01.12.2022

திரு.L.M.M. முரளிதரன்

திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லுள்ளம் கொண்டவர் உயர்திரு. எல். எம்.எம். முரளிதரன் அவர்கள்.

நினைத்து மகிழக்கூடிய ‘அன்பே சிவம்’, ‘உன்னை நினைத்து’ , ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘கோகுலத்தில் சீதை’ போன்ற பல சிறந்த திரைப்படங்களைத் தயாரித்தவர். மிகப் பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்ததின் மூலம் நிறைய குடும்பங்களுக்கு ஆதரவளித்தவர்.

யார் மனதையும் காயப்படுத்தாத மெல்லிய மனதுக்குச் சொந்தக்காரர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஒரு நல்ல தயாரிப்பாளரை இழந்துள்ளோம். அவரது இழப்பு குடும்பத்தினருக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் Tamil Film Active Producers சங்கத்தின் சார்பாக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறோம்.


பாரதிராஜா
தலைவர்
TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here