என்னுடைய பெயர் S.செல்வம்.நான் சென்னை பெரம்பூர் பக்கத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் வசிக்கிறேன்.என் எதிர்வீட்ல இருக்கிற ராஜி என்கிற தம்பியிடம் சினிமா பற்றி நிறைய பேசுவேன்.

அவர் என்னை தேடி ஓருவர் வருவார்.நீங்கள் கூட பார்த்து உள்ளீர்களே… .அவர் பெயர் மணி கார்த்திக்.படம் எடுக்கிறதா இருக்காரு.அவர் Art Director இருந்து இயக்குனராக ஆசைப்படுறாரு. ஓரு நாள் அவரை வரவழைத்து பேச வைக்கிறேன் என சொன்னார்.ஓரு நாள் வர வைச்சார்.சினிமா கதைகள் பேசினோம்.என்னிடம் ஓரு கதை இருக்கு.அதை நாம் பண்ணலாம் என சொன்னார்.

சொல்லும்போது என்னிடம் பணம் அவ்வளவாக இல்லை என்றேன்.நாலு லட்சம் கையில் உள்ளது என்றேன்.அவர் வீடு சொந்த வீடு இருக்கே அதை விற்று சொந்தமாக படம் பண்ணி இதை விட பெரிய பங்களா நானே வாங்கித் தருகிறேன் என்றார்.அவரே வீடு விற்கும் முயற்சியில் உதவினார்.29 லட்சத்துக்கு வீட்டை விற்றோம்.குறைந்த பட்ஜெட்டில் படம் என்பதால் அவர் சொல்லுகிற ஆட்களுக்கு எல்லாம் காசு கொடுத்தேன்.எனக்கு இருந்த சினிமா ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு நயவஞ்சக வலையில் வீழ்த்தினார்.

மயில்சாமி மகன் அன்புவை ஹீரோவாக வைத்து முணு கழுத வயசு படப்பிடிப்பு அரக்கோணம் அருகே அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடங்கியது.என்னிடம் பணத்தை வாங்குவதிலே குறியாக இருந்தார் இயக்குனர் மணி கார்த்திக்.பணம் தண்ணீராக செலவான போதும் உங்களுக்கு பெரிய பங்களா வரப்போகுதோ என சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்தார்.நானும் நம்பிக்கையில் கொடுத்தேன்.

விஜய் டிவி பிரபலம் முக்குத்தி முருகனும் இதற்கு உடந்தை.அவர் சொல்கிற ஆளுக்கு பணத்தை கொடுத்தேன்.எப்படியெல்லாம் நயமாக பேசி பணம் பிடுங்க முடியுமோ இருவரும் கூட்டு போட்டு என்னிடம் பணத்தை பெற்றனர்.

ஓரு நாள் எனக்குத் தெரியாமலே என்னிடம் சொல்லாமலே பட உரிமைகள் அனைத்தையும் இயக்குனர் மணி கார்த்திக் தன்னுடைய மனைவி ராஜாமணி பெயரில் மாற்றிக்கொண்டார்.நான் கேட்ட போது படத்துக்கு இன்னும் நிறைய செலவாகும்.kGS group என ஓரு குருப் உள்ளது.அவர்கள் தான் படத்தை மீதி எடுப்பார்கள்..அவர்களிடம் இருந்து வாங்கி நான் உங்களுக்குக் தருகிறேன் என்றார்.
கணக்கு கொடுக்கனும் என சொல்லி என்னுடைய செலவு விபரத்தை KGS group தரணும் என பெற்றுக்கொண்டார்.மீண்டும் படம் தொடங்குவதற்குள் 25 லட்சம் கொடுக்க வேண்டும்.மீதி பணத்தை படம் முடித்து பெறுவது என அக்ரிமெண்ட் நானும் இயக்குனரும் போட்டுக்கொண்டோம்.

திடிரென ஓரு நாள் ஜனவரி 8,2023 அவ்வை ஹால் ,தர்மபூரியில் ஆடியோ பங்ஷன் வைத்தார்கள்.படத்திற்காக இவ்வளவு செலவழித்தும் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படலை.ஆடியோ பங்ஷன் அன்று அவமதிக்கப்பட்டேன்.

யாரோ ஓருவர் தயாரிப்பாளர் எங்க என கேட்டதால் மட்டுமே நான் மேடை ஏற்றப்பட்டேன்.அன்று 5 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இயக்குனர் மணி கார்த்திக் .kgs group தரல .நான் ஓரு வாரத்தில் வாங்கித் தருகிறேன்என்றார் மணி கார்த்திக்.மீதி பணமும் வரல அது வந்து விடும் என்றார்.காலங்கள் மட்டுமே சென்றன.எனக்கு நம்பிக்கையான வாக்குறுதிகள் மட்டுமே தரப்பட்டது.
ஓரு ஸ்டேஜில் உன்னால முடிஞ்சத பாத்துகோ என்றார்.

இப்போது சொந்த வீடு இல்லாமல் நடுரோட்டில் அநாதையாக நிற்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here