கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமானபடைப்பில் எஸ்.வி.சேகர் – ஷோபனா முதன்மைகதாபாத்திரத்தில் நடிக்கும் “மீனாட்சி சுந்தரம்” புத்தம்புதிய மெகாத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சுந்தரத்தின் மகன்கள் இருவரும், அவரது மனைவி பேர்வைக்கப்பட்ட கஸ்தூரி இல்லத்தை விற்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டுகின்றனர். அதன், ஒரு பகுதியாக சுந்தரம் இறந்துவிட்டதாக பேப்பரில் செய்தி கொடுத்து, அவருக்கு இறப்பு சான்றிதழும் தயார் செய்கிறார்கள்.

செய்தித்தாளில் சுந்தரத்தின் புகைப்படம் வந்ததுநாயகியான மீனாட்சிக்கு தெரிய வருகிறது. மேலும், இதன்உண்மையை அறிய அவள் சுந்தரம் வீட்டிற்கும் வருகிறாள்.இறுதியாக, மீனாட்சி சுந்தரத்திடம் உண்மையைதெரிவிப்பாளா? மகனின் சதித்திட்டத்தை சுந்தரம்முறியடிப்பாரா? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன்கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.