கலைஞர் தொலைக்காட்சியில் அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பாசமலர்”. திங்கள் – சனிக்கிழமை வரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.


தொடரில் பூவரசு என்கிற கதாபாத்திரத்தில் அண்ணனாக ஸ்டாலினும், முதல் தங்கை தாமரையாக லீனா நாயரும், இரண்டாவது தங்கை மல்லிகாவாக ஷாமிலி சுகுமாரும் நடித்திருக்கிறார்கள்.


இதில், இரண்டாவது தங்கையான மல்லிகாவின் காதல் பூவரசுவுக்கு தெரிய வர, அதற்கு பூவரசு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் தனது காதலனுடன் ஓடிப்போக முயற்சிக்கும் மல்லிகா தவறான தொழில் செய்வதாக போலீசால் கைது செய்யப்படுகிறார். மேலும் விபச்சார வழக்கில் சிக்கியதாக மல்லிகாவின் புகைப்படம் செய்தித்தாளில் வர, இதனால் முதல் தங்கையான தாமரையின் திருமணத்தில் சிக்கல் ஏற்படுகிறது.


இந்த பிரச்சனைகளை தாண்டி பாரியுடன், தாமரைக்கு திருமணம் நடக்குமா? மல்லிகா தன் காதலனுடன் சேர்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here