கலைஞர் தொலைக்காட்சியில் “தமிழோடு விளையாடு” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த அரையிறுதிப் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், தமிழோடு விளையாடு பட்டம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை வெல்லப் போகும் அணி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here