இந்திய திரையுலகம் இன்று திருவிழா கொண்டாட்டிக் கொண்டிருக்கிறது!
உலக அரங்கில் இந்தியச்சினிமாவை கொண்டு சேர்த்து, இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று பெருமை சேர்த்திருக்கிறது.

“கார்த்திகி கன்சால்வ்ஸ்” இயக்குனர் தலைமையில் உருவான
“The Elephant Whisperers” சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இது பல இளம் படைப்பாளிகளை ஊக்கமடைய செய்திருக்கிறது.

ராஜமௌலி இயக்கிய #RRR படத்தில், கீரவாணி இசையமைப்பில், சந்திரபோசின் பாடல் வரிகளில் அமைந்த
“நாட்டு நாட்டு” பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுதினை பெற்று திரையுலகையே நடனமாட வைத்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இரு உன்னத படைப்புகளை படைத்திட்ட படைப்பாளிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்து பெருமைகொள்கிறது.
நன்றி!

எம்.நாசர்,
தலைவர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.
13.3.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here