நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய “காத்துவாக்குல ரெண்டு காதல்” மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போதைய கதைக்களத்தில் ஒருபுறம், ரம்யாவும் – தானும் காதலிப்பதாக சரவணன், ரம்யாவின் அப்பாவிடம் கூற, தனது மகளை விட்டுவிடும் படி ரம்யாவின் அப்பா கேட்க, மறுபுறம் சரவணணுக்கு ஈஸ்வரியை மணமுடிக்க, அவளது குடும்பம் சரவணனின் அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறது.

இவ்வாறான, இக்கட்டான சூழ்நிலையில், சரவணன் எடுக்கப் போகும் முடிவு என்ன காதலியை கரம் பிடிப்பாரா? அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவாறா? என்கிற பரபரப்போடு கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here