Tuesday, June 17, 2025
- Advertisement -
Home Blog Page 583

Director Ameer’s initiative for a drug free society

0

Mega fitness competition for youth with Rs 10 lakh prize money

In order to create awareness about the ill effects of drugs and the importance of maintaining good health, Director Ameer will be organising a World Fitness Federation (WFF) National level body building and fitness competition on 17 and 18 September at the Madurai KLN Engineering College.

Speaking about the initiative, Ameer said that health is an important aspect of human life, but people have moved away from traditional food habits.

“As a result of this people are not giving much importance to health these days like before. Just like how we follow the fashion and lifestyle from the western countries, we are also trying to replicate their food habits as well. However, it is important that awareness should be created among the youth about staying healthy. There is a popular belief that only actors have to be fit, which is not true,” he said.

He further said that there was a time when college students thought of passing out without any arrears.

“But now we are at a stage where coming out of college without any drug habit is itself seen as a big achievement. This is a very disappointing and highly dangerous trend. We should concentrate more on our health. To achieve this we must focus on sports, body building or any other activity that will keep us away from drugs,” he added.

Ameer said, “I started focusing on my health, only after I started appearing on screen. I realised that I was late. But I do not want others to start late. This is why I thought of conducting this competition with the support of my physical trainer Mohan, who has conducted many such events.”

“Many people from India are participating. I do not want the event to get restricted in the capital city alone and hence the first event will be held in Madurai. More events will be conducted based on the response for this event,” he added.

Ameer also said that unlike most other events, the competition will have a cash prize of upto Rs 10 lakh to encourage more participants.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

10 லட்சம் பரிசுத் தொகையுடன் இளைஞர்களுக்கான மெகா உடற்பயிற்சி போட்டி

போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார்.

இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார்.

“இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்,” என்று கூறினார்.

​​“நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். மோகன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்,” என்று அமீர் தெரிவித்தார்.

“இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற போட்டிகளை போலல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.

‘Parole’ – A fresh and appealing gangster film trailer garners tremendous response from fans

0

Producer Madhusudhanan of TRIPR Entertainment’s upcoming movie ‘Parole’, directed by Dwarakh Raja features a young talented league of actors, which is a gangster action thriller interwoven with family relationships. The film’s trailer was recently launched by Makkal Selvan Vijay Sethupathi, who has given voiceover for the movie as well.

The spellbinding trailer of Parole has created a strong impression that the movie has intense sequences and stellar performances by the actors. The trailer garnered a phenomenal response, it has escalated the audiences’ expectations of the movie.

Shedding lights on the film, director Dwarakh Raja says, “It gives immense happiness to see the heart-warming response to the Parole trailer. The project is the dream of our entire team. Every family has a story. But Parole is a movie about the untold and hidden story of a family. The story is about thrilling events that spark off when a man brings out his prisoner elder brother on parole to attend the funeral rites of their mother.  Although the movie is set around the emotional family backdrops, it is laced with lots of action sequences and a gripping screenplay that will entertain audiences from all walks of life. I thank Makkal Selvan Vijay Sethupathi for giving his voiceover in the movie. He has given voiceover, not for the trailer alone, but for the movie as well. I screened the movie after its completion, and he liked it a lot. I requested that his voiceover during the opening sequences will add more value to the film. Immediately, he agreed and completed the voiceover portions amidst his busy film projects. The entire star cast and technical team have been strong pillars for the movie. I take this opportunity to thank them all for their great support. Parole will savor the tastes of universal crowds with fresh elements, and will be a compellingly intense movie made by the Tamil film industry.

The star cast comprises R S Karthiik, Linga, Kalpika, Monisha Murali, Vinodhini Vaidynathan, Janaki Suresh, Mak mani, Shivam, Dennis, and Immanuel alongside a few more prominent actors.

Following the grand reception to the film’s trailer, the preparations for the worldwide theatrical release of Parole is happening in full swing. The official announcement of the film’s release date will be made soon.

Technical Crew

DIRECTOR  – Dwarakh Raja
PRODUCER – Madhusudhanan
MUSIC DIRECTOR – Raj Kumar Amal
CINEMATOGRAPHER – Magesh Thirunavukarasu
EDITOR – Muniez
ART DIRECTOR – ARUN KUMAR.A
ACTION – Om Prakash S.D
COSTUME DESIGNER – Akilan ram
DI – Prism & Pixels
PRO – Sathish (AIM)
CREATIVE PROMOTIONS – CTC MediaBoy
INHOUSE PUBLICITY – Luxe Entertainment
MUSIC PARTNER – Trendmusic
VFX – Jagan
DUBBING – G-Studios
SOUND DESIGN – Rajshekar. K (Resonance Studio)
MIXING – RT Studios

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார்.

டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது…

“பரோல்” படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும் ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதை தான் இது.  தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்குள் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம். இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும். இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்குமென்றேன், உடனடியாக ஒப்புக்கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார் அவருக்கு பெரிய நன்றிகள். இப்படத்தின் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் மிகப்பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள், அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்.

R S கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு

இயக்குனர் – துவாரக் ராஜா
தயாரிப்பாளர் – மதுசூதனன்
இசையமைப்பாளர் – ராஜ் குமார் அமல்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் திருநாவுக்கரசு எடிட்டர் – முனீஸ்
கலை இயக்குனர் – அருண் குமார்.A
செயல் – ஓம் பிரகாஷ் S.D
ஆடை வடிவமைப்பாளர் – அகிலன் ராம்
டிஐ – ப்ரிசம் & பிக்சல்கள் Prism & Pixels
மக்கள் தொடர்பு –  சதீஷ் AIM
கிரியேட்டிவ் ப்ரோமோஷன்கள் – CTC MediaBoy
இன்ஹவுஸ் பப்ளிசிட்டி – லக்ஸ் என்டர்டெயின்மென்ட்
இசை பார்ட்னர் – ட்ரெண்ட் மியூசிக்
விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜெகன்
டப்பிங் – ஜி ஸ்டுடியோஸ்
ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்.K (ரெசனன்ஸ் ஸ்டுடியோ)
மிக்சிங் – RT ஸ்டுடியோஸ்
 
இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

0

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.

AHA TAMIL’S FIRST REALITY SHOW, SARKAAR WITH JIIVA TO PREMIER WITH A BANG ON 16TH SEP

0

4 CELEBRITIES TO FEATURE EVERY WEEK IN THIS UNIQUE ‘NO RULES’ GAME SHOW HOSTED BY ACTOR JIIVA


All eyes turn to AHA, the 100% Tamil entertainment OTT platform as they are all set to premiere their first reality game show ‘Sarkaar with Jiiva’ on 16th Sep. Expectations sore among viewers as AHA is known for creating some of the biggest reality shows in Telugu such as Unstoppables with NBK, Telugu Indian Idol and SAMJAM with Samantha to name a few. While Sarkaar in itself is an original game show that AHA Telugu has been running successfully for the last two years, the 100% Local Entertainment OTT platform has significantly raised the stakes for the launch of the Tamil version.


Beloved actor Jiiva is all set to make his OTT debut as a host in this star packed unique game show, where 4 celebrities will play every week. When asked about the same he said with a smile, “Everybody kept asking me when they can see SMS Jiiva again. In this show not only will the viewers get to see that side of me but also a suave host with the power to bend the rules of the game at any point. Hence the name Sarkaar. I thoroughly enjoyed making this transformation and hope my fans will love it too!”


‘Sarkaar with Jiiva’ has everyone’s interest piqued with the 4 celebrity every episode promise coupled with Jiiva saying in the promo “Inga aadrathu thaan avanga aana aatam ennodathu (They might have come to play, but I am the real player here)”. Big names have already been announced: Yuvan Shankar Raja Venkat Prabhu, Premgi and Vaibhav for the launch episode followed by the Trigger movie team and another episode of 4 well known kollywood comedians. The fundamentally Q&A based show will have the participants pitted against each other, bidding for 10 rounds of questions. The show also promises the viewers to reveal never-before heard secrets about the stars with strategically framed questions.


AHA’s CEO, Ajit Thakur who addressed the media and the guests at the launch event said “AHA is committed to providing highest quality and variety of 100% Local entertainment to its viewers. Crafting Reality shows with propositions and a differentiated experience have been a particularly strong suite of ours. We are very happy to be able to present this ‘baap of game shows’ to Tamil audiences across the globe and what better way than to get Jiiva to host 52 stars over 13 weeks of absolute thrill and fun”
AHA 100% Tamil Entertainment OTT Platform has been winning the hearts of Tamil people through a carefully curated slate of blockbuster movies (Jiivi 2, Kuruthi Attam, Maamanithan, Koogle Kuttappa, Manmatha Leelai, Writer) and Original web series in different genres (Ammuchi 2, Emoji, Anya’s Tutorial, Akash Vani, Irai) at just Rs.1 / day. ‘Sarkaar with Jiiva’ will the first of many reality shows that the platform promises to deliver Tamil entertainment lovers in the near future.

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!!

ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்துகொள்ளும் நேர்த்தியான இந்த ‘நோ ரூல்ஸ்’ கேம்ஸ் ஷோவினை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

100% தமிழ் பொழுதுபோக்கு OTT தளமான ஆஹா தமிழ் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான ‘சர்கார் வித் ஜீவா’ செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இந்தியன் ஐடல் நந்தமூரி பாலகிருஷ்ணா வழங்கும் தெலுங்கில் அன்ஸ்டாப்பபிள்ஸ் வித் NBK, சமந்தாவுடன் SAMJAM போன்ற பிரமாண்ட ஷோ வை போல், இந்த ஷோவும் பிரமாண்டமானதாக இருக்கும். தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ஆஹா, 100% உள்ளூர் பொழுதுபோக்கு OTT இயங்குதளம் என்கிற சிறப்பில், அதன் தமிழ் பதிப்பிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஆஹா தமிழுக்கென பிரத்யேகமாக படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர் ஜீவா, ஒவ்வொரு வாரமும் 4 பிரபலங்கள் விளையாடும் இந்த தனித்துவமான கேம் ஷோவில் தொகுப்பாளராக தனது OTT அறிமுகத்தை தொடங்க உள்ளார்.

இதைப் பற்றி நடிகர் ஜீவா கூறியபோது.., “எல்லோரும் SMS பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள். சர்க்கார் எனும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன், என் ரசிகர்களும் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்!”

ஒவ்வொரு எபிஸோடிலும் நான்கு பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘சர்கார் வித் ஜீவா’ ப்ரோமோவில் “இங்க ஆடறது தான் அவங்க, ஆனா ஆட்டம் என்னோடது (அவர்கள் விளையாட வந்திருக்கலாம், ஆனால் நான்தான் இங்கே உண்மையான வீரர்)” என்று ஜீவா கூறுவது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இந்த கேம் ஷோவில் பெரும் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் விரும்பும் பிரபலங்களான யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வைபவ் ஆகியோர் முதல் எபிசோடை துவங்கி வைப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. கேள்வி பதில் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள், 10 சுற்று கேள்விகளுக்கு ஏலம் விடுவார்கள். நட்சத்திரங்களைப் பற்றி இதுவரை கேள்விப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடன் பொழுதுபோக்கும் கலந்து, இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தை உறுதியளிக்கிறது.

ஆஹா தளத்தின் CEO, அஜித் தாக்கூர் கூறும்போது..,
“ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை மிக உயர்ந்த தரத்துடன் வழங்க உறுதி எடுத்துள்ளது. நேர்த்தியான மாறுபட்ட அனுபவத்துடன் கூடிய ரியாலிட்டி ஷோக்களை உருவாக்குதில் ஆஹா சிறந்து விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த ‘கேம் ஷோக்களை’ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான பொழுது போக்கும் அசத்தலான வேடிக்கையுடனும் நடிகர் ஜீவா 52 நட்சத்திரங்கள் கலந்து கொள்ள 13 வார நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார். ஆஹா தமிழ் 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை வழங்கும் பிளாட்ஃபார்ம். பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் (ஜிவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர்) மற்றும் பல்வேறு வகைகளில் (அம்முச்சி 2, ஈமோஜி, ஆன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை) அசல் வெப் தொடர்கள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று வருகிறது. அடுத்ததாக வெளியாகவுள்ள ‘சர்கார் வித் ஜீவா’ ரியாலிட்டி ஷோக்களில் தனித்துவமானதாக ரசிகர்களை கவரும். நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.1/. உடன் சிறந்த ஒளிபரப்பு சேவையினை ஆஹா தளம் வழங்கி வருகிறது.

பாண்டம் எப் எக்ஸ் (PhantomFX) நிறுவனம், பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது

0

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.
இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
“நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்று சான்று அளிக்கப்பட்டிருக்கும் PhantomFX நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உலகத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பதற்காக, உயரிய தரத்துடன் டிஜிட்டல் ஸ்டுடியோக்களை உருவாக்கி தனது சிறகுகளைப் பரப்ப இருக்கிறது” என்கிறார் இதன் நிறுவனரும், நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.பிஜோய் அற்புதராஜ்.


VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள், எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்றும் இவர் உறுதிபடக் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகிலேயே முதன்மையான VFX நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்தி கொண்டு வருகிறது.
கொச்சி, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உயர் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைக்கவும், ஏற்கனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டுடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோயமுத்தூர், மதுரை ஸ்டுடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக திரு.பிஜோய் கூறினார்.
“உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லா ஸ்ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள் 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம்” என்றும் ஜோய்ஸ் கூறினார்.


சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் என்றார் அவர்.
PhantomFX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும் போது திறமையான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார் பிஜோய். VFX பிரிவில் திறமையுள்ளவர்களை உருவாக்கி வரும் இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடனும், மற்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து வேலை நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றை தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக PhantomFX நிறுவனத்தின் இயக்குநரும், முதன்மைச் செயல்வினை அலுவலருமான பினு ஜோஷ்வா தெரிவித்தார்.
உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது என்றும் அவர் கூறினார். விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகக்கூடியது என்று அவர் கூறினார்.


“எண்ணற்ற சேவைகளை வழங் கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். செயற்கை அரங்குகளின் விரிவாக்கம், புழக்கடையில் உயிரினங்கள் ஊர்ந்து செல்லுதல் என்று எதுவாக இருந்தாலும் எங்களுடைய காட்சிக்கலையின் முழுமையான தொகுப்புகள் அந்தக் காட்சிகள் உண்மையாகவே நடப்பது போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன என்றார் அவர். சுருக்கமாகச் சொல்வதானால், கனவு உலகங்களை படைத்தளிக்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. கற்பனைக் கதைகள், பழங்கதைகள் ஆகியவற்றிற்கு உயிரூட்ட எங்களால்முடிகிறது என்று பினு ஜோஷ்வா மேலும் கூறினார். படைப்பாக்கச் சேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வரும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த காட்சிக்கலை அரங்கங்களில் (VFX Studio) ஒன்றாக எங்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுக் கூறி வந்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
லாஸ்ஏஞ்சல்சில் உள்ள தனது நிர்வாக அலுவலகத்தின் மூலம் தனது ஹோலிவுட் வாடிக்கையாளர்களுக்கு PhantomFX சேவை புரிந்து வருகிறது. “தலை சிறந்தவற்றை அளிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட ஆற்றலும், வலிமையும் மிக்க எங்களது கலைஞர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.” என்றார் அவர். நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி ( Trusted Partner Network – TPN) என்று சான்று பெற்றுள்ள PhantomFX நிறுவனத்திடம் தரப்படும் எந்தத் தயாரிப்பையும் ஆகச் சிறந்த தாக ஆக்கி அளித்து வருகிறோம். பாதுகாப்பான நம்பகமான கரங்களில் தயாரிப்புகள் ஏந்திக் கொள்ளப்படுகின்றன என்று பினு ஜோஷுவா கூறினார்.


தனிச்சிறப்புமிக்க தன்னுடைய பணிகளுக்காக PhantomFx நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்பினைப் பெற்றுள்ளது. தேசிய அ ளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகைய விருதுகளில்,
• பாங்காக்கில் நடைபெற்ற 13ஆவது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் விரைவாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனத்திற்கான IAC Summit 2019 விருது.
• நிப்பான் பெயிண்ட் பொங்கல் விளம்பரத்திற்காக இந்தியப் பிரிவில்
• திரைப்படம் அல்லாத மிகச்சிறந்த தயாரிப்புக்கான FICCI BAF Awards 2020.
• விளம்பரத்தில் மிகச் சிறந்த காட்சிக்கலைக்கான VAM Awards 2021
நிப்பான் பெயிண்ட் மகிழ்ச்சியான பொங்கல் விளம்பரத்துக்கு. Dangerous என்ற திரைப்படத்திற்கு மிகச்சிறந்த காட்சிக்கலைக்கான (VFX) – VAM Awards 2022 ஆகிய பல விருதுகளும் அடங்கும்.
திரைப்பட, தொலைக்காட்சி உள்ளடக்கத் தயாரிப்பு முன்முயற்சிகளுக்கான உலகளாவிய அமைப்பான Motion Pictures Association of America (MPAA) என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்ற சான்றிதழை PhantomFX நிறுவனம் பெற்றுள்ளது என்று திரு.பினு ஜோஷ்வா கூறினார்.


PhantomFx நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு.ரஜினிகாந்த் கூறும் போது, இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPOவிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது. பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx தான் என்று அவர் தெரிவித்தார்.

The trailer of the most anticipated film ‘Vendhu Thanindhathu Kaadu’ is out now!

0

The film marks the third collaboration of the cinematic trio Silambarasan, Gautham Menon & A R Rahman

The action saga ‘Vendhu Thanindhathu Kaadu’ by Gautham Vasudev Menon starring Silambarasan (STR) has released its Hindi trailer. One of the highlights of the trailer is the Hindi narration of a Tamil language film done by one of the best actors in our country – Mr. Manoj Bajpayee. Written by Jeyamohan, the film takes its core from a familiar cinematic trope – the triumph of the underdog, the rise of the human spirit above all odds.

VTK is an absolutely raw, realistic, and hard-hitting action drama. The film boasts of a scintillating soundtrack by AR Rahman, and lyrics by Thamarai. The film marks the third collaboration of the actor, music director, and film director trio that has delivered memorable cinema in the past.

Speaking on the film’s trailer release for the Hindi audience, director Gautham Menon said, “We are supremely glad to have someone as discerning as Mr. Anil Thadani as our distributor. His keen eye for good content and suggestions have helped us take our Tamil film with subtitles to the Hindi belt. We are also super glad to have Manoj Bajpayee lend his craft, his voice-over for our trailer which works as an introduction of sorts to the world that Muthu (STR’s character) comes from and the world he gets to inhabit and later rule. Manoj Bajpayee talking for an action-packed gangster film is like our hat-tip to his Bhiku Mhatre (from RGV’s Sathya) character.” Gautham also added, “the music of VTK is a key draw – AR Rahman performed LIVE at our audio launch and it is always a rewarding experience to work with him. I’m glad he trusts me with his music. We have redone the key title track which is the most popular song in Tamil to Hindi and will be released soon. The song will surely be an ear-worm in Hindi as it is in Tamil.”

Distributor Anil Thadani said, “Happy to release #VendhuThanindhathuKaadu in North India through AA Films and associate with Vels Film International, Silambarasan TR, Gautham Vasudev Menon, and AR Rahman. The film is a raw, real, and understated take on the journey of a boy into the underworld. It reminded me of Satya and Company. With South Indian film creating waves, am hoping Vendhu Thanindhathu will be well received here.”

Actor Simabarasan TR (Simbu) said, “It is always great to work with GVM and it’s a privilege to act in Rahman Sir’s music and together our combination becomes extra magical! Muthu will be a milestone character in my career. This role has demanded a lot from me and I’ve given it my all. Hope the audiences like our realistic take on a Gangster story.”

Producer Vels International Ishari Ganesh said, “Vels International is proud to produce this powerful film helmed by ace director Gautham Menon and our south superstar STR with the Mozart of Madras composing music, which has already topped the charts! We believe this film will set the path for us to make more content driven films and this film has all the elements in it that will make it a commercial blockbuster and satisfy audiences from across India and the world.”

In the present scenario of south films doing well across India and the world, VTK is one of the few, unique films to see a Pan-Indian release in its original language, Tamil. This is also because of the “rooted to its native culture” character played by Simbu in Part 1. The further parts will see a multiple language release as the character progresses from Tamil Nadu and settles in Mumbai.

Produced by Vels International Mr. Ishari Ganesh in its original language Tamil, the film is distributed in the Hindi belt by renowned producer and distributor Mr. Anil Thadani (AA Films). The film is all set for this unique pan-Indian Tamil release with subtitles in English. The film releases worldwide on September 15th, 2022.

Hip Hop Star KING returns to MTV Hustle 2.0

0

From being a contestant to a judge: Hip Hop Star KING returns to MTV Hustle 2.0

India’s rising hip hop star KING has taken a complete 360-degree turn in his life, rising from a contestant on the rap reality series “MTV Hustle 2.0″ to squad boss. Sharing about his experience, he says,”It’s been an emotional journey for me with MTV Hustle. The lessons I’ve learned from this show have shaped me into the self-assured, prosperous artist I am today. It is a great pleasure for me to return to the show this time to mentor a group of incredibly talented contestants, and I am really looking forward to it.”

The artist got his start in music when he was very young. KING made his MTV debut on MTV Hustle in 2019 and finished at the top 5. Since then, KING has made a name for himself in the Indian pop music scene. His ability to relate to his fans, comprehend what they want, and know what kind of music they will like is one of his greatest advantages. His debut album, The Carnival, has received over 120 million audio streams since the release of his first song, “Boombass,” in 2015. The song “Tu Aake Dekhle” has amassed over 150 million streams across all audio digital music services and over 247 million streams on YouTube. It has become a huge national hit.

Now that King has won over all of his loved ones with his undeniably outstanding performance in MTV Hustle, the audience is ready to see KING’s other side. Being a living example of the proverb “Hard work is the path to success,” he is serving as an inspiration to hundreds of young people across the country.

Paul McCartney Strikes the Right Chord, Urges India’s Environment Minister to Rescue Abused Elephant Jeymalyatha (Joymala)

0

Delhi – International music legend Sir Paul McCartney, who was part of the globally renowned band The Beatles, has sent an urgent letter to Union Cabinet Minister for Environment, Forest and Climate Change Bhupender Yadav, requesting that he take immediate action to send abused elephant Jeymalyatha (also known as Joymala) to a suitable rescue centre. The letter stands in support of People for the Ethical Treatment of Animals (PETA) India’s plea and comes after two separate videos of the elephant screaming in pain while being beaten ruthlessly by different mahouts went viral.

A copy of Paul McCartney’s letter is available here – https://www.petaindia.com/wp-content/uploads/2022/09/Paul-McCartney-Elephant-Jeymalyatha-Letter.pdf . A video compilation of Jeymalyatha’s abuse can be viewed and downloaded from here – https://www.dropbox.com/s/8ev5v2qjvr21l6b/Jeymalyatha_Final%20English.mp4?dl=0

In the letter, Paul McCartney, a vegetarian, wrote, “I have considered India a spiritual place ever since I travelled there in the 1960s. I was impressed by India’s cultural love for animals. I know India reveres elephants, its national heritage animal; but cruelty to animals happens everywhere, even in India. What reflects on a country’s values is how that cruelty is addressed. That’s why I am confident that action will be taken to send sorely abused elephant Jeymalyatha (Joymala) to a suitable rescue centre where she can receive the specialized care she needs for her psychological wounds, and can live unchained and in the company of others of her kind … I trust you agree that Jeymalyatha has suffered more than enough and that she deserves to spend the rest of her time on this Earth away from her abusive trainers, rehabilitating, and with others of her kind.” He added that while the videos of her beatings are heartbreaking, “equally heartbreaking is that this social, intelligent animal is still being forced to live in solitary confinement”. In nature, female elephants live in a family herd.

PETA India recently submitted a veterinary inspection report on Jeymalyatha’s condition conducted on 27 July to forest department officials in Tamil Nadu and Assam. The report points out that Jeymalyatha’s current mahout used pliers on her skin, even in front of inspectors. The mahout forbade the inspectors from taking photographs and video footage, but they still managed to document her condition. The inspection was conducted after two separate viral videos emerged, one in June 2022 and the other in February 2021, of Jeymalyatha being beaten so badly by different mahouts that she can be heard screaming. The beatings shockingly occurred in the holiest of places – the sanctum sanctorum of the Krishnan Kovil temple near Srivilliputhur Nachiyar Thirukovil – and ironically at a rejuvenation camp.

On Sunday, a bevy of stars from films, music, sports and fashion, including Madhuri Dixit, Raveena Tandon, Arjun Rampal, Ashmit Patel, Aftab Shivdasani, Rahul Dev, Aindrita Ray, Sahil Salathia, Daniel Weber, Anita Dongre, Dr Shriram Nene, Heena Sidhu, Anju Mahendroo, Amaan Ali Bangash, Ayaan Ali Bangash, and Anuj Sachdeva took to social media to join PETA India’s call to the Tamil Nadu and Assam governments to send Jeymalyatha to a rescue centre for immediate specialised care, where she can begin to recover from the psychological trauma of sustained abuse. Recently, celebrities like Genelia Deshmukh, Sunny Leone, Papon, Kunal Kapur, Pooja Bhatt, Jeeveshu Ahluwalia, Atul Kasbekar, Adah Sharma, and Kavita Kaushik had also supported the #FreeElephantJeymalyatha campaign on Twitter.

PETA India – whose motto reads, in part, that “animals are not ours to abuse in any way” – opposes speciesism, a human-supremacist worldview. For more information, please visit PETAIndia.com or follow the group on Twitter, Facebook, or Instagram.

Contact:

Hiraj Laljani 9619167382; [email protected]

Khushboo Gupta 9910397382; [email protected]

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

0

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் =வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும்!’

0

முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம் பேச்சு

சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’, ‘Stop, Listen, Think, Act…’ என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா 11.9.2022 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வடபழனி கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது.
நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரைராஜ், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் கே.வி.எஸ். சரவணன், ‘சிபிசிஎல்’ கஜேந்திரபாபு, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர் தளபதி, பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா (தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), சிகரம் குழும இயக்குநர் சந்திரசேகர், தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் குமார், புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், வசந்தா பதிப்பக நிறுவனர் மோ. பாட்டழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூலினை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
‘Stop, Listen, Think, Act…’ நூலினை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், ‘‘நீதிநெறியை, நல்லொழுக்கத்தைக் கற்பிக்க சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள், மருத்துவம் குறித்து தெரிந்துகொள்ள போகர், புலிப்பாணி உள்ளிட்டோர் எழுதிய நூல்கள் இப்படி ஏராளமான நூல்களுக்கு நம்முடைய மண்தான் முன்னோடி. அதனால்தான் நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்குப் பின்னர் அவர்கள் நம்மை நிரந்தரமாக ஆளவேண்டும் என்றால் நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பதை மாற்றவேண்டும் என தீர்மானித்தார்கள். அதற்காகவே மெக்காலே கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம்.
இளைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியெல்லாம் படிக்க வேண்டும். ஆனால், படிப்பதில்லை. மாணவச் சமுதாயம், இளைஞர்கள் பல்வேறு விதங்களில் சீரழிகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் அக்கறை கொண்டு விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை ‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூலின் ஆசிரியர் மா.ரா. செளந்தரராஜன் விவேகானந்தர் போல் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வெளிவரவேண்டும். நூலாசிரியர் மேலும் பல நூல்களைப் படைக்க அவருக்கு அறிவையும் ஆற்றலையும் இறையருள் வழங்க வேண்டும்” என்றார்.
தமிழறிஞர் ம.பொ.சி.யின் உறவினரும், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவருமான கே.வி.எஸ். சரவணன், ‘‘நூலாசிரியர் உற்சாகத்துக்குப் பேர் போனவர். உடனிருப்பவர்களை தளபதி தளபதி என்று அழைத்து அவர்களையும் உற்சாகப்படுத்துபவர். இந்த நூலில் விக்கிபீடியா போல் கூட்டுக் குடும்பச் சூழல், கொரோனா காலகட்ட அனுபவம் என எல்லாமும் இருக்கிறது. அவை எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்தவைதான். ஆனால், இந்த நூலில் அவை சுவாரஸ்யமாக இருக்கிறது. நூலாசிரியர் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர் படிப்பில் மெரிட், பண்பில் மெரிட், அன்பில் மெரிட்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ்,‘‘இந்த நூலின் ஆசிரியர் செளந்தரராஜன் எப்போதும் சக்ஸஸ், சக்ஸஸ் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடன் இருந்தால் அவருடைய எனர்ஜி நமக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்” என்றார்.

மதபோதகர் Rev. ஜெயசிங், ‘‘நூலாசிரியர் சிறுவயதிலேயே சாம்பியனாகி சாதித்திருப்பது நாட்டுக்குப் பெருமை. அவருக்காக, அவரிடம் சொல்லிவிட்டு தினமும் காலை நான்கு மணிக்கு ஜெபம் செய்கிறேன். அவர் மேலும் சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு சிறப்பு சேர்க்க பிரார்த்திக்கிறேன்” என்றார்.
தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் குமார், ‘‘மா.ரா. செளந்தரராஜன் சமூக அக்கறை கொண்ட மாமனிதர். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். பொதுநல நோக்கில் புத்தகம் எழுதியுள்ளார். அரசாங்கம் அவருக்கு, அவரது தகுதிக்குரிய வாரியத்தில் பதவி வழங்கி கெளரவிக்க வேண்டும்” என்றார்.
‘சிபிசிஎல்’ கஜேந்திரபாபு, ‘‘செளந்தரராஜன் அவர்களை 35 வருடங்களாகத் தெரியும். தன்னம்பிக்கையின், உற்சாகத்தின் அடையாளம் அவர். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்பவர்” என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரைராஜ் ‘‘சமீபத்தில்தான் இந்த நூலின் ஆசிரியர் எனக்கு பழக்கம். அவர் சொன்னதை செய்யக்கூடியவர். புத்தகம் குறித்து பேசும்போது ஒருவரிடம் உங்களின் பேவரைட் புத்தகம் எது என்று கேட்டால் இராமாயணம், மகாபாரதம் என ஒவ்வொன்றை சொல்வார்கள். அதையெல்லாம் தாண்டி, நாம் சொல்ல நினைக்கும் கருத்தை எந்த புத்தகமெல்லாம் சொல்கிறதோ அந்த புத்தகங்கள்தான் நமது பேவரைட் புத்தகங்கள். அந்த வகையில் இந்த புத்தகம் நாம் சொல்ல நினைப்பதை சொல்கிற புத்தமாக இருக்கிறது. அதனால், இது நம் எல்லோருக்குமே பேவரைட் புத்தகம்! சமூக நலன் கருதி செயல்படும் இவர் வருங்காலத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர் தளபதி, ‘‘பறவைகள் பலவிதம் என பாடலில் சொல்வதுபோல் மனிதர்கள் பலவிதம். அதில் எல்லா விதத்திலும் நல்லவராக இருப்பவர் மா.ரா. செளந்தரராஜன். அவர் எனக்கு அறிமுகமானபோது எப்படியொரு எனர்ஜியோடு பார்த்தேனோ அந்த எனர்ஜியை இப்போது வரை பார்க்கிறேன். இந்த நூலில் பாட்டி வைத்தியம் முதல் இன்றைய செல்ஃபி மோகம் வரை பல விஷயங்களை எழுதியுள்ளார். வங்கிகளின் போக்கு குறித்தெல்லாம் பதிவு செய்துள்ளார். மொத்தமாக பார்த்தால் இந்த நூல் ஒரு என்சைக்ளோபீடியா போல் இருக்கிறது. நூலின் முன் பக்கத்தில் அவரது சாதனைகளுக்காக பெற்றுள்ள மெடல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது” என்றார்.
சிகரம் குழும இயக்குநர் சந்திரசேகர், ‘‘வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் தலைவர்கள் ஆகலாம், இப்போது தலைவர்களாக இருப்பவர்கள் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள்’ என்ற அர்த்தத்தில், ஆல் ரீடர்ஸ் ஆல் லீடர்ஸ், ஆல் லீடர்ஸ் ஆல் ரீடர்ஸ் என்று சொல்வார்கள். புத்தகம் என்பது அத்தனை சக்தி வாய்ந்தது. இன்று நாம் எல்லோருமே எதற்காக ஓடுகிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமலே ஓடுகிறோம்; ஓடிக் கொண்டேயிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களை நிறுத்தி, நிதானித்து, யோசித்து செயல்பட வலியுறுத்தும் விதமாக ‘Stop, Listen, Think, Act…’ என்ற நூலினை எழுதியுள்ளார். நூலின் தலைப்பே உள்ளடக்கத்தை சொல்லிவிடுகிறது.
வாழ்க்கை எப்போது முழுமையடைகிறது, நிறைவடைகிறது என்ற பேச்சு எழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். அதையெல்லாம் தாண்டி புத்தகம் எழுதும்போதுதான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடைகிறது என்று சொல்கிறவர்கள் உண்டு. இந்த புத்தகம் எழுதிய வகையில் மா.ரா. செளந்தரராஜன் அவர்கள் நிறைவு பெற்ற மனிதராகிவிட்டார் என்று சொல்லலாம்” என்றார்.
பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா,‘‘வலிதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. இந்த நூலின் ஆசிரியரும் வலிகளைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு சாதித்திருக்கிறார். இந்த நூலை முழுமையாக படித்தேன். வாழ்க்கைப் பாதையின் அனுபவங்களை சிறுசிறு செய்திகளாக தந்துள்ளார். நாம் மாணவர்களை எதிர்காலத்தில் அப்படி ஆகவேண்டும் இப்படி ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்லி வளர்க்கிறோம். மனிதனாக சொல்வதில்லை. இந்த புத்தகம் அதை சொல்கிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கும் இந்த நூலில் செய்தி இருக்கிறது. விருந்தோம்பல் பண்பாட்டை பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவின் செய்தியொன்றையும் பதிவு செய்துள்ளார். மதத்தை ஒழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். இந்த நூல் பற்றி பேச இரண்டு, மூன்று நிமிடங்கள் பத்தாது. ஒருவாரம் முழுக்க பேசலாம். அந்தளவுக்கு விஷயம் இருக்கிறது. செளந்தரராஜனுக்கு நடிகராகவும் இருக்கிறார். அவரது சாதனைகளுக்கு, அவருடைய துணைவியார் பிந்து உறுதுணையாக இருக்கிறார். அவரையும் பாராட்ட வேண்டும்” என்றார்.
வேளச்சேரியில் உள்ள நேரு ஹையர் செகண்டரி ஸ்கூலின் எம் .டி . நேரு, ‘‘இவரது புத்தகத்தின் கருத்துக்களை பள்ளியின் பிரேயரில் எடுத்துச் சொல்லலாம்” என்றார்.
‘ரிசர்வ் பேங்க்’ முத்து விஜயகுமார், இந்த புத்தகத்தை வியாபார நோக்கமில்லாமல் கொண்டு வந்துள்ளார். வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள பத்து ஜென்மம் எடுத்தாலும் போதாது என்று சொல்வார்கள். அதெல்லாம் தேவையில்லை. இந்த ஒரு புத்தகத்தைப் படித்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு இந்த புத்தகத்தில் எல்லாமே ஹைலைட்டாக இருக்கிறது. செளந்தரராஜனை கேப்டன் என்று சொல்லலாம். டீம் லீடருக்கான அத்தனையும் அவரிடம் உள்ளது. பலருக்கும் நம்பிக்கை கொடுத்து வழிநடத்தக் கூடியவர். நம்பிக்கை கொடுப்பதோடு அவரே இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். தன்னைப் போலவே பிறரும் சாதிக்க வேண்டும் என்று கருதி ஊக்குவிப்பவர்” என்றார்.
பெரோஸ்கான், இளைஞர்களுக்கு செளந்தரராஜனை சுட்டிக் காட்டி இவரைப்போல் வாழ்ந்து காட்டு என்று சொல்லலாம்” என்றார்.
புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், ‘‘எங்கள் பதிப்பகத்தில் 11,500 புத்தகங்கள் வரை பதிப்பித்துள்ளோம். ஆனால், இந்த புத்தகத்தின் தலைப்பைப் போல் நெற்றியடியான தலைப்பை வைத்ததில்லை. எல்லோரும் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். வரும் அக்டோபர் 1-ம் தேதி சிங்கப்பூரில் இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், ‘‘செளந்தரராஜன் எனக்கு பத்துப் பனிரெண்டு வருடப் பழக்கம். இந்த புத்தகத்தில் எல்லாமே இருக்கிறது. நான் பார்த்த முதல் நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறார். அதற்கான ரகசியம் என்னவென்பது மட்டும் புத்தகத்தில் இல்லை. அதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பரபரப்பாக இருப்பவர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்று குறை சொல்வார்கள். ஆனால், செளந்தரராஜன் எத்தனை பிஸியாக இருந்தபோதும் குடும்பத்தையும் கவனிப்பவர்” என்றார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், ‘‘செளந்தரராஜன் எப்போதுமே பாசிடிவ் எனர்ஜியோடு இருப்பார். அவரிடம் ஒரு உத்வேகம் இருந்துகொண்டேயிருக்கும். அது அவரது ஸ்போர்ட்ஸ் ஈடுபாட்டால் வந்ததா, இல்லை அவரது இயல்பே அதுதானா என தெரியவில்லை. இந்த புத்தகத்தில் கல்கண்டு போல் ஏராளமான தகவல்கள் இருக்கிறது. சம்பாதிப்பதில் 20 சதவிகிதத்தை சேமித்தால் பணப் பிரச்சனையின்றி வாழலாம் என்று சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார்” என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், ‘‘சாதாரண மனிதன் சாதனைகள் மூலம் பொது மனிதன் ஆகிறான். செளந்தரராஜனும் பொது மனிதர்தான். ஜெர்மனியில் அவர் நிகழ்த்திய சாதனை மிகப் பெரியது. சாதனைகள் ஒருபுறமிருக்க அவரது இல்லத் திருமணத்திற்கு அவரது ஊருக்குச் சென்றிருந்தபோது அவரது நல்ல குணங்களை நேரில் கண்டேன். செளந்தரராஜன் நடிகராகவும் இருக்கிறார். அவர் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும். அவரால் சமூதாயம் எழுச்சிபெற வேண்டும். இப்போதிருப்பதைவிட இன்னும் பெருமைமிக்க மனிதராக விளங்க வேண்டும். அரசாங்கம் இவரை கண்ணெடுத்துப் பார்க்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம், ‘‘செளந்தரராஜன் 8 வயதில் கால் குறைபாட்டுக்கு ஆளானவர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மனமுடைந்து விடுவார்கள். ஆனால், செளந்தரராஜன் தன்னம்பிக்கையோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். அவரது திறமையை புரிந்து ஊக்குவித்ததில் பெருமையடைகிறேன். அவரது முன்னேற்றம் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் கிடைத்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பொறுத்தவரை வெளிநாடுகளில் பெரியளவில் ஊக்குவிக்கிறார்கள். நம்மூரில் அப்படியான ஊக்குவிப்பு குறைவாகவே இருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் 100 வயது வரை கூட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். அதற்கேற்ற போட்டிகள் இருக்கின்றன. சமீபத்தில் கூட அப்படியான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 100 வயதான ஒருவருக்கு என் கையால் பரிசளித்து பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் செளந்தரராஜனும் 100 வயது வரை இப்போது இருக்கும் அதே உற்சாகத்துடன் செயல்பட்டு நாட்டுக்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்” என்றார்.
‘வால்டர்’ தேவாரம் தான் காவல்துறை அதிகாரியாக பொறுப்பும், உயர் பதவிகளும் வகித்த காலகட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காட்டிய ஈடுபாடு, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது, தானே உடன் சென்று வீரர்களை போட்டிகளில் பங்கேற்கச் செய்தது என பலவற்றை குறிப்பிட்டார்.
தான் பொறுப்பு வகித்தபோது, முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் காவல்துறையில் பெண் காவலர்கள் ஏன் அவசியம் என்பதை எடுத்துச் சொல்லி, பெண் காவலர்களை பணியில் அமர்த்தியது, பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுக்க பெண் காவலர்களை நியமனம் செய்தது உள்ளிட்ட பல தகவல்களை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொன்னார். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் காவல்துறையில் பெண்கள் அதிகம் பேர் பணிபுரிகிறார்கள் என்பதையும் பெருமிதமாக எடுத்துச் சொன்னார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய பலரும் புத்தகம் பற்றி பேசியதோடு, நூலாசிரியரின் சாதனைகள், பழகும் விதம் உள்ளிட்டவற்றை பாராட்டினர். மட்டுமல்லாது பேசிய அத்தனை பேரும் விழாவின் சிறப்பு விருந்தினரான வால்டர் தேவாரம் பற்றியும் அவர் காவல்துறையில் பதவி வகித்தபோது எத்தனை கம்பீரமாக, சிங்கமாக, சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது பற்றியும் எடுத்துச் சொல்லி புகழாரம் சூட்டினார்கள்.
விழாவை கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் யோ.சா. ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். தொகுப்புரையின் இடையிடையே நூல்கள் குறித்து பிரபலங்கள் சொல்லிச்சென்ற கருத்துக்களை பதிவு செய்தார்.
விழாவிற்கு வந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மணிமேகலை பிரசுரத்தில் இப்புத்தகம் கிடைக்கும் .

- Advertisement -

Recent Posts