முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி ஆற்றிய தமிழ்த் திரைப்பணி- ஓர்ஆய்வு என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் வாய்மொழித் தேர்வு நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நிகழவிருக்கிறது..

தமிழ் த்துறையில் முனைவர் இரா. கருணாநிதி பேராசிரியரை நெறியாளராகக் கொண்டு

முத்தமிழறிஞர் கலைஞர் கதை வசனம் எழுதிய கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இயக்குனர் ஸ்ரீ கபாலி என்கிற பாலிஸ்ரீரங்கம் அவர்கள் ஆய்வு மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதிய 75 படங்களை முனைவர் பட்ட. ஆய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து கலைஞரின் திரைப்படைப்புக்களை ஆய்வு செய்து வந்தார்.

தற்போது 2023ல் கலைஞரின் திரைப் பணி ஆய்வு நிறைவு பெற்றது.

இப்பொழுது சென்னைப் பல்கலை கழகத்தின் அனுமதி உடன் பொது வாய்மொழித் தேர்வு வருகின்ற 24.3.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் புறநிலை தேர்வாளர் முனைவர் சு பாலசுப்பிரமணியம் பேராசிரியர் துறை தலைவர் மற்றும் தமிழ் மன்றம் கலாச்சார வியல் துறை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சென்னை 600015 அவர்களின் தலைமையில் புறத்தேர்வாளராக கொண்டு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது .

கலைஞர் மு கருணாநிதி ஆற்றிய தமிழ்த் திரைப் பணி எனும் ஆய்வு

இயல்
ஒன்று
திரைப்படத் தோற்றமும் வளர்ச்சியும்

இயல்இரண்டு கலைஞரின் வாழ்வும் திரைப் பணிகளும்

இயல் மூன்று கலைஞரின் திரைப்படங்களில் வசனம்

இயல் நான்கு கலைஞரின் திரைப்பாடல்களில் இலக்கியக் கூறுகள்
இயல் ஐந்து கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவுபார்வை

இயல்ஆறு கலைஞரின் திரைப்படங்களில் பெண்ணுரிமை

கலைஞரின் தமிழ்ப்பணி, படைப்புக்கலை-அமைந்தமையை மேற்கண்ட ஆய்வு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வை சென்னை பல்கலைக்கழகம் மேற்பார்வையில் நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாய்வின் நெறியாளர் இரா கருணாநிதி பேராசிரியர் மட்டுமின்றி புகழ்பெற்ற பாடலாசிரியராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார் கலைஞரின் திரைப்பணி ஆய்வாளராக ஸ்ரீ கபாலி என்கிற பாலிஸ்ரீ ரங்கம் கலைஞரின் பெண் சிங்கம் திரைப்படத்தை இயக்கம் செய்திருக்கிறார். இவர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரும் ஆவார். அனைவரும் வருக வாழ்த்துக்கள் தருக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here