பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நேற்று நடந்தது. இதில் தென்னிந்திய திரைஉலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசியது.
பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி.
இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்.
நமது வரலாற்றை,
மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here