இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரிதுன்..

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுராஜ், படத்தொகுப்பு அருண்

இப்படத்தில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார், இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜுவ் ,ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார்,TRS மற்றும் லல்லு ஆகியோர் நடித்துள்ளனர்…

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்…

இது முழுக்க முழுக்க மனித உறவுகளை மையமாக உருவாக்கப்பட்ட கதை. நாயகி ஓவியா இதில் ரேடியோ மிர்ச்சி எப்எம் சேனலில் ஆர் ஜே வாக பணியாற்றுகிறார்.. இதில் Croses Talk எனும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை காமெடியாக சொல்லி இருப்பார்..
வளர்ப்பு தாயிடம் வளரும் ஓவியா மிக எதார்த்தமாக சாதாரண பெண்மணியாக வாழ்கிறார் ஆனால் அவரைச் சுற்றி அனைவரும் அந்தஸ்துக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான வாழ்வியலை நல்ல உணர்வோடு காமெடியாக இப்படத்தில் சொல்லி இருக்கிறோம் என்றார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here