Tuesday, June 17, 2025
- Advertisement -
Home Blog

கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

0

தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினரும், நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் திரு.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி , திருமதி டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.

kamalhaasan #KamalHaasanMP

NadigarSangam #ns #siaa

@actornasser @VishalKOfficial @Karthi_Offl @PoochiMurugan
@karunaasethu

@johnsoncinepro

தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் திரு.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி , திருமதி டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், ” அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார்.

இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி.

இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்’ பலாப்பழம் ‘என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை. சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள் நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான ‘அஞ்சு வண்ண பூவே..’ பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌

அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள் ‘ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன்.

‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன்.

‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே ‘எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.‌

சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது. இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம்.

இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் உதய் .கே நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார்.

நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.

இயக்குநர் உதய்.கே பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.

அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு போன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்து பணியாற்ற சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விசயமாக பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ… அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.

இசையமைப்பாளர் பரத் – ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி- படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக ‘மெல்லாலியே மெல்லாலியே’ என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி.

அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன்.

ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், ” நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்… அதன் தொழில்நுட்ப தரம்… சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.

அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..
ஒரு நடிகராக…. இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.

அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.

நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.

இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான்.

இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.” என்றார்.

நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ” இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை.

நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.

அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

0

ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .

அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப் பயிற்சிகளை கற்று, அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை.

இத்திரைப்படத்தில், கே. பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.

“ஆனந்த வாழ்க்கை” என்ற இத்திரைப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் “பாஞ்சாலி” என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

கேங்கர்ஸ் மற்றும் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த சத்யா.C . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு K.கோகுல், எடிட்டிங் சிவராஜ், புரோடக்க்ஷன் மேனேஜர் M.உதயகுமார், ஒலிப்பதிவு A.கஜபதி, DI.கார்த்தி, இணை இயக்கம் ராமு மா.சே. ஒருங்கிணைப்பு குரு அரங்கதுரை, மக்கள் தொடர்பு ஜான்சன், டிசைன் NV.அகிலன் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி.CEO.திரு.P. முருகானந்தம் கவனிக்கிறார்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ. திரு. SKM.மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி இத்திரைப்படத்தை ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கிறது.

With Blessings of Philosopher Vethathiri Maharishi
@SKMMayilandham presents

AnanthaVaazhkkai

ஆனந்தவாழ்க்கை

AnanthaVaazhkkaiPressMeet

@dirBhakyaraj in Lead Role!

Directed By #RSubramaniyabharathy
DOP #KGokul

An @CSathyaOfficial musical

@johnsoncinepro

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்’ காதல் கோட்டை’ படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல் நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார். தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் – நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். ” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார். அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார். சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.

கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், ” என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்… இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், ” திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், ” எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘Grand Master of Politics ‘ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘பதிவுகள்’ எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ” என்றார்.

தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,” இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் ‘ரோப்’ என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.

அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
இது ஒரு புது முயற்சி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது. ‘நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே’ என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்… எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான். எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். ” என்றார்.

திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு இசையமைப்பாளர்கள் ஒரே மேடையில்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

0

தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்,

இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் – இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் – இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட ‘ஆனந்த யாழை’ விழா சென்னையில் நடைபெற்றது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர்.

வரும் ஜூலை 19 ஆம் தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம்- சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஒரு சேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை.

குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத் தர இருக்கிறார்கள்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இசைந்துள்ளனர். .

இந்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை இன்று நடைபெற்ற அறிவிப்பு விழாவில் கலந்துகொண்ட, நா முத்துக்குமாருடன் இணைந்து பயணித்த பிரபல திரைக்கலைஞர்களுடன், ஏசிடிசி நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர் (Managing Director) ஹேமந்த் மற்றும் இணை இயக்குநர் ( Joint Director) சரண் இணைந்து வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது ,

“இது இயக்குநர் விஜய்யின் கனவு. அந்தக் கனவை நினைவாக்க ஒரு பெரிய டீம் தேவைப்படுகிறது. அந்த நிறுவனம்தான் ஏ சி டி சி. 8000 பேரை அழைத்து நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்த முடிவெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. நா.முத்துக்குமார் நம்மோடு இல்லாவிட்டாலும் நம் மனதில் எப்போதும் இருப்பார். 2009ல் கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து, தெய்வத்திருமகள், தாண்டவம் என பல படங்களில் மறக்க முடியாத பல அற்புதமான பாடல்களைக் கொடுத்துள்ளார். ஒரு இந்திப் படத்தின் தமிழ் டப்பிங்கிற்காக 7 பாடல்களை இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தார், வேலை கொடுத்த உடனே அவ்வளவு வேகமாக பாடல்களை உருவாக்கினார். அவரது ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைக்கும். ஒவ்வொரு வருடம் நிறைவு பெறும்போதும் இந்த வருடத்தில் எந்தெந்த பாடல்கள் எழுதியிருக்கிறேன் என எனக்கு ஒரு பட்டியல் அனுப்பி வைப்பார். ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி, புத்தகங்களை, கவிதைத் தொகுப்புகளை எழுதி பலரது மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று.

அவர் மறைந்த அந்த சமயத்தில் நானும் இயக்குநர் விஜய்யும் அவருக்கு ஒரு நினைவேந்தல் நடத்த வேண்டும் எனப் பேசினோம். ஆனால் ஒரு முறை அப்படி திட்டமிட்டும் அது கைகூடி வரவில்லை. ஆனால் இந்த 2025 ஆம் வருடத்தில் நா.முத்துக்குமாரின் 50 ஆவது வருடத்தை கொண்டாடுவதற்கான வாய்ப்பு அருமையாக உருவாகி உள்ளது. நா.முத்துக்குமாரை நினைத்தாலே ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடல் தான் நினைவுக்கு வரும். அதையே இந்த நிகழ்ச்சிக்கு டைட்டில் ஆக வைத்திருப்பது மிகமிகப் பொருத்தம்” என்று கூறினார்..

இயக்குநர் ராம் பேசும்போது

“நா முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப் போகிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார். நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும். இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா. முத்துக்குமாரின் சாதனைகளை, முத்துக்குமாரின் வரிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைத்திருக்குமாறு செய்யக்கூடிய விழா. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விழா என்று கூட சொல்லலாம்” என்று கூறினார்.

எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசும்போது,

சில நாட்களுக்கு முன்பு இறந்து போனவர்களைக் கூட உடனடியாக மறந்து விடும் இன்றைய சூழலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் நம்மை விட்டுப் பிரிந்து போனாலும் கூட இன்று எவ்வளவு பேர் நினைவுகளில் ஒரு மனிதன் இருக்கிறார் என்பது மட்டும்தான் வரலாறு.

தான் ஒரு கவிஞனா அல்லது ஒரு பாடல் ஆசிரியரா என்கிற போராட்டம் கடைசி வரை முத்துக்குமாருக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் கவிதை, பாடல் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த ஒரு மனிதர் அவர். கடைசி வரை புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தவர். சினிமாவிலும், சினிமாவிற்கு வெளியே இலக்கியத்திலும் நிறைய பேரை இணைக்கும் ஒரு தொடர்பு பாலமாக நா.முத்துக்குமார் இருந்தார்” என்று கூறினார்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது,

தமிழகம் எத்தனையோ முத்துக்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த முத்துக்களும் பல முத்துக்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அந்த முத்துக்களில் எல்லாம் அரிய முத்தாக உருவானவர் நா.முத்துக்குமார். அவர் இறந்து இத்தனை வருடம் கழித்து ஐம்பதாவது வருடத்தில் இப்படி ஒரு பாராட்டு விழாவை சிறப்பான ஒரு நிகழ்வாகக் கொண்டாடுவது என்பது தான் அவன் எப்படி வாழ்ந்தான், அவன் எப்படிப்பட்ட கவிஞன் என்பதற்கான அடையாளமாக இருக்கும். என் வாழ்க்கையில் நான் ஒரு இருண்ட அறைக்குள் இருந்தேன். எனக்குள் பல வெளிச்சங்களை உருவாக்கி பல உறவுகளை உருவாக்கிக் கொடுத்தவன் நா முத்துக்குமார். நட்பு என்ற வார்த்தைக்கு சரியான உதாரணமாக இருந்தவன் நா முத்துக்குமார்.
அவன் பாட்டு எழுதக் கிளம்புகிறான் என்றால் அவரை நம்பி கோடம்பாக்கத்தில் ஐந்து அறைகளில் இருப்பவர்கள் சாப்பாட்டுக்காக காத்திருப்பார்கள். அவனது திருமண வாழ்க்கைக்கு முன்பாக தினசரி இதுபோன்ற பல நண்பர்களுக்கு வயிறார உணவு அளித்துக் கொண்டிருந்தான். கவிஞர், எழுத்தாளர் மட்டுமல்ல.. நா முத்துக்குமார் ஒரு சிறந்த மனிதன். வேறு எந்தத் திரையுலகிலும் ஒரு நண்பனுக்காக, கவிஞனுக்காக இப்படி ஒரு விழா நடந்தது இல்லை. இங்கே இப்படி ஒரு விழா நடப்பது ஒரு முத்திரை” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

நா.முத்துக்குமார் ஒரு அருமையான எழுத்தாளன். அற்புதமான படைப்பாளி. மிகச்சிறந்த கவிஞன். அவரது நினைவைக் கொண்டாடுவதற்காக அவரது ஐம்பதாவது விழா ஆண்டிலே அவரது படைப்பாற்றலை போற்றும் விதமாக இந்த விழா எடுக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். எத்தனை படைப்பாளர்களுக்கு இது போன்று விழா எடுக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது. அந்த அளவிற்கு அவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல.. ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். மற்றவர்களை மகிழ்வித்து மகிழக்கூடிய ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். கதையோட்டத்துடன் பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் இப்போது இல்லை. ஆனால் ரத்தத்தோடும் உணர்வோடும் இன்று வரை ஒவ்வொரு எழுத்தும் வாழ்க்கையில் எண்ணிப் பார்க்கக் கூடிய வரிகளைத் தந்து சென்றவர்தான் நா முத்துக்குமார்” என்று கூறினார்.

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,

“’தேரடி வீதியில் தேவதை வந்தால்’ என்கிற பாடல் தான் நா முத்துக்குமார் எனக்காக முதன் முதலில் எழுதிய பாடல். ஒரு படத்தில் பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடியவில்லை என அவர் எழுதிய வரிகள் போல தான், அவர் மறைந்தும் இன்னும் அவர் நினைவுகள் மறையாமல் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளும் அளவிற்கு பிஸியான பாடல் ஆசிரியராக மாறினார். எல்லா இசை அமைப்பாளர்களோடும் இணக்கமாக இருந்த ஒரு பாடல் ஆசிரியர். தொடர்ந்து வருடம் தோறும் அதிக பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியராக இருந்தார். தனது பாடல் வரிகளால் சில நேரம் ட்யூனையே கூட மாற்றி விடுவார். அவருக்கான விழாவை அவர் இறந்த அந்த காலகட்டத்திலேயே நடத்துவதற்கு சில முயற்சிகள் எடுத்தோம். ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. அந்த பொறுப்பும் சரியாக இயக்குநர் விஜய்யிடம் வந்திருக்கிறது. வீடு மாறிப் போன ஒரு விருந்தாளி போல தான் அவரது மறைவை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் விஜய் பேசும்போது,

இந்த விழா நடப்பதற்கு மிக முக்கிய காரணமான ஏ சி டி சி குழுவுக்கு நன்றி. 2016ல் நா முத்துக்குமார் மறைந்த சில நாட்கள் கழித்து இயக்குநர் செல்வமணி என்னை அழைத்து முத்துக்குமாருக்கு ஒரு நினைவு விழா எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை முதலில் ஆரம்பித்தது அவர்தான். இந்த நிகழ்வு பற்றி சொன்னதும் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பலரும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கான்சர்ட் செய்வதாக முன்வந்தார்கள். இது ஒரு பிரம்மாண்ட விழாவாக அமையப் போகிறது. அதைக் கொண்டாடும் தருணம் இது” என்று கூறினார்.

பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது,

“எனக்குள் சினிமாவுக்கு செல்லும் ஆர்வத்தைத் தூண்டி வைத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தது என்னுடைய அண்ணன் தான், நான் இயக்குநராக வளர்ந்து தயாரிப்பாளராக மாறிய பின்னர் ஒரு நாள் காஞ்சிபுரத்திலிருந்து நா முத்துக்குமாரையும் என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் முயற்சியில் அவர் இருந்தார். நா முத்துக்குமாரைப் பொருத்தவரை அவர் ஒரு ஞானக்கிறுக்கன். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே பாடல் வரியாகவோ இலக்கியமாகவோ மாறியது. அம்மாவின் பாசத்தைப் பற்றி பலர் பாடல் எழுதிய நிலையில் அவர் பாடல் எழுதிய பின்பு தான் அப்பாவின் பாசத்தை பலரும் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

முத்துக்குமாரைப் பொருத்தவரை தன்னை யாராவது புகழ்ந்தாலும் கூச்சப்படுவார்.. தனக்கு யாராவது சம்பளம் பாக்கி வைத்தால் அதைக் கேட்பதற்கும் கூச்சப்படுவார். அவர் மறைந்த அந்த சமயத்திலேயே அவருக்கு நினைவு விழா நடத்துவதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால் சில காரணங்களால் அது அப்படியே தடைபட்டு நின்று விட்டது.

இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அத்தனை இயக்குநர்களும் இந்த விழாவை நடத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்கிறார்களே அது தான் நா முத்துக்குமாரின் வெற்றி. இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடப்பதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். அதை உதவியாக இல்லாமல் எங்கள் கடமையாக நினைத்து செய்து தருகிறோம்” என்று கூறினார்.
.
ஏ சி டி சி இணைச்செயலாளர் சரண் பேசும்போது,

“இப்படி ஒரு விழா எடுக்க இருக்கிறோம் என்று நாங்கள் முடிவு செய்து மொத்தம் எட்டு இசை அமைப்பாளர்கள், அந்த நல்ல மனிதருக்காக நாங்கள் வந்து இசையமைக்கிறோம் பாடுகிறோம் என்று சொன்னதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவிலேயே எட்டு இசை அமைப்பாளர்கள் சேர்ந்து பண்ணும் கான்சர்ட் இதுதான் முதல் முறை. நா முத்துக்குமாருக்கு ஒரு காணிக்கையாக இதை நடத்த இருக்கிறோம்”

இசை மற்றும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடியாக இருப்பது தான் ஏ சி டி சி நிறுவனம். நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை வைத்து மிகப் பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது. எந்த ஒரு சிறப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் திறன் கொண்ட நிறுவனம். அந்த வகையில் பாடல்களால் மக்கள் மனதில் நிறைந்த நா முத்துக்குமார் அவர்களின் 50 வது ஆண்டு விழாவை எடுப்பதில் பெருமை அடைகிறது ஏ சி டி சி நிறுவனம் என்று கூறினார். ..

நிறைவாக தயாரிப்பாளர் தனஞ்செயன் எங்களுடன் இணைந்து பணியாற்றும் பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனை பத்திரிகை தொடர்பாளர்களை ஒன்று சேரப் பார்ப்பதே மகிழ்வாக இருக்கிறது. இவ்விழா வெற்றிகரமாக நிகழும் எனக் கூறினார்.

United by Family, Divided by Age: HelpAge India report calls for strengtheningintergenerational bonds

0

June 13, 2025: To mark World Elder Abuse Awareness Day (June 15), HelpAge India launched the
‘Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing’ report (India
Intergenerational Bonds – INBO Report), a first-of-its-kind national study. Following the release, a
panel discussion was held.
The national study was conducted across 10 metro & non-metro cities (Delhi, Mumbai, Kolkata,
Chennai, Bengaluru, Hyderabad, Ahmedabad, Kanpur, Nagpur, and Madurai) covering both the
youth & the elderly, belonging to SEC B and C urban households. It combined both the quantitative
element along with qualitative Focus Group Discussions (FGDs) to explore perceptions,
interactions, and emotional dynamics between youth and elders in urban India.
The study surveyed 5798 respondents, with the proportion of youth (18-30 years) – 70% and elders
(60 years & above) – 30%. This study addresses the urgent need to understand emotional,
relational, and psychological aspects of intergenerational ties in urban India.
“This report offers both a heartening affirmation and a timely wake-up call. While respect for elders
and family ties remain deeply cherished in India—with 86% of elders feeling valued—beneath the
surface lies a quieter, more concerning disconnect. Many elders still feel emotionally distant,
unheard, or excluded from meaningful engagement. Expressions like ‘We are told the plan, not asked’
reflect a perception-practice gap that must be addressed. Are we truly listening to our elders—or simply
assuming we are? As India moves forward with its unique demographic advantage—home to the
world’s largest youth population and a rapidly growing elder segment—we must build an age-
inclusive society that goes beyond the youth or longevity dividend. The real opportunity lies in
unlocking the power of ‘intergenerational value.’ Through intentional collaboration across
generations—in caregiving, digital literacy, lifelong learning, and volunteering—we can transform
ageing from a phase of isolation into one of shared purpose, where generations are bridged not just
in proximity, but in vision and co-creation”, says Rohit Prasad, CEO, HelpAge India.
As of 2025, approximately 12% of the Indian population is aged 60 and above, a figure projected to
rise to 19% by 2050. At the same time, India also holds the distinction of being home to the world’s
largest youth population, with over 365 million individuals aged 15–29 years.
The report revealed that youth primarily associate elders as being “lonely” (56%), “dependent”
(48%), but also “wise” (51%) and “respected” (43%), indicating a mix of empathy and admiration,
along with the existence of stereotypical views.
“Young adults, especially those aged 18–24, share strong emotional bonds with their grandparents—
particularly in multigenerational households. Interestingly, youth living apart often hold more positive
perceptions of ageing, showing that distance doesn’t always mean disconnect. Despite lifestyle
differences and digital immersion, youth and elders largely agree on the family’s central role in elder
care. Youth acknowledge the generation gap but are willing to bridge it—volunteering to talk to lonely
elders, assist with errands, and support digital inclusion. They want educational institutions to help
them understand ageing and organize intergenerational activities. And while elders may sometimes
feel undervalued, they still want to spend more time with youth, feel uplifted after meeting them, and
prefer living in family. That’s the complexity to collectively address —by strengthening the positives
and consciously addressing the gaps.” says Ms. Anupama Datta, Policy Research & Advocacy,
HelpAge India.
Media greatly influences youth perceptions of the elderly, with 80% saying portrayals affect their
views—often showing elders as wise and caring, but also dependent or comic.
“HelpAge is advancing an intergenerational approach through its #GenerationsTogether initiative—
connecting youth and seniors via digital empowerment, volunteering, and shared learning.
Recognizing media’s influence on youth perceptions of ageing, we will collaborate with media,
industry, and stakeholders to promote age-positive narratives.” says Prateep Chakraborty, COO,
HelpAge India.
Key highlights of the report:

  • In non-metro cities, youth and elders report stronger traditional values and
    intergenerational bonds, but also greater fears about aging and wider perceived
    generation gaps.
  • In terms of proximity to elders, a notable difference in score, is seen between metro city
    youth (62.52) and those in non-metro cities (65.18), with the latter showing stronger
    expressions of respect, possibly due to more traditional or community-oriented value systems.
  • The overall ‘Value and Respect’ score among youth is 63.59 (out of 100), reflecting a
    broadly positive outlook on older adults and their societal role. Youth in non-metros score
    higher (65.18) than metro counterparts (62.52), indicating deeper respect, likely linked to
    community-oriented values.
  • Youth mostly interact with grandparents (49%) and parents (45%), while elders connect
    primarily with sons (50%) and grandsons (40%), underscoring the family’s central role.
  • Although 88% of intergenerational communication is face-to-face, the digital divide
    persists. While 71% of elders use basic phones, only 41% have smartphones. Just 13%
    use the internet or social media, and only 5% access services like online banking or health
    apps. Notably, 14% of elders use no digital tools.
  • Barriers to digital adoption include 66% of elders finding technology confusing and 51%
    fearing errors. Youth serve as key enablers, with 54% of children and 52% of
    grandchildren acting as digital guides. Yet, youth perceive elders as disinterested (78%)
    or forgetful (66%), while elders cite youth’s lack of patience (71%) and fast explanations
    (49%).
  • Both groups agree that youths’ busy schedules hinder interaction (elders: 76%, youth:
    74%). Youth (25%) feel more judged & scrutinized during interactions than elders (22%). A
    “generation gap” is acknowledged by both (youth: 51%, elders: 45%).
  • Disparities exist in perceived support: elders report high youth assistance with ATM
    withdrawals (55%) and health insurance (40%), while youth underreport their
    contributions (23% and 18%, respectively). While 29% of youth claim they offer no
    financial support, only 6% of elders say they receive none.
  • On health, there’s strong mutual support: 81% of elders and 82% of youth believe youth
    should accompany elders to doctors, and 65% from both sides support help with
    medication and home care.
  • Both generations share similar fears for old age: loneliness (youth: 69%, elders: 68%),
    poor health (67% vs. 61%), and financial insecurity (62% vs. 58%). They agree that
    financial security (elders: 70%, youth: 72%) and good physical and mental health are
    key to a fulfilling old age.
  • The desire to live with family remains strong: 88% of youth expect to live with family
    when old, and 83% of elders currently do or plan to — reinforcing the enduring importance
    of family-based living.
    Recommendations by HelpAge India:
  • Schools based intervention – Include ‘Age Sensitization’ programmes or curriculum in
    schools, so the foundation for an age friendly & age inclusive society is set early in life,
    fostering empathy and age-respect. Government should consider creating a National
    Intergenerational Engagement Mission for the purpose.
  • Intergenerational care – encourage youth-based community care programmes, and the
    immensely critical role in enabling and facilitating care system and networks for elders.
    Elder Care Centres in urban and rural areas with youth volunteers. Under its CSR program,
    corporate to encourage and incentivise young employees to participate in such activities
    as volunteers and support informal caregivers via HR policies.
  • Sensitization awareness drives & campaigns using popular media, to transform
    mindsets towards being more age sensitive, caring towards elderly and as importantly
    valuing potential seniors have in productively contributing and co-creating. A public
    Awareness Campaigns Against Ageism would be very useful
  • Digital inclusion through Youth-Led programmes, creating opportunities for connection,
    bonding & learning between generations, where tech-savvy youth are paired with elders for
    digital literacy support. Corporates to play a role in organizing training intergenerational
    workshops, giving digital devices and encouraging their teams to develop elder friendly
    features in digital devices and apps.
    About HelpAge India
    HelpAge India is a leading non-profit organization working with and for older people in India for the
    past 46 years. It runs healthcare, agecare, livelihood, disaster response and digital empowerment
    programs throughout the country & advocates strongly for the elder cause working collaboratively
    with stakeholders. It became the first and only Indian organization to be honored with the ‘UN
    Population Award 2020’ for its exemplary work in the field of ageing and population issues, and
    earlier in 2014, has been the recipient of ‘Vayoshreshtha Samman’ by Government of India as an
    institution working for senior citizens.
    For more details, visit HelpAge India

JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Directed by Revathi

0

The teaser of Hotstar Specials ‘Good Wife’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially released on JioHotstar social handles.

Chennai, June 16, 2025 – JioHotstar set social media abuzz today by dropping the Teaser of its forthcoming Hotstar Specials drama, the Tamil adaptation of the internationally acclaimed series The Good Wife. Headlined by National Award–winner Priyamani and versatile actor Sampath Raj, the show marks Actor-Director Revathi’s OTT directorial debut.

This Tamil adaptation brings a regional touch to the globally beloved format, following the success of its Hindi adaptation, The Trial- Pyaar, Kanoon, Dhokha, which featured Kajol and Jisshu Sengupta in lead roles and was a massive hit on JioHotstar in India.

Making her OTT directorial debut, actor-director Revathi expressed her excitement saying, “Adapting The Good Wife in Tamil, after its successful Hindi remake, is a fantastic opportunity. The show has a strong female lead, whose journey is filled with emotional complexities and professional challenges, making it a great script to execute. I am excited to be working with talented actors like Priyamani and Sampath Raj, and look forward to delivering a narrative that’s both engaging and relatable. This will be an experience I cherish as I step into the world of OTT with proven industry leaders JioHotstar and Banijay Asia.”

Krishnan Kutty, Head of Cluster, Entertainment (South) – JioStar added, “We are thrilled to bring the Tamil adaptation of The Good Wife to our audiences. The Hindi version, The Trial – Pyaar, Kanoon, Dhokha was met with great enthusiasm from viewers, and we believe the Tamil adaptation will be just as impactful. Our focus is on delivering high-quality, engaging content, and with a director like Revathi and a cast led by Priyamani and Sampath Raj, together with Banijay Asia, we’re confident that the show will engage and entertain our audience.”

Deepak Dhar, Founder and Group CEO, Banijay Asia & EndemolShine India said, “Following the overwhelming success of The Trial, Pyaar, Kanoon, Dhokha in Hindi, we are delighted to bring The Good Wife in Tamil to our audiences in the South. South India has been a key market for us at Banijay Asia and the appetite for quality content here continues to grow, and with a story as powerful and timeless as The Good Wife, we believe this adaptation will resonate well with the audiences there. This project is yet another addition to our growing collaboration with JioHotstar, where we continue to deliver exceptional content to the audiences.”

Katie Pike, Director, International Formats from Paramount Global Content Distribution, which holds the format rights to The Good Wife added, “We are delighted to see The Good Wife continue to captivate audiences around the world. Given India’s growing appetite for diverse storytelling, it is the perfect market to bring this powerful narrative to life in a new regional form. The strength of the show’s narrative and characters transcends borders, and we are excited to see how JioHotstar and Banijay Asia reimagine this story with their creative expertise for Tamil-speaking audiences.”

Robert and Michelle King served as creators, showrunners and executive producers of the original U.S. series. Ridley Scott, David Zucker and Brooke Kennedy also served as executive producers. The Good Wife is produced by CBS Studios in association with Scott Free Productions and King Size Productions. The format rights are licensed by Paramount Global Content Distribution.


About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

About Banijay Asia:
Launched in early 2018, as a Joint Venture between content powerhouse Banijay Entertainment and Deepak Dhar, Banijay Asia is today amongst the biggest players in entertainment – across screens, and across genres. Over the last few years, Banijay Asia has delivered mega-hit scripted adaptations like The Night Manager, The Trial (The Good Wife), Hostages, Call My Agent: Bollywood, Fall and successful originals such as Dahan, Matsya Kaand, Undekhi, and Tribhanga amongst many others. The content studio’s upcoming shows include Indian adaptations of Monk, House and Suits. On the non-scripted front, Banijay Asia is leading the genre with blockbuster titles like Temptation Island, The Kapil Sharma Show, MTV Roadies, The Voice, The Big Picture, Into The Wild with Bear Grylls, Case Toh Banta Hai and more.

ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.

கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்”.

ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பானிஜே ஆசியா பற்றி:

பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகா-ஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” இன்று பூஜையுடன் துவங்கியது.

0

P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன், கிறிஸ்டியன்,சந்தீப்,காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பிரேம்
இசை – ஷாஜகான்
எடிட்டிங் – அருண்குமார்
சவுண்ட் மிக்சிங் – பிரேம்
Di – ஜியாவுதீன்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – P. R. விஜய்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J. S. ஜூபேர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் J. S. ஜூபேர் அகமத் பகிர்ந்தவை…

ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது.

பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிட்பாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.

ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன்.

பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார் இயக்குனர்
J. S.ஜூபேர் அஹமது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.

புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.

Superstar Rajinikanth Watches Vishnu Manchu’s Kannappa on the Eve of 30 Glorious Years of Pedarayudu

0

June 15, Chennai – It was a moment laced with nostalgia and celebration as two cinematic legends, Mr. Rajinikanth and Dr. M. Mohan Babu, reunited in Chennai to commemorate 30 years of the iconic Telugu blockbuster Pedarayudu. Originally released on June 15, 1995, the film remains a timeless classic in Telugu cinema history, known for its powerful storytelling, unforgettable performances, and the onscreen charisma of two of India’s most beloved stars.

To mark the 30-year milestone, Mr. Rajinikanth and Dr. Mohan Babu met in Chennai and celebrated the legacy of Pedarayudu—a film that symbolized strength, loyalty, and unforgettable mass appeal.

Adding to the emotional and celebratory atmosphere, on the very same day, Mr Rajinikanth watched the upcoming magnum opus Kannappa, starring Vishnu Manchu, in a special private screening alongside his family. Kannappa, slated for a worldwide release on June 27, tells the story of one of Lord Shiva’s greatest devotees, portrayed powerfully by Vishnu.

After the screening, Mr. Rajinikanth expressed deep appreciation for the film. He was visibly moved and described the film as “extraordinary,” applauding Vishnu’s performance and the film’s spiritual depth, visual richness, and emotional core. His words left Dr. Mohan Babu and Vishnu overwhelmed with joy and pride.

Speaking about the moment, Vishnu shared, “I’ve been waiting for this hug from Rajini sir for 22 years. Today, I feel fearless. I feel unstoppable. Kannappa is coming.”

Rajinikanth’s heartfelt praise has provided an immense boost of confidence to the entire Kannappa team, as the countdown to release continues. For fans, this moment signifies the passing of the torch from one generation to the next—on a day that not only celebrated the past Pedarayudu but also welcomed the future Kannappa

Thanks and regards
Haswath Saravanan PRO

ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர்.

1995 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு ஆகியவற்றால் தெலுங்கு திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது.

‘பெத்தராயுடு’ படத்தின் 30 வது வருடத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில், சந்தித்துக் கொண்டு தங்களது திரை பயணத்தை கொண்டாடினர். மேலும், அதே நாளில், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும், பல மொழிகளில் வெளியாக உள்ள, மகத்தான இந்திய சினிமாவின் பிரமாண்ட காவியமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பார்த்தார்.

படத்தை பார்த்துவிட்டு படத்தையும், விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய ரஜினிகாந்த், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு, படத்தின் ஆன்மீக ஆழம், காட்சி செழுமை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார். மேலும், படம் அசாதாரணமானதாக இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார். ரஜினிகாந்தின் பாராட்டால் டாக்டர்.மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சியடைந்தனர்.

ரஜினிகாந்த் ‘கண்ணப்பா’ படத்தை பாராட்டியது குறித்து கூறிய விஷ்ணு மஞ்சு, “ரஜினி சாரின் இந்த அரவணைப்புக்காக நான் 22 ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இன்று, நான் அச்சமின்றி உணர்கிறேன். தடுக்க முடியாததாக உணர்கிறேன். கண்ணப்பா வருகிறார்.” என்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு ‘கண்ணப்பா’ படக்குழுவுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருப்பதோடு, பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

PHOENIX MARKETCITY & PALLADIUM, CHENNAI SPARKLE WITH THE GRAND LAUNCH OF PHOENIX SHOPPING FESTIVAL AND THREADX FASHION CONCLAVE

0

Hansika Motwani Unveils the Phoenix Shopping Festival, Celebrating Fashion, Culture & Creativity

Chennai, 16th June 2025: Phoenix Marketcity and Palladium, Chennai came alive with glitz, glamour, and grandeur as they unveiled the Phoenix Shopping Festival 2025, a spectacular three-month celebration of fashion, lifestyle, and unbeatable shopping offers. Elevating the excitement, the day also witnessed the debut of ThreadX: Fashion & Beyond, an exclusive fashion conclave designed to spotlight the creativity of emerging designers and style visionaries.

The event was graced by actress Hansika Motwani, who inaugurated the Phoenix Shopping Festival and hosted the vibrant ThreadX Conclave. The festival promises shoppers an array of enticing offers, including a Flat 50% OFF on leading brands such as Boss, Tumi, Hunke Moller, Lifestyle, Avantra, Kalanikethan, Aurelia, Soch, and many more. Running from June to August, the festival will feature a lineup of events, entertainment, and shopping delights that redefine the retail experience in the city.

Speaking at the launch, Hansika Motwani shared, “I love shopping – be it jewellery, makeup, cosmetics, or footwear. And when all of this is available under one roof like Phoenix Marketcity and Palladium, that too at 50% off—it truly excites me!”

ThreadX: Fashion & Beyond served as a powerful platform for new age designers and fashion enthusiast to converge, create and converse. The evening included an engaging panel discussion featuring fashion experts Mehndi Jashnani, Kaksh by Kavita, Suresh Menon, and Nithya Suryaprakash, moderated by Divya N. The event blended dialogue with spectacle—offering live music, carnival performances, and a hi-tea experience, making it a memorable evening of culture and creativity.

From cultural couture to contemporary streetwear, ThreadX celebrated fearless fashion and fresh perspectives, amplifying Phoenix Marketcity and Palladium’s commitment to pushing boundaries in lifestyle and retail.

As the city’s premier lifestyle destination, Phoenix Marketcity and Palladium continue to set the benchmark for experiential retail, seamlessly blending fashion, entertainment, and community.

Shop, celebrate, and indulge like never before, only at Phoenix Marketcity & Palladium, Chennai!

About Phoenix Marketcity, Chennai:

A premier destination for luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be “The” destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it’s a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options.

- Advertisement -

Recent Posts