிவமைப்பை பிரவீன் வர்மா (ARM, குருப்) செய்துள்ளார், மேலும் அனிமல், விக்ரம் மற்றும் கூலி படங்களின் பின்னணியில் உள்ள தேசிய விருது பெற்ற குழுவான சின்க் சினிமா ஒலி வடிவமைப்பை மேற்கொள்கிறது. ஒலி கலவையை மற்றொரு தேசிய விருது வென்ற எம்.ஆர். ராஜகிருஷ்ணன் நிர்வகிக்கிறார், அவர் அனிமல் மற்றும் காந்தாரா 1 & 2 ஆகியவற்றில் தனது பணிகளுக்காக பாராட்டப்பட்டவர்.

எழுத்தாளரும் இயக்குனருமான ரிஷி சிவகுமார், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தையும் அதிகம் நம்புகிறார். பெரிய திரையில் சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தை கொடுப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.

தோட்டம் படத்தை ஃபர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், AVA புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் பேனர்களின் கீழ் மோனு பழேதத், AV அனூப், நாவல் விந்தியன் மற்றும் சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த கூட்டுத் தயாரிப்பு, இயக்குனரின் லட்சியமிக்க படைப்பு பயணத்திற்கான அவர்களின் பரந்த பார்வையையும், அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. கலை சிறப்பை வேரூன்றிய ஒரு பார்வையாக, தோட்டம் ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, உணர்ச்சி, அதிரடி மற்றும் இந்திய சினிமாவில் கதை சொல்லலின் ஆன்மாவை கொண்டாடும் ஒரு சினிமா கைவினைத்திறனின் காட்சியாகவும் உறுதியளிக்கிறது.

“I enjoy throwing my whole body into something,” says Elle Fanning on her stunt training for Predator: Badlands

0

Moving beyond her dramatic roles, Elle Fanning embraced a grueling month-long regimen of stunt and wire work training for her lead role in the highly anticipated action-thriller, Predator: Badlands. Elle reveals her surprising athletic prowess and total dedication to the physicality of the part, including pioneering “never-done-before” wire rigs and demanding fight choreography, underscoring the innovative action coming to the screen.

Talking about the training she underwent, Fanning said, “I had to do a lot of stunt and wire work training. I’m pretty athletic; I did a lot of sports growing up and I enjoy throwing my whole body into something. So, I was game. It wasn’t a ton of training, maybe about a good month of working with the stunt team, especially when we needed to learn choreography for the fight scenes, but for me, it was a lot of the wire work that I had to prepare my body for.”

Elle further added, “The core strength it takes to be in the wires was a lot. Dimitrius and I were hooked back-to-back all the time and flying through the air while hooked together, and they created these wire rigs that had never been done before. So it was figuring out weight and body distribution and learning this wheelbarrow method where I’d be sitting on a wheelbarrow with Dimitrius fully walking me. They would paint the wheelbarrow out with VFX, but he still had to cart me up hills and all sorts of things.”

Predator: Badlands is set to premiere in India on 7th November in English, Hindi, Tamil, and Telugu.

“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்திற்கான ஸ்டண்ட் காட்சி பயிற்சி பெற்றது பற்றி நடிகை எல்லே ஃபான்னிங்!

தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்’ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக்கொண்டார்.

அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் அனைத்து உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த ஸ்டண்ட் பயிற்சிக்கு கொடுத்துள்ளார். ‘Never-done-before’ எனப்படும் இதற்கு முன்பு செய்திடாத பல ஆச்சரியமூட்டும் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.

தான் பயிற்சி பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் பற்றி எல்லே பகிர்ந்து கொண்டதாவது, “நிறைய ஸ்டண்ட் மற்றும் வொயர் வொர்க் பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் நான் ஒரு அத்லெட் என்பதால் வளரும்போதே நிறைய விளையாட்டுகளில் பங்கேற்று இருக்கிறேன். என் முழு உடலையும் ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன். ஸ்டண்ட் பயிற்சி என்பதையும் தாண்டி கடந்த ஒரு மாதம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்ததாக அமைந்தது. ஆனால், வொயர் வொர்க்கிற்காக எனது உடலை நான் அதிகம் தயார்படுத்த வேண்டியிருந்தது”.

எல்லே மேலும் கூறியதாவது, “வொயர் வொர்க் எனப்படும் இந்தப் பயிற்சியில் கம்பிகளில் இருப்பதற்கு வலிமை மிக அதிகம் தேவைப்படும். பயிற்சியின்போது டிமிட்ரியஸும் நானும் பின்னால் கம்பிகளைக் கட்டிக்கொண்டு காற்றில் பறந்தபடியே இருந்தோம். இதற்கு முன்பு நான் செய்திராத விஷயமாக இது இருந்தது. வீல்பேரோவை விஎஃப்எக்ஸ் மூலம் கொண்டு வர முடியும் என்றாலும் அதிலும் நான் கடின பயிற்சிகளை மேற்கொண்டேன்” என்கிறார்.

‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts