நண்பர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் நடித்து வெளியான சொல்ல மறந்த கதை திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆயிற்று… வியப்பாகத்தான் இருக்கிறது.. எங்கோ ஒரு கடைக்கோடி மூலையில் ஒரு சினிமா தியேட்டர் ஆப்ரேட்டரின் மகனாக பிறந்த நான் இயக்குனராக கதைநாயகனாக இன்று அறியப்பட்டிருக்கிறேன் அனைவராலும் என நினைக்கும்போது… இது எனது முயற்சியால் மட்டும் கிடைத்த இடம் அல்ல… எத்தனையோ நல்ல உள்ளங்கள் இதற்கு காரணமாவர்.. அதில் ஒருவர்தான் என் நண்பர் தங்கர்… இயக்குனராக அறியப்பட்ட என்னை கதைநாயகனாக மாற்றியவர் அவரே… அவர் இன்று எனக்கு அனுப்பிய கடிதம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.. நன்றி தங்கர்… என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக இணைத்துக்கொண்டு இன்றுவரை ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி… “சொல்ல மறந்த கதை”. இன்னும் தமிழ் நெஞ்சங்களால் மறக்கமுடியாத படம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது… இன்னும் எத்தனையோ மகளிர் என்னைப்பார்க்கும் போதெல்லாம் அந்த படம் குறித்து பேசுவதே அதற்கு சான்று.

https://youtube.com/shorts/r-Ry4_td3nk?feature=share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here