தமிழில் காளை, பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது தெலுங்கில் முதல் முதலாக பியர் என்னும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது பியர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நிகழும். பர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக உள்ளார். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனுப் ரூபென்ஸ் இசை அமைக்கிறார். ஆன்ட்ரூ ஒளிப்பதிவு, நடிகர்கள் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷின்டே என படக்குழுவினர் அனைவரும் மிகவும் அனுபவமிக்கவர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here