கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று துவங்க இருந்த #மார்கழியில்_மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.

இயக்குனர் பா. இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்தது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு கலைஞர்களுக்கும் , திரைத்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் , கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

எளிய மக்களின் நம்பிக்கையாக, விளிம்புநிலை கலைஞர்களின் விடிவெள்ளியாக எக்காலத்திற்கும் இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பு தமிழ் மக்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதில் பங்கெடுக்கும் பொருட்டு இன்று நடைபெறவிருந்த இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் மார்கழியில் மக்களிசை முதல்நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here