தமிழக அரசியலில்
எம்.ஜி.ஆரை அடுத்து
நம்பிக்கையான
ஒரு தலைவராக
உருவாகிக் கொண்டருந்தவர்..
ஆயிரக்கணக்கில் ரசிகர்களை
மாதம் ஒருமுறை
நேரில் சந்தித்ததை
கோபி படப்பிடிப்பில்
பார்த்துள்ளேன்.
தி.நகர் ரோகிணி லாட்ஜில்
உள்ள தன் அறையில்
நண்பர்களை தங்கவிட்டு
படப்பிடிப்பு முடிந்து வந்து
வெராண்டாவில் படுத்துக்கொள்வார்.
எளிமையானவர், நேர்மையானவர்.
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்..
கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • சிவகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here