ஜெயிலுக்கு செல்லும் ராஜாராம்..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.
பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் பொன்னி குடும்பத்தை அழிக்கும் முடிவோடு பொன்னி வீட்டிற்குள் நுழைந்த பூஜா, பவித்ராவின் கர்ப்பத்தை ராஜாராமுக்கு தெரியவைக்க, சூர்யா – பவித்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் ராஜாராம்.
மேலும் பொன்னி மில்ஸில் ஐம்பொன் சிலைகளை கடத்துவதாக ராஜாராமையும், போலீசில் சிக்க வைக்கிறார் பூஜா. இவ்வாறாக சிறையில் இருக்கும் ராஜாராமை வாணி எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார்? இந்த வழக்கில் இருந்து ராஜாராம் தப்பிப்பாரா? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here