மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தில்லியில் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான திரு. கமல்ஹாசன் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக தில்லியில் இன்று சந்தித்தார்.

தமிழ்நாட்டின் தொன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கீழடி தொல்லியல் களத்தின் செப்புச் சிற்பத்தை திரு. கமல்ஹாசன், பிரதமருக்கு வழங்கினார்.

தமிழ் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் சிறந்த நகர நாகரிமாக உயர்ந்து நிற்கும் கீழடி ஆய்வு முடிவுகளை உரிய வகையில் அங்கீகரித்து, கீழடியை இந்தியாவின் பெருமையாகப் பறைசாற்ற வேண்டுமென பிரதமரை திரு. கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here