*குமுதம் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு.பிரியா கல்யாணராமன் மறைவு *
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் குமுதம் ஆசிரியர் திரு.பிரியா கல்யாணராமன் (வயது 56) இன்று (22-06-2022) புதன்கிழமை திடீர் மாரடைப்பால் காலமானார்.
அனைவருடனும் அன்பாக எளிமையாக பழகக்கூடிய திரு.பிரியா கல்யாணராமன் மறைந்தார் என்ற செய்தி தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இதழியல் உலகில் நீண்ட அனுவபம் கொண்ட பிரியா கல்யாணராமன் ( இயற்பெயர் ராமச்சந்திரன் ) எழுத்துலகிலும் பெரும் சாதனைகள் படைத்தவர்.ஒரே காலகட்டத்தில் 4-5 தொடர்கள் எழுதிய ஆற்றல் மிகுந்தவர்.
*கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மருத்துவமனையில் நம் ஊடக உறவுகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனிப்பட்ட வகையில் உதவிகள் செய்தவர் பிரியா கல்யாணராமன். *
இதழியல் துறையில் பலரை உருவாக்கியவர்.
பல துறை நுட்பங்களை அழகியலோடு எழுதும் ஆற்றல் மிக்கவர்.

நெஞ்சத்திற்கு நெருக்கமாக விளங்கிய திரு.பிரியா கல்யாணராமன் அவர்கள் மறைவுக்கு பெரும் துயரத்துடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், குமுதம் குழும நண்பர்கள், நண்பர்கள் , உற்றார் உறவினர்கள் என அனைவரோடும் துயரத்தில் பங்கேற்கிறோம்.

திரு.பிரியா கல்யாணராமன் இல்ல முகவரி
10,A ,ரஜினி ராஜா கோயில் தெரு,
ஐந்தாவது சர்க்குலர் சாலை, ஜவஹர் நகர், பெரமபூர்,சென்னை

திரு.பிரியா கல்யாணராமன் குறித்து இணையத்தில் கடந்த செப்டம்பரில் மூத்த எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருந்த ஒன்றில் வாழ்தல் இணைப்பின் சுட்டி அஞ்சலியாக:

https://writeroom.bukpet.com/?p=1598

தீராத துயரங்களுடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
22-06-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here