புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடப்பு அரசியலை சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் நோக்கில் சுவையான விவாதங்களின் வழியாக கொண்டு சேர்ப்பதுதான் “வட்டமேசை” நிகழ்ச்சி.
தமிழகம் மற்றும் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படும் அரசியல் நிகழ்வை மையமாகக் கொண்டு ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதுதான் வட்டமேசையின் நோக்கம். விறுவிறுப்பான தலைப்புகளை வைத்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வட்டமேசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த விவாதத்தில் தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவது இதன் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here