கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.
பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் வேலுச்சாமி மூலம் பொன்னியை பின்வாங்க வைக்க முயன்ற மாயாவின் திட்டம் தோற்றுப்போக, ராணியின் ஆதரவுடன் பொன்னி செக்ரடரி தேர்தலில் மாயாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பொன்னியை தோற்கடிக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றும் மாயா, மில் அதிபர்களின் மனைவிகள் மூலம் பொன்னியை பழிவாங்க திட்டமிட, ஐஸ்வர்யா, சின்னதம்பி மூலம் மாயாவின் திட்டத்தை முறியடிக்க ராணி முயற்சி செய்ய தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
மறுபுறம், தனக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்பதை நினைத்து வாடும் ஸ்வேதா, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ய, ஸ்வேதா சந்திக்கப்போகும் சிக்கல்கள் என்ன? மற்றும் பொன்னி வீட்டிற்கு இந்த விஷயம் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்போடும், தேர்தல் பரபரப்போடும் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here