சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சரவணன் என்பவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க உத்தேசித்து இருந்தபோது மேற்படி தம்பி ராமையா என்பவர் தன்னை அணுகி தன்னுடைய மகனான உமாபதி ராமையா என்பவரை நடிகராக நடிக்க வைத்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து தன் மகனை வைத்து ஒத்துழைப்பு கொடுத்து சிறந்த முறையில் படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்தார்

அதன்படி திரைப்பட நடிகர் உமாபதி ராமையா என்பவரை வைத்து புதிய திரைப்படம் தண்ணி வண்டி என்ற திரைப்படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் செய்தேன் அதன்படி 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் படத்தை நல்லபடியாக முடித்து விட்டு ரிலிஸ் செய்வதற்கு மேற்படி ஹீரோவாக நடித்த உமாபதி ராமையா என்பவரை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் இவரும் இவருடைய தகப்பனார் இணைந்து கூட்டு சதி செய்து திட்டமிட்டு எனது படத்தை தோல்வியாக வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார் என்று சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here