ஆர்.கே.அன்புச் செல்வன் தலைமையில் இயங்கி வரும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் தயாரிப்பாளர் காமராஜ் தயாரிப்பில், சம்பத் இயக்கி கொண்டிருக்கும் “ஜெய் சீதா” படப்பிடிப்பில் இன்று மதியம், பெப்சி யூனியன் ஆட்கள், தங்களின் உறுப்பினர்களை வைத்து தான் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என கூறி, தகராறு செய்தனர்!

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வனுக்கு தகவல் தெரிந்ததும், உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு, தகராறு செய்தவர்களிடம், “சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி யூனியனில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எந்த சங்கத்திற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை” என கூறி, கண்டித்து அனுப்பி வைத்தார்!

சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படத்தை நிறுத்துவதற்கு “பெப்சி யூனியன்” உட்பட எந்த சங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் தெரிவித்தார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here