நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு மக்களின் மனம் கவர்ந்த “பிரியமானவள்” என்கிற மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

குடும்ப உறவுகள், தியாகம், பெண்களின் வலிமை, மற்றும் வாழ்க்கை சவால்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான இந்த தொடர், ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அவற்றை கடந்து ஒரு பெண் எப்படி முன்னேறுகிறாள் என்கிற வாழ்க்கை பாடத்தையும் காட்டுகிறது.

அந்த வகையில், இந்த தொடரில் அன்பும், பொறுமையும் கொண்ட நல்ல மனைவியாகவும், தன் குடும்பத்திற்காகவும் வாழ்ந்து வரும் உமாவை அவளுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மதிக்காமல் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இதனால், அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்கிறாள். நாள்கள் கடந்து போக, உமா தனது உரிமைகள் மற்றும் தன்னம்பிக்கையை அறிந்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொள்ள என்னென்ன முயற்சிகளை எடுக்கிறாள் என்பதைக் காட்டுகிறது. முயல்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here