தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, மலாய், ஒடிசா, பெங்காலி, போஜ்புரி, ஆகிய மொழிகளில் 126 படங்களை இயக்கியவர். மாபெரும் நடிகர்களை வைத்து படங்களை இயக்காதவர். ஆடு, மாடு, பாம்பு, குரங்கு ஆகியவைகளை நம்பி படம் எடுத்து பாராட்டு பெற்றவர் மட்டுமல்ல வெற்றியும் பெற்றவர்.
பக்தி படங்கள் மட்டுமல்ல, சமூக சிந்தனையுள்ள
சோறு, சுமை, சிவப்பு மல்லி, சிவந்த கண்கள் போன்ற படங்களையும் தந்தவர்., கலைஞர்.மு.கருணாநிதி வசனத்தில்
நிறைய படங்களை இயக்கியவர். தனது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை 100 படங்களை தயாரிக்க செய்தவர்.

சிரித்த முகம்.
சிறந்த ஆளுமை.
சிறப்பான நிர்வாகம்
இவரது வெற்றி படிக்கட்டுகளாகும்.
தொழிலாளர்களும் படம் தயாரிக்க உதவியவர்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக
செயலாற்றி மக்கள் மனதை கவர்ந்தவர்.
தமிழ் திரைப்பட தலைவராக மூன்று முறை தேர்தலில் வென்று திறம்பட செயல்புரிந்தவர். அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் பேசி சென்னை மகாபலிபுரம் அருகே பையனூரில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதற்கு பத்தரை ஏக்கர் நிலம் கிடைக்க செய்தவர்.
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவராக பத்து வருடங்கள் திறம்பட செயலாற்றி கலைஞர் அவர்களிடம் பாராட்டினை பெற்றவர்.
தன்னை சுற்றி இருப்பவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தவர்.
டாக்டர் கலைஞர்
இன்றைய முதல்வர்
தளபதி ஸ்டாலின்
இன்றைய துணை முதல்வர் உதயநிதி
ஆகியோரிடம் நட்பு பாராட்டியவர்.
மு. க. முத்து
மு.க.அழகிரி
மு.க. தமிழரசு
மு.க. கனிமொழி
ஆகியோரிடம் மட்டுமல்ல
அடுத்த தலைமுறையினரிடம்
இனிமையாக பழகி வந்தவர்.
இன்று (22.06.2025)
அவரது 11 வது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்.
என்.விஜயமுரளி
செயற்குழு உறுப்பினர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
and
பிலிம் சேம்பர்
தலைவர்
சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்.








