Thursday, July 2, 2026
- Advertisement -
Home Blog Page 134

Yogi Babu Makes His Grand Telugu Debut with Gurram Paapi ReddyJoins Hands with Comedy Legend Brahmanandam

0

Popular Tamil actor and comedy icon Yogi Babu is all set to make his much-awaited debut in the Telugu film industry with the upcoming film Gurram Paapi Reddy. Known for his impeccable comic timing and impactful screen presence, Yogi Babu has carved a niche for himself in Tamil cinema with a wide range of memorable roles. With this new venture, he steps into Tollywood, marking an exciting new phase in his illustrious career.

Directed by Murali Manohar Reddy, Gurram Paapi Reddy features Padma Shri awardee and comedy legend Brahmanandam in the lead role. The project is already generating immense buzz, as it brings together two comedic powerhouses from two major South Indian industries.

During the course of the shoot, a warm bond blossomed between the two stalwarts. In a heartfelt gesture, Brahmanandam sir personally invited Yogi Babu to his residence, where they spent quality time sharing laughter, stories, and camaraderie. As a token of affection and respect, Brahmanandam gifted Yogi Babu a copy of his celebrated book “Naan Brahmanandam”.

Speaking about the experience, Yogi Babu expressed his heartfelt gratitude, saying,

“I am truly elated and overwhelmed by the warm reception I have received from the Telugu industry. Being welcomed so graciously by a legendary figure like Brahmanandam sir is a moment I will cherish forever. His gesture of gifting me his book was deeply touching.”

The collaboration of Brahmanandam and Yogi Babu in Gurram Paapi Reddy promises a delightful treat for audiences, blending the comedic brilliance of two film industries. This film is expected to be a landmark in South Indian cinema, not only for its humor but also for the rare and endearing cross-industry collaboration.

Stay tuned for more updates on Gurram Paapi Reddy, a film that celebrates comedy, camaraderie, and the coming together of iconic talents.

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்
நகைச்சுவையின் தலைவராகிய பிரம்மானந்தம் அவர்களுடன் இணையுகிறார்

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறார்.

முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் பிறமகாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. பிரம்மானந்தம் சார் தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர். அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள புத்தகம் “நான் பிரம்மானந்தம்” என்பதை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார்.

இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு மனமுவந்த பேச்சில் கூறுகிறார்:

தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளது.

பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபு இணையும் குர்ரம் பாப்பி ரெட்டி படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான நகைச்சுவை விருந்தாக இருக்கும். இரண்டு துறைகளின் ஐகானிக்கள் இணையும் இந்த படம், ஒரு கலாச்சார சங்கமமாகவும், நகைச்சுவையின் பண்டிகையாகவும் அமையும்.

மேலும் குர்ரம் பாப்பி ரெட்டி திரைப்படத்தின் விவரங்கள் விரைவில்

“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம்

0

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம்.

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்

இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்  பேசும்போது,

“எனக்கு அரசியல் மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபங்களை எல்லாம் கொட்ட வேண்டும்.. அதை திரைப்படத்தின் மூலம் தான் கொட்ட வேண்டும்.. அப்படி எனக்கு கிடைத்து பவர்ஃபுல் ஹீரோ தான் விஜயகாந்த்.. வேறு எந்த ஹீரோவையும் நான் தேடி போகவில்லை.. ஒரு காலகட்டத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பயங்கர வெற்றிகளை கொடுத்தார்கள். ஆனால் பெரிய செலவு வைக்கிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் பயந்து விட்டார்கள். திரைப்பட கல்லூரியில் படித்தவர்களில தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தவர்கள் என்றால் ஆர்கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார் இருவரையும் குறிப்பிட்டு சொல்லலாம். கேப்டன் பிரபாகரன் படம் வெளியான பொழுது எப்படி ஓடியதோ அதே போல இப்போதும் வெற்றிகரமாக ஓடும், விஜயகாந்த் மற்ற இயக்குனர்களை எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். என்னை மட்டும் டைரக்டர் சார் என்று சொல்வார். இதுதான் மரியாதை, நன்றி.. நன்றி என்றால் விஜயகாந்த் என்று அர்த்தம். மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்.

சட்டம் ஒரு இருட்டறை படத்தில் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ அதன்பிறகு அவருடன் 18 வது படம் பெரியண்ணா இயக்கியபோதும் அதே போல தான் என்னிடம் மரியாதை வைத்திருந்தார். என்னுடைய மகன் விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு. 70 லட்சம் செலவு செய்து எடுத்து சரியாக போகவில்லை. ஆனால் நடிகராக வந்து விட்டார்.. அவரை எப்படியாவது நான் வளர்த்து விட வேண்டும் அதற்காக ஒரு பெரிய நடிகருடன் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். எந்த பெரிய நடிகரும் ஒத்துக் கொள்ளவில்லை அப்போது விஜயகாந்திடம் சென்று, விஜயகாந்த் தம்பியாக விஜய் நடிக்கும் விதமாக ஒரு கதை இருக்கிறது அப்படி நடித்தால் விஜய்க்கு அது உதவியாக இருக்கும் என்று கேட்டேன். உடனே எப்போது கால்சீட் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இவரை வைத்து நான் இயக்கிய 18 படங்களிலும் நான் தான் அவருக்கு டேட் சொல்லி இருக்கிறேன். செந்தூர பாண்டியில் அவரை வைத்து 17 நாள் சூட்டிங் நடந்தது. செந்தூரப்பாண்டி முடித்ததும் வியாபாரம் சூப்பராக நடந்தது. மிகப்பெரிய லாபம் வந்தது. ஆனால் ஒரு பைசா கூட பணம் வாங்க மறுத்து விட்டா.ர் அப்போது அவர் வீட்டு அருகில் இருந்த என்னுடைய காலி இடத்தை அவர்கள் பெயருக்கு மாற்றி பத்திரம் பதிவு செய்து அவரிடம் சென்று கொடுத்தேன். ஆனால் அப்போதும் கூட என்னிடம் கோபப்பட்டார்.

எங்கள் இருவருக்கும் நட்பு என்பதையும் தாண்டி வேறு உறவு. அவர் மனதில் எனக்கு தனி இடம் இருந்தது. போகும்போது தனுடைய அடையாளத்தை விட்டுட்டு செல்பவன் தான் சிறந்த மனிதன். அப்படி விஜயகாந்த் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு ஆர்கே செல்வமணியை தேடி நிச்சயமாக தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

இயக்குனர் விக்ரமன் பேசும்போது,

கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆன அந்த காலகட்டம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த படம் வெளியான சமயத்தில் தான் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது. அப்போது விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர் என்பதால் இந்த படம் சரிவை சந்திக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெற்றி கண்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே பிரமாண்டம் இப்போதும் இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும். கேப்டன் பிரபாகரன் படத்தில் 25 நிமிடம் கழித்து தான் அவர் மாஸாக என்ட்ரி கொடுப்பார் அந்த போலீஸ் ஸ்டேஷன் பைட் போல தமிழ் சினிமாவில் இன்னொரு சண்டைக்காட்சியை யாராலும் பண்ண முடியாது. ஏனென்றால் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருப்பவன் என்பதால் சொல்கிறேன். அவரைப் போலவே அவரது மகன்கள் சண்முக பாண்டியன் சினிமாவிலும் விஜயபிரபாகரன் அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது,

“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று. கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்கு தந்தது. இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை அந்த காலத்தில் யாரும் எடுக்க முடியாத பட்ஜெட்டில் எடுத்தார் இப்ராஹிம் ராவுத்தர். சோலே படத்தின் பத்து சதவீத பட்ஜெட்டில் தமிழில் ஒரு சோலை போல எடுத்தார் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில் ஆர்கே செல்வமணியுடன் தோளுக்கு தோள் நின்றது லியாகத் அலிகானின் வசனங்கள். மன்சூர் அலிகானை உருவாக்கிய படம் இது. கேப்டன் ரத்தம் சொட்ட சொட்ட நடித்த படம் இது. கேப்டன் பிரபாகரன் காலத்தை வென்ற படம் தான். ரீ ரிலீஸில் இந்த படம் தான் பெஸ்ட் என்கிற சாதனையை கேப்டன் பிரபாகரன் படைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசும்போது,

“மனித நேயத்திற்கு ஒரு உத்தரவாதம் என்றால் அது விஜயகாந்த் தான். அவரோடு நான் கூலிக்காரன், நல்லவன். புதுப்பாடகன் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். கடையேழு வள்ளல்களைப் பற்றி படித்திருக்கிறோம். நாம் பார்த்ததில்லை. நம் கண் முன்னே வாழ்ந்த எட்டாவது வள்ளல் என்றால் விஜயகாந்தை சொல்லலாம். 24 மணி நேரமும் அவருடைய ராஜா பாதர் தெருவில் உள்ள அலுவலகத்தில் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கேப்டன் பிரபாகரன் வெளியான சமயத்தில் வட இந்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் செல்வமணியை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.  புரட்சி கலைஞர் என்கிற அடைமொழியை கேப்டனுக்கு கொடுத்ததில் நான் பெருமையடைகிறேன். திரையுலகில் எந்த ஒரு பிரச்சனைக்காகவும் அவர் முன் நின்று பணியாற்றியவர். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து அதன் கடனை அடைத்தவர். அவருடைய செல்வங்கள் இருவரும் கலை உலகிலும் அரசியலியலும் பெரிய உயரத்தை அடையவேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று பேசினார்

இயக்குநர் ஆர்,வி.உதயகுமார் பேசும்போது,

“35 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது இந்த மேடை. இனிமேல் சினிமா இப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். விஜயகாந்த்திற்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். அவரைப்போல அவரை அதிகமான இயக்குனர்களை உருவாக்கியவர்கள் வேறு எந்த நடிகரும் இல்லை. அந்த வகையில் இயக்குனர்களின் தெய்வமாக அவர் தெரிகிறார். அதில் முதன்மையானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்த் அவருக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி ராவுத்தர் ஃபிலிம்ஸின் பெயரை உச்சத்துக்கு கொண்டு போனதில் செல்வமணியின் கடின உழைப்பு இருக்கிறது. ரம்யா கிருஷ்ணனை இந்த விழாவில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்திற்கு எத்தனையோ சாதனைகள் உண்டு. இந்த சாதனைகளை படைத்த ஆர்.கே செல்வமணி அவர்களுக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இன்றைக்கும் காலத்தால் அழியாத ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலை கொடுத்தார். நான் கேப்டனுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு முன்பு ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்டமாக படம் எடுத்து விட்டனர். என்னையும் அவர் அப்படித்தான் நினைத்தார் போல. ஆனால் நான் ஒரு எமோஷனல் கிராண்டியராக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அப்படி அந்த படத்தில் இடம்பெற்ற வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே பாடல் வேறு யாருக்கும் இன்று வரை பொருந்தாது. அடுத்தவங்க வந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று கேட்காமல் தெரிஞ்சு உதவி செய்யக்கூடிய ஒரே மாமனிதர் கேப்டன் தான். இந்த கேப்டன் பிரபாகரன் படம் இதை தைரியமாக எடுத்து வெளியிடும் எனது அன்பு தம்பி கார்த்திக் அவர்களுக்கும் அவருடைய பார்ட்னருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த படம் மீண்டும்   மிகப்பெரிய வெற்றி பெறும். இதை தொடர்ந்து இயக்குநர் செல்வமணி பெப்சி வேலைகளை விட்டுவிட்டு புதிதாக படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் இளவரசு பேசும்போது,

மதுரையில் நான் டுடோரியல் படித்த காலத்திலேயே கேப்டனும் ராவுத்தரும் இணை பிரியாத நண்பர்களாக கெத்தாக வலம் வருவார்கள். அப்போது இருந்தே அவர்களை பார்த்திருக்கிறேன் .விஜயகாந்த்திற்கு வசனம் எழுதுவதற்கென்றே பிறப்பு எடுத்தவர் தான் லியாகத் அலிகான். விஜயகாந்த் செய்த புண்ணியத்துக்கு அவரது வாரிசுகள் எல்லாம் ஜெயித்தே ஆக வேண்டும்” என்று பேசினார்.

வசனகர்த்தாவும் இயக்குநருமான லியாகத் அலிகான் பேசும்போது,

“ஆர்,கெ.செல்வமணி இந்த சங்கங்களின் வேலைகளில் ஈடுபடாமல் இருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு போயிருப்பார். பலரது நெஞ்சங்களில் கோயிலாக இருந்த கேப்டன் இன்று கோயம்பேட்டில் கோயிலாகவே மாறிவிட்டார். தொண்டர்களும் மக்களும் பக்தர்கள் ஆகிவிட்டார்கள். எம்ஜிஆர் பாடிய கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் நூறு சதவீதம் விஜயகாந்த்திற்கு தான் பொருந்தும். செல்வமணிக்காக வசனங்கள் எழுதும் வாய்ப்பை எனக்கு கொடுத்தவர் விஜயகாந்த் தான். கேப்டன் பிரபாகரன் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டபோது கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகளை தூக்கி விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம். ஆனால் படம் வெளியான பிறகு விஜயகாந்த் பேசப்பேச தெலுங்கு ரசிகர்களின் கைதட்டல் பயங்கரமாக இருந்தது என்று அவர்களே சொன்னார்கள். இந்த படத்தை இன்றைய இளைஞர்கள் பார்க்கும்போது ஏன் இப்போது இது போன்ற படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். செல்வமணியின் புகழ் பேசப்படும். அரசியலில் எந்த கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது ஆனால் செல்வமணி லியாகத் அலிகான் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது தேமுதிக மத்தியில் ஒரு எழுச்சி தெரிகிறது. அதை புரட்சியாக மாற்றுவது விஜய பிரபாகரனின் கடமை” என்று பேசினார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது,

“தமிழில் நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி இல்லாத சமயத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு வந்தது. அதில் இரண்டாவது கதாநாயகி தான். ஆனால் அந்த படம் எனக்கு கொடுத்த வெற்றி அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகளை தேடி வந்து கொடுத்தது. இப்போ வரைக்கும் அந்த ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக இருக்கிறது. இன்று விஜயகாந்த் இருந்திருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் இரண்டு மடங்கு வெற்றி பெறும் என அவர் மேலே இருந்து வாழ்த்துவார் என நம்புகிறேன்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது,

“இந்திய சினிமாவில் 2025ல் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன இந்தியாவே கொண்டாடும் ஷோலே படத்தின் ஐம்பதாவது ஆண்டில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் வெளியாகிய 35 வது வருடத்தில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாடல்களுக்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்படும். செல்வமணியை மாபெரும் சிக்கலில் விட்ட படம் தான் கேப்டன் பிரபாகரன். காரணம் இந்த படம் அவரை அவ்வளவு உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது. இயக்குனர் ரமேஷ் சிப்பிக்கும் இந்த நிலை தான் ஏற்பட்டது. மன்சூர் அலிகான் இன்றும்போல அதே யூத் ஃபுல்லாக இருக்கிறார். ஷோலே படத்தில் வில்லனாக நடித்த அம்ஜத் கான் எப்படி இன்றுவரை சிறந்த வில்லனாக கொண்டாடப்படுகிறாரோ, அதேபோல கேப்டன் பிரபாகரன் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகானும் கொண்டாடப்படுகிறார். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்று விஜயகாந்தின் புகழை இன்னும் காலகாலமாக பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை” என்று பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது,

“கள்ளக்குறிச்சியில் இந்த படம் வெளியானபோது கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் இரண்டு பாடல்கள்தான். அதுவும் ஹீரோவுக்கு கிடையாது. துப்பாக்கி படத்தின் முதல் 20 நிமிட காட்சிகளை கேப்டன் பிரபாகரனை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துத்தான் எடுத்தேன். பெரும்பாலும் வில்லன் இறந்து விட்ட பிறகு ஒரு படம் முடிந்து விடும். ஆனால் இதில் வில்லன் இறந்த பிறகும் பத்து நிமிடம் படம் ஓடியது. அதை முன்னுதாரணமாக வைத்து தான் ரமணா படத்திலும் ஹீரோ இறந்த பிறகு கொஞ்ச நிமிடங்கள் படம் ஓடும்படி உருவாக்கினேன். கேப்டனை வைத்து படம் இயக்குவது ஒரு கனவாக இருந்தது. என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில படம் போல அன்றைய காலகட்டத்திலேயே அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டத்தை இயக்குனர் ஆர்கே செல்வமணி கொடுத்திருக்கிறார். அவரது அருகில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதே பெருமை” என்று பேசினார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது,

“நான் ரஜினி சார் ரசிகன். என்னுடைய அண்ணா விஜயகாந்த் ரசிகர். இந்த படத்தில் 30 நிமிடம் கழித்து தான் விஜயகாந்த் என்ட்ரி அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சி தான் என்னுடைய ரன் படத்தின் சப்வே சண்டை காட்சிக்கு உந்துதலாக இருந்தது. பிரம்மாண்டமான ஆக்சன் படங்களில் நான் பார்த்து பிரமித்து ஸ்க்ரிப்ட் என்றால் அது கேப்டன் பிரபாகரன் தான். புஷ்பா படத்தை பார்க்கும்போது கேப்டன் பிரபாகரனின் இன்ஸ்பிரேஷன் அதில் நிறையவே தெரிகிறது. படத்தில் மட்டுமல்ல உழைப்பில், நேர்மையில், குணாதிசயத்தில் கூட ஆர்,கே செல்வமணி பிரம்மாண்டமானவர். விஜயகாந்தின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு மிக முக்கியமான படம் என்றால் கேப்டன் பிரபாகரனுக்கு முன்பு கேப்டன் பிரபாகரனுக்கு பின்பு என்று சொல்லும் விதமாக இதை இயக்குனர் செல்வமணி கொடுத்திருந்தார்” என்று பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“ரம்யா கிருஷ்ணன் படத்தில் ரிலீசின் போது பார்த்ததை விட இப்போது இன்னும் இளமையாக இருக்கிறார். ஒருவேளை எனக்கு வயதாகிறதோ என்னவோ ? எத்தனையோ படங்கள் நடித்தாலும் இந்தப் படம் தான் மன்சூர் அலிகான் பேர் சொல்லும் படம். இந்த படத்தின் மூலம் கேப்டனும் கிடைத்தார். பிரபாகரனும் கிடைத்தார். மீண்டும் செல்வமணியை ஒரு இயக்குனராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. ஆர்கே செல்வமணி என்றால் ஆளுமை. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வளரும் காலகட்டத்தில் புது இயக்குனர்களுக்கு படம் கொடுப்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகு வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள். விஜயகாந்த் மட்டும் 150 படங்களில் 150வது படத்தில் கூட புதிய இயக்குநரை அறிமுகப்படுத்தினார். நமது வெற்றி நமக்கு பயன் தருவதை விட ஒருவரை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் விஜயகாந்த். அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சென்று சந்திக்கலாம்.. தடை இருக்காது.. இந்த காலகட்டத்தில் தமிழில் இது போன்ற படங்களை எடுக்க முடியுமா என்று நினைத்த காலத்தில் இப்படி ஒரு படத்தை கேப்டனும் செல்வமணியும் இணைந்து கொடுத்தார்கள். இந்த படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து செல்வமணியின் புதிய இன்னிங்ஸ் ஆரம்பிக்கும். கேப்டனின் கலை உலக வாரிசாக சண்முக பாண்டியனும் அரசியல் வாரிசாக விஜய பிரபாகரனும் அவரைப் போலவே வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குனர் எழில் பேசும்போது,

“இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது புஷ்பா டிரைலர் போல இருந்தது. 35 வருடம் கழித்து இந்த படம் வெளியாகிறது என்றால் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்தின் வெற்றி. கேப்டனின் படங்களில் காலம் கடந்து நிற்கும் பல படங்களில் முக்கியமான படம் இந்த கேப்டன் பிரபாகரன். விரைவில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் சிங்கம் புலி பேசும்போது,

“கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நடந்த போது மலைப்பகுதியில் இருந்து அந்த படத்தின் படப்பிடிப்பை ஓடி ஓடி பார்த்தேன். கேப்டன் போட்ட சாப்பாடு தான் என்னை சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல விடாமல் இங்கேயே தங்க செய்து இயக்குநராக மாற்றியது. ஒரு முறை கேப்டனை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். என்னை அழைத்து யார் என்று கேட்டபோது சுந்தர் சியின் உதவி இயக்குனர் என்றேன். நீயும் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டார்.. சார் உங்களை வைத்து நான் படமே  வேண்டும் என்று கேட்டேன். அப்போது ஆச்சரியமாக பார்த்துவிட்டு போய்விட்டார். ஆனால் மாயாவி படத்தில் அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்” என்று கூறினார்.

நடிகர் ரவிமரியா பேசும்போது,

“எனுடைய 28 வருட திரையுலக வாழ்க்கையில் 20 வருடங்களை இயக்குனர் ஆர்.கே செல்வமணிவுடன் தான் கழித்துள்ளேன். 28 வயதிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படம் பண்ணியிருக்கிறார் என்றால் இன்றைய இயக்குனர்களுக்கு உண்மையிலேயே அது சவால் விடும் விஷயம். இன்று நாம் பார்த்து வியக்கின்ற இயக்குனர்களை விட எல்லாம் 35 வருடங்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய முத்திரையை பதித்தவர் ஆர்.கே செல்வமணி. கேப்டன் விஜயகாந்த் மனிதராகப் பிறந்து மனித தெய்வம் ஆனவர். இது புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் மட்டுமே” என்று கூறினார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,

“புரட்சி கலைஞரின் நூறாவது படத்தில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் இந்த படத்தில் நடிக்கும் போது நிஜமான வீரப்பனின் முகம் எப்படி இருக்கும் என்று வெளி உலகத்திற்கு தெரியாது. சாலக்குடி படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே செல்வதற்காக ராவுத்தர் தனி பாதையே போட்டு கொடுத்தார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை சரண்யா தான்.. ஆனால் இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து யானை, பாம்பு என வன மிருகங்களை பார்த்ததும் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டாராம். இயக்குனர் ஆர்.கே செல்வமணி லொக்கேஷன்களை கண்டுபிடிப்பதற்காக நடந்து கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும். காலையிலிருந்து வசனமே இல்லாமல் என்னுடைய காட்சிகளை எடுப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் சென்னையில் இருந்து டயலாக் பேப்பர் விமானம் மூலமாக, கார் மூலமாக வரும், அதற்குப் பிறகு பக்கம் பக்கமாக பேச வைத்து எடுப்பார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மறக்க முடியாதது. அதை படமாக்கிக் கொண்டிருந்த கடைசி நாளில் தான் தம்பி விஜய பிரபாகரன் பிறந்தார். அதேபோல படத்திலும் சென்டிமென்டாக ரம்யா கிருஷ்ணனுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாட்கள் அனைத்துமே மறக்க முடியாதவை” என்று கூறினார்.

இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும்போது,

“என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான். புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.

இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.

இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.

இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.
 

விஜய பிரபாகரன் பேசும்போது,

தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏகனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !!

0

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தப்படத்தின் டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தன் சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார்.

முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன் ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக, அருண் விஜய்யின் இரண்டு விதமான லுக்கை காட்டும், இந்த டீசர் படம் பற்றிய ஆவலைத்தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி ரசிகர்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு – BTG Universal
தயாரிப்பாளர் – பாபி பாலச்சந்திரன்
இயக்கம் – கிரிஷ் திருக்குமரன்
இசை – சாம் CS
தலைமை நிர்வாக இயக்குநர் – டாக்டர் M மனோஜ் பெனோ
ஒளிப்பதிவு – டிஜோ டாமி
எடிட்டர் – ஆண்டனி
ஸ்டண்ட் – மாஸ்டர்ஸ் அன்பறிவு
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்
பப்ளிசிட்டி டிசைனிங் – பிரதூல் NT
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர் – வெங்கட் ராம்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

🔗https://youtu.be/GCNIHzJ5LQs?si=njmL2aF-uqger3Q7

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

0

MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், “தீர்ப்புகள் விற்கப்படும்” புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் First லுக் வெளியானது.

First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.

நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த First லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மை சம்பவங்களை சொல்லும் இக்கதையில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் அபிராமி,துளசி,A.வெங்கடேஷ்,அருள் D சங்கர்,விஜய் டிவி ராமர்,சபிதா ராய்,ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட படப்பிடிப்பாக ஏப்ரலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

“பிளாக் கோல்டு” ன் first லுக்கில் நடிகர் வெற்றி முன்பு எப்போதும் இல்லாத தோரணையில் புதுமையாகயும்,இளைமையாகவும் இருக்கிறார். இது படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவலை தூண்டியிருக்கிறது.

தொழில்நுட்பக்குழு விபரம்
தயாரிப்பு – MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி
இயக்கம் – தீரன் அருண்குமார்
ஒளிப்பதிவு : சந்தோஷ்குமார் வீராசாமி
இசை – கவாஸ்கர் அவினாஷ்
பாடல்கள் – மோகன்ராஜன்
எடிட்டிங் – ராவணன்
கலை- c.s.பாலசந்தர்
சண்டைப்பயிற்சி – “மெட்ரோ” மகேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT – இல் கண்டுகளியுங்கள்.

0

இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த பிரபலங்கள் கலைஞர்கள், கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல – அவர் நம்மில் நிறைந்திருக்கும் ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

நீங்கள் தமிழ் பிளாக்பஸ்டர்கள், தெலுங்கு ஆக்‌ஷன் படங்கள், மலையாள கிளாசிக் படங்கள் அல்லது கன்னட வெகுஜன பொழுதுபோக்குப் படங்கள் என எதன் ரசிகராக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத வகையில், அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக, உங்களை மகிழ்விக்கும்.

இவ்விழா தனித்துவமான, உணர்ச்சிவசமான, மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்விழா ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, சன் NXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ நேரம் மற்றும் தேதி: 10 ஆகஸ்ட், காலை 10 மணி Sun NXT இல் ஒளிபரப்பாகிறது ஆனால் அது மட்டும் இல்லை.

அதே நாள் மாலை 6:30 மணிக்கு, சன் டிவியில் முழு நிகழ்ச்சியையும் பாருங்கள், இது சன் NXT இன் நேரடி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

கூலி அன்லீஷ்ட் நிகழ்வின் முழு நிகழ்வையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் -, தடையற்ற மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள். Sun NXT கூலி கொண்டாட்டத்தைத் தொடங்குகிறது – முதல் காட்சியைத் தவறவிடாதீர்கள்.

Watch on – https://www.sunnxt.com/home

இப்போதே Sun NXT-க்கு சந்தா செய்து, திரையை தீப்பிடிக்க வைக்கும் தருணத்தைக் காணுங்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொண்டாட்டம் தொடங்குகிறது. அது தொடங்கும் போது, அங்கே இருங்கள்.

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

0

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பயிற்சி பெற்று ஏராளமான இசைக்குழுக்களுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய சுவாமிநாதன் ராஜேஷ், வெற்றிகரமான இசைத் தொகுப்பாளராக பணயாற்றினார். அதை தொடர்ந்து பல இசை வீடியோக்களுக்கு இசையமைத்தார். அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் மூலம் அனைத்து வயதினரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக, ஹரிஹரன் குரலில் “நாம் போகிறோம்…”, “மேகத்தில் ஒன்றுரை நிந்த்ரோம்…”, “மின்னலை…” போன்ற பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது.

யோகி பாபு மற்றும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லோக்கல் சரக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சுவாமிநாதன் ராஜேஷ், ’கண்ணால மயக்குரியே’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து ராதாரவி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி தோட்டா’ படத்தின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து கவனம் ஈர்த்தார். அப்படத்தில் இடம்பெற்ற ”அய்யாயோ..” மற்றும் “நானும் அவலும்…” பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

தொடர்ந்து இசைத்துறையில் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு பயணித்து வரும் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், ‘கண்ணோரமே’ஆல்பம் பாடலை இசையோடு கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் பிரமாண்டமான காட்சிகளோடு இளைஞர்கள் மனம் கவரும் வகையில் உருவாக்கியுள்ளார்.

Regarding postponement of “Bhai – Sleeper Cell” Release…

0

It is with mixed emotions that I share this update. Our ambitious film Bhai – Sleeper Cell received an encouraging response from the press and media during the preview show. Your appreciation means a lot to our entire team.

However, due to unforeseen and unfortunate circumstances, the release has been postponed. Despite the strong support from the police department, certain distributors have been unwilling to cooperate for the theatrical release.

We are now working towards ensuring a smoother release by the end of August. On behalf of our entire team, I kindly request you to hold back from publishing your reviews until the official release date, so that the film gets the fair platform it truly deserves.

Thank you for your understanding and continued support.

Warm regards
Addhava Eshvvara

பேரன்புடையீர்,வணக்கம்.

எங்களது தயாரிப்பில் உருவான ‘பாய் ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது .ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்ததால் இன்று வெளியாகவில்லை. விரைவில் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு அதிக அளவிலான திரையரங்குகளில்
‘பாய் ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் வெளியாவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம். தாங்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் . தாங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவுதர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

நன்றி!

Ram’s Paranthu Po Streaming Now on JioHotstar

0

Director Ram’s much-talked-about road-trip dramedy Paranthu Po has taken flight from theatres to living-room screens and is now streaming exclusively on JioHotstar. The father-son musical-comedy, which opened in cinemas on July 4 to warm word-of-mouth, is streaming on JioHotstar.
Fronted by Mirchi Shiva, the ensemble also features Anjali, Grace Antony, child actor Mitul Ryan, Balaji Sakthivel, Vijay Yesudas, Aju Varghese and more. Paranthu Po is written and directed by Ram, with cinematography by N. K. Ekambaram, editing by Mathi V. S., songs and background score from Santhosh Dhayanidhi.
Critics have hailed the film as “a gentle, warm hug” and “magic in life’s smallest detours,” praising its authentic father-son bond and feel-good tone. Audiences on social media echo the sentiment, calling the movie a heartfelt, entertaining watch that blends humour with genuine emotion.
Hop aboard the road trip—Paranthu Po is streaming now on JioHotstar in Tamil, Hindi, Telugu, Malayalam, Kannada, Marathi and Bengali with subtitles. Follow JioHotstar’s Tamil social handles for more updates.

About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது.

மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார்.

தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத ஆச்சரியம் உள்ளது’ என்றும் ‘மனதிற்கு இதமான ஃபீல் குட் கதை’ என்றும் விமர்சகர்கள் பாராட்டினர். செண்டிமெண்ட், எண்டர்டெயின்மெண்ட், நகைச்சுவை, என இதயப்பூர்வமான படமாக அமைந்ததாக ரசிகர்கள் தங்கள் கருத்தை இணையத்தில் பதிவிட்டனர்.

தற்போது ‘பறந்து போ’ திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் சப்டைட்டிலோடு ஸ்ட்ரீம் ஆகிறது. மேலதிக விவரங்களுக்கு சமூகவலைதளங்களில் ஜியோஹாட்ஸ்டாரை பின்தொடருங்கள்!

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதை களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள்

0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தில்லியில் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான திரு. கமல்ஹாசன் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக தில்லியில் இன்று சந்தித்தார்.

தமிழ்நாட்டின் தொன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கீழடி தொல்லியல் களத்தின் செப்புச் சிற்பத்தை திரு. கமல்ஹாசன், பிரதமருக்கு வழங்கினார்.

தமிழ் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் சிறந்த நகர நாகரிமாக உயர்ந்து நிற்கும் கீழடி ஆய்வு முடிவுகளை உரிய வகையில் அங்கீகரித்து, கீழடியை இந்தியாவின் பெருமையாகப் பறைசாற்ற வேண்டுமென பிரதமரை திரு. கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

‘Accused’ Producers and film crew extend their heartfelt thanks to press and media persons, distributors, theatre owners, and fans

0

Made under the banners of Jaeshan Studios in association with Sachin Cinemas, Sri Dayakaran Cine Productions, and MIY Studios, ‘Accused’ produced on a grand budget by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel was released in theatres worldwide last week.

‘Accused’, which has been receiving positive reviews, praise from journalists and media persons, and support from fans since its release, is making good collections in the box-office.

Following this, the number of screens continues to increase. Happy about the development, Producers A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel and other members of the film’s crew expressed their heartfelt gratitude to the journalists, media persons, distributors, theatre owners and fans. It is to be noted that the film is performing well in Kerala and Karnataka theatres too.

When the film crew visited theatres in Madurai, Coimbatore, Trichy, Salem, Tiruppur, and Chengalpattu to watch the film with audience, they were delighted to call the actors by their characters’ names. They especially expressed their happiness by calling the hero Udhaya by his character Kanakku.

The film has made such an impact on the audience. They told the film crew that they did not feel like 2 hours and 10 minutes had passed. They recalled and praised many scenes, including the bus fight scene.

Speaking about this, Udhaya said, “We dedicate this success to the fans. We offer our heartfelt gratitude to everyone who was responsible for this, including the film crew, journalists, media persons, distributors, theatre owners and others.”

Directed by Prabhu Srinivas, a renowned director in the Kannada film industry known for his successful ventures, ‘Accused’ saw Udhaya acting with Ajmal and Yogi Babu for the first time. The movie featured popular Kannada actress Jahnvika as the female lead.

The mega-budget film marked actor Udhaya’s 25th year in cinema. Produced on a scale rivaling top-tier commercial films, ‘Accused’ is Udhaya’s most ambitious project to date.

Naren Balakumar has scored music for the movie. Cinematography of the film was handled by Maruthanayagam I. The film’s editing was done by renowned editor K.L. Praveen. The art direction was by Anand Mani, and public relations are managed by Nikil Murukan.

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால் அங்கும் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தபோது அவர்கள் படத்தில் நடித்தவர்களை அவரவர் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே அழைத்து மகிழ்ந்தனர். குறிப்பாக நாயகன் உதயாவை அவரது கதாபாத்திரமான கணக்கு என்று அழைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த அளவிற்கு படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் 10 நிமிடம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் படக்குழுவினரிடம் தெரிவித்தனர். பஸ் சண்டை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்கள்.

இது குறித்து பேசிய உதயா, “இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.

‘அக்யூஸ்ட்’ படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

- Advertisement -

Recent Posts