சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி வே.ரிந்தியா அவர்கள், ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெள்ளி, தங்கம், மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவ்வாறு உலகளவில் தமிழகத்தின் பெருமைதனை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வே.ரிந்திகா அவர்கள் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஷசுன் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரின் வாழ்த்துதலையும் பாரட்டுதலையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here