வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ரங்கோலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here